ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

4 posters

Page 38 of 61 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 61  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu Sep 03, 2020 1:01 pm

03.09.2020

அதிகாரம் 116.  பிரிவாற்றாமை

தொட்டால் சுடும் தீயை விடக் கொடியது காதலர் பிரிவினால் உண்டாய துன்பம்.

அன்பின் மிகுதி பிரிவில்தான் நன்கு தெரியும். ஒருவரை ஒருவர் அன்பினால் நினைத்துப் பார்த்தற்குப் பிரிவின்கண் வாய்ப்பு மிகுதி. பிரிவின்கண் தலைவியின் நிலையையும், அவள் எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியவற்றையும் புலப்படுத்தும் முறையை இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 4:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1160

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அரிதாற்றி அல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்


வாசிக்க
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப், பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்


தெளிவுரை
பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,(பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 4:43 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1161

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்


வாசிக்க
நோயை யான் மறைப்பேன், இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.


தெளிவுரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால்,
இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 5:14 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1162

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்

வாசிக்க
இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன், நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும்.


தெளிவுரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை;
நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Thu Sep 03, 2020 5:53 pm

03.09.2020

117 படர்மெலிந்து இரங்கல்

பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தில் மெலிந்து வருந்துவது

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். இந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும், இரவு தரும் துயரையும், கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:34 pm

heezulia wrote:03.09.2020

117 படர்மெலிந்து இரங்கல்

பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தில் மெலிந்து வருந்துவது

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். இந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும், இரவு தரும் துயரையும், கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம்
நன்றி பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:38 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1163

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமமு நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து


வாசிக்க
காமமும் நாணும், நோனா என் உடம்பின் அகத்து, உயிர் காவாத் தூங்கும்.


தெளிவுரை
துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:55 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1164

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்


வாசிக்க
உண்டு காமக் கடலே, அது நீந்தும் ஏமப் புணை இல்


தெளிவுரை
காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக்
கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.



[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 5:15 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1165

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்


வாசிக்க
நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர், துப்பின் எவன் ஆவர் கொல் மன்


தெளிவுரை
(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்,(துன்பம் தரும்
பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?


[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia Fri Sep 04, 2020 8:15 pm

04.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:1165. துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்

என்னோடு நட்பாக இருக்கையிலேயே [நட்பினுள்] என்னை விட்டு பிரிந்து எனக்கு துன்பம் தருகிறாரே [துயர்வரவு ஆற்றுபவர்]. என்னை பகைத்துச் சென்றால் [துப்பின்], எப்படி மாறுவாரோ என்ன செய்வாரோ [எவன் ஆவர்] தெரியவில்லை என்று தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 61 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 61  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum