புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இளநீர் மருத்துவம் Poll_c10இளநீர் மருத்துவம் Poll_m10இளநீர் மருத்துவம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீர் மருத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 11:55 am

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள்  நிறைந்துள்ளன.



அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில்  அதைச் சரி செய்யும்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்  பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்  தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும்  குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப்  பொருள்கள் இளநீரில் உள்ளன.

இளநீரானது உடனடியாக உட்கிரக்கிக்கப்படும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே இது எளிதில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கிவிடும்.

மேலும் இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்றவை மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன.

வெயில் சென்றுவிட்டு நாம் இளநீரினை அருந்தும்போது நம்மைவிட்டு நீங்கிய தாதுஉப்புக்கள், விட்டமின்கள் ஆகியவற்றை நாம் திரும்பப் பெற்று புத்துணர்ச்சியை உணர்கிறோம்.

எனவே நீர்இழப்பினால் அவதிப்படுபவர்கள் இளநீரினை உண்டு நல்ல தீர்வினைப் பெறலாம்.

வளர்ச்சிதை மாற்றத்தினை மேம்படுத்த

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின்போது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளிலிருந்து முழுமையான ஆற்றலைப் பெற மாங்கனீசு என்ற தாதுஉப்பு தேவை.

இளநீரில் மாங்கனீசு காணப்படுவதால் இதனை அருந்தும்போது நாம் முழுமையான ஆற்றலைப் பெற்று வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெறுகிறது.

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அதிக சோடியமும், குறைந்த பொட்டாசியமும் இருக்கிறது. சோடியமானது சிறுநீரகத்தில் நீரினை தேக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இதனால் சிறுநீரினை வெளியேற்றுதலில் சிறுநீரகத்தின் செயல்பாடானது அதிகரிக்கிறது. பொட்டாசியம் சிறுநீரினை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

மேலும் பொட்டாசியம் உடலில் உள்ள நச்சினை சிறுநீர் மூலம் வெளியேற்றி சிறுநீரகக்கற்கள் உருவாவதைத் தடை செய்து சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது.

இளநீரில் குறைந்தளவு சோடியமும், அதிகளவு பொட்டாசியமும் காணப்படுகிறது. எனவே இதனை குடிக்கும்போது சிறுநீரகம் சீராக செயல்பட்டு சிறுநீரகக்கற்கள் உருவாது தடைசெய்யப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க

இளநீரில் உள்ள பொட்டாசியமானது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீராக வெளியேற்றி இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

மேலும் இதில் உள்ள அர்ஜினைன் என்ற அமினோ அமிலமானது இரத்த நாளங்களை சீராக்கி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இதனால் இரத்த அழுத்தம் சீராகிறது. எனவே இளநீரினை உண்டு இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

நல்ல செரிமானத்திற்கு

இளநீரில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இளநீரினை அருந்தலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் இதில் உள்ள தாதுஉப்புக்கள் செரிமான வியாதிகளால் உண்டாகும் நீர் இழப்பினை சரிசெய்கின்றன. மேலும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை இதில் உள்ள பெப்டிடைட்ஸ் தடைசெய்கிறது.

இளறீரானது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.

தசைப்பிடிப்பிற்கு

மக்னீசியமானது தளர்வு தாதுஉப்பு என்று அழைக்கப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அழுத்தத்திலிருந்து தளர்வு செய்கிறது. மேலும் இது செரோடோனின் என்ற நல்ல ஹார்மோன் சுரப்பினைத் தூண்டுகிறது.

கால்சியமானது சீரான தசை தளர்வினை உருவாக்குகிறது. போதுமான அளவு கால்சியம் உள்ள உணவினை உண்ணும்போது இதய தசைகள் உள்ளிட்ட உடலில் உள்ள எல்லா தசைகளும் பிடிப்புகள் இல்லாமல் தளர்வாக இருக்கின்றன.

எனவே கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள இளநீரினை அருந்தும்போது அவை தசையினை பிடிப்புகள் ஏதுமின்றி தளர்வாக வைப்பதுடன் மனதிற்கும் அமைதியை வழங்குகின்றன.

கல்லீரலைப் பாதுகாக்க

இளநீரில் கல்லீரலினைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கல்லீரலைப் பாதுகாக்கின்றன.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

இளநீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சருமப் பராமரிப்பிற்கு

இளநீரில் சைட்டோகைனின் என்ற தாவர ஹார்மோன் உள்ளது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும் சருமச்சுருக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

சைட்டோகைனின் புற்றுச்செல்கள் உருவாவதையும் தடை செய்கிறது. மேலும் பருக்கள், வடுகள் மீது இளநீரினை மேற்பூச்சாகப் பூசும்போது அவை விரைந்து ஆறி மறைந்து விடுகின்றன.

இளநீரானது சருமத்தை வறண்டுவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் படியவிடாமலும் பாதுகாக்கிறது.

இளநீரினைப் பற்றிய எச்சரிக்கை

கொட்டைகள் மற்றும் விதைகள் ஒவ்வாமை உள்ளவர்கள் இளநீரினைத் தவிர்க்கவும்.

அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் அறுவைசிகிச்சைக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்து இளநீரினைத் தவிர்த்துவிட வேண்டும்.

ஏனெனில் இளநீரின் செயல்பாடானது இரத்த அழுத்தத்தில் வேறுபாட்டினை உண்டாக்கி விடக்கூடும்.

சிறுநீரக செயலிழப்பு கொண்டவர்கள் மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்து இளநீரை அருந்தவும்.

இளநீரானது அப்படியேவோ, சர்ப்பதாகவோ, பழச்சாறுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது. இளநீரினை வாங்கும்போது கனமானதாகவும், புதியதாகவும், கையில் குலுக்கினால் குலுங்காமலும் இருப்பதை வாங்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக