ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

2 posters

Go down

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Empty உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

Post by தாமு Sat Jan 09, 2010 5:48 am

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Adrenal


தைராய்ட
ு போன்று நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்று அட்ரீனல் சுரப்பிகள். உடலின் விலாப்புறத்தில் இரண்டு சிறுநீரகங்களுக்கு மேலே தலா 4 முதல் 5 கிராம் எடை கொண்ட இரண்டு அட்ரீனல் சுரப்பிகள் அமைந்துள்ளன. உடலின் நீர்ச் சத்து, உயிர்ச் சத்துகளைப் பராமரிப்பது, ரத்த அழுத்தம்- ரத்தக் குழாய்களைப் பராமரிக்கும் பணியை இவை கருவறையிலிருந்து கல்லறை வரை செய்கின்றன. இந்த முக்கியப் பணிகளை அட்ரீனல் சுரப்பிகள் செய்வதால் இவற்றை ஆயுள் காப்பான்கள் என்றும் அழைக்கலாம்.

உடலின் முக்கிய பாகங்கள் அனைத்தையும் கடவுள் இரண்டாகப் படைத்துள்ளார். கண்கள், கால்கள், காதுகள் போன்று இரண்டு அட்ரீனல் சுரப்பிகள் அமைந்துள்ளன. ஏனெனில் இச் சுரப்பிகள் இல்லாமல் போனால் ஒருவர் உயிர் வாழ முடியாது. ஏதாவது ஒரு அட்ரீனல் சுரப்பியல் கோளாறு ஏற்பட்டு, அது அகற்றப்பட்டாலும்கூட மற்றொரு சுரப்பியைக் கொண்டு சமாளித்துவிட முடியும். தேவைப்படும் நேரத்தில் மனிதனின் இதய வேகத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை அட்ரீனல் சுரப்பிகள்.

மேலும் அட்ரீனல் சுரப்பிகள் சுரக்கும் நீர்கள்தான் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் பராமரிப்பு உள்பட உடலில் பல விஷயங்களின் கட்டுப்பாட்டு அறைகளாக விளங்குகின்றன. ஒரு சிறிய நெல்லிக்காய் அளவைக் கொண்ட ஒவ்வொரு அட்ரீனல் சுரப்பியின் வெளிப் பாகம், உள் பாகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே முக்கியப் பணிகள் உள்ளன. அட்ரீனல் சுரப்பியின் வெளிப்பாகமான கார் டக்ஸ் மூன்று முக்கிய நீர்களைச் சுரக்கிறது.

* சர்க்கரைச் சத்து மற்றும் புரதச்சத்து கொண்ட சுரப்பு நீரைச் சுரக்கிறது.
* தாதுச் சத்து கொண்ட சுரப்பு நீரைச் சுரக்கிறது.
* ஆண் பெண் பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும் செக்ஸ் ஸ்டீராய்ட்ஸ் எனப்படும் சுரப்பு நீரையும் சுரக்கிறது.


மருத்துவத்தில் ரத்த அழுத்தம் மூலம் இதயத்தின் செயல்பாடு கணிக்கப்படுகிறது. ரத்த அழுத்த அளவு உயர் நிலையில் 120 எம்எம்எச்ஜி ஆகவும¢, கீழ் நிலையில் 80ம் எம்எச்ஜி ஆகவும் இருந்தால் இயல்பானது. கீழ்நிலை ரத்த அழுத்த அளவு 90 க்கு மேல் 100 ஐத் தாண்டிச் செல்லும் நிலையில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளதாகக் கொள்ளலாம். சிகிச்சை தேவை. உயர் ரத்த அழுத்த நோயை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஏசென்ஷியல் ஹைப்பர் டென்ஷன்: பாரம்பரியத் தன்மை, முதுமையில் ரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை இழப்பதால் ஏற்படும் இத்தகைய உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இயல்பானது. இதற்கு மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றம் போதுமானது.

அதாவது புகைப் பழக்கம் இருந்தால் அதை நிறுத்துதல், உணவில் உப்பைக் குறைத்தல், வாக்கிங் உள்பட தொடர் உடற்பயிற்சி ஆகியவை மூலம் இத்தகைய உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். எனினும் இத்தகைய உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு, சிகிச்சை தேவைப்படும்.

குணப்படுத்க்கூடிய ஹைப்பர் டென்ஷன்: பாரம்பரியத் தன்மை உள்பட மேலே சொன்ன காரணங்கள் இல்லாமல், ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள நிலையில் அட்ரீனல் சுரப்பி குறித்து டாக்டர்கள் சந்தேகப்படுவது அவசியம். மேலும் உடல் குண்டாகிக் கொண்டே போய், ரத்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போய், ரத்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போனாலும் சந்தேகப்பட வேண்டும். ஏனெனில் அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கலாம்.

அயோட்டா எனப்படும் இதயத்திலிருந்து வெளியே சிறுநீரகங்களை நோக்கி வரும் பெரிய ரத்தக் குழாய் பாதை சுருங்கி இருத்தல், அட்ரீனல் சுரப்பியை ஊக்குவிக்கும் ரெனின் ஆஞ்சியோ டென்சின் என்ற சுரப்பு நீர் சிறுநீரகத்தில் அதிகமாகச் சுரத்தல், அட்ரீனல் சுரப்பியல் கட்டி (குறிப்பாக ஆல்டோ ஸ்டீரோன் என்ற தாதுப்பொருளைச் சுரக்கும் அட்ரீனலின் வெளிப்புறமான கார்டக்ஸில் பலருக்குக் கட்டு ஏற்படுவது உண்டு.)

ஆகியவை காரணமாக உயர் ரத்த அழுத்த நோய்ப் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் உயர் ரத்த அழுத்த நோயை ஏற்படுத்தும் இக் காரணிகளைக் கண்டறி¢து, அறுவைச் சிகிச்சை செய்து விட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும். இதனால்தான் இது குணப்படுத்தக்கூடிய ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது.

sigaram
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Empty Re: உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

Post by தாமு Sat Jan 09, 2010 9:17 am

தெரிந்து கொள்ளுங்கள்
ரத்த அழுத்தம்...
டாக்டர் M. மகேஸ்வரி M.B.B.S.



வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure - JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Bp
உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.

அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.

உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.

சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்பு ள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study - DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.

மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.

பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.

சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.

ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்துகளைத் தேடி ஓடாமல், தங்கள் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தும் முயற்சியை முதலில் தொடங்கலாமே.


nakkheeran உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Empty Re: உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

Post by kilaisyed Sat Jan 09, 2010 9:33 am

மிக பயனுள்ள ஆக்கம் எல்லோரும் படித்து தெரிந்து கொள்வது நல்லது
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Empty Re: உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

Post by தாமு Sat Jan 09, 2010 9:54 am

நன்றி நண்பா உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... 678642

உங்கலை பத்தி அறிமுகம் படுத்திக் கலாமே.... உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... 733974
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க... Empty Re: உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum