புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

First topic message reminder :

இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! புன்னகை...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து  இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை  வெளேர்  என்கிற மிக அழகிய உடையுடன்,  கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2020 8:47 pm

என்னை எதிர் கொண்டு அழைத்த அந்த பெண் வினோதமான ஆடை அலங்காரத்தில் இருந்தாள். ‘இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்கள் இங்கு தான் இருக்கப் போகிறீர்கள். அதுவரை உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ள என்னை நியமித்து இருக்கிறார்கள்' என்று புன்னகையுடன் சொன்னாள். ‘இங்கு உங்களுக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். முதலில் நாம் எந்த இடத்திற்கு போகவேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள் என்று சொல்லி என்னை அழைத்து சென்றாள்.’ பிறகு இங்கு என்னென்ன உண்டு என்று நான் உங்களுக்கு சுற்றிக் காட்டுகிறேன்’ என்று ம்  சொல்லி அழைத்து சென்றாள்.

அந்த புதிய மாளிகை இல் இருந்த ஒரு அறைக்கு நாங்கள் சென்றோம். அங்கு நம் கம்ப்யூட்டர் போல இருந்த மிஷினில் ஏதோ தட்டினாள். விவரங்களை தன் கை இல் இருந்த ஐ பேட் போலிருந்த எதிலோ குறித்துக் கொண்டாள். அதிலிருந்து ஏதோ குறிப்பு எடுத்துக் கொண்டாள் அவள் என நினைக்கிறேன் .  நடு நடுவே அவள் தன்னுடைய மணிக்கட்டில் அணிந்து கொண்டிருந்த வாட்ச் போல இருந்த ஒன்றையும் பார்த்துக் கொண்டாள். பிறகு என்னைப் பார்த்து ;இப்பொழுது நாம் போகலாம்' என்றாள். 'எங்கே' என்றேன் நான். அதற்கு அவள், 'நான் தான் முன்பே சொன்னேனே, நீங்கள் எங்கு தங்க வேண்டும் என்று காண்பிக்கிறேன் என்று', வாருங்கள் போகலாம் என்று சொல்லி மீண்டும் என் கையை பிடித்துக்  கொண்டாள்.

நாங்கள் நடக்க , அதாவது பறக்க ஆரம்பித்தோம். அதாவது கால்கள் தரை இல் பாவாமல் நடந்தோம். அது கிட்ட தட்ட பறப்பது போல் தானே. ஆனால் வழி முழுக்க கம்பளங்கள் விரிக்கப்பட்டு இருந்தது. நான் அந்த பெண்ணைக் கேட்டேன் ,'காலே இங்கு பதியவில்லை இதற்கு இத்தனை அழகான நடை பாவாடை எதற்கு ' என்று.... அவள் இனிமையான குரலில் சிரித்தாள்.  பதில் சொல்லவில்லை.

சரி இதற்காவது பதில் சொல், உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள் 'இங்கு எல்லோருக்குமே எண்கள் தான் , பெயர் என தனியாக  கிடையாது, உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் என்னை எந்த பெயர் கொண்டும்  அழைக்கலாம்' என்றாள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2020 8:47 pm

'நான் கிருஷ்ணப் ப்ரேமி, எனவே உன்னை மீரா என்று கூப்பிடுகிறேன். என் மகளின் பெயரும் அதுவேதான். சரியா' என்றேன். அவளும் ஒப்புக்கொண்டாள். நாங்கள் இருவரும் ஒரு மிக மிக பெரிய கட்டிடத்தை அடைந்தோம். அது ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் போலத்தெரிந்தது. ஆஹா என்ன கூட்டம் என்ன கூட்டம்... தினமும் இத்தனை பேரா செத்து போகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆமாம் உலகம் முழுவதிலிருந்தும் வந்தால் இத்தனைக்கு கூட்டம் இருக்கத்தான் இருக்கும் என்று எனக்கு நானே பதிலும் சொல்லிக் கொண்டேன்.

அத்தனை பேர் அங்கு புழங்கினாலும் ஒரு துளி சத்தம் இல்லை. நான் முன்பே சொன்னது போல அந்த தேவ கானம் என்னுடனே பயணித்தது. நான் அது பற்றி அவளிடம் கேட்டேன். அவள் புன்னகைத்து, ‘அது தான் நீங்களே சொல்லிவிட்டிர்களே நீங்கள் கிருஷ்ணப் ப்ரேமி என்று, அதனால் தான் உங்களுக்கு அவரின் குழலொலி கேட்ட வண்ணம் உள்ளது. அவரவர்களுக்கு அவரவரின் இஷ்ட தெய்வததை குறிக்கும் வண்ணம் ஒலி கேட்டவண்ணம் இருக்கும். இது உங்களை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்' என்றாள்.

உண்மைதான் உறுத்தாத அந்த குழலோசை மனதுக்கு மிக்க அமைதியை கொடுத்தது. நாங்கள் அந்த கட்டடத்தில் நுழைந்ததும் இந்தக் கூட்டத்தில் நான் தொலைந்து போய்விடுவேனா என்று கூட நினைத்தேன். அத்தனை கூட்டம். எங்கு பார்த்தாலும் வேறு வேறு மொழிகளில் எழுதி இருந்த போர்டுகள். எல்லோரும் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் ஒவ்வொருவருடனும் ஒரு தேவதை இருந்தாள். எல்லோரும் தங்களின் கிளைன்ட்(?) கையைப் பற்றிக்கொண்டு தான் நடந்தார்கள்.

என்னுடைய தேவதை மீராவும் அந்த போர்டுகளை பார்த்தவாறு என்கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். எனக்கு நான் இடுப்பு வலியுடன், அபுதாபி இல் இறங்கி டெர்மினல் விட்டு டெர்மினல் கிட்டத்தட்ட 35வது கேட்டுக்கு நடந்து சென்றது நினைவுக்கு வந்தது.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2020 8:31 pm

@T.N.Balasubramanian இன்னும் படிக்கவில்லையா ஐயா?.... ராம் அண்ணா, விமந்தனி, லக்ஷ்மி....எங்கே யாரையும் காணவில்லை....????சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2020 4:03 pm

பல மொழி கொள்கை அங்கே புழக்கத்தில் உள்ளது. 
என்னே முன்யோசனை !!
இரு மொழி --மும்மொழி என்றால் எவ்வளவு கஷ்டம்?



ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2020 4:58 pm

krishnaamma wrote:@T.N.Balasubramanian  இன்னும் படிக்கவில்லையா ஐயா?.... ராம் அண்ணா, விமந்தனி, லக்ஷ்மி....எங்கே யாரையும் காணவில்லை....????சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1331702

விமந்தனி கொஞ்சம்  பிசி.பிறகு வருவார். 



ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Mon Sep 21, 2020 7:10 pm

i have read the story krishnamma but i could not write the feed back in tamil. Before it changes automatically to tamil. now it it not doing that. That is why little hesitation to write. Nice story please continue. Good day.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 8:18 pm

T.N.Balasubramanian wrote:பல மொழி கொள்கை அங்கே புழக்கத்தில் உள்ளது. 
என்னே முன்யோசனை !!
இரு மொழி --மும்மொழி என்றால் எவ்வளவு கஷ்டம்?

ரமணியன் 

ஹா..ஹா..ஹா... படிப்பவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்று கொஞ்சம் யோசித்து எழுதினேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 8:21 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:@T.N.Balasubramanian  இன்னும் படிக்கவில்லையா ஐயா?.... ராம் அண்ணா, விமந்தனி, லக்ஷ்மி....எங்கே யாரையும் காணவில்லை....????சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1331702

விமந்தனி கொஞ்சம்  பிசி.பிறகு வருவார். 

ரமணியன் 

சரி ஐயாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 8:22 pm

lakshmi palani wrote:i have read the story krishnamma but i could not write the feed back in tamil.  Before it changes automatically to tamil.   now it it not doing that. That is why little hesitation to write. Nice story please continue.  Good day.

மிக்க நன்றி லக்ஷ்மி... இப்பொழுது னம் தளத்தில் முன்பு போல் தமிழில் அடிக்க முடிவதில்லை தான் ஆனால், வேறு சில வழிகள் உண்டு. நான் நிறைய முயன்று கடைசி இல் இந்த 'அழகியை' நிறுவிக்கொண்டேன்... இதன் மூலம் பல்வேறு மொழிகளை எளிதாக தட்டச்சு செய்ய முடியும். முயன்று பாருங்கள் புன்னகை @lakshmi palani

https://www.azhagi.com/steps-regular.html



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 8:25 pm

ஒவ்வொரு பிரிவாக பார்த்து நடக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் எங்காவது போய்விடுவோம். நாம் செல்லவேண்டிய கேட் வந்து அங்கு டேபிள் போட்டுக்கொண்டு உக்கார்ந்து இருப்பவர்களிடம் நாம் செல்லவேண்டிய விமானத்தின் எண் மற்றும் நம்முடைய டெஸ்டினேஷனை சொல்லி விசாரித்து அவர்கள், ஆமாம் இங்கு தான் காத்திருங்கள் என்று சொல்லும் வரை 'பக் பக்' என்று இருக்கும். பிறகு என் லக்கேஜ் எல்லாம் நான் வந்த விமானத்தில் இருந்து இதற்கு மாற்றிவிட்டீர்களா என்று நம் டிக்கெட்டில் ஒட்டி இருக்கும் நம் லக்கேஜ் பற்றியும் விசாரித்து விட்டுத்தான் சாப்பிடவே போகமுடியும்.

ஒருமுறை அப்படித்தான், முதல் பிளைட்டில் சாப்பாடு சரி இல்லை, சரி அபுதாபி இல் சாப்பிடலாம் என்று நினைத்தேன். அங்கு இறங்கினதுமே தெரிந்து விட்டது நான் 35வது கேட்டுக்கு போகவேண்டும் என்று. போர்டைப் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் இறங்கின டெர்மின லிலேயே உணவு உண்ணும் வசதி இருந்தது. எனக்கு First Class டிக்கெட் என்பதால் நான் அங்கு தூங்கவோ, குளித்து கிளம்பவோ வசதி உண்டு. சரி குறைந்த பக்ஷம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கு நுழைந்தேன். என்னுடைய டிக்கெட்டை பார்த்தாள் அந்த ரிஷப்ஷனிஸ்ட். நான் மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தாள் போல் இருக்கிறது. என் டிக்கெட் ஐ பார்த்தவாறே, 'மேம், நீங்கள் இங்கு உள்ளே போக எந்த தடையும் இல்லை, ஆனால் நீங்கள் அடுத்த டெமினல் போகவேண்டும் அதுவும் கேட் 35. மிக தூரம்.

நீங்கள் இங்கு உணவு எடுத்துக் கொண்டால் உங்களால் வேகமாக நடந்து டெர்மினலை அடையமுடியாது. அந்த கேட் 35 இல் இதே போல மற்றும் ஒரு லௌன்ச் உள்ளது. நீங்கள் முதலில் கேட் பக்கத்தில் போய்விடுங்கள். உங்கள் டிக்கெட்டை செக் செய்து கொள்ளுங்கள், பிறகு எதிரிலேயே இருக்கும் லௌஞ்ச இல் ரெப்பிரேஷ் செய்து கொள்ளுங்கள். இது ஜஸ்ட் அட்வைஸ் தான். உங்கள் சௌகர்யப்படி செய்யுங்கள் ' என்று புன்னகையுடன் சொன்னாள். நானும், ‘அது மிக தூரம் என்றால் எனக்கு பேட்டரி கார் ஏற்பாடு செய்ய முடியுமா ‘ என்று கேட்டேன். ‘இல்லை டெமினல் விட்டு டெர்மினல் போக முடியாது. அதனால் தான் இப்படி சொன்னேன்’ என்று சொன்னாள் அவள்.

'சரி நன்றி' என்று சொல்லிவிட்டு பசியுடனே நடந்து என் கேட்டை அடைந்தேன். அப்புறம் அவள் சொன்னபடிக்கு என் அடுத்த விமானத்தில் ஏறுவதற்காக செய்யவேண்டியதை செய்து முடித்த பின் உணவருந்த சென்றேன். மனமார அந்த ரிஷப்ஷனிஸ்ட்டுக்கு நன்றியை மீண்டும் ஒருமுறை சொன்னேன். அங்கு உள்ளே போனால்.... OMG அத்தனை அத்தனை உணவு வகைகள்... ஆனாலும் எனக்கு பயம் எது வெஜிடேரியன் என்று.. எனவே , எங்கவீட்டுப் பிள்ளை இல் இரண்டாவதாக அதே ஹோட்டலுக்கு சாப்பிட வரும் எம். ஜி.ஆர் 1 இட்லி போதும் என்று சொல்வாரே அது போல எனக்கு இது போதும் என்று காய்கனி வகைகள் மற்றும் பன் பிரெட் வகைகளை மட்டும் எடுத்துக் கொண்டேன். ஒரு பான்டா டின் எடுத்துக் கொண்டேன். அந்த நிகழ்வுகள் எல்லாம் என் மனதில் அலை மோதின.
ஆனால் இன்று எனக்கு எங்கும் வலி இல்லை, பசி இல்லை மேலும் என்னை விட்டு விட்டு விமானம் பறந்து விடுமே லக்கேஜ் என்ன ஆகுமோ என்றெல்லாம் வித விதமான பயங்கள் இல்லை.எல்லாவற்றுக்கும் மேல் என்னை வழி நடத்திச்செல்ல மீரா இருக்கவே இருக்கிறாள். எனவே மிகவும் சந்தோஷமாக மீராவுடன் மிதந்து சென்றேன்.

மீரா ஒவ்வொரு போர்டு பெயரையும் படித்து படித்து என்னை வழிநடத்தினாள். ஏதோ ஏதோ மொழிகளில் எழுதி இருந்ததை அவள் எப்படி அறிவாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்றாள். நானும் தான். ஆனால் அங்கு வெறும் சுவர் தான் இருந்தது. ஆனால் என்ன அதிசயம், நாங்கள் நின்றதும் அந்த சுவற்றில் ஒரு கதவு திறந்தது. பார்த்தால் அது ஒரு லிப்ட் போலவும் தெரிந்தது. நாங்கள் உள்ளே நுழைந்தோம்.

நாங்கள் உள்ளே நுழையும்போதே, தூரத்தில் நின்றுகொண்டிருந்த குழந்தை ஒரு தேவதை இன் கையை உதறிவிட்டு எங்கள் லிப்ட் ஐ நோக்கி ஓடிவந்தாள் . நான் நினைத்தேன் அவளும் உள்ளே வந்து விடுவாள் என்று ஆனால் வந்த வேகத்தில் அவளால் உள்ளே நுழைய முடியாமல் லிப்ட் இல் இடித்துக் கொண்டு கீழே விழுந்தாள். நான் அடாடா என்று சொல்லிக் கொண்டே அவளை பிடிக்க கையை நீட்டினேன். அதற்குள் அந்த குழந்தை இன் தேவதையும் ஓடிவந்து அவளை தாங்கிக்கொண்டாள் .

என்ன அதிசயம், நீட்டிய என் கை இல் எங்கள் லிப்ட் தான் இடித்தது. எப்படி என்று பார்த்தால் அது கண்ணாடிக் கதவு. அதனால் தான் அந்தக் குழந்தையால் உள்ளே நுழைய முடியவில்லை. அவர்கள் லிப்ட்க்கு வெளியே இருந்ததா ர்கள். அதனால் தான் அந்த தேவதை யால் அவளை பிடித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நாங்கள் க்ஷணத்தில் ஏறிவிட்டோமே, அப்படியா கதவு மூடிக்கொண்டு விட்டது...நான் கேள்விக்குறியுடன் மீராவைப் பார்த்தேன்'பாவம் அந்த குழந்தை, அவளும் நம்முடன் வந்திருக்கலாம், அந்த தேவதை உன் போல ஷார்ப் இல்லை போல் இருக்கிறது, அது தான் லிப்ட் ஐ தவற விட்டு விட்டாள்' என்றேன்.

அதற்கு அவள், ' அப்படி இல்லை, இது அவர்கள் வரவேண்டிய இடம் இல்லை. ஆதலால் அவளால் இங்கு வர முடியாது.' என்றாள். நான் விழித்தேன். அவள் விளக்கினாள். என்னை பிடித்திருந்த பிடியை விலக்கி என் மணிக்கட்டைக் காட்டினாள். அதில் நான் கண்டது.......

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக