ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவன் மட்டும்...

3 posters

Go down

ஒருவன் மட்டும்... Empty ஒருவன் மட்டும்...

Post by ayyasamy ram Thu Jul 23, 2020 10:35 pm

ஒருவன் மட்டும்... E_1535003656

ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து,
'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்'
என்று, அறிய நினைத்தார்.

''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத
நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார்.
மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கதையை ஆரம்பித்தார்...

ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்;
தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி
என்று யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தவன், தன்னந்
தனியாக பகை நாட்டிற்குள் சென்றான்; அந்த நாட்டு
வீரர்களைப் போருக்கு அழைத்தான்.

எதிரிகள் கிளர்ந்தெழுந்தனர்.

'தனியாக வந்து, போருக்கு அழைக்கிறான் என்றால்,
எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்' என்று கறுவியபடி,
கூட்டமாக கிளம்பி வந்து, போரிட்டனர். போர் உக்கிரமானது;
பலரை வெட்டி வீழ்த்தினான் மதிவாணன். ஆனால், தனி
ஒருவனாக எதிர்கொண்டதால் தளர்ந்து போனான்.

எதிரி வீரன் ஒருவன், இதைப் பயன்படுத்தி, மதிவாணன்
தலையை ஒரே சீவாக சீவி எறிந்தான்.

அவன் இறந்து விட்டதை அறிந்த எதிரி நாட்டு வீரர்கள்,
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சென்று விட்டனர்.
மதிவாணன் உடல், அதே இடத்தில் கிடந்தது.

'ஐயோ... நான் இறந்து கிடப்பது, என் நாட்டு மக்களுக்கு
தெரியாதே... எப்படியாவது, தெரியப்படுத்த வேண்டும்'
என நினைத்தான்.


Last edited by ayyasamy ram on Thu Jul 23, 2020 10:37 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒருவன் மட்டும்... Empty Re: ஒருவன் மட்டும்...

Post by ayyasamy ram Thu Jul 23, 2020 10:36 pm


அதனால், வெட்டுண்டு கிடந்த, தலையை கையில்
எடுத்தபடி, நாட்டை நோக்கி நடந்தான்.

ஆறு, குறுக்கிட்டது; அதைக் கடந்தால் தான், நாட்டை
அடைய முடியும்.

தலையை கையில் வைத்து, நீச்சல் அடிக்க முடியாது;
அதை, எங்கும் விட்டு செல்ல முடியாது; என்ன
செய்யலாம் என்று யோசித்தான்.
நல்ல யோசனை தோன்றியது...

வாயைத் திறந்து அதற்குள், தலையை திணித்தான்.
பற்களால், நன்றாக கவ்விக் கொண்டான். இப்போது
ஆற்றில் இறங்கினான்; தாரளமாக நீச்சல் அடித்தான்;
மறுகரையில் நாட்டு எல்லையை அடைந்தான்.
மீண்டும் தலையை கையில் எடுத்தான்.

நகரத்திற்கு வந்தான்; மக்களை கூவி அழைத்தான்.
மக்கள் கூடிவிட்டனர்; தன் கதையை கூறினான்.

'நுாற்றுக்கணக்கான எதிரி வீரர்களை கொன்று,
உயிரிழந்தேன்...' என்று கூறினான்.

அவன் வீர தீரத்தை, மக்கள் பெரிதாக போற்றி, பாராட்டினர்.
கதையை முடித்தார், ஆசிரியர்.

''மாணவர்களே... கதையில் நம்ப முடியாத செய்திகள்
இருந்தால் சொல்லலாம்...'' என்றார்.

'நல்ல கதை... நம்பும் படியாகவே உள்ளது...' என்றனர்,
மாணவர்கள் ஒரே குரலில்.

ஒருவன் மட்டும் யோசனையில் அமர்ந்திருந்தான். அவன்
புத்திசாலியாக இருப்பான் என நினைத்தார், ஆசிரியர்.
''சுரேஷ்... இந்த கதையை நம்பவில்லையா...'' என்றார்.

அவன், ''கதை நம்பும்படியாகத்தான் இருக்கு; ஆனா,
அவ்வளவு பெரிய தலையை, எப்படி வாயில் கவ்வ முடியும்.
அதுதான் யோசிக்கிறேன்...'' என்றான்.

ஆசிரியர் நொந்துபோனார். 'அடப்பாவி நீயும் முட்டாள்
தானா' என்று நினைத்து, தலையில் அடித்துக் கொண்டார்.

குட்டீஸ்... கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
-
---------------------------------
- வாண்டு மாமா.
சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒருவன் மட்டும்... Empty Re: ஒருவன் மட்டும்...

Post by விமந்தனி Fri Jul 24, 2020 12:20 am

கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
- சூப்பருங்க


ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒருவன் மட்டும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒருவன் மட்டும்... Empty Re: ஒருவன் மட்டும்...

Post by T.N.Balasubramanian Fri Jul 24, 2020 4:43 pm

கதைகளுக்கு அடித்தளம் என்று ஒன்று உண்டு.
ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் உண்டு .
கதாசிரியர் திறமையால் கதை வளர்க்கப்படுகிறது.


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒருவன் மட்டும்... Empty Re: ஒருவன் மட்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum