புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_m10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10 
42 Posts - 63%
heezulia
கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_m10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_m10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_m10கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2020 5:50 pm

கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன் 5
-
கிச்சன் டாக்டர்

நமது உணவில் தவிர்க்க முடியாத ஒரு சேர்மான பொருள் கொத்தமல்லி. கொத்தமல்லியின் தழை, மல்லி எனப்படும் அதன் விதை இரண்டுமே நறுமணத்துக்காகவும், அழகுபடுத்தவும் சேர்ப்பதுண்டு.

சிலர் அந்த கொத்தமல்லி தழையை பொறுக்கி எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் அதிலுள்ள சத்துக்கள், பலன்கள் என்ன என்பதை தெரிந்தால் அப்படி செய்ய மாட்டார்கள். வாருங்கள்… கொத்தமல்லியின் பெருமையை சித்த மருத்துவர் திருநாராயணனின் வார்த்தைகளில் அறிந்துகொள்வோம்.

‘‘நமது பாரம்பரிய உணவில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கொத்தமல்லி. தினசரி நமது உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று என சொல்லும் அளவு அதில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. நறுமண எண்ணெய்கள், லாக்டோன்கள், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், குளோரோபில் போன்றவற்றோடு நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது.

நறுமண எண்ணெய் சளி, காய்ச்சல், வயிற்று குமட்டல், அஜீரணக் கோளாறு, மூட்டுவலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி. இதில் இருக்கும் லாக்டோன்கள் சிறுநீர் சரியாக வெளியேற உறுதுணையாக இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்டுகள் உடலின் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிப்பதால்முதுமையைத் தள்ளிப்போட உதவுகிறது.

கொத்தமல்லி விதைகளில்(தனியா) அதிக அளவு நறுமண எண்ணெய் உள்ளது. தனியாவை பொடி செய்து சாம்பார், ரசம் என சைவ உணவுகள் மற்றும் அசைவ உணவு களில் கார சுவைக்காக பயன்படுத்தும்போது இந்த பலன் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும்.

கொத்தமல்லி தழைகளை துவையலாக அரைத்து பச்சையாகவோ, கடுகு எண்ணெய் சேர்த்து தாளித்தோ உணவோடு சேர்த்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உள்ளவர்கள் மல்லி தழைகளை அரைத்து 30 முதல் 60 மில்லி அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2020 5:51 pm

கொத்தமல்லியின் ஊட்டச்சத்துக்கள் பற்றி உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்…‘‘கொத்தமல்லி தழை, விதை இரண்டிலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது. A,B மற்றும் K போன்ற வைட்டமின்கள், மாங்கனீசு, மெக்னீசியம், அயர்ன், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் Linoleic acid, Oleic acid, Traumatic acid, Cyanuric acid, Ascorbic acid போன்ற Essential oil-கள் உள்ளன.

வைட்டமின் ஏ, சி மற்றும் அயர்ன் போன்றவை ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு சிறந்தது. கால்சியம், பாஸ்பரஸ் உடல் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. மேலும், எலும்புகள் வலுவிழப்பதால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயைக் கட்டுப்படுத்துகிறது.

எசன்ஸியல் ஆயில்கள் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேற உதவுவதோடு, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் எக்சீமா என்ற தோல் நோயைக் கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள LDL என்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து, HDL என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

கொத்தமல்லியின் விதை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் அளவும் அதிகரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.

இருமல், சளி, அதிகதும்மல் மற்றும் அஜீரணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதோடு பசியைத் தூண்டுகிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலியைக் குறைப்பதோடு, மாதவிடாய் சீராக இருக்கவும் உதவுகிறது.

6 கிராம் தனியா அல்லது மல்லி தழை ஒரு கொத்து அரை லிட்டர் நீரில் போட்டு நீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலுள்ள உடலுக்கு கெடுதல் உண்டாக்கும் ஈயம், கேட்மியம், பாதரசம் போன்ற கன உலோக நச்சுக்களை வெளியேற்ற முடியும்’’ என்கிறார் வினிதா கிருஷ்ணன்.

கொத்தமல்லியின் விதை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் அளவும் அதிகரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2020 5:53 pm


மணக்கும் மல்லி காபி !

தென்தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமானோர் பருகும் பானம் சுக்குமல்லி பானம். கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டோடு பால் சேர்த்தோ, சேர்க்காமலோ சூடான பானமாக சுக்குமல்லி பானம் தயார் செய்யப்படுகிறது.

இந்த பானம் அஜீரணம், தலைவலி, உடல் சோர்வு, தசைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி. தனியாவை சூரணமாகவோ, கசாயமாகவோ பயன்படுத்தும் போது ஒரு வேளை 2 கிராமுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு பயன்படுத்தினால் வயிற்று எரிச்சல் உண்டாகும் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
---
நன்றி-குங்குமம் டாக்டர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 12, 2020 6:51 pm

ayyasamy ram wrote:
மணக்கும் மல்லி காபி !

தென்தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமானோர் பருகும் பானம் சுக்குமல்லி பானம். கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டோடு பால் சேர்த்தோ, சேர்க்காமலோ சூடான பானமாக சுக்குமல்லி பானம் தயார் செய்யப்படுகிறது.

இந்த பானம் அஜீரணம், தலைவலி, உடல் சோர்வு, தசைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி. தனியாவை சூரணமாகவோ, கசாயமாகவோ பயன்படுத்தும் போது ஒரு வேளை 2 கிராமுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு பயன்படுத்தினால் வயிற்று எரிச்சல் உண்டாகும் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
---
நன்றி-குங்குமம் டாக்டர்
மேற்கோள் செய்த பதிவு: 1327759

குளிர்காலத்துக்கு ஏற்றது இது.... நாங்கள் குடிக்கும் வழக்கம் உண்டு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 13, 2020 5:08 am

ஏனக்கு குழம்பில் உப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கொத்தமல்லி தழை தூவி இருக்க வேண்டும் இல்லை என்றால் வீட்டில் சண்டை தான்
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக