ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி

Go down

திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி Empty திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி

Post by ayyasamy ram Mon Nov 02, 2020 6:20 am

சென்னை:
-
திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி Tamil_News_No20_29_911556422710419
கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் திருடு
போகவில்லை என்று நிர்வாக அதிகாரிகள்,
அறநிலையத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

ஆனால் சிலை தடுப்பு பிரிவு 1,300 சிலைகள் காணாமல்
போனதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல்
கமிஷனர் அலுவலகம் குழப்பத்தில் உள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில்,
ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கங்கள் மற்றும்
பழங்கால கற்சிலைகள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட
சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் விலை அதிகம்
கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு
கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
ஆனால், அதோடு தன்னுடைய பணி முடிந்து விட்டதாக
நினைக்கின்றனர்.

அதன்பிறகு அந்த சிலைகள் தொடர்பான விவரங்களை
பதிவேட்டில் சேர்ப்பதில்லை. இதனால், சிலைகளின்
விவரங்களும் அறநிலையத்துறைக்கு தலைமைக்கு
தெரிவதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அலுவலர்கள் பணிமாறுவதாலும், அடுத்து வரும்
அலுவலர்களுக்கு சிலை தொடர்பான விவரங்கள் மற்றும்
அந்த புகார்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை.

இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பல
ஆண்டுகளுக்கு பிறகு கோயில்களில் காணாமல் போன
சிலை மீட்கப்பட்டால் கூட இந்த சிலை எங்களது கோயிலுக்கு
உரியது இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

குறிப்பாக, சிலைக டத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்ட
100க்கும் மேற்பட்ட சிலைகள் எந்த கோயில்களை சேர்ந்தது
என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த சிலைகளை
அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பூஜை செய்யும்
நிலை தான் இன்றளவு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய
அறநிலையத்துறையில் உள்ள 830 கற்சிலைகள் உட்பட
1300 சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு
தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமைக்கு
தெரியவில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர்
அலுவலகம் சார்பில், கடந்த 1950ம் ஆண்டில் இருந்து காணாமல்
போன சிலை விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர்,
உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம்,
களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா?
செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின்
விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த கோயில்களில் காணாமல் போன சிலை தொடர்பான
விவரங்கள் தெரியவில்லை. இதனால், பெரும்பாலான கோயில்
அலுவலர்கள் சார்பில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை
என்று அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இது, கமிஷனர் அலுவலகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
»  அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum