ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் - கவிதை

Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty தூரத்து உறவுகள் - கவிதை

Post by ayyasamy ram Sun Aug 30, 2020 10:05 am

 தூரத்து உறவுகள் - கவிதை 0_KiKhuf6OScwg2j9J
-
வாசகர் கவிதை -By கவிதைமணி

தூரத்து உறவுக ளென்னை ஆரத்தி
எடுத்து சிநேகங்கூடல் செய்து ஒருங்கி
உறவாடல் கொண்டாடல் ஒருவருக்கொருவர்
உள்ள தொடர்பு கொள்ளல்

உண்டாகும் விதம் பெண் கொடுக்கல்
பெண் ணெடுத்தல் மூலம் "தூரத்து
உறவுகள்" கிட்டத்தில் அமைந்திடுமொரு
வட்டத்துக்குள் பணிந்து ஒருங்கி விடும்

தம்மீ தொருவர் காரச் சாரமாய் மொழி
பொழிந்திட தூரத்து உறவுகள் கண்
பட்டால் படையெடுத்து பழிவாங்கும்
விட்டுக் கொடார் ஒருபோதும் விடார்

உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல்
உறவு பாராட்டுதல் இனத்தாருடன் சேர்ந் திருத்தல்
என்பதோர் கலையும் கூடவே
உறவுமுரிதல் நட்புக் கெடுதல் நடவாது
----
- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை


Last edited by ayyasamy ram on Sun Aug 30, 2020 10:09 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty Re: தூரத்து உறவுகள் - கவிதை

Post by ayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am

 தூரத்து உறவுகள் - கவிதை Tamil_news_large_1992122

எத்தனைக் காலம்  வாழ்ந்தோம் என்பதைவிட
அத்தனைக்  காலமும்
எத்தனை உறவுகளை சேர்த்தோம்
என்பதே நமக்கு பெருமை தரும்!
அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான்
என்ற பந்தங்கள் நெருங்கிய உறவு!
மற்ற அனைவரும் நம்மை
சுற்றமுடன் இனிக்கும் ஒவ்வொரு
பந்தமும் "தூரத்து உறவு!"
உறவில் தூரமென்ன பக்கமென்ன
மாறாக் கேள்வி நெஞ்சில் எழுந்ததே!
சேர்ந்து சிறக்க மட்டுமல்ல உறவு
சோர்ந்து போகும் நாளில்
சார்ந்து வந்து அணைக்கவும்
உதவும் அனைவரும் உறவே!
"தூரத்து உறவில்" உடல் வெகு
தூரமிருந்தாலும் மனம் விட்டு
பாரமின்றி பேசுவதால்
இணைந்தே வாழலாமே!
பிணைந்த உள்ளங்கள் தொலைவில்
இருந்தாலும் மறக்காமல்
பேசுவதால் "தூரத்து உறவும்"
நெருங்கிய உறவாக தொடங்குமே!
---
- உஷாமுத்துராமன், திருநகர்
படம்-இணையம்


Last edited by ayyasamy ram on Sun Aug 30, 2020 10:11 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty Re: தூரத்து உறவுகள் - கவிதை

Post by ayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am


 தூரத்து உறவுகள் - கவிதை 5RzGpPRR6myBXM8Avq0B+downloadதிருமணப்பந்தலில் அமர்ந்திருந்த
மணமகனின் காதில் தாத்தா ஓத
விழித்த மென்பொறியியலாளன்
காக்கைகளா இவர்கள் என கேட்க
ஒழுகிய வீட்டில் கஞ்சி குடித்த வேளையில்
காணாமல் போன உறவுகளின் பட்டியலை
தாத்தா புன்சிரிப்புடன் மண்டபத்தில்
கணக்கெடுக்க உறவுகளின்
புன்னகையில் பழைய நினைவுகள்
அனைத்தும் பாசவலையால்
மறந்து கணக்கெடுப்புகளை மறந்தாரே!
--
- டாக்டர் பி.ஆர்.லட்சுமி


Last edited by ayyasamy ram on Sun Aug 30, 2020 10:42 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty Re: தூரத்து உறவுகள் - கவிதை

Post by ayyasamy ram Sun Aug 30, 2020 10:07 am

 தூரத்து உறவுகள் - கவிதை 9SnAWIMReaMNVwyHj6gF+Kavithai
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாய் ஆமோ ?
 கலையெல்லாம் மாமல்லைக் கலைபோல் ஆமோ ?
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாய் ஆமோ ?
 சுடரெல்லாம் கதிரவன்போல் சுடுவ தாமோ ?
இல்லெல்லாம் தன்னிறைவாய் இருப்ப துண்டோ ?
 எல்லாரும் இருப்பவராய் இயம்ப உண்டோ ?
கல்லாமை, கள்ளாமை கழிந்த துண்டோ ?
 காலங்கள் மாறாமல் நிலைத்த துண்டோ ?

சொந்தங்கள் எல்லாமும் சொல்லற் கில்லை
 சொன்னாலும் செய்கின்ற சொந்தம் இல்லை !
சொந்தங்கள் பலநேரம் பகையாய்ப் பாயும்
 சொல்லாலும் செயலாலும் சுட்டே வீழ்த்தும் !
சொந்தங்கள் பலநம்மை சூழ்ந்த போதும்
 துளியளவவே என்றாலும் சுணங்கிப் போகும் !
சொந்தங்கள் பெயரளவில் உறவாய் நிற்கும்
 தொடராகப் பலநேரம் தொல்லை யாகும் !

தூரத்து உறவினரை தேடிச் சென்றேன்
 சொன்னேனென் நிலையினையே, கேட்ட போதே
ஆரயெனைத் தழுவிமிகக் கண்ணீர் மல்க
 அத்தனையும் நான்தீர்ப்பேன் என்று ரைத்தார் !
சீரனையர் சொன்னார்போல் உதவி செய்தார்
 தேவையெனில் எப்போதும் வருக என்றார் !
நேரத்தில் அவர்செய்த உதவி யாலே
 நிலைத்துள்ளேன் இம்மண்ணில் மறவேன் யானே !
----
-'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி,ஆர்க்காடு.


Last edited by ayyasamy ram on Sun Aug 30, 2020 10:43 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty Re: தூரத்து உறவுகள் - கவிதை

Post by ayyasamy ram Sun Aug 30, 2020 10:08 am

 தூரத்து உறவுகள் - கவிதை KxSKeQMaRIaTf4S68AT3+f5489f_d540b64c48a84f50acdcc4d25d5c1c95_mv2

தூரத்து உறவுகளில் பல நிலையுண்டு - அதனை
துரத்துகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் அறிவதுண்டு

நெருக்கடி வரும்நிலையில் நெருங்கிய உறவுகளே
நழுவிச் செல்லும்போது - நெருங்கிய உறவுகளும்
தொடர்பற்ற நிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

வேண்டிய வாழ்க்கை வேண்டுமென்றும் - பொருள்
வேண்டுமென்றும் - வேற்றிடத்தே தங்கி உழைத்திடும்
பாச உறவுகள் - நெடுநாளாகியும் வாராதிருந்தால்
பிரிவின் நிலையிலே தூரத்து உறவாகிவிடுகின்றன

உறவுகள் கூடும் விழாக் காலங்களில்
உறவுகளின் உறவுமுறை பெயரைக் கூட
உறுதியாய் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதநிலையில்
உறவுமுறை - பொதுநிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

இன்றைய காலத்தில் - இல்லத்தலைவி பகல்பொழிதிலும் -
இல்லத்தலைவன் இரவுப்பொழுதிலும் வேலைக்கு சென்றிட -
இடையில் எவ்வுறவையும் சந்தித்து பேசமுடியாதநிலையில் -
இல்லத்து உறவே தூரத்து உறவாகிவிடுகின்றது

சில நேரங்களில் - நீதியானது -தர்மத்தை
கண்டும் காணாத தூரத்து உறவாகிவிடுகின்றது
கண்காணா இடத்திலிருப்பதுமட்டும் தூரத்து உறவன்று
கண்டும்-காணாமல் செல்வதும் தூரத்து உறவாகும்;

வள்ளுவனின் கூற்றோடு இதனைமுடிக்க முற்பட்டேன்
வள்ளுவன் கூறினான் - தமிழா விழித்துக்கொள்
தூரத்து உறவுகளில் போலியும் உண்டு
என்னிலையைப்பார் - இன்று பாரினில் என்றாா்!!!
---
-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை


Last edited by ayyasamy ram on Sun Aug 30, 2020 10:44 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூரத்து உறவுகள் - கவிதை Empty Re: தூரத்து உறவுகள் - கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum