புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
21 Posts - 70%
heezulia
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
1 Post - 3%
viyasan
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
213 Posts - 42%
heezulia
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
21 Posts - 4%
prajai
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_m10வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.எஸ். திருமலை கதைகள் - அத்தையின் பரிசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 3:42 pm

தட்சனின் யாகத்துக்கு தாட்சாயிணி போகக் கூடாது என சங்கரன் ஆணையிட்டது அவளுக்கு வரக்கூடிய அவமரியாதையை உத்தேசித்தே என்கிறது சிவபுராணம். ஆனால் தாட்சாயினிக்கு மனம் கேட்கவில்லை, சென்றாள் சதியானாள், தட்சவதம் நடந்தது.

அதே தாட்சாயினியின் கதை பின் வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் திரும்பத் திரும்ப நடக்கும் ஒன்றாக ஆனது பல விஷயங்கள் மாறவே மாறாது என்பதையே வலியுறுத்துகிறது. இப்போது ஓவர் டு திருமலை, அவரது வெர்ஷன் எப்படி என்று பார்ப்போம்.

“ஹூம். ஜானகி! போகக் கூடாது, கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்” என்று உத்தரவிட்டு விட்டு ஆபீசுக்கு சென்றார் அவள் அகத்துக்காரர் நாராயணாச்சாரி

பசங்களும் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டனர். குழந்தைகளின் கலகலப்பைப்போல் அவர்கள் இல்லாத போது இயங்கும் நிசப்தமும் வாழ்க்கையின் முக்கிய பாகம். ஆனால் இன்று அதனால் ஜானகியின் மனம் நிம்மதி கொள்ளவில்லை. கணவன் கட்டளையை மீறிச் செல்வதா? பெண்மனம் காரணங்களை அறிய முயலாமல், அறிவையும் தர்க்கத்தையும் சில சமயங்களில் உபயோகிக்காமல் வெளியர்த்தமற்ற விளங்காத உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு பிடிவாதம் பிடிக்கிறது. ஜானகியை அப்போது வாட்டிய பிரச்சினை தன் மருமகள் கலாவின் கல்யாண முஹூர்த்தத்துக்குச் செல்வதா வேண்டாமா என்பதுதான். கணவன் நாராயணாச்சாரி வேண்டாம் என்று உத்தரவிட்டதற்குக் காரணம் தங்களைக் கலா வீட்டார் நேரில் வந்து அழைக்கவில்லை என்பதுதான்.

ஜானகியின் அண்ணன் கிருஷ்ணஸ்வாமி மயிலாப்பூர் பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏதோ இருபது வருஷங்களுக்குமுன் ஷேர் மார்க்கெட்டில் குருட்டதிர்ஷ்டம் அடித்தது. ஐசுவரியம் குவிந்தது. பணத்துடன் வந்த புது கௌரவ உணர்ச்சி அவன் மனநிலையை மாற்றி விட்டது. மாம்பலத்தில் எளிய வாழ்க்கை நடத்தி வந்த அவன் தங்கை ஜானகி குடும்பத்துடன் அவன் குடும்பத் தொடர்பு சில மாதங்களில் மெதுவாக மறைந்து விட்டது. கிளப்புக்கும் ஷாப்பிங்குக்குமே அவகாசம் போதுமானதாக இல்லாத அவள் மன்னிக்கு ஜானகியை போய்ப் பார்க்க நேரம் கிடைக்காததில் விந்தையில்லை. அவர்கள் பெண் கலாவின் கல்யாணத்துக்கு ஊரிலுள்ள எல்லா பெரிய மனிதர்களையும் காரில் போய் அழைத்தனர். ஏழை உறவு ஜானகிக்கு வெறும் அழைப்புக் கடிதம் மட்டுமே அனுப்பினர்.

“முஹூர்த்தத்துக்கு மட்டும் போய் வந்து விடுகிறேன். இல்லையென்றால் என் மனது கேட்காது. அம்மா இருந்திருந்தால் இதுமாதிரி நடந்திருக்காது... நாத்தனார் நான் போய்க் கல்யாணத்தை நடத்திக் கொடுத்து வைக்கும்படி ஆகியிருக்கும். இருந்தாலும் நான் அவசியம் சென்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று படுகிறது” என்றெல்லாம் வாதாடினாள் ஜானகி.

“நான் இரண்டு மாதம் வேலையில்லாமல் திண்டாடினேன். உன் அண்ணா உதவி செய்ய ஒரு விரலைக்கூட மடக்கவில்லை. போன வருஷம் நீ உடம்பு சரியில்லாமல் மூன்று மாதம் சாகக் கிடந்தாய், அவர்கள் யாராவது செய்தி தெரிந்தும் ஒரு தரமாவது வந்து பார்த்தார்களா? முறையாவது, உறவாவது என்ன வேண்டிக்கிடக்கு? நாம் என்ன யாசகமா கேட்டு விட்டோம்? நம்முடன் பழகுவது அவர்கள் அந்தஸ்துக்குக் குறைவு என்று என்ணுகிறார்கள். நாம் ஒன்றும் அவர்கள் கடாக்ஷத்தை நோக்கி உயிர் வாழவில்லையே. பைத்தியக்காரத்தனமாகப் போய் உன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதே” என்றார் நாராயணாச்சாரி.

“ஒரு வேளை நேரில் வந்து கூப்பிட சௌகரியமில்லாது போயிருக்கலாம்”.

“போடி, அசடே!” என்று சிரித்தார் அவள் கணவன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 3:42 pm

மணி பத்தடித்தது. “இத்தனை நேரம் அங்கு முஹூர்த்தம் நடந்து கொண்டிருக்கும். இப்பொழுது கிளம்பினால் சுளுவாக பஸ்ஸில் இடம் கிடைக்கும். கலா கழுத்தில் தாலியேறும் நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். இரண்டு மணி நேரத்தில் திரும்பவும் வந்து விடலாம். ஒருவருக்கும் தெரியாது செய்யக்கூடிய காரியம்!” என்று ஜானகி என்ணமிட்டாள். அதைத் தொடர்ந்தே, ‘நாம் போனால் நம்மை அசட்டை செய்து அவமதித்தால் என்ற பயமும் தோன்றியது. “என்னவானாலும் சரி, போய்வந்து விடுவோம்” என்று தீர்மானித்து பரபரவென்று நல்ல புடவை மாற்றிக் கொண்டு பன்னிரண்டாம் பஸ்ஸில் ஏறி கிளம்பினாள்.

ஸாந்தோம் ஹைரோட்டில் ஒரே கார் வரிசை, ஜனத்திரள். கொட்டுமேளம் முழங்கியது. பங்களாவுக்கு வெளியே நின்ற கும்பலில் சமாளித்துக் கொண்டு கேட்டை நெருங்கினாள் ஜானகி. வாசலில் வாழை மரத்தடியில் நின்ற இரண்டு கூர்க்காக்கள் அவளை, “அழைப்பின் பேரில்தான் வந்தீர்களோ? அல்லது கூப்பிடாமல் வரும் கும்பலைச் சேர்ந்தவர்களோ?” என்று கேட்கிற மாதிரி பார்த்தனர். ஜானகியின் மனம் படபடத்தது. திரும்பிச் செல்ல முடியாத நிலைமை. விடுவிடென்று உள்ளே நடந்து சென்றாள். கல்யாணப் பந்தலில் ஒரே ஜரிகை அங்கவஸ்திரம், சலசலக்கும் பட்டுப் புடவைகள், மின்னும் நகைப்பு, பளபளக்கும் நகைகள் சந்தடி. யாரும் ஜானகியை ‘வா’ என்று உள்ளழைக்கவில்லை. உள்ளெழுந்த கூச்சத்தை அடக்கி மணமேடையருகே என்று உட்கார்ந்தாள். அண்ணாவும் மன்னியும் கன்னியைத் தானம் கொடுப்பதில் முனைந்திருந்த்னர்.

கொட்டுமேளம் கொட்டியது, தாலி கட்டியாயிற்று. ஜானகி புது தம்பதிகளுக்கு அக்ஷதை போட்டாள். “பண மன வறுமையின் நிழல் உங்கள் மீது என்றும் விழாது இருக்கட்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டே கிளம்ப எழுந்திருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த வயதான அம்மணி, “இதற்குள் போவானேன் அம்மா, இதோ ஆசீர்வாதம் நடக்கப் போகிறது. பிறகு சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றாள். மர்றவர்கள் அந்த அம்மாவிடம் நடந்து கொண்ட முறையிலும், பேச்சிலிருந்தும் அவள் மணமகனின் பாட்டி என ஊகித்துக் கொண்டாள்”.

பாட்டியைத் தம்பதிகள் நமஸ்கரித்தனர். அப்பொழுதும் கலாவின் கண்களிலோ கிருஷ்ணஸ்வாமியின் கண்களிலோ ஜானகி படவில்லை.

ஆசீர்வாதம் ஆரம்பமாயிற்று. அம்மான் ஓதி கழிந்ததும் வாத்தியார், “பெண்ணுக்கு அத்தை எங்கே? அத்தை ஆசீர்வாதத்துக்கு அப்புறம்தான் மற்றவர்களுடையது” என்று கத்தினார்.

“பெண்ணின் அத்தையைக் கூப்பிடும் ஸ்வாமி” என்று சம்பந்தி உத்தரவிட்டார்.

கிருஷ்ணஸ்வாமி, “அவள் அத்தை கல்யாணத்துக்கு வர சௌகரியப்படவில்லை” என்று மழுப்பினான். உடனே மணமகனின் பாட்டி எழுந்து,”ஏன் வரவில்லை? அத்தையில்லாமல் ஒரு கல்யாணம் நடக்குமா, அவள் வராததற்கு ஏதோ காரணமிருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

“அதான் அவளுக்கு வர சௌகரியப்படவில்லை என்று சொன்னேனே! ஹூம் மேலே ஆகட்டும் பிரகஸ்பதி ஸ்வாமிகளே”! என்றான் கிருஷ்ணஸ்வாமி.

சம்பந்தி லேசில் விடுபவராக இல்லை. “என்னங்காணும் எதையோ ஒளிக்கப் பார்க்கிறீர்? அத்தை வரவில்லைன்னாலும் அவள் வீட்டார் ஒருவருமா வரவில்லை? உங்கள் உறவினர் வராததற்குக் காரணம் என்னவோ”?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 3:42 pm

வாதம் முற்றிவிடும் போலிலிருந்தது. பரிசு கொடுப்பதென்றால் எதைக் கொடுப்பது? அவள் எதையும் வாங்கி வரவில்லையே? ஒரு வெள்ளி வட்ட ரூபாய் கொடுக்கக்கூட அவளிடம் இல்லை. பளிச்சென்று யோசனை தோன்றியது. தன் பவழமாலையிலிருந்து தன் தாயின் நினைவுப்பொருளான கஜலக்ஷ்மி உருவமும் ‘நித்திய மங்களம்’ என்ற எழுத்தும் பொறிக்கப் பெற்ற தங்க மெடலை கழற்றினாள்.

“இதோ அத்தை நான்தான். நாராயணாச்சாரியார் ஆசீர்வாதம் என்று ஓதியிடுங்கள்” என்று நடுங்கும் கையால் அந்த மெடலை நீட்டினாள்.

திடீரென்று தோன்றிஒய சச்சரவுப் புயல் மறைந்தது. பல முகங்களிலிருந்து கவலையும் கோபமும் கலைந்தன. சிரிப்பு தோன்றியது.

“சோபனோ சோபமான...” என்று உபாத்தியாயர் கம்பீரமாக முழங்கினார்.

ஜானகி எழுந்து வெளியே வந்தாள். நிதானமாகக் கேட்டை நோக்கி நடந்தாள்.
“அம்மாவோட மெடலை என் பெண்ணுக்குக் கொடுக்க வந்த உன் உதாரம் மகா பெரியது ஜானகி! என் மானத்தைக் காப்பாற்றினாய். நீ இப்பொழுது போகக்கூடாது. என்னை மன்னித்து விடு. தயவு செய்து இங்கேயே இன்றும் நாளையும் தங்கு” என்று மன்றாடிக் கொண்டே அண்ணாவும் மன்னியும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் சிறுமைக்கும் பிரதியாக பெருந்தன்மையானதொரு காரியம் செய்துவிட்ட மன நிறைவில் ஜானகியின் செவியில் அவர்கள் கூற்று விழவில்லை போலும். கம்பீரமாக உலகத்துக்கு நான் ராணி என்ற தோரணையில் வெளி நடந்து மறுபடியும் பன்னிரண்டாம் நெம்பர் பஸ் ஏறி வீடு சென்றாள் ஜானகி.
------------------------------------------------
அன்புடன்,
டோண்டு ராகவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக