ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
என் கதை-கமலாதாஸ் Poll_c10என் கதை-கமலாதாஸ் Poll_m10என் கதை-கமலாதாஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கதை-கமலாதாஸ்

Go down

ஈகரை என் கதை-கமலாதாஸ்

Post by sncivil57 Sun Aug 02, 2020 2:19 pm

என் கதை-கமலாதாஸ்

தனது பதினைந்தாவது வயதில் மாதவதாஸ் என்பவரைத் திருமணம் முடிக்கிறார். சிறுபிராயத்திலிருந்தே குடும்ப ரீதியில் நெருக்கமாகத் தெரியுமென்றாலும் தன்னைவிட 20 வயது மூத்த அவருடன் அந்தத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார் கமலாதாஸ். ஆனால், நாலப்பட்டு நாயர் குடும்பத்தில் ஒரு ஆண்மகனின் கட்டளையை ஒரு அபலைப்பெண் எவ்வாறு நிராகரிக்க முடியும்? திருமணம் முடிந்து, தன் கணவன் தன்னிடம் வெளிப்படுத்திய மூர்க்கமான காமவெறியினைக்கண்டு கமலாதாஸ் திகைத்துப்போகிறார். தன் உடலைத்தழுவி, கூந்தலைக்கோதி, கைகளைத்தடவி, அன்பு செலுத்தவேண்டும் என்று ஏங்கிய ஒரு இளம் பெண்ணின் ஆசைக்கனவு எடுத்தஎடுப்பிலேயே சிதைந்துபோனது.
மூர்க்கமான காமத்தைத்தவிர தனது முதல் கணவரிடமிருந்து எந்த காதல் உணர்வையும் கமலாதாஸ் அனுபவித்ததில்லை. கமலா தாஸ் தனது சுயசரிதையில் கூறுகிறார்: “ஏற்கனவே என் கணவர் வேறு பெண்களுடன் பாலியல் உறவை வைத்திருந்தார். அத்தகைய பராக்கிரமச் செயல்களைப்பற்றி என்னிடம் சொன்னார். இந்த லீலைகளில் கைதேர்ந்த இருபது வயதிற்கு மேற்பட்ட விலைமாதர்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினார். நான் சிறுத்துப்போவதாக உணர்ந்தேன். ”வீட்டுவேலைக்காரியுடன் உடலுறவு கொண்டதைப்பற்றி கமலா தாஸிடமே சொல்லியிருக்கிறார். இதற்கும் மேலே அவரது கணவர் மாதவதாஸ் ஒரு gay ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர் ஆவார்.
தனது ஆண் காதலர்களுடன் தன் கண்முன்னேயே கொஞ்சிக்குலவி, கதவைத்தாளிட்டு படுக்கை அறைக்குக்கொண்டு செல்லும் கணவரோடு கமலா தாஸ் வாழ்ந்திருக்கிறார். “திருமணத்தின் புனிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று கமலாதாஸிடம் கேட்டபோது, இல்லை, காதலின் புனிதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் பதில் கூறினார்.”நான் மிகப்பலரைக்காதலித்தேன். அதே போல் என்னையும் மிகப்பலர் காதலித்தனர்” என்று கமலா தாஸ் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.
"சாரியை அணிந்து கொள்.
பெண்ணாக இரு.
மனைவியாக இருந்து கொள்.
தையல் வேலையைக்கற்றுக்கொள்.
சமைத்துப்போடு.
எப்போதும் வேலைகாரனுடன் சண்டை பிடித்துக்கொண்டிரு.
Fit in.
இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்.”

என்று ஒரு கவிதையில் பேசுகிறார் கமலா தாஸ். இந்த நொந்துபோன வாழ்விற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் கமலா தாஸ்.ஒரு கவிஞரின் கனவுகளுடன் காதல் உலகில் சிறகடித்துப் பறக்க முனைகிறார் கமலா தாஸ். தன்னை ராதையாகவும் கிருஷ்ணனைக் காதலனாகவும் சிறுவயதிலிருந்தே கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனை தனது ஆத்மார்த்த காதலனாக உருவகித்து அவர் நிறையவே கவிதைகள் எழுதியிருக்கிறார்.


என் கதை-கமலாதாஸ் Lbw50Tv9SYzqI1rXhAqQ+photo_௨௦௧௯-௧௦-௨௮_௦௦-௧௨-௨௮

கேரளத்தில் தன்னுடன் படித்த லெஸ்பியன் மாணவி தன்னை முத்தமிட்டதிலிருந்து, வேலு, கோவிந்த குருப் ஆகியோரிலிருந்து தனக்கு ஓவியம் கற்றுத் தந்தவரிலிருந்து, வீடு கட்டித்தந்த கட்டிடக்கலைஞர், பேனா நட்பில் உருவான இத்தாலியக்காரரான கார்லோ, பற்சிகிச்சை அளித்த பல்மருத்துவர் என்று எண்ணற்ற ஆண்களுடன் தான் கொண்டிருந்த காதல் உறவுகளை கமலா தாஸ் மிக வெளிப்படையாகவே தன் சுயசரிதையில் விவரிக்கிறார். இந்தக்காதல் உறவுகள் சில ஒரு நாளிலேயே முடிந்துபோயிருக்கின்றன. சில உறவுகள் ஆண்டுக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன.
தன் எழுத்தின் மீது பொதுசன அபிப்பிராயம் எத்தகையதாக இருக்கிறது என்பதுபற்றி அவர் ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது. அவரது எழுத்துகளை பார்த்து நாயர் குடும்பங்கள் அஞ்சின.கமலாதாஸ் கட்டுப்பாடுகளும் ஆணாதிக்கமும் பொய்யான போலிமதிப்பீடுகளும் கொண்ட மலையாள சமூகத்தைப் புரட்டிப்போட்டார். ஆணாதிக்கமுறைக்கு எதிரான கலகக்காரியாகத் திகழ்ந்தார்.


கமலா தாஸ் தன் சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார்:
“சமுதாயத்தை அருவருக்கத்தக்க தோற்றம் கொண்ட கிழவியாக நான் காண்கிறேன். பகைமை நிறைந்த மனம் படைத்தவர்களையும் பொய் சொல்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும் தன்னலவாதிகளையும் ரகசியக் கொலையாளிகளையும் இந்தக்கிழவி ஒரு கம்பளியால் பாசத்தோடு போர்த்துகிறாள். இந்தக்கம்பளியின் ரகசியத்தை வெறுப்பவர்கள் வெளியில் கிடந்து குளிரால் நடுங்குகிறார்கள். பொய்களைச் சொல்லியும் நடித்தும் நம்பிக்கைத்துரோகமிழைத்தும் பலரையும் வெறுக்க வைத்தும் இந்த ஒழுக்கப் போர்வைக்கடியில் கதகதப்பும் தன்னலமும் கொண்ட ஓரிடத்தை நான் பெற்றிருக்கலாம். ஆனால், நானோர் எழுத்தாளராகி இருக்கமாட்டேன். எனது குரல்வளையை அடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் ஒருபோதும் வெளிச்சம் பெற்றிருக்காது”
இது கமலா தாஸின் சுயநிலை விளக்கமாகும்.
தான் எழுத வராமல் போயிருந்தால் தனது வாழ்க்கை என்ன மாதிரி இருந்திருக்கும் என்பது பற்றி கமலாதாஸ் இப்படிக்கூறுகிறார்:
"நான் ஒரு மத்தியதர குடும்பத் தலைவியாக இருந்திருப்பேன். கயிற்றுப்பையை தூக்கிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்புடன் மரக்கறிக்கடைக்கு போய் வந்து கொண்டிருந்திருப்பேன்.பிள்ளைகளை போட்டு அடித்து வளர்த்திருப்பேன். என்னுடைய கணவரின் மலிவான கச்சையை கழுவித்தோய்த்து, ஒரு தேசியக்கொடியைப்போல பால்கனியில் காயப்போட்டிருப்பேன்.”


CLICK HERE PDF ;https://drive.google.com/file/d/1Li6th01KwPeuN7XWcpKTSTsMQp1xXBwn/view?usp=sharing
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum