புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 49 of 61 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 55 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:56 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1229

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பதிமருண்டு பைதல் உழக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து


வாசிக்க
மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும்


தெளிவுரை
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது,
இந்த ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 4:07 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1230

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை
மாயுமென் மாயா உயிர்


வாசிக்க
மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.


தெளிவுரை
(பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 15, 2020 3:59 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1231

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்


வாசிக்க
சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, கண் நறுமலர் நாணின.


தெளிவுரை
இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4872
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 5:14 pm

15.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9 உறுப்புநலனழிதல்

நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று வரவேண்டுமோ?

124. உறுப்பு நலன் அழிதல்
தன்னுடைய உறுப்புகளின் அழகு கெடுவதை கூறுவது.
தலைவனின் பிரிவால் தோள்கள் மெலிந்து போகின்றன. வளையல்கள் தானாவகே கழன்று விழுவதை போல உடல் மெலிந்து போகிறது. பிரிவுத் துயரால் இரவு முழுதும் தூங்காமலும், அழுது அழுதும் கண்கள் ஒளியிழந்து காணப்படுகின்றன. இப்படி தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் மிகுதியால் அவளுடைய உறுப்புகள் அழகினை இழந்துவிட்டதை கூறி வருந்துகிறாள்.


சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.


சிறுமை - தலைவன் பிரிவால் வந்த ஆற்றாமை
நமக்கொழிய - நமக்கு வந்து சேர
சேட்சென்றார் [சேண் சென்றார்] - தொலைவில் சென்றார்
உள்ளி - அதை எண்ணி [கண்கள் ஒளியினை இழந்து வாடி]
நறுமலர் - வாசமுள்ள மலர்களுக்கு முன்பாக  
நாணின கண் - கண்கள் நாணிக் கிடக்கின்றன  

பிரிவு என்னும் ஆற்றாமையை கொடுத்துவிட்டு தலைவன் தொலைதூரம் சென்றதால், அதை எண்ணி அழுதழுது  என் கண்களின் அழகு குன்றி ஒளியிழந்து காணப்படுகின்றன. என் கண்கள் வாசமுள்ள மலர்களுக்கு முன்பாக வெட்கப்படும் நிலைக்கு வந்துவிட்டன.
முன்பெல்லாம் வாசமுள்ள மலர்கள் தலைவியின் கண்களின் அழகை, ஒளியைக் கண்டு வெட்கப்பட்டனவோ?


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 15, 2020 8:03 pm

பேபி அற்புதமான விளக்கம்
உரை . நானும் இப்படி விரிவான விளக்கம் அளிக்க நினைத்தேன். ஆனால் நிறைய
தட்டச்சு செய்ய முடியாத காரணத்தால்
சுருக்கமான உரை தேர்வு செய்தேன்.
சந்தோஷம் பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4872
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 10:10 pm

15.09.2020

நீங்கள் ஆரம்பத்ல இருந்தே இப்டி சுருக்கமாத்தானே அனுப்பிட்டு இருக்கீங்க. நா விளக்கமாத்தான் அனுப்பி பழக்கம். நா வாட்ஸாப், Facebook இன்னும் எதுன்னாலும் லாப்டாப்தான். அதனால் டைப்ப ஈஸி.

ஆமாம் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேனே, அதுக்கு பதில் சொல்லலியே.

[mention]நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று வரவேண்டுமோ?[/mention] wrote:


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:01 am

பேபி உங்கள் கேள்விக்கான பதில். நீங்கள் கூறியதும் சரியே.
Code:

நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று  வரவேண்டுமோ?
தலைவியே , பொருள் ஈட்டுவதற்கு நம்மை பிரிந்து
சென்ற   தலைவரை நீ நினைத்து அழுவதால்

உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின.
இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது( இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறியவேண்டும்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:13 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1232

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண்


வாசிக்க
பசந்து பனிவாரும் கண், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்


தெளிவுரை
பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர்
நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:35 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1233

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள்


வாசிக்க
மணந்த நாள் வீங்கிய தோள், தணந்தமை சால அறிவிப்ப போலும்


தெளிவுரை
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது
மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:59 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1234

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்


வாசிக்க
துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள், பணை நீங்கிப் பைந் தொடி சோரும்.


தெளிவுரை
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்,
பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 49 of 61 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 55 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக