ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹம்ஸ வாகன தேவி

Go down

ஹம்ஸ வாகன தேவி Empty ஹம்ஸ வாகன தேவி

Post by ayyasamy ram Tue Oct 27, 2020 7:20 am

ஹம்ஸ வாகன தேவி Tamil_News_sep20_22_123684108257294
-
ஹம்ஸவாகன  தேவி  அம்பா  சரஸ்வதி
அகில லோக கலா தேவி மாதா சரஸ்வதி
ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி
ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.

--
அன்னம் தெய்வாம்சம் கொண்ட பறவை.
சரஸ்வதிக்கும், பிரம்மதேவனுக்கும் அன்னப்பறவை
வாகனம்.

கோயில் உற்சவங்களில் அம்பிகைக்கு அன்ன வாகனம்
உண்டு. அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை
வடநாடுகளில் காணலாம்.அன்னம் மிகத்
தொலைவிடங்களுக்கும் விரைவாகச் செல்லும்.

இருபத்து நான்கு மணிநேரமும் விடாமல் பறக்கக் கூடியது.
சிறந்த அறிவுள்ள ஜீவன். நீரும், பாலும் கலந்திருந்தால்
நீரை விலக்கி பாலை மட்டும் அருந்தும் திறமைசாலி.

அன்னம் தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் காமத்திற்கு
அடிமையாவதால் அதன் இனம் எடுப்பான குரல் கால்
சிலம்பொலியை ஒத்ததாம்!

ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லும் அளவிற்கு! என்ன
தெரிகிறதா? அந்த ராகத்தின் பெயர் ஹம்ஸத்வனி!
மிகவும் இனிமையான அற்புதமான ராகம்!

அன்னங்களில் பல ரகங்கள் உண்டு.
ஆஸ்திரேலிய நாட்டின் அரசாங்க சின்னத்தில் அன்னம்
இடம்பெற்றுள்ளது. பிரிட்டனில் அரசர்கள் மட்டும்தான்
அன்னம் வளர்க்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது

.‘அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் நீ’ என்று
கம்பராமாயணத்தில் விராதன் திருமாலாகிய ராமரைப்
புகழ்கிறான்.

தூய்மைக்கும், அற்புதமான அறிவுக்கும் எடுத்துக்காட்டாக
அன்னம் விளங்குவதால் தான் இப்பறவை சரஸ்வதி மற்றும்
ப்ரம்மாவின் வாகனமாகத் திகழ்கிறது!

இதன் இயல்புகள் கல்வியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்
இருத்தல் வேண்டும். தீயவற்றை விடுத்து தூயவற்றை மட்டும்
கற்க வேண்டும். இவை பொதுவாக குளிர்ப்
பிரதேசங்களிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன.

இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும்.
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இவை
அருகியிருப்பினும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில்
இன்னும் வாழ்கின்றன.

ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன்
காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம்
முதலிய கலைகளிலும் அன்னபட்சிக்கு முக்கிய இடம் உண்டு.

இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னபட்சி
மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்
தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னபட்சியின்
உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை
அன்னப் பறவைதான். மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வாத்துகளும், அன்ன பறவைகளும், தண்ணீரில் மிதந்து
கொண்டே தான் தூங்கும்.

கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை
ஹம்ஸம் என்பர். அன்னப் பறவை, நீரை நீக்கிப் பாலை மட்டும்
பருகும் திறமை படைத்தது போல் சான்றோர்கள் பொய்யான
உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய
கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.

அன்னம் போல் நல்லோரைத் தெரிந்து கொள். பண்போடு பழகு.
பாதகரை அறிந்து கொள். தண்ணீரை விடுத்து பாலை அருந்தும்
சங்க கால அன்னப் பறவை போல தீமையை விடுத்து நல்லதை
எடுக்க வேண்டியது அவசியம்.
சில மந்திரங்களை ‘ஹம்ஸ மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை.
அவளை உணர்ந்த சான்றோர்களை ‘பரம ஹம்ஸர்கள்’ என்று
அழைப்பார்கள். அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில்
இருப்பவள் என்பதை உணர்த்தவே அம்பிகை ஹம்ஸ வாகனத்தில்
பவனி வருகிறாள்.‘ராஜ ஹம்ஸம்’ எனும் அரிய பறவை இருந்ததாக
இலக்கியங்களில் பார்க்கிறோம்.

அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.
சகோரம் எனும் பட்சி முழுநிலவின் கிரணங்களைப் பருகி பாய்ந்து
சென்று பருகும்.

இவை  நம் பண்டைய வரலாறுகளில் காணப்படுபவை.
‘சாதகம் போல் நினதருளே பார்த்திருப்பின் அடியேனே’ என்று
எப்போதும் இறையருளை எதிர்பார்த்திருப்பர் அடியார்கள்.

அன்னப் பறவை பகுத்தறிவின் (விவேகத்தின்) சின்னம்.
சாதாரண ஹம்ஸம் (அன்னம்) சாரத்தை கிரகிப்பதுபோல் ஞானியர்
உலகியலைத் துறந்து பரம்பொருளைப் பற்றி அதில் நிலைத்திருப்பர்.
அதனால் அவர்களுக்கு ‘பரமஹம்ஸர்’ என்று பெயர்.
-
-------------------------------------------------
தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum