ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!

Go down

நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு! Empty நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!

Post by ayyasamy ram Wed Oct 28, 2020 12:32 pm

நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு! Forest-5-1549038013
-
By Arivalagan St

பரந்து விரிந்த வானில் வியாபித்துக் கிடக்கும் மேகம்
போல.. நம் மனதிலும்.. ஆசைகள் ஆயிரம் இருக்கும்.
அதை செயல்படுத்தும் வழிகளை தேடும் கண்களுக்கு
விருந்தாக அமைய சின்னதாய் ஒரு பயணம்
மேற்கொள்வோமா நண்பர்களே!

பொதுவாக நாமளும் வாழ்க்கையில் எதையாவது
சாதிக்கனும் என நம்ம மனசு துடிக்கும். அதிலும் நமக்கு
ஏதோ ஒரு விஷயத்துல ஈடுபாடும் அதிகமா இருக்கும்.
ஆனா பாருங்க ஏதோ ஒரு தயக்கம் அடி மனசுல
இருந்துகிட்டேதாங்க இருக்கு. எதற்கு இந்த தயக்கம்…

சின்னதா ஒரு உதாரணம் பார்ப்போமா!

ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்கு போனாராம்.
அந்த ஊரே பார்ப்பதற்கு ஒரு காடு போல காட்சி
அளித்ததாம். ஆள் நடமாட்டம் கூட இல்லையாம்.
அவருக்கே நடக்க நடக்க ரொம்ப போராகவும் கொஞ்சம்
பயமாகவும் இருந்ததாம்.

என்னடா இது என்று குழம்பிப் போன அவர், அந்த
அலுப்பைப் போக்க கையில் இருந்த பழத்தை
சாப்பிட்டுகிட்டே போனாராம். அப்படி போகும் போது
பழத்தின் விதையை ஆங்காங்கே நின்னு கீழே
போட்டுட்டே போனாராம். இப்படியாக ஒரு வழியாக
அந்த ஊரை கடந்து போய்ட்டாரம்.

ஆத்தாடி. இனிமே திரும்ப இந்த ஊருக்கே வரக்கூடாதுப்பா
அப்படினு நினைச்சாராம். ஆனால் நேரம் சும்மா இருக்குமா..
இருக்காதே.. திரும்பவும் சில காலம் கழித்து அதே ஊருக்கு
செல்லவேண்டிய சூழ்நிலை வந்தது..

ஆஹா.. அந்த ஊருக்கா போகணும் என்று விரக்தியாகி
விட்டாராம். ஆனால் வேறு வழியில்லாததால், வெறுப்புடன்
மீண்டும் அதே ஊருக்குள் சென்றாராம்.

ஆனால் ஊருக்குள் போகப் போக அவருக்குள் ஆச்சரியம்
அடி மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.. கொஞ்சம்
கொஞ்சமாக வியப்பு மேலிட ஆரம்பித்தது.. காரணம் அந்த
ஊர் அப்படி அடியோடு மாறிப் போயிருந்தது.

ஆங்காங்கே மரங்கள்.. அது தரும் நிழல்.. அதன் கீழே
ஓய்வில் மனிதர்கள்.. கூடவே நிறைய கடைகள்..
என ஊரே மாறிப் போயிருந்தது. என்னடா இது.. அந்த ஊரா
இது என்று இவர் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டார்.

காடு மாதிரி இருந்த ஊர் எப்படி இவ்வளவு அழகானது
என்று அவருக்குப்புரியவில்லை. அதே யோசனையிலே
ஒரு மரத்துக்கு கீழே கொஞ்ச நேரம் உட்கார்ந்தராம்.
அப்போ அந்த மரத்திலிருந்து ஒரு பழம் விழுந்துதாம்.

அதை அவர் உண்ணும்போது தான் அவருக்கே ஒரு
விஷயம் புரிந்தது.. ஆஹா, இது நாம அன்னிக்கு சாப்பிட்ட
அதே பழத்தின் சுவையாச்சே என்று யோசித்த அவருக்குள்
ஓங்கி ஒரு மணி அடித்தது..

அடடா.. நாம அன்று சாப்பிட்டு போட்ட விதையில் முளைத்த
மரங்களா இவை என்று மனம் நெகிழ்ந்தாராம்.
இவ்வளவுதாங்க வாழ்க்கை..

நாம் தயங்கி நிற்கும் தருணம் யாருக்கும் பயன்படாமல்
வீணாகிறது என்பதை மறவாதீர்கள். நாம் நினைப்பது
சரியோ, தவறோ, செய்வது சரியோ, தவறோ..

ஆனால் எதையும் யோசிக்காமல் உடனே செயல்படுத்த
பாருங்க. அது நமக்கு பயன்படுதோ இல்லையோ, யாரோ
ஒருவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

நீ நட்ட மரத்தின் நிழல்களை கடந்து செல்பவர்கள் யாராக
வேண்டுமானாலும் இருக்கட்டும் விதைத்தது நீயாக இரு!
--
-கலை
நன்றி-தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum