புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்களால் பேசிய அபூர்வ நடிகை
Page 1 of 1 •
-
24 Jul 2020
-
ஸ்ரீவித்யா பிறந்த நாள் ஸ்பெஷல்:
கண்களால் பேசிய அபூர்வ நடிகை
----------------------
இன்று நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாள். அவரைப் பற்றிய
சில நினைவுகளை அசைபோடுவோமா?
சில முகங்களை வெறுக்க நினைத்தாலும் வெறுக்க இயலாது
அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன்
ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது
வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத்
திறனே.
எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி
தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்து
விடும் நுட்பம் அவருக்குள் நிறைந்துகிடந்தது.
ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத்
தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள்.
நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில்
வெற்றிபெறுவது கடினம்.
அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர்.
அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள்.
இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்
போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும்.
சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான,
இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த
இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண
வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே
அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற
பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?
--
எல்லோரையும் கவரும் அந்தக் கண்களைப் பற்றி, மிகப் பெரிய
நடிகர் ஒருவர், ’ஸ்ரீவித்யாவா அவருக்கு ஹெட் லைட் போல் ரெண்டு
கண்ணுதானே உண்டு’ எனக் கூறி இவருடன் நடிக்க மறுத்திருக்கிறார்.
அதே நடிகர் ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் நூறாம் நாள் விழாவில்
வந்து ஸ்ரீவித்யாவின் கண்களின் மகத்துவத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நேருக்கு நேராக அவரிடமே ஸ்ரீவித்யா, என் கண்களைப் பற்றி இப்படிக்
கூறியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அந்த நடிகர் ஏதோதோ சொல்லி
சமாளித்து நழுவிவிட்டாராம்.
ஸ்ரீவித்யா தனது நேர்காணல் ஒன்றில் இதைக் கூறியிருக்கிறார்.
ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இசை ஞானத்துடன் இருந்தார்.
அதற்குக் காரணம் அவருடைய தாய் எம்.எல். வசந்த குமாரியும்
தாத்தா அய்யாசுவாமியும். இருவருமே இசைக் கலைஞர்கள்.
வசந்தகுமாரி மிக இளைய வயதில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்.
எனினும், ஸ்ரீவித்யா இசை கற்றுக்கொண்டது பி.கிருஷ்ணமூர்த்தியிடம்.
பதினோரு வயதிலேயே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இவருடைய தந்தையான விகடம் கிருஷ்ணமூர்த்தி திரைப்பட
நகைச்சுவை நடிகர். அரசியல் ஆர்வம் கொண்டவர். காங்கிரஸிலும்
பின்னர் சுதந்திரா கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
நேரு, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல்
தலைவர்கள் போல் மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்று தந்தையைப் பற்றி
ஸ்ரீவித்யா கூறியிருக்கிறார்.
ஏறக்குறைய 800 படங்களிலும் 25 தொலைக்காட்சி தொடர்களிலும்
நடித்துள்ளார். என்றபோதும் அவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற
பேதம் பார்த்ததில்லை.
ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்க’ளில் அவருக்கு மனைவியாக
நடித்த ஸ்ரீவித்யா 1991-ல் ‘தளபதி’ படத்தில் தன்னைவிட மூன்று வயது
அதிகமான ரஜினிக்குத் தாயாக நடிக்கத் தயங்கவே இல்லை.
அதே போல் சினிமா என்றோ தொலைக்காட்சி என்றோ வேறுபாடு
காட்டியதில்லை. இயக்குநர்கள் என்ன கேட்கிறார்களோ அதை அப்படியே
நடித்துத் தருவது மட்டுமே தனது பணி என்று கருதி கருமமே கண்ணாக
இருந்திருக்கிறார். ‘பல நேரம் என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில்
இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்
. “புகழுக்காகவோ விருதுக்காகவோ பணத்துக்காகவோ இவ்வளவு
கஷ்டங்களைப் பட்டு நான் நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை
நான் யார் என்பதை நிரூபிக்க விரும்பினேன்.
அதனால் இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து நடித்தேன்”
என்று தனது நடிப்பார்வத்துக்கு அவர் காரணம் கூறுகிறார்.
இயக்குநர் ஒருவர் தனது படத்தில் நடிக்க அழைத்து இரண்டு நாட்கள்
ஷூட்டிங் நடத்தின் அதன் பின்னர் அவரைப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.
அதே இயக்குநர் பின்னர் ஸ்ரீவித்யாவிடம் வந்து, ’தான் செய்தது தவறு’ என்று
கூறி மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் அவர் பார்த்திருக்கிறார்.
அவருக்கு நடித்தும் கொடுத்திருக்கிறார். அநேகப் பிரச்சினைகள்
அவரைச் சூழந்தபோதும் பாறைபோல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு
கடவுள் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு காலம்
கடத்தியிருக்கிறார். ஒரு நிழல் போல் தன்னைக் கடவுள் பின் தொடர்வதான
நம்பிக்கையில் எல்லாத் துயரங்களையும் கடந்தவர் ஸ்ரீவித்யா.
--
------------------------------------------------------
கடவுள்மீது இவர் நம்பிக்கை வைத்திருந்தபோதும், கடவுள்
இவருக்குத் தனிப்பட்ட கருணை எதையும் காட்டியதாகத்
தெரியவில்லை. கமல்ஹாசனுடனான காதல் தோல்வியில்
முடிந்தது. அந்த ஏமாற்றத்தை மறக்க அடுத்த காதல் அவருக்குக்
கைகொடுக்கும் என நம்பினார்.
மலையாளப் படமான ‘தீக்கன’லில் நடிக்கும்போது ஏற்பட்ட
பரிச்சயத்தால் அதில் துணை இயக்குநராகப் பணியாற்றிய
ஜார்ஜ் தாமஸை மதம் மாறித் திருமணம் புரிந்துகொண்டார்.
எல்லோரும் தடுத்தும் தனக்கு அது நன்மை பயக்கும் எனக்
கருதினார். ஆனால், காதலனும் காலமும் அவரை ஏமாற்றியது.
அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் கடவுளும் கையை
விரித்துவிட்டார் அதுதான் பரிதாபகரமானது.
அதன் பின்னரும் காதலும் துயரமும் அவர்மீது பேரார்வம்
கொண்டு பின் தொடர்ந்தன. இயக்குநர் பரதனுக்கும் அவருக்கும்
காதல் அரும்பியது. மகிழ்ச்சி தர வேண்டிய காதல்கள் அவரது
மன நிம்மதியைப் பறித்தன.
ஆனாலும், அவர் எதுபற்றிய கவலையும் கொள்ளாமல் இயங்கி
வந்திருக்கிறார். தன் தாய் மறைந்த பத்து நாட்களில் அவர்
மலையாளப் படமொன்றில் நடித்தார். ஒரு நடிகருக்குத் தனிப்பட்ட
முறையில் எந்த சோகம், வருத்தம் இருந்தலும் கேமராவுக்கு முன்னே
வரும் போது அது மறந்துவிடும்.
அதுதான் கேமராவின் மகத்துவம் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீவித்யா.
தமிழில் எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் 115-ல் நடித்திருக்க
வேண்டியது. ஆனால், சிறு பெண்ணாகத் தெரிகிறார் என்று
அந்த வாய்ப்புத் தட்டிப்போனது.
1967-ல் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘திருவருட்செல்வர்’
படத்தில் உமையவளாக வந்து ஒரு நடனம் ஆடுவார். அதுதான் அவரது
அறிமுகப்படம்.
பின்னர், 'நூற்றுக்குநூறு', 'ஆறு புஷ்பங்கள்', 'இமயம்', 'அம்மன் கோவில்
கிழக்காலே', 'மைதிலி என்னைக் காதலி', 'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்',
'கற்பூர முல்லை', 'நம்மவர்', 'காதலுக்கு மரியாதை' எனப் பல படங்களில்
தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
ஆனாலும், தமிழ்ப் படங்களைவிட அவரது நடிப்புக்கு மலையாளப்
படங்களே பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தன. மலையாளத்தில்
முதலில் சத்யனுடன் ’சட்டாம்பிகா’ படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், ‘செண்டா’ படத்து சுமதி என்னும் கதாபாத்திரம் தனக்குப் பிடித்த
ஒன்று என்று ஸ்ரீவித்யா குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தொடர்ந்து பல்வேறு
மொழிகளில் நடித்திருக்கிறார். எல்லா மொழிகளிலும் சொந்தக்
குரலிலேயே பேசி நடித்துள்ளார். ’வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியோ
பெரிய மகிழ்ச்சியோ ஏற்பட்டதில்லை.
வாழ்க்கையில் ஆச்சரியமான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என்று
கூறும் ஸ்ரீவித்யா திரைப்படத் துறை ஆணாதிக்கம் மிகுந்தது என்பதை
உணர்ந்திருக்கிறார். ஆனால், அதற்காகக் குறைப்பட்டுக்கொள்ளவில்லை.
’எல்லோரையும் நேசியுங்கள், யாருக்கும் துரோகம் இழைக்காதீர்கள்
இயன்றவரை உண்மையைப் பேசுங்கள் முடியாதபோது அமைதி
காத்திடுங்கள்’ என்று அழகாகச் சொல்கிறார் ஸ்ரீவித்யா ஒரு நேர்காணலில்.
அப்படியே அவர் வாழ்ந்தும் மறைந்தார்.
புற்றுநோய் காரணமாக 2006 அக்டோபர் 19 அன்று அவர் உயிர் பிரிந்தது.
கேரளம் அவரை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது. அவரது
துயரங்களிலிருந்து மரணம் அவரை விடுவித்தது
ஆனால், தனது பண்பட்ட நடிப்பின் வழியே ரசிகர்கள் மனங்களில் அவர்
வாழ்ந்துகொண்டேயிருப்பார்.
--
-ரிஷி
நன்றி-இந்து தமிழ் திசை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|