ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

4 posters

Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by ayyasamy ram Thu 17 Sep 2020 - 14:54

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-05%2F8882b67b-62f2-4e7e-80fa-3418c2d529f7%2F36_h.jpg?rect=5%2C0%2C988%2C556&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
முருகப்பெருமானை வழிபட உகந்த தினங்கள்
செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை
நட்சத்திர தினம் ஆகியன.

இவை மூன்று இணைந்துவரும் சிறப்பு இந்த நாளுக்கு
உண்டு.

பொதுவாகவே சஷ்டி திதி முருகப்பெருமானின்
வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் கார்த்திகை
நட்சத்திரமும் சேர்ந்துவருவது இன்னமும் சிறப்பு
வாய்ந்தது. இவை இரண்டும் இணைந்து
செவ்வாய்க்கிழமை வாய்ப்பது அதனினும் சிறப்பு.
காரணம் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கானது.

கிழமை என்றால் உரிமை. செவ்வாய்க்கிழமை என்றால்
செவ்வாய் கிரகத்துக்கு உரியது என்று பொருள்.
செவ்வாயை ஜோதிட சாஸ்திரம் பூமி காரகன் என்கிறது.
அதேபோன்று அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும்
செவ்வாயே அதிபதி.

அப்படிப்பட்ட செவ்வாயின் அனுகிரகம் பெற நாம்
வணங்க வேண்டிய கடவுள் முருகப் பெருமான்.
செந்நிறமேனியனான சரவணனை வணங்கினால்
செவ்வாய் பகவானால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்
என்பது நம்பிக்கை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by ayyasamy ram Thu 17 Sep 2020 - 14:57

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2F66caedae-574f-4913-93ad-2998cc0cc619%2F105952_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சஷ்டியின் மகிமையால் பிழைத்த சூரபத்மன்!


பொதுவாக சஷ்டி திதியின்போது முருகப்
பெருமானை விரதம் இருந்துவழிபட்டால் பகைவரால்
உண்டாகும் துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

சிறைப்பட்டிருந்த தேவர்களின் துயர் தீர்க்க முருகப்
பெருமான் சூர்பத்மனோடு யுத்தம் செய்தார்.
பகைவரை வதம் செய்வதுதான் யுத்தம். ஆனால்
முருகப்பெருமானோ சூரபத்மனை வதம் செய்யவில்லை.

மாறாக அவனை சேவலும் மயிலுமாக்கி அவனுக்கு
அழிவில்லாப் பெருவாழ்வை அருளினார்.
சூரபத்மனுக்கு முன்பாக முருகப்பெருமானை எதிர்த்த
அசுரர்கள் பலரையும் வதம் செய்த முருகன்
சூரபத்மனை மட்டும் கொல்லவில்லை.

இதற்குக் காரணம் சஷ்டி திதி. இருவரும் நேருக்கு
நேராக நின்று யுத்தம் செய்தனர். யுத்தகளம் என்றாலும்
முருகப்பெருமானின் அருள் தரிசனம் சூரபத்மனுக்குக்
கிடைத்தது.

சஷ்டி அன்று முருக தரிசனம் செய்தவர்க்கு அழிவு
என்பது நிச்சயம் இல்லை. அதனால்தான் முருகக்கடவுள்
சூரனைக் கொல்லாது அவனை உருமாற்றி அருளினார்
எனலாம்.

பகைவனுக்கே திருவடி அருளிய சஷ்டி திதியில்
சரவணனை வழிபட்டால் வழிபடுபவர்கள் அடையும்
நன்மைகள் அளவிடற்கரியது. திதியில் சஷ்டியும்
நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருக வழிபாட்டுக்கு
உகந்தவை. இவை இரண்டுமே ஆறு என்னும் எண்ணோடு
தொடர்புடையன.

ஆறு கார்த்திகைப் பெண்களே சரவணப்பொய்கையில்
மலர்ந்த அக்னியின் அம்சமான குழந்தைகளை
வளர்த்தவர்கள். அதன் பயனாக எந்நாளும் நின்று
பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகும் வரம் பெற்றனர்.

அந்த ஆறு நட்சத்திரங்களின் பெயரே கார்த்திகை.
ஆறுமுகனான முருகப் பெருமானை ஆறாம் திதியான
சஷ்டி அன்றும் ஆறு நட்சத்திரங்களின் தினமான
கார்த்திகை நட்சத்திர தினத்தின் அன்றும் வழிபடுவது
சிறப்பு வாய்ந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by ayyasamy ram Thu 17 Sep 2020 - 15:03

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2Fa710bba3-2e95-4981-bbca-d2e7934f4040%2F141707_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
திருச்செந்தூர் முருகன்
---
முருகப்பெருமான் சிவ வடிவம். அவரின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றியவர். முருகனுக்குத்
தன் சக்தியை வேலாக வழங்கினாள் அன்னை
பார்வதி.

எனவே, முருகப்பெருமானை வழிபடுவது என்பது
சிவசக்தி வடிவ வழிபாடே எனலாம்.

முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சாத்தி
வழிபட்டால் செவ்வாய் மனம் மகிழ்ந்து அருள்வார்
என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

மேலும் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம்
செய்வது சிறப்புவாய்ந்தது.

அருணகிரியார் அருளிய வேல்வகுப்பு,
சச்சிதானந்த சுவாமிகள் அருளிய வேல் மாறல்
ஆகியவற்றைப் பாராயணம் செய்யுங்கள்.
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-06%2F5f07e26c-6c30-4246-a93f-db03e4504912%2Fmurugaan.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
கந்த சஷ்டிக்கவசம் படிப்பதன் மூலம் நமக்கு வரும்
இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது அடியார் வாக்கு.

எனவே இன்று தவறாமல் முருக வழிபாடு செய்து
நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

நன்றி-சக்தி விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by krishnaamma Thu 17 Sep 2020 - 20:56

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by SK Fri 18 Sep 2020 - 17:05

என் மனைவிக்கு முருகன் மிகவும் பிடிக்கும்
நான் பிறந்தது சஷ்டி அன்று தான்( தேய்பிறை சஷ்டி)

என் மகள் சஷ்டிகா பிறந்தது சஷ்டி அன்று தான்
நடனம் நடனம் நடனம் நடனம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by T.N.Balasubramanian Fri 18 Sep 2020 - 17:16

ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும். சிரி சிரி

மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி? 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by SK Fri 18 Sep 2020 - 17:31

T.N.Balasubramanian wrote:ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும். சிரி சிரி

மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி? 

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1331552

அழகாக உச்சரிக்கிறாள் ஐயா உறவுகள் முறை கூட தமிழில் தான் அழைப்பாள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Empty Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum