ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

3 posters

Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2020 2:47 pm

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! E_1595695919







அப்துல் கலாம், ஜனாதிபதியாக இருந்தபோது, அவருடைய செயலாளராக இருந்தவர், பி.எம்.நாயர்.
இவர் தற்போது, 'கலாம் எபக்ட்' என்ற பெயரில், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதுபற்றி, சமீபத்தில், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், பேட்டி கொடுத்தார்.
அதில் அனுபவித்த சில சுவையான தகவல்கள், வாசகர்களுக்காக...
* நாட்டின் தலைமை பதவியில் உள்ளோர், வெளிநாடுகளுக்கு சென்றால், அந்த நாடு, அவர்களுக்கு, விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிக்கும். அப்படி, அப்துல் கலாம் வெளிநாடுகள் சென்றபோதெல்லாம் பரிசுகள் கிடைத்தன
வந்த பரிசுகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து வரிசைப்படுத்தி, அவற்றை வைத்து காப்பாற்றும் இடத்திற்கு அனுப்பி விட்டார். பிறகு, அவற்றை திரும்பி கூட பார்க்கவில்லை
* உண்மையில், ராஷ்டிரபதி பவனை விட்டு, பதவி காலம் முடிந்து புறப்பட்டபோது, ஒரு பென்சிலை கூட எடுத்துச் செல்லவில்லை
* கடந்த, 2002ல், ரம்ஜான் மாதமான, ஜூலை - ஆகஸ்ட்டில், ஜனாதிபதியாக பதவி ஏற்றார், அப்துல் கலாம். இது சமயம், முக்கிய பிரமுகர்களை அழைத்து, (ரம்ஜான்) 'பார்ட்டி' கொடுப்பது வழக்கம்
இதுபற்றி கேள்விப்பட்ட, அப்துல் கலாம், 'மொத்தம் எவ்வளவு செலவாகும்...' என, கேட்டார்
'அது சார்ந்த, செலவு, 22 லட்சம் ரூபாய்...' என, பதில் தரப்பட்டது 'பார்ட்டி' நடத்தவில்லை. மாறாக, அந்த பணத்தில், உணவு, உடைகள், போர்வை, ஜமக்காளம் உட்பட பலவற்றை வாங்கி, நகரில் உள்ள அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்க சொன்னார், அப்துல் கலாம்
அவர் கூறியபடியே வாங்கி, அவற்றை, அப்துல் கலாமிடம் காட்டினோம். அப்போது, என்னை தனியாக அழைத்து, தன்னுடைய சுய சேமிப்பிலிருந்து, 1 லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்து, அதற்கும் சேர்த்து பொருட்களை வாங்கி கொடுக்க சொன்னார். அத்துடன், 'இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது...' என்றும், கூறி விட்டார்
அதற்கு நான், 'இப்ப சொல்லலேன்னாலும், பின்னாளில் கூறுவேன்...' என்றேன்
* கலாமுக்கு, 'ஆமாம் சாமி' போடும் ஆட்களை கண்டாலே பிடிக்காது ஒரு சமயம், இந்தியாவின் தலைமை நீதிபதி, ஒரு விஷயம் பற்றி பேசுவதற்காக, அப்துல் கலாமிடம் வந்தார். அதற்கு, அப்துல் கலாம், தன் கருத்துகளை கூறினார்
உடனே என்னிடம், 'என் கருத்தை ஒப்புக்கொள்கிறீர்களா...' என, கேட்டார்
அதற்கு, 'இல்லை. உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகவில்லை...' என்றேன்
இதை கேட்டுக் கொண்டிருந்த, தலைமை நீதிபதிக்கு அதிர்ச்சி ஒரு அரசு ஊழியர், ஜனாதிபதி கருத்துக்கு மாற்று கருத்து கூறுவது, அதுநாள் வரை கேள்விப்படாத விஷயம். அதுவும்,
அடுத்தவர் முன்னிலையில் நான் இப்படி கூறியது, அவருக்கு திகைப்பாய் இருந்தது
இதை கவனித்த நான், ஜனாதிபதியிடம், 'இதுபற்றி என்னிடம், தாங்கள் பிறகு கேட்கலாம்...' என்றேன்
ஒரு கருத்தில் உள்ள நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டால், அதன்பின், தன் கருத்தை மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டார், கலாம்


தொடர்கிறது ,,,,,,,,,,,,,,2


ரமணியன் 


தினமலர் வாரமலர்  அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2020 2:50 pm

------2  தொடர்ச்சி 

 தன்னுடைய, 50க்கும் அதிகமான உறவினர்களை டில்லி வரவழைத்து, தங்க வைத்து, பஸ் ஏற்பாடு செய்து, நகரத்தை சுற்றி பார்க்கவும் செய்தார், கலாம்
அரசு காரை பயன்படுத்தவில்லை. அவர்களுடைய தங்குதல் மற்றும் உணவு செலவு கணக்குகள் மொத்தம், 2 லட்சம் ரூபாய் என, அறிந்தபோது, தன் பணத்திலிருந்து எடுத்து கட்டி விட்டார்
தன்னுடைய மூத்த சகோதரரை மட்டும், ஒரு வாரம் தன்னுடன் கூடவே தங்க வைத்துக் கொண்டார். அவர், ஊருக்கு சென்றதும், தங்கியிருந்த அறைக்கு, வாடகை எவ்வளவு என கேட்டு, அதையும் கொடுத்து விட்டார்
* அப்துல் கலாம், ஜனாதிபதி பதவி காலம் முடிந்து புறப்பட்ட சமயம், அனைத்து ஊழியர்களும் சென்று, அவரை சந்தித்தனர். நானும் அவரை, தனியாக சந்தித்தேன். அப்போது அவர், என்னுடைய மனைவி ஏன் வரவில்லை என, கேட்டார்
'திடீரென அவருக்கு, காலில், எலும்பு முறிவு ஏற்பட்டு, வீட்டில் இருக்கிறார்...' என்றேன்
அடுத்த நாள், வாசல் பக்கம் வந்தபோது, நிறைய போலீஸ்காரர்கள் தென்பட்டனர்
'விஷயம் என்ன...' என, கேட்டேன்
என் வீட்டிற்கு, ஜனாதிபதி வர உள்ளதாக கூறினர்.
சொன்னபடி, கொஞ்ச நேரத்தில் வந்தார், கலாம். மனைவியிடம் நலம் விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, கிளம்பி சென்று விட்டார்
இதுவரை, எந்த நாட்டு ஜனாதிபதியும், ஒரு அரசு ஊழியரின் வீட்டிற்கு விஜயம் செய்ததில்லை. அதுமட்டுமல்ல, மிக சாதாரண ஒரு காரணத்திற்காக, வந்து சென்றது, அதை விட ஆச்சரியம்.

அப்துல் கலாமின் இளைய சகோதரர் ஒருவர், குடை பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.
மொத்தம், 16 டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார், அப்துல் கலாம்.
தன்னுடைய கடைசி, 8 ஆண்டு ஓய்வூதிய பணத்தை, தன் கிராம வளர்ச்சிக்காக தந்து விட்டார், கலாம்.


நன்றி வாரமலர் தினமலர் 


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2020 2:59 pm

இவரை பற்றி படிக்கையில் எழுகின்ற மனவோட்டங்கள் எழுத்தில் எழுதுவது என்பது கடினமே.
பிறக்கும்போது ஏதும் கொண்டு வரவில்லை .போகும்போது ஒன்றும் கொண்டுபோகவில்லை.
சில  ஜனாதிபதிகள் தங்கள் பதவியின் இறுதி காலத்தில் தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல 
டேங்கர் லாரிகள் உபயோகப்படுத்தியதாக கேள்வி.

இவரொரு அதிசயப்பிறவி.யாவராலும் எல்லா மதத்தினராலும் விரும்பப்பட்ட மனிதர்.
அதனால்தான் கடவுளும் தன்னுடன் அவர் இருக்கட்டுமென கூட்டிக்கொண்டார் போலும்.

வாழ்க அவர் நாமம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by ayyasamy ram Mon Jul 27, 2020 3:51 pm

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! 103459460 அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by சிவா Thu Jul 27, 2023 6:56 pm

இன்று மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம்


அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by T.N.Balasubramanian Thu Jul 27, 2023 7:23 pm

இந்திய தேசம் செய்த புண்ணியம்.

நம்முடைய வாழ்நாட்களில் குறை மிகு /குற்றம் மிகு /சுயநல அரசியல் பேய்கள் நிறைந்தவர்களையே கண்டு
வேதனை படும் நேரங்களில் , அத்திப்பூத்தாற் போல்

ஏழ்மையில் பிறந்தாலும் அறிவாலும் பழகிய விதத்தாலும் பணக்காரர்.
தன் சுய அறிவால் முன்னுக்கு வந்த உலகம் போற்றிய ஒரு விஞ்ஞானி.
இரெண்டு பெட்டிகளுடன் உள்நுழைந்து இந்தியாவின் மூத்த குடிமகனாக
ஜனாதிபதியாக பணியாற்றி
அதே இரெண்டு பெட்டிகளுடன் வெளிவந்த அப்பழுக்கு இல்லா மனிதர்.
அவர்தனை பெற்றெடுக்க தமிழகம் என்ன தவம் செய்ததோ!

நாம் கொடுத்துவைத்தவர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்! Empty Re: அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum