ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sat Jul 18, 2020 4:07 pm

First topic message reminder :

18.07.2020

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 9oCBmpqfSwqm10Fb9RrN+vaali, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 N6UHK4hHSA2ShD8LqypU+vaalee
இன்னிக்கி பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம்.

வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக்.  படித்து ரசிங்க.

படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ்.  படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.  

அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல?  அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.

MGR : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு.  ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போடா போறதில்ல.

வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.


எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன்.  உங்க பேர் வராது.

வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?

எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!

வாலி : எப்டி முடியும்?  சொல்லுங்க பார்ப்போம்.  இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'  இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.  'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்' னுன்னா போஸ்ட்டர் ஓட்டுவீங்க?

எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.  நல்லாயிருக்குல்ல?


Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Wed Sep 06, 2023 11:04 pm

06.09.2023 

05.09.2023    சலீல் சௌத்ரி அவர்கள் நினைவு நாள்   [1923 - 1995] 

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 KXnLMJz                              , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 LGjDTBo

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Ce7CBVp

ம்யூஸிக் டைரக்ட்டர், கவிஞர், எழுத்தாளர் & நாடக ஆசிரியர். வங்க மொழி, ஹிந்தி, மலையாளம், சில தமிழ் படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மேற்கு வங்காளத்தில் பிறந்தார். அதனால சின்ன வயசில அஸ்ஸாம் தோட்டங்கள்ல சுத்திட்டு இருந்தார். தோட்டத்துல வேல செஞ்சவங்க பாடிய பாட்டுகளும், அஸ்ஸாமிய நாடோடி பாட்டுக்களும் சலீல் சௌத்ரிக்கு ம்யூஸிக் மேல ஈடுபாடு வரவழச்சுது. அப்டியே ம்யூஸிக் மேல இருந்த இன்ட்ரெஸ்ட் அந்த வயசிலேயே மேல்நாட்டு இசைக்கும் போச்சு. அந்த ம்யூஸிக்கையெல்லாம் உன்னிப்பா கவனிச்சு கவனிச்சு இசை கருவிகளை பற்றி தெரிஞ்சுக்கிட்டார். 

இந்துஸ்தானி ம்யூஸிக்கை அப்பாவும், அண்ணனும் சொல்லிக்கொடுத்தாங்க. அப்பாவுக்கு ஏற்கனவே ம்யூஸிக் தெரியும். டீ எஸ்டேட்ல அலஞ்சு அலஞ்சே வங்க பழங்குடி இசை கேட்டு கேட்டு பழக்கமாச்சு. அதனால அவரோட மியூஸிக்ல நாட்டுப்புற இசையும், மேலை இசையும் சரியா கலந்திருக்கும். அநேகமான இசை கருவிகளை இசைக்க  தெரிஞ்ச அபூர்வ மேதைனு பழம்பெரும் ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் ஒரு தடவ சொன்னார். விசித்திரமான இசைக்கருவிகளை கூட இசைத்தார். இவரோட பாட்டுக்கள்ல மேல்நாட்டு, இந்துஸ்தானி, வங்க நாட்டுப்புற இசை கலந்திருக்கும்.  

1949ல வங்க படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். வங்க படங்களுக்கு அநேகமா அவரே பாட்டு எழுதினார். அப்புறம் ஹிந்தீல நொழஞ்சார். மலையாளத்துல பேர் வாங்கினது 1965ல செம்மீன் படத்தின் மூலமா. இந்த படத்தின் பாட்டு தமிழ்நாட்டுல ரொம்ப ஃபேமஸ். 

மெட்டுதான் பாட்டுனு சலீல் சௌத்ரி உறுதியா நம்பினார். பாட்டை கேக்குறவங்க மொதல்ல கேக்குறது மெட்டைத்தான். மெட்டுதான் பாட்டின் அடிப்படைன்னு சொன்னார். ஒரு நல்ல மெட்டை கேட்டால் அதுக்கு பாட்டு எழுதுறது பெரிய விஷயமே இல்லேன்னு எண்ணினார். 

சலீல் சௌத்ரி தமிழ்ல ரொம்ப கொஞ்ச படங்களுக்குதான் ம்யூஸிக் போட்டார். மற்ற மொழிகள்ல போட்ட ம்யூஸிக்கை பற்றி சொல்ல ஏராளமா இருக்கு. இவரோட ம்யூஸிக் ட்ரூப்ல இசைஞானி இளையராஜா கிட்டார், கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தார். தான் சலீல் சௌத்ரியின்  பரம ரசிகன்னு இளையராஜா எப்பவும் சொல்வதுண்டு. AR ரஹ்மானின் அப்பா சலீல் சௌத்ரியின் குழூல வேல செஞ்சவர். தமிழ்ல முதல்ல ம்யூஸிக் போட்ட படம் 1971ல உயிர் படத்துக்கு. பின்னணி இசை மட்டும். பாட்டுகளுக்கு ம்யூஸிக் போட்டவர் ரமணா ஸ்ரீதர். 
சௌத்ரியின் மியூஸிக் வெஸ்டர்ன் மியூஸிக்ல இருக்கிற ஸ்பெஷாலிட்டியை இந்திய மியூஸிக்கோடு  வெற்றிகரமாக சேத்து உருவானது. இப்ப உள்ள எல்லா சினிமா பாட்டுக்களும்  இப்படிப்பட்ட கலப்பிசைதான். 

விருதுகள்
ஹிந்தி, மலையாள படங்களுக்கு விருதுகள் வாங்கினார். 

நன்றி   விக்கி 

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி

கரும்பு        1973

மாடப்றாவே வா ஒரு தூது கொள்வோம் வா தேன் வசந்த காலம் கை நீட்டி 

பருவமழை       1978

பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் 

அழியாத கோலங்கள்      1979 

உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே 

தூரத்து இடி முழக்கம்      1980

பேபி   , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 103459460  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sat Sep 09, 2023 8:55 pm

09.09.2023 

08.09.2023            
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவு  நாள்      
[1935 - 2008] 


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 1Z3sXDJ                            , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 BxnKbCx

வயலின் சக்கரவர்த்தி, வயலின் கவிஞர், ம்யூஸிக் டைரக்ட்டர். இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா வயலின்ல  கர்நாடக இசை வாசிச்ச கலைஞர்கள்ல ரொம்ப முக்கியமானவர். வயல்ல உழுதவங்களையும்  வயலின் கேக்க செஞ்சவர்னு இவரை பற்றி சொன்னாங்க. 12 வயசிலிருந்தே இசை கச்சேரிகள்ல  பங்கெடுத்தார். ஆரம்பத்தில சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழியார் போன்றவங்ககூட சேந்து கச்சேரில வாசிச்சவர், அப்புறமா தனி குழு வச்சு கச்சேரிகள் நடத்தினார். 1976ல இருந்து முக்கியமா வயலின் வச்சே கச்சேரி நடத்தினார். காரைக்குடில ஒரு கச்சேரில இவர் வயலின்  வாசிச்சதே இவரோட வயலின் அரங்கேற்றமாச்சு. 

காலங்காலமா மிருதங்கத்தோடு வயலின் வாசிச்சதை மாத்தி, ப்ரபல தவில் வித்துவான் வலயப்பட்டி சுப்பிரமணியம் கூட சேந்து 3000 கச்சேரிகளுக்கு மேல வயலின் கச்சேரிகள் வெற்றிகரமா நடத்தினார். குன்னக்குடியார். கர்னாடக ம்யூஸிக், சினிமா ம்யூஸிக் கூடவே, வயலின்லியே பறவைகள், மிருகங்களின் இயற்கையான சத்தங்கள் போலவே இசைத்தார். புல்லாங்குழல், கிட்டார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக்கருவிகள் வாசிக்க தெரிஞ்சவர். அப்பா கர்நாடக இசை கலைஞர்ங்கிறதால அவர் நடத்திய சமஸ்கிருத ஸ்கூல்ல குன்னக்குடியார் படிச்சார். 

இசை கலைஞர்களான இவரோட சகோதர சகோதரிகள் பாட, அண்ணன் மிருதங்கம் வாசிக்க இப்டி பல ஊர்கள்ல இசை கச்சேரி நடத்தினாங்க. இவரோட சகோதரிகள் 'குன்னக்குடி சகோதரிகள்' பேர்ல கர்நாடக இசை கச்சேரி நடத்தினாங்க. ஒரு கச்சேரில வயலின் வாசிக்கிறவர் வர்ல. எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும்போது, ஒருத்தர் "ஏன், உங்க கடேசி  பையனை வயலின் வித்வான் ஆக்கிறவேண்டியதுதானே"னு நக்கலா சொன்னார். இதையே சவாலா எடுத்து, குன்னக்குடியாரின் அப்பா 8 வயசானவருக்கு வயலின் சொல்லி கொடுக்க ஆரம்பிச்சுட்டார். வயலின்ல பல புதுமைகள் செஞ்சார். இவரோட வயலின் பாடும், பேசும். கர்னாடக ம்யூஸிக் தெரியாதவங்க கூட ரசிக்கும்படியான இனிமையான, எளிமையான முறைல வயலினை வாசிச்சார். 

தமிழ்ல முதல்ல ம்யூஸிக் போட்ட படம் 1969ல வா ராஜா வா. 1983ல தோடி ராகம் படத்தை குன்னக்குடியார் தயாரிச்சார். 1990ல உலா வந்த நிலா படத்தை தயாரிச்சு, டைரக்ட்டினார். சில படங்கள்ல கௌரவ ரோல்ல நடிச்சார். 

திருவையாறு த்யாக ப்ரம்ம சபைல 28 வருஷம் செயலாளராக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தார். ராக ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவி, இசையால நோய்களை குணப்படுத்த முடியுமானு ஆராய்ச்சி செஞ்சார். 

விருதுகள்
பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருது 1993, கர்நாடக இசைஞானி விருது
சங்கீத கலாசிகாமணி 1996 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - திருமலை தென்குமரி 1970தமிழ்நாடு மாநில சினிமா கௌரவ விருது - ராஜா சாண்டோ விருது 2000

நன்றி   விக்கி, hindutamil

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல நம்ம கண்ண நம்மால நம்ப முடியல  

வா ராஜா வா         1969

 என்னை பார்த்து சிரிக்கிறாளே கன்னிமுத்தம்மா அன்னையவள் இயற்கையம்மா 

குமாஸ்தாவின் மகள்        1974

Life Is A Flower Love Is A Treasure Youth Is Glamour Where Is The Pleasure 

மேல்நாட்டு மருமகள்       1975


பேபி   மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Mon Sep 11, 2023 5:18 pm

ayyasamy ram wrote:, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 JYqzJZs
மேற்கோள் செய்த பதிவு: undefined

11.09.2023

மகாகவி பாரதியார் அவர்கள் நினைவு தினம்      [1882 - 1921] 

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 IN355fq                     , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 ZLwz7OY

அய்யா சார் வருகை பதிவேட்டில காலை வணக்கம் சொல்லி, இன்றைய சிறப்பு தினமாக பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் நினைவு தினம்னு சொல்லியிருக்கார். அதனால சினிமால  வந்த பாரதியாரின் பாட்டுக்கள் இங்க 

பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - DK பட்டம்மாள் 
    வாழ்க்கை              1949

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்ட கரிய விழி கண்ணம்மா - P சுசீலா 
   
மலர்களே மலருங்கள்              1980 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே - DK பட்டம்மாள் 
  
நாம் இருவர்                1947 

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா 
         ஏழாவது   மனிதன்         1982

கேளடா மானிடா வா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாரும் இல்லை - ராஜ்குமார் பாரதி 
   
பாரதி         2000


பேபி    , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Wed Sep 20, 2023 10:08 am

20.09.2023   

19.09.2023            KB சுந்தராம்பாள் அவர்கள் நினைவு நாள்                    [1908 - 1980]   

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 YmbXCYD                         , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Rl6hSUz

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். கொடுமுடி கோகிலம் ஊரு - ஈரோடு மாவட்டம் கொடுமுடி பாலாம்பாள் - அம்மா பேரு கொடுமுடி கோகிலம் - சுந்தராம்பாள் 

உச்சஸ்தாயில உச்சம் தொட்டவர். ம்யூஸிக், நாடகம், சினிமா எல்லாத்துலயும் பேர் வாங்கினார். கொடுமுடீல லண்டன் மிஷன் ஸ்கூல்ல படிச்சார். ஒரு தடவ கொடுமுடீல இருந்து சுந்தராம்பாள் ரயில்ல அப்பா ஊர் கரூருக்கு போய்ட்டு இருந்தார். கொடுமுடீல இருந்து ஒரு குடும்பத்தாருங்க அந்த ரயில்ல இருந்தாங்க. அவ்ங்க சுந்தராம்பாள பாடச்சொன்னாங்க. அவரும் பாடினார். அந்த குடும்பத்தினர் கேட்டு ரொம்பவே ரசிச்சாங்க. அந்த ரயில் பெட்டீல இருந்த வேலு நாயர்ங்கிறவரும் ரசிச்சார். இவர் கும்பகோணத்தில நாடக கம்பெனி நடத்திட்டு இருந்தவர். தான் நடத்தும் நாடகங்கள்ல குழந்தை வேஷத்தில நடிக்கிறதுக்கு குட்டி பொண்ணுங்கள தேடிட்டு இருந்தார். அந்த சமயத்தில குட்டி பொண்ணு சுந்தராம்பாள் பாடிய திறமைய பாத்து, கேட்டு அவரே பொருத்தமாயிருப்பார்னு முடிவு செஞ்சு, ரயில்ல இருந்த அவரோட குடும்பத்தாரின் சம்மதத்தோடு 8 வயசு சுந்தராம்பாளை கும்பகோணத்துக்கு கூட்டிட்டு போய்ட்டார். பாலபார்ட், ஸ்த்ரீபார்ட் , ராஜபார்ட்ன்னு மூணு பார்ட்லயும் தூள் கெளப்பினார். 

நல்ல தங்காள் நாடகத்தில நல்லதங்காளின் மூத்த பையனா ஆண் வேஷத்தில சுந்தராம்பாள் நடிச்சார். "பசிக்குதே வயிறு பசிக்குதே"னு பாட்டு பாடியது ரசிகர்கள் ஓஹோன்னு பாராட்டினாங்க. தொடர்ந்து நாடகங்கள்ல நடிச்சார். சொந்த குரல்ல பாடி நடிச்சார். 1917ல் சிலோனுக்கு போயி, நாடகங்கள்ல நடிச்சார். அங்க பல ஊர்கள்ல இவர் நடிச்ச நாடகங்கள் நடந்துச்சு. அவரோட புகழ் அங்க பல இடங்கள்ல பரவுச்சு. அந்த சமயத்ல SG கிட்டப்பா பாட்டாலும், நடிப்பாலும் பேர் வாங்கியவர். கொழும்புல சுந்தராம்பாள்கூட நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 1926ல வள்ளி திருமணம் நாடகத்தில ரெண்டு பேரும் சேந்து நடிச்சாங்க. நெஜமாவே கல்யாணமும் செஞ்சுகிட்டாங்க. 

இவருக்கு மைக் வேணாம். அப்டியே பேசினார். அப்டிப்பட்ட குரல். ஒளவையார்னாலே சுந்தராம்பாள் உருவம்தான் ஞாபகத்துக்கு வரும். 1953ல ஒளவ்வையாராவே வாழ்ந்து காட்டினார். அந்த காலகட்டத்தில அதிகமா சம்பளம் வாங்கின கலைஞர் இவர்தான். சுந்தராம்பாள் பாடிய பாட்டு ரெக்காடுகள் எல்லா எடங்கள்லயும் பாடுச்சு. என்னதான் திறமையா  நடிச்சாலும், தமிழ்நாடு முழுசும் இவர் புகழ் பரப்பியது, இவரோட சங்கீதம்தான். பக்க வாத்தியங்கள் இல்லாமலே சூப்பரா பாடும் திறமை இருந்துச்சு. 

1933ல கணவரின் மறைவுக்கு பின்னால வெள்ளை சேல காட்டினார். எந்த ஒரு ஆண் நடிகர்கூடவும் நடிக்க போவதில்லேன்னு முடிவு எடுத்து கடேசி வரைக்கும் அது மாதிரியே இருந்தார். ரொம்ப நாள் நடிக்காமல் இருந்தார். 1934ல நந்தனார் நாடகத்தில நடிச்சார். அதுக்கப்புறம் பல நாடகங்களை நடத்தினார். 1935ல பக்த நந்தனார் படத்தில நந்தனாராக நடிச்சார். இந்த படத்தில 41 பாட்டு. அதுல 19 பாட்டு மேடம் பாடியதுதான். 
அப்பப்பா, இன்னும் இவரை பற்றிய விஷயங்கள் ஏராளமா இருக்கு. 

பட்டங்கள்    :
கொடுமுடி கோகிலம், தமிழிசை செல்வி, ஏழிசை வல்லபி 

நன்றி  : விக்கி, hindutamil, murugan.org
 

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம் 
 பூம்புகார்      1964

காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன் 

மகாகவி காளிதாஸ்           1966         
 
கேளு பாப்பா கேளு பாப்பா கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா

உயிர் மேல் ஆசை              1967

பேபி   , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

22.09.2023

S வரலட்சுமி அவர்கள் நினைவு நாள்         [1927 - 2009]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 DABwOCK                                      
1948ல இவர் நடிச்ச ஒரு தெலுங்கு படத்தில  

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 DOXxEHq                          , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 RpIVryK

தமிழ், தெலுங்கு மொழி படங்கள்ல பழம்பெரும் நடிகை & பாடகி. ஆந்த்ரால பிறந்தார். 9 வயசில தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 1938ல சேவாசதனம் தமிழ் முதல் படத்தில MS சுப்புலட்சுமி அம்மாவின் சின்ன வயசு தோழியா நடிச்சார்.

இவர் நடிச்ச எல்லா படங்கள்லயும்  சொந்த குரல்ல பாடி, பேசி நடிச்சார். தயாரிப்பாளர் AL ஸ்ரீனிவாசன் இவரோட கணவர். கல்யாணத்துக்கப்புறமும் வரலட்சுமி நடிச்சார். 

இவர் நடிச்ச தமிழ் படங்கள்ல நல்ல வரவேற்பு கொடுத்த படங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், நீதிக்குத் தலைவணங்கு, சவாலே சமாளி, பூவா தலையா, குணா போன்ற சில படங்கள். 

விருதுகள் :
கலைமாமணி விருது, கலைவித்தகர் விருது, கவிஞர் கண்ணதாசன் விருது 2004, சிவாஜி கணேசன் நினைவு விருது 2007

சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ 

கவரிமான்             1979

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் 

நீதிக்குத் தலைவணங்கு      1976

கவிதையில் எழுதிய காவிய தலைவி கலையில் நிலையானாள் 

காவிய தலைவி             1970


பேபி      சூப்பருங்க   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sat Oct 07, 2023 4:02 pm

07.10.2023

A ஜெகன்நாதன் அவர்கள் நினைவு நாள்       [1935 - 2012]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Ex9pCe5                   , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 NXzedfk

டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். ஆரம்பத்தில தினத்தந்தி ந்யூஸ்பேப்பர்ல உதவி ஆசிரியராக வேல செஞ்சார். அப்புறமா சினிமா துறைல 15 வருஷமா  அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். ப நீலகண்டன்கிட்ட உதவியாளராக வேல செஞ்சார். அதுல இருந்து தனக்கு சுக்கிர திசை அடிச்சதா ஜெகன்நாதன் சொன்னார். டைரக்டரான முதல் படம் 1973ல மணிப்பயல். நடிகர் திலகம், புரட்சி நடிகர், ஜெய்சங்கர், கமல், ரஜினி, விஜயகாந்த் நடிச்ச பல வெற்றி படங்களை  டைரக்ட்டினார். TV சீரியல்களையும் டைரக்ட்டினார். 

தயாரிப்பாளர் RM வீரப்பன் ஜெகன்நாதனை இதயக்கனி படத்தின் மூலமா MGRட்ட டைரக்ட்டரா  சேத்துவிட்டார். நடிகர் திலகம் நடிச்ச வெள்ளை ரோஜா படத்தில  கவிஞர் முத்துலிங்கம் எழுதிய "சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்" பாட்டு ஜெகந்நாதனுக்கு பிடிச்ச பாட்டு. ஜானகி & SPB பாடியது. ரஜினி டாப் ஹீரோவான படங்கள்ல ஒண்ணு மூன்று முகம். ஜெகன்நாதன் ரஜினிய டைரக்ட்டின முதல் படம். 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த டைரக்ட்டர் - வெள்ளை ரோஜா 1983

நன்றி  :
விக்கி, antrukandamugam, dinamani   


நான் உள்ளே இருந்து வெளியே வந்து உலகம் தெரிந்ததடா 

மணிப்பயல்           1973

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி 
இதயக்கனி            1975

சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் 

வெள்ளை ரோஜா        1983

கூகூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ  இந்த குயில் எந்த ஊர் குயில் 

காதல் பரிசு            1987

ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் 

நந்தா என் நிலா            1977 


பேபி    மீண்டும் சந்திப்போம்  மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Tue Oct 31, 2023 7:01 pm

31.10.2023

ML வசந்தகுமாரி அவர்கள் நினைவு நாள்       [1928 - 1990] 

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 GcIRegH        , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 NjHq5K5

மெட்றாஸ் லலிதாங்கி வசந்தகுமாரி. கர்னாடக இசை பாடகி, பின்னணி பாடகி. ரசிகர்கள் செல்லமா இவரை  MLVனு அன்பா சொல்வாங்க. 'ராகங்களின் அரசி'னு இவருக்கு பேர் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தில பாடினார். நடிகை ஸ்ரீவித்யா இவரோட மகள்.  

அம்மா, அப்பா ரெண்டு பேருமே இசை கலைஞர்கள். டாக்ட்டராக வேண்டியவர். அப்டி ஒரு லட்சியமே இருந்துச்சு வசந்தகுமாரிக்கு. கர்னாடக  இசை பாடகர் GN பாலசுப்ரமணியன்கிட்ட 10 வருஷம் பயிற்சி எடுத்து பாடகி ஆகிட்டார். ரெண்டாம் உலக போர் வந்தப்போ இவர் படிப்புக்கு ஒரு  ப்ரேக் வந்ததும் இவர் இசை பக்கம் போக காரணமாயிருந்துச்சு. தனித்துவமான குரல், கர்நாடக ம்யூஸிக், சினிமா ம்யூஸிக் இது எல்லாத்துலயும் கொடி கட்டி பறந்த பாடகிகள்ல இவரும் ஒருத்தர். இவர் சுதா ரகுநாதன் போன்ற சில தலை சிறந்த பாடகிகளை  உருவாக்கியவர். அவங்க கர்னாடக  ம்யூஸிக்ல  கலக்குறதுக்கு இவர்தான் காரணம். கர்னாடக இசையை சினிமா மூலமா ஜனங்களிடத்தில சேக்க முடியும்னு நிரூபிச்சு காட்டியவர்.  

MS சுப்புலட்சுமி & பட்டம்மாள் வசந்தகுமாரியின் காலத்துல இருந்தவங்க. அவங்க காலத்தில இந்த மூணு பேரும் சங்கீதத்தின் மும்மணிகள்னு சொன்னாங்க. எட்டு வயசிலிருந்தே வசந்தகுமாரி அம்மாகூட கச்சேரில பாடினாங்க.  ரேடியோல சின்ன பிள்ளைங்களுக்கான  நிகழ்ச்சியில பாடினார். 12 வயசில தனியா பாட ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச வருஷத்திலேயே தனக்குனு தனியா முக்கிய இடத்தை புடிச்சுட்டார். ஏராளமா ரசிகர் கூட்டம் சேந்துச்சு. எல்லாமே அம்மாட்டயிருந்து  கத்துக்கிட்டதுதான். 

1948ல சினிமால பாட ஆரம்பிச்சார். தமிழ்ல பாடிய முதல் படம் 1948ல கிருஷ்ண பக்தி. இவரோட கற்பனை வள திறமைய பாத்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டாங்க. பாரம்பரிய இசையை புதிய பாணீல கொடுப்பதுல  வல்லவராயிருந்தார். சரியான நேரத்துக்கு கச்சேரிக்கு வருவது இவர் பழக்கமாயிருந்துச்சு. ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதனுக்கு வசந்தகுமாரியின் குரல் ரொம்ப பிடிக்கும். அதனால அவர் ம்யூஸிக் போட்ட படங்கள்ல வசந்தகுமாரியை பாடவச்சார். 

வசந்தகுமாரி 1951ல மணமகள் படத்தில பாடிய எல்லாம் இன்பமயம் & சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாட்டு மூலமா இவரோட குரலின் தனித்தன்மை உலகமறிய ப்ரபலமானார்.
 
ராணுவ வீரர்களின் நலவாழ்வு நிதிக்காக பல கச்சேரிகளை சம்பளம் வாங்காமலேயே செஞ்சார். 1964ல சீன ஆக்கிரமிப்பின்போது, தன்னோட எல்லா நகைகளையும் நாட்டு நலனுக்காக கொடுத்தார். இது தவிர ஏழை மாணவர்களின் படிப்பு, ஏழைங்களின் கல்யாணம் இதுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில உதவி செஞ்சார். 
1988ல சாகுந்தலம் நாட்டிய நாடகத்தை தன் சொந்த முயற்சியால் சென்னை ம்யூஸிக் அக்கடமீல  நடத்தினார். சென்னை தமிழிசை பள்ளியில, இன்னும் வேற கல்லூரிகள்ல கௌரவ பேராசிரியராக வேல செஞ்சார். 

விருதுகள்
பத்மபூஷண் 1967
சங்கீத நாடக அகடாமிக் விருது 1970
கௌரவ டாக்ட்டர் பட்டம் 1976 - மைசூர் பல்கலைக்கழகம் 
சங்கீத கலாநிதி 1977 - ம்யூஸிக் அகாடமி, சென்னை 
இசை பேரறிஞர் 1977 - தமிழ் இசை சங்கம், சென்னை 
சங்கீத கலாசிகாமணி 1987 - தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி

நன்றி  : விக்கி, nativenews, dinamalar

ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ 
மன்னாதி மன்னன்                       1960


பேபி      சூப்பருங்க  மகிழ்ச்சி  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Tue Oct 31, 2023 7:07 pm

31.10.2023 

P லீலா அவர்கள் நினைவு நாள்           [1934 - 2005]     

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 E5DmYOQ         , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 AUFmIez

பின்னணி பாடகி. கேரளால பிறந்தார். கல்யாணம் செஞ்சுக்காமலே சகோதரி குடும்பம்கூட  வாழ்ந்தார். 

ம்யூஸிக் சொல்லி  கொடுக்க ஆரம்பிச்சவர் மணி பாகவதர் முதல் குரு. அப்புறமா ரெண்டு மூணு  இசை மேதைகள்கிட்ட லீலா இசை பயிற்சி எடுத்துகிட்டு இசை திறமையை வளத்துகிட்டார். 12 வயசில ஆந்திர மகிள சபாலகச்சேரி செஞ்சு பாராட்டையும், பரிசையும் வாங்கினார். அப்புறமா தென்னிந்தியா முழுக்க கச்சேரிகள்ல  பாடினார். 1948ல சினிமால பாட ஆரம்பிச்சார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இன்னும் வேற மொழி படங்கள்ல பாடினார். 

லீலாவின் கர்னாடக சங்கீத பாட்டுக்கள் சினிமாவை சங்கீத மேடையாக்குச்சு. கொஞ்சும் சலங்கை படத்தில "சிங்கார வேலனே தேவா" பாட்டை பாட ஜானகியை ரெகமெண்ட் செஞ்சவர் லீலாதான். இந்த பாட்டை பாட்றதுக்கு மொதல்ல லீலாவைத்தான்  கூப்ட்டாங்க. ஹை பிச்சுல  பாட்றது கஷ்ட்டம்னு சொல்லிட்டு, ஜானகியை பாட வைங்கன்னு லீலா சொல்லிட்டார். கலைச்செல்வி ஜெயலலிதா லீலாவின் பரம ரசிகை. 

நன்றி : விக்கி, vikatan, 

விருதுகள்    :
பத்மபூஷன் 2006, கலைமாமணி 1992, கேரள & தெலுங்கு மாநில விருதுகள் 

பட்டங்கள்
கானகோகிலா, ஞானமணி, கலாரத்தினம், கானவர்ஷினி, சங்கீத சரஸ்வதி இன்னும் சில பட்டங்கள். 

பார்த்தது போதாது பசி இதில் தீராது பக்கத்தில் ஒரு முறை வரலாமா 

திருநீலகண்டர்                        1972

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா 
நினைவை புரிந்துகொள்ள முடியுமா 

இரும்புத்திரை                  1960 

கன்னங்கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி அன்னநடை போட்டாளடி 
என் செல்லம்மா சொன்ன மொழி கேட்டாளடி 

சிவகங்கை சீமை                    1959


பேபி         அருமையிருக்கு  மகிழ்ச்சி  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

T.N.Balasubramanian, heezulia and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Fri Nov 10, 2023 2:30 pm

10.11.2023

09.11.2023 - PS வீரப்பா அவர்கள் நினைவு நாள்  [1911 - 1998]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 5y6zwPq

அநேகமா வில்லனா நடிச்ச நடிகர். சூப்பர் ஸ்ட்டார் வில்லன். சிரிப்பாலயே மிரட்டிய நடிகர். ஹா ஹா ஹா .............. அவரோட இந்த பயங்கர சிரிப்பு சத்தத்த மறக்க முடியுமா? ப்ரபலமான சிரிப்பு.  தயாரிப்பாளரும்கூட. PSV பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இவரோடது. தயாரிச்ச முதல் படம் 1958ல பிள்ளை கனியமுது. 
இவருக்கு தாத்தாதான் எல்லாமே. அவர்ட்டதான் வளந்தார், படிச்சார். படிக்கத்தான் ஆசப்பட்டார். ஆனா குடும்பம் பெருசு, வருமானம் கொறச்சல். அதனால படிக்க முடியாம போச்சு. சின்ன சின்ன வியாபாரம், வேற வேல செஞ்சார். அதுவும் சரியா வரல. 

பிறந்த ஊர் பொள்ளாச்சி கோயில் திருவிழா நாடகங்கள்ல நடிச்சார். நல்ல பேர் கெடச்சுது.  அப்டி ஒரு நாடகத்தில நடிச்சத பாத்து ரசிச்ச KB சுந்தராம்பாள் வீரப்பாவை  மனதார பாராட்டியதோடு விடாம, நல்ல எதிர்காலம் இருக்குனு சொல்லி சென்னைக்கு வந்து சினிமால நடிக்க சொன்னார். வீரப்பாவும் சென்னைக்கு வந்தார். சுந்தராம்பாள் சிபாரிசு லெட்டர் கொடுத்து டைரக்ட்டர் எல்லிஸ் டங்கனை போய் பாக்க சொன்னார். 1939ல சுந்தராம்பாள் நடிச்ச மணிமேகலை படத்தில வீரப்பா நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறமும் டங்கன் வீரப்பாவுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தார். வீரப்பா கொஞ்சம் கொஞ்சமா நடிப்புல வளந்தார். நல்ல ரோல், அதாவது கெட்ட கெட்ட கேரக்டர்கள்ல நடிச்சார். 

ஹா ஹா ஹா சிரிப்பு ஆரம்பிச்சது 1957ல சக்கரவர்த்தி திருமகள் படத்ல. அப்போ அந்த சிரிப்புக்கு ஒரு சமாச்சாரம். வீரப்பா வசனம் பேசும்போது மறந்துட்டார். அதனால ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு வசனம் பேசினார். டைரக்ட்டர் அதையே பிடிச்சுட்டார். அக்மார்க் சிரிப்பு. இந்த சிரிப்புக்கு அட்டகாசமான வரவேற்பு. அதுக்கப்புறம் நடிச்ச படங்கள்ல  அந்த சிரிப்பையே தன் பாணியா வச்சு சிரிச்சார். இவர் நடிச்ச சரித்திர படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்தவர் வீரப்பான்னு சொல்லலாம்.  
வீரப்பாவும், MGRஉம் நடிச்சு நல்ல நண்பர்களாயிட்டாங்க. தான் நடிச்ச படங்கள்ல வீரப்பாவை  வில்லனாக நடிக்க வைக்க MGR சொன்னார். MGRக்கு சமமான வில்லன் வீரப்பானு அப்போ திரை விமர்சகர்கள் எழுதினாங்க. வீரப்பாவுக்கு வாள் சண்டை சொல்லி கொடுத்தவரே MGRதான். ஷூட்டிங் ரெஸ்ட் நேரத்தில அவங்க ரெண்டு பேரும் இருந்த இடமே ஜாலியா இருந்துச்சு. 

வீரப்பா நடிச்ச படங்கள்ல ஹீரோ நடிப்பை விட வீரப்பா நடிப்பை வியந்து பேசும்படி நடிச்சவர் வீரப்பா. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்ல ஒரு நறுக் வசனம் பேசினாரே. ஞாபகம் இருக்கா? மேடைல "ஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே"னு வைஜயந்திமாலா ஜில்லென்று ஆடுவார். இங்க அத பாத்துட்டு இருந்த வீரப்பா "சபாஷ் சரீயான போட்டி"னு சூடா சொன்னாரே. சூப்பர்ல. இவரோட நடிப்பு பிடிச்சவங்கள்ல நடிகர் திலகமும் ஒருத்தர். "வீரப்பா, அந்த சிரிப்பை விட்றாதே. அதுதான் உன் அடையாளமா இருக்கு. நீ நடிக்கிற படங்கள்ல அந்த சிரிப்பு இருக்கணும்"னு சொல்லிட்டார்.    
     
நன்றி  : விக்கி, dinamani, kamadenu

சபாஷ் சரியான போட்டி 
வஞ்சிக்கோட்டை வாலிபன்               1958


பேபி         சூப்பருங்க  மகிழ்ச்சி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5851
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by T.N.Balasubramanian Fri Nov 10, 2023 4:52 pm

பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம் என்பதற்கு பதிலாக

சினிமா கலைஞர்களின் நினைவு தினங்கள் என

தலைப்பை மாற்றிவிடவா?

@heezulia


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

heezulia and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 3 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum