ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

+2
Dr.S.Soundarapandian
ayyasamy ram
6 posters

Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by ayyasamy ram Sun Aug 16, 2020 9:11 am

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி 202008160136436873_Tamil_News_Alliance-with-AIADMK-and-DMK-Interview-with-Kamal-Haasan_SECVPF
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி
மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது
தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில்
அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,
அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-
மய்யம் என்ற விஷயத்தை சொல்லி வருகிறீர்கள். இது பிரான்ஸ்,
கனடா போன்ற நாடுகளில் ஆட்சியில் இருக்க கூடிய ஒரு
தத்துவம்தானே? இதற்கு தமிழகம் தயாராக இருக்கிறது என்று
நம்புகிறீர்களா?.

பதில்:-
கடைநிலை ஏழையில் இருந்து ஆரம்பிக்கிறது மய்யம்.
அந்த மய்யத்தில் இருந்து புறப்படாத எந்த அரசியலும் வாழ
முடியாது. தமிழகம் எல்லாவற்றிற்கும் தயார்.
வந்தாரை வாழ வைக்கவும் தயார். வந்தாரோடு சமர் செய்யவும்
தயார். ஏழைகளை அரவணைத்து, அவர்கள் நிரந்தரமாக
தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது
தான் மய்யத்தின் வேலை.

ஏழைகளே இல்லாமல் போய் விட்டால் கட்சியை கலைத்து
விடலாம்.

கேள்வி:- தமிழகத்தில் நேர்மையான அரசியலை செய்ய முடியுமா?

பதில்:-
நேர்மை அரசியலில் இருக்கும்போது மட்டும்தான்
நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியும் என்றநிலை
மாற வேண்டும். ஏனென்றால் அரசியலில் நேர்மை என்பது,
எந்த காலத்திலும் இருந்தது கிடையாது.

நேர்மையானவர்கள் வந்து தான் அதை நேர்மையாக
மாற்றினார்கள். ஊழலற்ற இடத்தில் தான் நான் அரசியல்
பண்ணுவேண்ணா அரசியல் யாருமே செய்ய முடியாது.
ஆனால் இதில் நடு முள்ளாக நாம் இருக்க வேண்டும்.

கேள்வி:- மது ஒழிப்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:-
என்னுடைய விமர்சனம் அரசை பற்றியது. யார்
வேண்டுமானாலும் செய்யக்கூடிய அந்த வியாபாரத்தை
அரசு எதற்கு எடுத்து நடத்த வேண்டும்.

மது ஒழிப்பு என்பது மது குடிப்பவர்கள் இருக்கும் வரை
செய்யவே முடியாது என்று சொல்லமாட்டேன். செய்ய
முயற்சி செய்ய வேண்டும். இதை மய்யம் செய்ய
முனைகிறது.

மதுவை கண்டிப்பாக ஒழித்து காட்டி விடுவோம் என்றால்
இல்லை. அது செய்ய கூடாது என்பது சோசியல் சிட்டிசன்
ஆக என்னுடைய கருத்து.
நிஜமாகவே பூரண மது ஒழிப்புக்கு மக்கள் தயார் என்று
மக்களே சொல்ல வேண்டும்.

கேள்வி:- தமிழகத்தில் அ.தி. மு.க., தி.மு.க. என இருபெரும்
கட்சிகளை தாண்டி வெற்றி பெற முடியுமா?. அல்லது
நீங்கள் அவர்களுடன் கூட்டணிக்கு போய் விடுவீர்களா?

பதில்:-
அரசியல் கட்சிகளை சிந்தனையின் பிரதிபலிப்பாக பார்க்க
வேண்டுமே தவிர, பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்?
2 பேரின் முயற்சியும் சமூகத்தை நோக்கிதானே?.
இந்த பழக்கம் திராவிட கட்சிகளால் வந்தது. மக்கள் நீதி மய்யம்
என்பதே கூட்டணி தான். வெவ்வேறு துறையில் இருந்தவர்கள்,
வெவ்வேறு கட்சியில் இருந்தவங்க கூட விலகி வந்து
இருக்கிறார்கள்.

சித்தாந்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும்
செய்ய முடியாது. என்னை வலியுறுத்தி இப்படியான
இந்தியாவாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்வதை
தான் எதிர்க்கிறோம். அதனால் மத்தியில் யார் வந்தாலும்
நாம் போராடுவது என்னவென்றால் நாளை
மக்கள் நீதி மய்யம் என்று வந்து அவர்கள் எல்லாம் என்ன
சமஸ்கிருதம் வேணாலும் படிங்க, தமிழ்நாட்டில் இப்படி தான்.
அப்படியான தைரியமாய் உரிமையை நாம் போராடி பெற
வேண்டும். அதை அரசியலில் களம்கண்டு தேர்தல் வழி
செய்யலாம். இல்லை தெருவுக்கு வந்து பண்ணலாம்.

தி.மு.க. கூட கூட்டணி என்றால் இல்லை. ஆனால் நாம் கூடி தாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்ததென்றால் செய்வோம், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அந்த இலக்கு வந்த பிறகு நம்முடைய இடத்திற்கு போய்விட வேண்டும். மாற்றத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் சேர்வீர்களா என்று கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி யோசித்து தான் தனிக்கட்சி ஆரம்பித்தோம்.

நம்மளே அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டால் எதிர்க்கட்சியோடு உரையாடல் செய்வதற்கே மறுத்து விட்டால் மறுபடியும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டியது தான். ஒருத்தவரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும். இது தான் என் எண்ணம்.

கேள்வி:- கமல்ஹாசன் இந்துகளுக்கு விரோதமானவர், பிராமணர்களுக்கு எதிரானவர் என்று சித்தரிக்கப்படுகிறதே?

பதில்:- நான் இன்றைய காலகட்டத்திற்கு என் தலித் சகோதரர்களை, என் இஸ்லாமிய சகோதரர்களை, என் கிறிஸ்தவ சகோதரர்களை எல்லாம் என்னுடைய உலகமாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அதில் இந்த பிராமணர்களும் உட்படுவர். ஆக இந்துக்களை பிடிக்காது என்று வந்ததே ஆரம்பத்தில் வந்த தொழிலே எல்லோரையும் மகிழ்விக்க, எல்லோரும் டெல்லி ஆணைப்படி கட்டுப்பட்டு சொல்றாறேன்னு நினைத்திட வேண்டாம்.

சினிமாவில் கேலி செய்கிறேனே தவிர அவர்களை அவமதிக்க மாட்டேன். கேலி செய்வது கூட நம் நண்பரை கூட என்ன மாப்ளே... என்ன இப்படி ஊதிட்ட என்று சொல்வது போல தான். எனக்கு எல்லா மதத்தினர் மீதும் அன்பு உண்டு. எனக்கு மதங்களை பிடிக்காது. நான் யானை அல்ல. எனக்கு மனிதர்களை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-

வயதுக்கு ஏத்த மாதிரி நான் கும்பிடு போடுவேன். ரஜினிகாந்த் கிட்ட கேட்டா என்னை வாழ வைக்கும் தெய்வங்களே என்பார். அரசியலுக்கு வர வேண்டியது என் கடமை என்று நினைத்து தான் வந்தேன். அந்த மாதிரி வந்தவர்கள் தான் அரசியலை மேம்படுத்தி இருக்கிறார்கள். கருப்பு பணம் இல்லாமல் நடத்த முடியுமான்னு கேட்பாங்க, கேள்வியாக கூட இருக்கலாம். நிஜமாகவே நான் வாங்குகிறது இல்லைங்க. இது உண்மை. .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by Dr.S.Soundarapandian Sun Aug 16, 2020 1:15 pm

அருமையான பதிவு ஐயாசாமி அவர்களே!
காலத்திற்கு ஏற்ற பதிவு!
ஏனென்றால், இன்று மிகப்பலர் கமலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்! நான் பலரிடம் பேசிப்பார்த்ததில் அறிந்தது இது !
“கருப்புப் பணம் வாங்காத ஒரு ஆள் என்ற ஒரு தகுதியே அவருக்குப் போதுமே!
அவரது தத்துவம் கண்மூடித் தத்துவமல்ல ! அறிவுப்பூர்வமானது! தலைமுறை தலைமுறைக்கும் தேவையான சொத்தைச் சேர்த்து வைத்தால்தான் தலைவர் என்று நாற்றமெடுத்த போக்கை உடைத்தெறியக் கமலால்தான் முடியும் !” என்று என்னிடம் பலர் வாதிட்டுள்ளனர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by T.N.Balasubramanian Sun Aug 16, 2020 6:11 pm

ஊழல் மிக்க தமிழகமாக எப்போது மாறியது.?

ஆட்சியையும் ஊழல் மிக்கதாக மாற்றி 

அரசு அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டி அவர்களே புது புது உத்திகளை 

கடைபிடிக்க செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து ஓரிரு நூறுகளை 

மக்களுக்கு கண்ணில் காண்பித்து அதையும் பிறகு வேறு விதமாக பிடுங்கி 

ஆட்சி செய்த திராவிட கட்சிகள்--குடும்ப கட்சிகளாக மாறி வருகின்றன.

இந்தியாவின் மிக பணக்கார குடும்பங்களில் பட்டியலில் வருகிறார்கள்.

இவர்கள் வந்து தமிழகத்தை காப்பாற்றுவார்கள் என எண்ணுவது மாயை.

அரசியலில் நுழைபவர்கள் /அவர் குடும்பத்தினர் அவர்கள் அரசுக்கு கட்டவேண்டிய 

பணத்தை கட்டியவர்கள் என்று கூறி போட்டி போட முடியுமா? 

மனைவி /மாமன் /மச்சான் /தோழி /துணைவி/பிள்ளை /பேரன் என 

பலபெயர்களில்  தொழில் ஆரம்பித்து கொள்ளை அடித்த பணத்துடன் 

ஏழைகளை பணக்காரர் ஆக்குவோம் என்று ஏமாற்றுகிறார்கள். 

இருண்ட  காலம் தான் எதிர்காலமோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:00 pm

T.N.Balasubramanian wrote:ஊழல் மிக்க தமிழகமாக எப்போது மாறியது.?

ஆட்சியையும் ஊழல் மிக்கதாக மாற்றி 

அரசு அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டி அவர்களே புது புது உத்திகளை 

கடைபிடிக்க செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து ஓரிரு நூறுகளை 

மக்களுக்கு கண்ணில் காண்பித்து அதையும் பிறகு வேறு விதமாக பிடுங்கி 

ஆட்சி செய்த திராவிட கட்சிகள்--குடும்ப கட்சிகளாக மாறி வருகின்றன.

இந்தியாவின் மிக பணக்கார குடும்பங்களில் பட்டியலில் வருகிறார்கள்.

இவர்கள் வந்து தமிழகத்தை காப்பாற்றுவார்கள் என எண்ணுவது மாயை.

அரசியலில் நுழைபவர்கள் /அவர் குடும்பத்தினர் அவர்கள் அரசுக்கு கட்டவேண்டிய 

பணத்தை கட்டியவர்கள் என்று கூறி போட்டி போட முடியுமா? 

மனைவி /மாமன் /மச்சான் /தோழி /துணைவி/பிள்ளை /பேரன் என 

பலபெயர்களில்  தொழில் ஆரம்பித்து கொள்ளை அடித்த பணத்துடன் 

ஏழைகளை பணக்காரர் ஆக்குவோம் என்று ஏமாற்றுகிறார்கள். 

இருண்ட  காலம் தான் எதிர்காலமோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1328383
உங்கள் உள்ளக் குமுறலை கொட்டி தீர்த்து விட்டீர்கள் ஐயா .
நானும் இதை நினைத்தேன் ஆனால் நீங்கள் அழகாக தொகுத்து வழங்கி வட்டீர்கள்.
நான் எழுத எண்ணிய விசயத்தை தந்துவிட்டீர்கள்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by ruthrak@gmail.com Mon Aug 17, 2020 10:42 am

மாற்றங்களை விரும்ப வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் அதனை செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்த பின் ஆளே மாறிவிட்டால், மாற்றங்களை செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது.
ruthrak@gmail.com
ruthrak@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/01/2017

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by SK Mon Aug 17, 2020 3:36 pm

இன்னும் 8 மாதம் போனால் தெரியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Empty Re: அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
» நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி
» ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum