புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 50%
heezulia
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 50%
heezulia
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:20 am


என்னுடைய எல்லை என்று
தெரிந்து கொண்டு தான்
-
நீ நுழைகிறாய்
உன்னுடைய உடைமையை
கவர்ந்திழுக்க
நான் விழைகிறேன்
-
உனது தரப்பு
நியாயத்தைச் சொல்ல
நீ முயற்சிக்கிறாய்
-
உன்னால் இழந்தவற்றை
நான் கணக்கிடுகிறேன்
-
ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே
நீ செய்கிறாய்
-
எனக்கு சிலுவையை
கொடுத்துவிட்டு நீ
கிரீடத்தை அணிந்து கொள்கிறாய்
-
மோதுபவர்களை எதிர்த்து
நிற்காமல் முதுகில் குத்தும்
துரோக வரலாறு உன்னுடையது
-
இரக்கப்பட்டு ஆடைகளைக்கூட
ஈந்துவிட்டு கெளபீனதாரியாகத்
திரியும் வாழ்க்கை என்னுடையது.
-
----------------------------
- ப.மதியழகன், மன்னார்குடி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:21 am



இரவலரும் புரவலரும் இருந்தனர்
மன்னராட்சியில்
கொடை வள்ளலாய் இருந்தனர்
மன்னர்களும்
-
கேட்க நன்றாகத் தானிருக்கிறது
காலமும் மாறித்தான் விட்டது
இன்று குடியாட்சி மக்களே
குடியாட்சி!
-
நமக்காக, நம் ஆட்சி!
யாசகம் எதற்கு?
கொடையும் எதற்கு?
யார் போடும் பிச்சையும் எதற்கு?
-
நம் உரிமைகளை
எதற்கு யாசிக்க வேண்டும்?
யாரிடம் யாசிக்க வேண்டும்?
யோசிக்க மட்டும் வேண்டும்
-
யோசித்துச் செயல்பட வேண்டும்!
-
------------------------------

- கிரேஸ் பிரதிபா.வி, அட்லாண்டா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:21 am



ஏரியெல்லாம் வீட்டு மனையாச்சி
வீடெல்லாம் மழை நீராச்சி
வீடெல்லாம் நீரென்று புலம்பும் மனிதா
மழை தங்கும் இடத்தில் தான்
மனை வாங்கினாய் மறந்தாயோ!
-
மழை வெள்ளத்தை சபிக்காதே தமிழா
நீ திருடிய ஏரியையும் குளத்தையும்
தேடியலையுது மழை நீர்
கொட்டும் நீரை யெல்லாம்
வைக்க இடமில்லாமல்
கொடுத்து விட்டாய் கடலுக்கு
-
மீண்டும் கன்னட நாட்டிடம் கையேந்துவாய் நீருக்கு
மூத்த குடி மூத்த குடி என்று மார்தட்டும் தமிழா
முன்னோர் செய்ததெல்லாம் மூடிமறைத்தாய்
அதன் பலன் நீர்க்காடாய் நகரங்கள்
-
கல்லணை கட்டிய கரிகாலன் நாட்டிலே
நீர் தேக்க வழியில்லை நீரெல்லாம் கடலிலே
சுயநலமில்லா தமிழனெல்லாம்
சுயநலமாகிப் போனதேன்
-
வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் குடி
இனி வாழ்வாதாரம் தேடுமோ
திருத்திக்கொள் தமிழா இன்னும் காலமிருக்கு
வருங்கால சந்ததியையாவது வாழவிடு.
---------------

கோபாலகிருஷ்ணன்  (கோகி), திருவண்ணாமலை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:24 am


தந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
தாயவள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
விளிக்கவோர் பெயரும் சேரும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)
--
ஆவதன் கன்றாய் மாறி
அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
செய்வதும் மரம்மண் தானே (2)
-

கல்வியை யாரோ ஈவர்,
கருத்ததை சேர்த்துப் பார்ப்போம்;
அல்லதும் நலமும் வாழ்வில்
அடுத்தவர் கொடுத்துச் செல்வர்;
செல்வமும் இரந்தி ரந்து
செலும்வரை சேர்த்த தன்றோ?
இல்லவே இல்லை என்றே
இடைவிடா திரந்து வாழ்வோம் (3)
-
ஊனதன் செல்கள் யாவும்
உணவதின் சக்தி ஏற்கும்;
மேனிறம் முன்னோர்த் தோலின்
மரபுதன் குணத்தை ஒக்கும்;
தானெனும் செருக்கில் மீசை
தழைத்திட உதட்டின் ஓரம்,
நானெனும் எண்ணம் ஏனோ
நம்நிலை மறந்து நிற்கும் (4)
-

வாலிபம் வந்த பின்னே
வளர்த்தவர் பெண்ணை ஈவார்;
தாலியாற் சொந்தம் ஆவாள்,
தாவென இரப்போம் அன்பை;
கோலமாய் அமைந்த வாழ்வில்
குழந்தையை இரந்து கொள்வோம்;
பாலகன் வளரும் போழ்து
பார்என இரந்து நிற்போம் (5)
-
மண்ணதில் வீழ்ந்த போது
வளர்ந்திட இரந்த காற்று;
விண்ணவன் மீட்டுச் செல்ல
விழைகுவான் கொடுத்த மூச்சை;
கண்ணெதிர் உயிரும் மீளும்,
காயமும் மறையும் மண்ணுள்;
உண்மையாய் நமது வாழ்வின்
உடமைகள் ஏதும் உண்டோ? (6)
-

வந்ததன் நோக்கம் என்ன?
வரவென ஏதும் இல்லை;
மந்தையாய் வாழ்வோம், மாய்வோம்;
மனமெலாம் நிறைந்து நிற்கும்
சிந்தனை என்னும் ஒன்றே
சேர்த்ததென் றெண்ணும் வேளை
தந்தவன் அணுகு கின்றான்,
தாவெனக் கேட்ப தற்கோ? (7)
-
-----------------------------------

- சந்தர் சுப்ரமணியன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:27 pm

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக