ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
VENKUSADAS
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
VENKUSADAS
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

2 posters

Go down

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Empty `கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

Post by ayyasamy ram Thu Aug 27, 2020 6:38 am

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே
ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

மனிதர்கள் வீடுகளுக்குள்ளே அடைந்துகிடக்கின்றனர்.
பெரும்பாலானோர் தொலைக்காட்சி, செல்போன்,
புத்தகவாசிப்பு, வீட்டுவேலை உள்ளிட்ட பணிகளைச்
செய்து நேரத்தைக் கடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில்
வெறுமனே முடங்கிவிடாமல்,மேற்சொன்ன பணிகளைத்
தாண்டி வேறு என்னென்ன ஆக்கபூர்வமான பணிகளை
நாம் சமூகத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதற்கான
சில யோசனைகள்:

1) நாம் புதிய புதிய நீதிக் கதைகளை உருவாக்கி,
அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் அறம்சார்ந்த
கருத்துகள் அனைவரிடமும் சென்றடைவது உறுதி.
நல்லனவற்றை ஏற்றுக்கொள்ள, தற்போது மக்கள் திறந்த
மனதுடன் தயாராக இருக்கின்றனர்.

2) உங்களுக்கு முக்கியமான மற்றும் பிடித்தமானவர்களின்
பணத்தேவைக்கு டிஜிட்டல் முறையில் உதவுவது இப்போது
அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3) காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்திசெய்ய, தேவையான
முயற்சிகளைத் தற்போது தொடங்கினால், அது
எதிர்காலத்திற்குப் பயன்படும்.

4) உங்களுக்குப் பிடித்தமான கவிதைகளை, சிறு சிறு
கதைகளை குரல்பதிவு செய்து நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் பகிர்ந்தால், அதிகமான வாசிப்பனுபவம்
இல்லாதவர்களும் படைப்புகளை ரசிக்க வாய்ப்பு உண்டாகும்.

5) உங்கள் சுற்றுவட்டார குழந்தைகளுக்காக ஓவியம்,
விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகளை ஆன்லைனில் நடத்தி,
அவர்களது திறமைகளை ஊக்குவிக்கலாம்.

6) நண்பர்களுடன் இணைந்து ஸ்கைப் மூலமாக புதிய தொடர்
கதைகளை, படைப்புகளை உருவாக்குவது, சிறந்ததொரு
அனுபவமாக இருக்கும்.

7) புதிய உணவு ரெசிப்பிகளைப் பரிசோதனைசெய்து,
அவற்றை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகப்
பகிர்ந்தால் எண்ணற்ற ரெசிப்பிகள் உருவாக வாய்ப்பு உண்டு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Empty Re: `கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

Post by ayyasamy ram Thu Aug 27, 2020 6:40 am



8) உங்களுடைய அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின்
வருங்கால வளர்ச்சிக்காக சிறுசிறு ஸ்மார்ட்டான
யோசனைகளை அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தால்
நிறுவனம் எதிர்கால வளர்ச்சியில் வேகம்பெறும். நமது சிந்தனை
ஆற்றலும் மேம்படும்.

9) குழந்தைகளுக்கு சுயசிந்தனை வளரவேண்டி அவர்களின்
புத்தக வாசிப்பை மேம்படுத்தலாம்.மேலும் புதிய கண்டு
பிடிப்புகளை உருவாக்க குழந்தைகளை ஊக்குவித்தால் பல
புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கலாம்.

10) புதிய விளையாட்டுகளையும், அவற்றுக்கான
விதிமுறைகளையும் குழந்தைகள் பங்களிப்புடன்
உருவாக்கினால், குழந்தைகளுக்குப் பிடித்தமான மற்றும்
தேவையான புதிய விளையாட்டுகள் உருவாகும்.

11) வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு
இருப்பர். அந்நாட்களில், அவர்கள் எந்த மாதிரியான ஆக்க
பூர்வமான,சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய மேம்பட்ட
நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம் என்பது குறித்த நமது புதுமையான
ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம்.
இதனால் தனிமைப்படுத்தலில் உள்ளோர் மன ஆரோக்கியம்
மேம்படுவது உறுதி.

12) அரசாங்கத்திடமும்,சமூக வலைதளங்களிலும் நோய்
கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வுக்கான நமது எண்ணங்களை
பகிர்ந்து கொண்டால் அவற்றில் சிறந்தவை செயல்பாட்டிற்கு
வர வாய்ப்புண்டு.ஆக்கப்பூர்வமான, புதுமையான,சுயமான
சிந்தனைகள்தான் தேவை.
வாட்ஸ்அப் வதந்திகளை கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும்

13) நோய் குறித்த பாசிட்டிவான செய்திகளை அவற்றின்
உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் சமூக வலைதளங்களில்
பகிர்ந்து கொண்டால் விழிப்புணர்வும்,நேர்மறை சிந்தனையும்
பரவலாக்கப்படும்.

14) புதிய புதிய கதைகள் மற்றும் பாடல்களை குழந்தைகளுக்கென
உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்கும் பகிரலாம்.
இதனால் படைப்புகள் பரவலாக்கப்படும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Empty Re: `கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

Post by ayyasamy ram Thu Aug 27, 2020 6:42 am


15) இணையதள வங்கிச் சேவை மற்றும் இணையம் சார்ந்த
பிற சேவைகள் பற்றி தெரியாதவர்களுக்கு அவற்றை
நாமே செய்து கொடுப்பது தற்போதைய சமூகக் கடமை.

16) நமது அன்றாட பணிகளில் நமக்கு வழக்கமாக உதவக்
கூடிய நபர்களுக்கு தேவையான வசதிகளை தூரத்திலிருந்து
செய்து கொடுப்பது இச்சூழலில் அடிப்படை அறமாகும்.

17) நாம் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் முதலியவற்றை
எழுத முயற்சிக்கலாம். அவற்றை நண்பர்களுடன்
உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு படைப்பாற்றல்
சிந்தனையை வளர்க்கலாம்.

18) உணவை ரசித்து உண்ணவும், நீரை ருசித்துக் குடிக்கவும்
பழகலாம்.

19) முதியவர்களுக்கு அருகில் நெருங்கிவிடாமல் சற்று எட்ட
நின்றே அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து
கொடுப்பதும் தற்போது அடிப்படை கடமைதான்.

20) குழந்தைகளுக்கு நோய் குறித்து பயமூட்டாமல் கற்றுத்
தருவது அவசியமான ஒன்று.

இன்றைய சூழலில் ஒரு முக்கியமான விஷயத்தை
அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்துடனான அனைத்து வித தொடர்புகளையும்
முற்றிலும் துண்டித்துக்கொண்டு வாழ்வது தனிமை.
(Loneliness)

உடல்சார்ந்த தொடுகையைத் தவிர்க்கவேண்டி தனியாக
இருப்பது தனிமைப்படுத்தல்.(Isolation)

எனவே, நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவதும்,
ஒருவர் சமூகத்தை விட்டு விலகி தனிமையில் இருப்பதும்
வெவ்வேறானவை என்ற புரிதல் அனைவருக்கும் அவசியம்.

மனிதன் தனியாக வாழ்வது கடினம். நமது உடல் மற்றும்
மனம் சார்ந்த தேவைகளுக்காக சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் நாம் தொடர்பு கொண்டாக வேண்டியுள்ளது.

இன்று இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் உள்ளிட்ட
ஊடகங்கள் அதற்கு உதவிபுரிகின்றன.

சமூகத்தை, சகமனிதர்களை முற்றிலும் விடுத்து
தனிமையில் வாழாமல், சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் தொடலற்ற தொடர்பில் வாழ்வதே இன்றைய
சூழலில் அவசியமாகிறது.

மேற்கூறிய யோசனைகள் இதனை ஆக்கபூர்வமாக
சாத்தியமாக்கக் கூடும்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க"

என்ற திருக்குறளில், நெருப்பு காய்பவர் அதனை விட்டு
விலகிவிடாமலும்,மிகவும் நெருங்கிவிடாமலும் குளிர்காய்வர்
என்று அரசனைச் சார்ந்து வாழ்பவர் நடந்துகொள்ள
வேண்டிய முறை குறித்த வள்ளுவரின் விளக்கம்,
இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைகிறது.

நெருப்பு காய்பவர் போலவே நாமும் இன்று சமூகத்தை
விட்டு விலகிவிடாமலும்,அதே நேரம் நெருங்கி விடாமலும்
சரியான தொலைவில் இருப்பது அவசியமாகிறது.

"கொரோனோ" மனிதனுக்கான ஒரு ஆஸிட் டெஸ்ட்.இதில்
மனித சமூகம் வெற்றியடைவது உறுதி.அந்த வெற்றியின்
அடித்தளமாக தற்போதைக்கு நாம் "தொடலைத் தவிர்த்த
தொடர்பைப் பராமரிப்போம்"
-
----------------------
- அகன் சரவணன்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Empty Re: `கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

Post by SK Thu Aug 27, 2020 4:48 pm

டிவி பார்ப்பதற்கும் தூங்குவதற்கும் நேரம் சரியாக இருக்கும் போது இதெல்லாம் பண்ண முடியாது
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Empty Re: `கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum