ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?

2 posters

Go down

மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி? Empty மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?

Post by ayyasamy ram Mon Aug 03, 2020 7:46 am

கோவை;
கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி? Tamil_News_large_2588121

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.

கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி? Gallerye_05590786_2588121
தினமும் 1 கோடி

ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.

தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.

தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:

என்ன செய்யலாம்?


சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.

இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.

தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.

மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?

கட்டணம் எவ்வளவு?


போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:

இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி? Empty Re: மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?

Post by Dr.S.Soundarapandian Tue Aug 04, 2020 2:11 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum