புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
18 Posts - 3%
prajai
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_m10சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2020 3:57 pm

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  E_1278792545
-
கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான்
குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே
பயப்படுவாள் அனு.

அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை.
பாவம் சந்தீப்... பத்து வயது சிறுவன்; அவன் முன்
அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான்.

இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல்,
உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக்
கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி.

"இங்க பாரு சந்தீப்... உன்னோட நடவடிக்கை வரவர
சரியில்லை. கொஞ்சமும் மனசில் பயமில்லை.
கூட படிக்கிற பிள்ளைங்களோடு தகராறு, சண்டை.
மிஸ் சொல்றதை கேட்கறது கிடையாது. இதெல்லாம்
நல்ல பழக்கம் இல்லை புரியுதா...
மிஸ் சொல்றதை கேட்டு நடந்துக்கணும். என்ன
சொல்றது விளங்குதா?''

கையில் இருந்த ஸ்கேலால், முழங்காலுக்கு கீழ்,
கால்களில் சுளிரென அடித்தான்.

""அப்பா ப்ளீஸ்பா. அடிக்காதீங்கப்பா... வலிக்குது.''

""வலிக்குதா... அப்பதான் ஞாபகம் இருக்கும்.
இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டே. நேத்து வாசலில்
பஞ்சுமிட்டாய் வாங்க அம்மாகிட்டே காசு கேட்டு,
அம்மா கொடுக்கலைன்னு பாட்டிகிட்டே கேட்டியாமே...
உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.
பாட்டிக்கிட்டே காசு கேட்க கூடாதுன்னு...''

""இல்லேப்பா... அம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
அதான் பாட்டிகிட்டே கேட்டேன். சாரிப்பா... இனி அப்படி
செய்ய மாட்டேன்.''
----


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2020 3:58 pm


கெஞ்சுதலுடன், அழுத கண்களுடன் பிரதீப் பார்க்க,
"சரி, சரி... உள்ளே போய் முகம் அலம்பிட்டு, ஸ்கூலுக்கு
கிளம்பு...''

அடித்த கணவனை விட, உள்ளே அமைதியாக உட்கார்ந்து
இருக்கும் மாமியார் மீது அனுவுக்கு கோபம் வந்தது.
குழந்தையை திட்டி, அடிக்கிறாரே... போய் தடுப்போம்
என்றில்லாமல், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை
என்பது போல், கல் போல அமர்ந்திருக்கும் மாமியாரை
நினைக்க, எரிச்சல் வந்தது.

அம்மா மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவன் குமார்.
அம்மா சொல்லை தட்ட மாட்டான். எந்த விஷயத்தில்
குமார் கோபப்பட்டு கத்தினாலும், உடனே தலையிட்டு,
அவனை சாந்தபடுத்துவாள்.

அப்படிபட்டவள், குழந்தையை குமார் அடிக்கும்போது,
தடுக்க வராமல் அமைதியாக இருப்பது... மாமியாரின்
மேல் அவளை கோபம் கொள்ள செய்தது.

முகம் சோர்ந்து சந்தீப், மவுனமாக ஸ்கூலுக்கு கிளம்ப,
"அனு... சந்தீப்பிற்கு தட்டில் டிபன் வைத்து கொடு;
நான் ஊட்டி விட்டு அனுப்பறேன்.''

இதில், ஒன்றும் குறைச்சலில்லை. பேரன் மேல் அக்கறை
இருப்பது போல் காட்டி கொள்கிறாள் என, மனதில்
முணுமுணுத்தபடி, டிபன் தட்டை மாமியாரிடம்
கொடுத்தாள்.

குமார் ஆபிசுக்கு செல்ல, சந்தீப் ஸ்கூலுக்கு சென்றுவிட,
பாத்திரங்களை ஒழித்து தேய்ப்பதற்கு போட்ட அனு,
வேலைக்காரி மரகதம் உள்ளே நுழைவதை பார்த்தாள்.

ஜெயலட்சுமி குளித்துக் கொண்டிருக்க, "மரகதம்,
முதலில் வீட்டை பெருக்கி துடைச்சுடு; அப்புறம்
பாத்திரம் தேய்க்கலாம்.''

"சரிம்மா. பெரியம்மா எங்கே... குளிக்கிறாங்களா?''
கேட்டபடி, துடைப்பத்தை எடுத்து, வீட்டை பெருக்க
ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு வந்த ஜெயலட்சுமி, அனுவை பார்த்து,
"அனு... நீ சாப்பிடு. நான் சாமி கும்பிட்டு, அப்புறமா
சாப்பிடறேன். டேபிள் மேலே நாலு இட்லி எடுத்து
வச்சுட்டு, உன் வேலையை பாரு.''

"நேரத்துக்கு சாப்பிட்டு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கணும்...
முதலில் சாப்பிடுங்க...' சாதாரணமாக அனு அப்படி தான்
சொல்லியிருப்பாள். இன்று மாமியார் மீது கோபமாக
இருப்பதால், ஒன்றும் பதில் சொல்லாமல், அடுக்களையில்
நுழைந்தாள்.

"என்னம்மா முகம் வாடியிருக்கு... குளிச்சுட்டு வந்திருக்கீங்க...
சாப்பிட வேண்டியது தானே. மணியாகலையா?'' வீட்டை
பெருக்கியபடி மரகதம் கேட்க, "மனசு சரியில்லை மரகதம்.
சந்தீப்பையே நினைச்சுட்டு இருக்கேன்.''
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2020 3:59 pm



சந்தீப் பெயர், அவர்கள் பேச்சில் அடிபட, என்ன
பேசிக் கொள்கின்றனர் என்பதை கவனித்தாள் அனு.

""ஏன்ம்மா... புள்ளைக்கு என்ன ஆச்சு... உடம்பு
சரியில்லையா... நல்லா தானே ஸ்கூலுக்கு போயிருக்கு.''

""அதில்லை மரகதம்... காலையில் குமார், அவனை
சப்தம் போட்டு அடிச்சுட்டான். அவன் முகம் சோர்ந்து,
ஸ்கூலுக்கு போனதை நினைச்சுக்கிட்டேன்; சாப்பிட
கூட பிடிக்கலை.''

""என்னம்மா இது, குமார் ஐயா உங்க பிள்ளை. நீங்க
எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் கேட்கற
தங்கமான புள்ளை. நீங்க போயி, "அடிக்காதே'ன்னு
சொல்லி தடுத்து இருக்கலாமே... அதை விட்டுட்டு...
இப்ப போயி அடிவாங்கிட்டு போன பேரனை நினைச்சு...
வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க...''

அனு மனதில் எழுந்த கேள்வியை, மரகதம் கேட்க,
மாமியார் என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதை
கேட்க கூர்ந்து கவனித்தாள்...

"புள்ளையோட பழக்க வழக்கங்கள் தப்பு. அப்படி
செய்யக் கூடாதுன்னு பெத்தவங்க கண்டிக்கும் போது,
நான் தலையிட்டால் அது, அந்த பிள்ளையை கெடுக்கிற
மாதிரி ஆயிடும்.

தனக்கு ஆதரவாக பாட்டி இருக்காங்க... நாளைக்கு
எந்த தப்பு செய்தாலும் பாட்டி தனக்கு ஆதரவாக
இருந்து காப்பாத் திடுவாங்ககிற எண்ணம், அந்த
பிஞ்சு மனதில் வந்துடும். அது, அவன் போக்கையே
மாத்திடும்... அது தப்பு மரகதம்...

"வயசான நாங்க, பேர பிள்ளைங்க மேல காட்டற
பரிவும், பாசமும் அவங்க நல் வாழ்க்கைக்கே
குந்தகமா அமைஞ்சுட கூடாது. நேத்து, வாசலில்
பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு அனு,
காசு கொடுக்க மறுத்திட்டா.

பாட்டி கிட்டே வாங்கிடலாம்ன்னு என்கிட்டே ஓடி
வந்தான்.

"" நான் காசு கொடுத்தா... அது, அவனை கெடுக்கற
மாதிரி தானே அமையும். நல்லதை பெத்தவங்க
எடுத்துச் சொல்லும் போது, நாம் குறுக்கிடாம,
அமைதியாக இருக்கிறது தான் நல்லது. உண்மையான
அக்கறையோடு கண்டிக்கிற உரிமை, பெத்தவங்களுக்கு
மட்டும் தான் இருக்கு.

"அதிலே மூணாவது மனுஷங்க, தலையீடு இருக்கக்
கூடாது. அன்பையும், பாசத்தையும் காட்ட வேண்டிய
நேரத்தில் தான் காட்டணும். என் பேரனை நல்
வழிபடுத்தணும்ன்னு தானே கண்டிக்கிறான்னு,
மனசை கல்லாக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.

"நிச்சயம் இனி அந்த மாதிரி தவறுகளை பேரன்
செய்ய மாட்டான். அவன் நல்லவனா, வல்லவனா
வளரணும் மரகதம். அதுதான் இந்த பாட்டியோட
விருப்பம்.''

""என்னவோ போங்கம்மா... நீங்க சொல்றது எனக்கு
விளங்கலை. பேரன் மேலே அளவு கடந்த பாசம்
வச்சிருக்கிறது மட்டும் புரியுது.''

மரகதம் வெளியேற, ""அத்தை... எழுந்திருங்க. வாங்க
ரெண்டு பேரும் சாப்பிடலாம்... மணியாச்சு.
சாயந்திரம் உங்க பேரன் வந்ததும் கூட்டிட்டு,
கோவிலுக்கு போய்ட்டு வாங்க, உங்க மனசு
சரியாயிடும்.''

உண்மையான பரிவுடன் கூறினாள் அனு.
-
-----------------------------------
நன்றி-வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2020 10:25 pm

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  3838410834 .......... சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  103459460 ........... சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்  1571444738 ...........புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 14, 2020 9:15 am

சரியான செயல்

நல்ல கதை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக