ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

Go down

 திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள் Empty திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

Post by velang Mon 21 Sep 2020 - 9:05

 திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

IMG_1134.JPG

மதுரை.திருவண்ணாமலை.சிதம்பரம் மற்றும் மைலாப்பூர் போன்ற தலங்களில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதுபோல திருக்கழுக்குன்றத்திலும் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.சித்திரை மாதம் துவங்கி பங்குனி மாதம் வரை நடைபெறும் திருவிழாக்களின் விவரம் கீழே:-
சித்திரை மாதம் அமாவாசை திதி கழித்த ஐந்தாம்நாள் திருமலையில் கொடியேற்றி பிரம்மேற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.இதில் 3ஆம் நாள் உற்வசமாக 63 நாயன்மார்கள் வேதகிரீஸ்வரர் மலையை கிரிவலம் வருவார்கள்.ஐந்தாம்நாள் ரிஷப வாகனத்தில் ஸ்வாமி உலா வருவார். ஏழாம்நாள் உற்வசவத்தில் ஸ்வாமி தேரில் மாடவீதி உலா வருவார். பத்தாம் நாள் உற்வசத்தில் இரவில் இராவண வாகனத்தில் ஸ்வாமி மலை வலம் வந்து மலையில் கொடி இறக்கப்படும்.அதன்பிறகு உற்சவருக்கு பத்துநாள் விடாற்றி உற்சவம் கோயிலுக்குள் நடைபெறும்.
மூல நட்சத்திரத்தில் திருஞான சம்பந்தருக்கு உற்சவம்.புனர்பூச நட்சரத்தில் அடிவார உற்சவம் ஆரம்பித்து விசாக நட்சரத்தில் நிறைவடையும். 10 நாள் திருக்கல்யாணம்.ரிஷப வாகன சேவை.(தற்போது இந்த திருக்கல்யாணம் நடைபெறுவது இல்லை)
2.jpg
மக நட்சத்திரத்தில் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் உற்சவம். ஆனிமாதத்தில் மலை அடிவாரத்திலிருந்து திருப்படி விழாவும்

நடைபெறும்.நால்வர் பாடல்களை பாடியபடி அடியார்கள் மலைமீது படியேறுவார்கள்.இந்த உற்சவம் படி ஏற்றுவிழா என அழைக்கப்படுகின்றது.தற்போது பேச்சு வழக்கில் படிஉற்சவம்எனஅழைக்கப்படுகின்றது.முந்தைய காலத்தில் யானை மீது திருமுறைகள் வைத்து மலையை சுற்றி வந்துள்ளார்கள்.உத்திர நட்சரத்திரத்தில் நடராஜர் அபிஸேகம் நடைபெறும்.
3.jpg
ஆடிமாதம் தாழக்கோயிலில் உள்ள திரிபுரசுந்தரி அம்மனுக்கு பரணி நட்சத்திரத்தில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம் ஶ்ரீதிரிபுரசுந்தரிக்குமட்டும் உற்சவம் நடைபெறும்.அம்மன் கோயிலின் முன்உள்ள கொடிமரத்தில்கொடி ஏற்றப்படும்..பதினோறு நாள் உற்சவத்தில் அம்மன் விதவிதமான அலங்காரங்களில் விதவிதமான வாகனங்களில் பவனி வருவார். 11 ஆம் நாள் ஆடி உத்திரத்தன்று சர்வாங்க அபிஷேகம் -திருக்கல்யாணம்-பஞ்ச மூர்த்திகள் வீதி உற்சவம் நடைபெறும்.ஆடிப்பூர நட்சத்திரத்தன்று சுந்தரபெருமானுக்கு உற்சவம் நடைபெறும்.
4.jpg
ஆவணி மூல நட்சத்திரத்தன்று மலை மீது உள்ள சுவாமிக்கு விழா நடைபெறும் இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த படலம் நினைவாக நடைபெறும். இறைவன் ஆமை மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்படும். தாழக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தியே உற்சவ மூர்த்தியாவார் ஆவணி சதுர்த்தி திதியில் வினாயகர் உற்சவம் நடைபெறும். வினாயகர் வீதி உலா நடைபெறும்.
5.jpg

புரட்டாசி விழா மற்ற கோயில்களில் நடைபெறுவதுபோலவே மிக சிறப்பாக நடைபெறுகின்றது.பலவிதமான அலங்காரங்கள் அம்மனுக்கு செய்யப்படும். நவராத்திரி உற்சவம். 9 நாட்கள் அபிஷேக அலங்கார தூப தீப நைவேய்திய ஆராதனை.9 ஆம் நாள் நவமி அன்று மூலஸ்தான அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம் நடைபெறும் விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டை அருகே உள்ள வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.
6.jpg
ஶ்ரீமகா கந்த சஷ்டி உற்சவம் 6 நாட்கள் நடைபெறும்.ஆறு நாட்களும் தாழக்கோயில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை உற்சவம் நடைபெறும்.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் அன்று ஸ்வாமிக்கு அன்னபிஷேகம் திருமலையிலும் தாழக்கோயிலிலும் உருத்திரான்கோயிலிலும் நடைபெறும். .இறைவன் மீது சாற்றிய அன்னம் பிறகு பக்தர்களுக்கும் நீர்நிலைகளிலும் கரைக்கப்படும்.
கார்த்திகை பரணி தீபம் சிறப்பாக நடைபெறும்.பெளர்ணமியில் தீபேற்சவம்.பஞ்ச மூர்த்திகள் வீதி உலா..இரவு சொக்கபனை நிகழ்ச்சி நடைபெறும் கார்திகை மாதம் கடைசி சோமவாரம்(திங்கள்கிழமை) மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரருக்கு மதியம் 1 மணிக்கு மேல் 1008 மஹா சங்காபிஷேகம் நடைபெறும்.
7.jpg
ஶ்ரீ மாணிக்கவாசகர் 10 நாள் உற்சவம். கடைசி நாள் திருவாதிரையில் ஶ்ரீநடராஸ மூர்த்திக்கு மஹா அபிஷேகம்-வீதி உலா உற்சவம் நடைபெறும் மார்கழி திருவாதிரையாகிய ஆரூத்ரா தரிசனம் சிதம்பரத்தில் நடைபெறுவதுபோல இங்கு நடைபெறுவது விஷேஷமாகும்.
8.jpg

பூச நட்சத்திரத்தில் சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். சந்திரசேகரர் அம்பாளுடன் சங்குதீர்த்த குளத்தினை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். மறுநாள் ரிஷப தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் அம்பாளுடன் வந்து குளத்தினை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் தெப்பல் உற்சவம் நடைபெறும்.
9.jpg

10.jpg

மகம் நட்சத்திரத்தில் ஸ்வாமி சங்கு தீர்த்த்ததில் காலையில் தீர்த்தம். மாலையில் ரிஷப வாகன சேவை.
8a.jpg

உத்திரம் நட்சத்திரத்தில் ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம்.திருக்கல்யாணம். ரிஷப வாகன சேவை நடைபெறும்.
11.jpg
சிறப்பு அபிஷேகம்:-
ஆவணி அவிட்டம் முதல் கார்த்திகை மாத்திற்குள் திருமலையில் பவித்ரோற்சவம் வசதிக்கு ஏற்றபடி தோதான நாளில் செய்யப்படும்.
12.jpg
தாழக்கோயில் தினசரி காலை 6.00 மணிக்கு கோயில் திறந்து மதியம் 1.00 மணி வரையிலும் மாலை 4.00 மணிக்கு கோயில திறந்து இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். திருவிழா காலங்களில் உற்சவ காலங்களில் கோயில் திறக்கும் நேரம் மாறுபடும். மலைக்கோயில் காலை 8.30 க்கு திறந்து மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்;.
புகைப்பட உதவி:-

இணையத்தில் காண இங்கு செல்லவும்:-https://thirukalukundram.blogspot.com/2020/09/blog-post_20.html
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  #திருக்கழுக்குன்றம்:-#திருக்கழுக்குன்றம் புண்ணிய தீர்த்தங்கள் பற்றி #ஆன்மீகமலரில் .
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
»  திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி இணையத்தில் வந்துள்ள தகவல் தொகுப்பு
»  திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum