புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_m10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_m10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_m10எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 7:33 am

எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...! - வித்யா பாலன் பேட்டி 567408

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து, ‘கணித மேதை’ என்று
கொண்டாடப்படுபவர் சகுந்தலா தேவி. கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை
வரலாறு, அனு மேனன் இயக்கத்தில் திரைப்படமாக
உருவாகியிருக்கிறது.

அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன்.
கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள
இப்படத்தில் நடித்தது பற்றி வித்யா பாலனிடம்
பேசியதிலிருந்து...

‘சகுந்தலா தேவி’யாக நடிக்க உங்களுக்கு எந்த அளவு
முன்தயாரிப்பு தேவைப்பட்டது?


தென்னிந்திய பேச்சுவழக்கில் பேசக்கூடியவர்
சகுந்தலா தேவி. எனவே அதற்கான பயிற்சிகளை நான்
மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறந்த பெண்மணி,
அழகானவர், அழகான ஆடைகளை உடுத்தக்கூடியவர்
ஆகிய விஷயங்களை எல்லாம் தாண்டி நான் அவருடைய
உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் முக்கிமானதாக
இருந்தது.

சகுந்தலா தேவியின் சிறப்பம்சம் என எதைச்
சொல்வீர்கள்?


சகுந்தலா தேவியின் சிறப்பே ‘நம்மாளும் சிக்கலான
கணக்குகளைத் தீர்க்க முடியும்’ என சக மனிதர்களை
நினைக்க வைத்ததுதான். கணிதம் அனைத்திலுமே
இருக்கிறது என்று மக்களுக்கு அவர் புரியவைத்தார்.

கணிதம் இயற்கையிலும் இருக்கிறது, இசையிலும்
இருக்கிறது, சமையலிலும் இருக்கிறது என்று அவர்களுக்கு
உணர்த்தினார். இதனால் அவர்களுக்குக் கணிதத்தின் மீது
இருந்த அச்ச உணர்வு குறைந்தது.

எனவே, சகுந்தலா தேவியின் நம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய
பகுதியை நான் எடுத்துக்கொண்டேன். எனக்குக் கணிதத்தில்
ஓரளவு ஆர்வம் உண்டு என்பதால் என்னால் அவரது
கதாபாத்திரத்துடன் ஒன்ற முடிந்தது.

சகுந்தலா தேவியின் கதாபாத்திரத்திலிருந்து நீங்கள்
எடுத்துக்கொண்ட விஷயம் என்ன?


நீங்கள் நட்சத்திரங்களைத் தொடவிரும்பினால்
உங்களால் அதைத் தொட முடியும். ஆனால் அதற்கு
நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும்.

‘உன் கனவு பலிக்காது’ என்று யாரையும் நீங்கள் சொல்ல
அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்கள். இதுதான்
நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 7:34 am

ஆளுமை மிகுந்த பெண்களைத் திரையில் வெளிப்படுத்தி
வருகிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?


நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள்
ஒரு விஷயத்தை விட்டுச் செல்கிறது; எனக்குப் பல
விஷயங்களைக் கற்றுத் தருகிறது. ஏதோ ஒரு வகையில்
அவை எனக்கு நிம்மதியை வழங்குகின்றன.

சகுந்தலா தேவியிடமிருந்து நான் தன்னம்பிக்கையைக்
கற்றுக் கொண்டேன். உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால்
எதுவும் சாத்தியமே. அவர் பள்ளிக்குக்கூடச் சென்றதில்லை.

ஆனால், ‘மனிதக் கணினி’ என்று உலகமே அவரை
அடையாளம் கண்டுகொண்டது. எனவே, உங்களை நீங்கள்
நம்பினால் எல்லாமே சாத்தியம்தான்.

குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும் பெண்கள் -
குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பெண்கள். இந்த
இருவகையில் ‘சகுந்தலா தேவி’ எந்தத் தளத்திலிருந்து
வந்தவர்?


நீங்கள் ஒரு தாயாக இருந்தால் உங்கள் வாழ்க்கையே
குழந்தைகளைச் சுற்றித்தான் இருக்கிறது. ஆனால்,
‘சகுந்தலா தேவி’ தன் குழந்தையை எந்த அளவு நேசித்தாரோ
அதே அளவு தன் கனவுகளையும் நேசித்தார்.

உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட பெண்களை நாம்
ஆதரிக்க மறுக்கிறோம். மகள், தாய்,மனைவி என்ற
நிலைகளைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.

‘சகுந்தலா தேவி’ இந்த எல்லா நிலைகளையும் எப்படிக்
கடந்து வந்தார் என்பதுதான் படம்.

வெற்றிபெற்ற பெண்களை உலகுக்குக் காட்டும் பயோபிக்
படங்கள் அதிகமாக வருவதில்லை. அதேநேரம் நீங்கள்
ஏற்றுக்கொள்ளும் படங்கள் பெரும்பாலும் பெண்களை
மையப்படுத்தியே இருக்கிறதே?


எல்லாத் துறைகளைச் சேர்ந்த பெண்களையும்
கொண்டாடும் காலம் இது. பெண்களைப் பற்றி இன்னும்
அதிகமான பயோபிக் படங்கள் வரப்போகின்றன.
சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம்.
பாலினரீதியாகத் திரைப்படங்கள் எப்போதுமே
சரியானவையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய
கருத்து. ஆனால், ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை.

கற்பனைக் கதாபாத்திரம், நிஜக் கதாபாத்திரம், இரண்டில்
எது கடினம் என நினைக்கிறீர்கள்?


இரண்டுமே சம அளவில் கடினமானவைதாம். ஆனால்,
நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பு
இருக்கிறது. நமக்கு வெளியில் குறிப்புகள் கிடைக்கும்.

நாம் அவர்களைப் பற்றிய காணொலிகள், கட்டுரைகளைப்
படித்து ஓரளவுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள
முடியும். கற்பனையையும் தாண்டி நிஜ வாழ்வில்
அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் திரையில் கொண்டு
வரவேண்டும். எனவே, நிச்சயமாக நிஜக் கதாபாத்திரமாக
நடிப்பதில் கூடுதல் பொறுப்பும் சவாலும் இருக்கின்றன என்றே
நினைக்கிறேன்.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?


குடும்பம், சமூக அழுத்தங்கள் காரணமாகப் பெண்களுக்கு
நிறையச் சிரமங்கள் உள்ளன. ஆனால், வேறு வழியில்லை.
உங்களுக்குக் கனவுகளும் குறிக்கோளும் இருக்கும்போது
நீங்கள் மிகவும் உறுதியுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

ஏனெனில், நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை மட்டுமே.
அதிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழாமல் பிறர் தங்கள்
வாழ்க்கையை வாழ உதவிக் கொண்டே இருப்பதைத்
தியாகமாகக் கருதிக்கொண்டு தூங்கிவிடாதீர்கள்.
-
--------------
இந்து தமிழ் திசை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2020 9:53 pm

படம் எங்களுக்கு பிடித்தது... வித்யா பாலன் சூப்பர்... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக