ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sat Jul 18, 2020 4:07 pm

First topic message reminder :

18.07.2020

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 9oCBmpqfSwqm10Fb9RrN+vaali, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 N6UHK4hHSA2ShD8LqypU+vaalee
இன்னிக்கி பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம்.

வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக்.  படித்து ரசிங்க.

படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ்.  படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.  

அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல?  அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.

MGR : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு.  ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போடா போறதில்ல.

வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.


எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன்.  உங்க பேர் வராது.

வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?

எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!

வாலி : எப்டி முடியும்?  சொல்லுங்க பார்ப்போம்.  இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'  இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.  'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்' னுன்னா போஸ்ட்டர் ஓட்டுவீங்க?

எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.  நல்லாயிருக்குல்ல?


Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by ayyasamy ram Wed Aug 09, 2023 5:27 am

நடிகர் SV ராமதாஸ்
-
எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா,
ரிக்‌ஷாக்காரன், குடியிருந்த கோயில், நம்நாடு, நாளை நமதே
போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சிவாஜிகணேசனுடன் 20 படங்களில் நடித்துள்ளார். இவர்
எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும் சில மனநிறைவான
படங்கள் உண்டு.

அதிலொன்றுதான் டி.ராமாநாயுடு தயாரித்து பி.மாதவன்
இயக்கிய “குழந்தை உள்ளம்”.கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
என்பதுதான் கதையின் மூலக்கரு.

பேபி ராணி அனாதை குழந்தையாக நடிக்க மனோகர்,
மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ் மூவரும் கொள்ளைக்காரர்களாக
நடித்தனர். கொடூர குணங்கொண்ட 3 கொள்ளைக்காரர்களும்
அந்த குழந்தையின் அன்புக்கு எப்படி கட்டுப்படுகிறார்கள்
என்கிற அந்தக் கதையில் இவர் ரொம்பவே அனுபவித்து
நடித்திருந்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.
-
நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Wed Aug 09, 2023 11:54 am

09.08.2023

மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ் மூணு பேரும் சேந்து கொள்ளைக்காரங்களா நடிச்சது குழந்தை உள்ளம் படத்தில இல்ல அய்யா சார். அந்த படம் 1968ல குழந்தைக்காக படம். அன்று கண்ட முகம் தளத்துல தப்பா போட்டிருக்கு. 

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Wed Aug 09, 2023 5:31 pm

09.08.2023

பஞ்சு அருணாசலம் அவர்கள் நினைவு நாள்      [1941 - 2016] 
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 RfqnM9A

இவரோட பிறந்த நாள் கட்டுரை ஜூன் 18ஆம் தேதில போட்டிருக்கேன். அதனால அவரோட ரெண்டு பாட்டு மட்டும் போட்றேன்.  

தாயாக மாறவா தாலாட்டு பாடவா தூங்காத கண்களையே தூங்க வைக்கவா

ஏழை பங்காளன்  1963 \ KV மகாதேவன் / பஞ்சு அருணாசலம்     

தம்பி பொண்டாட்டி - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - பஞ்சு அருணாசலம்
என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ஒரு மின்னல் போலே என் முன் வந்த தேனே - சித்ரா & மனோ

தம்பி பொண்டாட்டி 1992 / இளையராஜா / கங்கை அமரன்    
 

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Thu Aug 10, 2023 12:21 am

10.08.2023

09.08.2023 - 
நடிகை ஜோதிலட்சுமி அவர்கள் நினைவு நாள்       [1948 - 2016]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 HIktO7s

தமிழ, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 1963ல வானம்பாடி படத்தில "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாட்ல முதல் முதலா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். கவர்ச்சியா  சினிமா வாழ்க்கைய ஆரம்பிச்சார். ஹீரோயினாகணும்னு நெனச்சு நடிக்க வந்தார். ஆனாஅநேகமா இவர் படங்கள்ல  ஒண்ரெண்டு டான்ஸுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போனார். அந்த சான்ஸை சரீய்யா  பயன்படுத்திக்கிட்டார். தன்னோட டான்ஸ் மூலமா ரசிகர்களை கவர்ந்த கவர்ச்சி நடிகை. MGR படங்கள்ல நடிச்சு, ஜனங்களிடையே ப்ரபலமடைய ஆரம்பிச்சார். நடிச்ச வரைக்கும் கவர்ச்சியாகவே நடிச்சு பேர் வாங்கினார். சில்க் ஸ்மிதா மாதிரி ஜோதிலட்சுமியும் பெண்களுக்கு பிடிச்ச நடிகையா இருந்தார். டான்ஸ் மாஸ்ட்டராவும் இருந்தார். 

1972கப்புறம் தமிழ் சினிமால ஜோதிலட்சுமியை காணோம். 1982ல மறுபடியும் வந்தார். ஆனா அப்பப்ப வந்து நடிச்சார். சினிமால சான்ஸ் கொறஞ்சாலும் நடிப்பை விடல. தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்லயும் நடிச்சார். 

சினிமால இவரே மாதிரிதான் இவரோட தங்கச்சி ஜெயமாலினி. மகள் ஜோதிமீனா நடிகை. பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி, டைரக்ட்டர் ராமண்ணா உறவினர். விட்டலாச்சார்யார்  படங்கள்ல அநேகமா ஜோதிலட்சுமியும், ஜெயமாலினியும் நடிச்சாங்க. ராமநாராயணன் தன் படங்கள்ல ஜோதிலட்சுமியை வில்லியா நடிக்க வச்சார்.


ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் ஸலாம் சார் 

தேடி வந்த மாப்பிள்ளை  1970 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்   
   
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் - LR ஈஸ்வரி

வானம்பாடி  1963 / KV மகாதேவன் \ கண்ணதாசன்     

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றி திருமகன் நீ - சுசீலா & ஜானகி

அடிமைப் பெண்  1969 / KV மகாதேவன் / அவினாசிமணி     

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒண்ணு தரியா தரியா - கோவை கமலா

சேது 1999 / இளையராஜா \ பொன்னடியான்    
 

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sun Aug 13, 2023 1:00 am

13.08.2023

12.08.2023   AV மெய்யப்பன் செட்டியார் அவர்கள் நினைவு நாள் 
[28.07.1907 - 12.08.1979]


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 3UCZbut          , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Q1kKqkK

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 9WQpG5S

ஆவிச்சி மெய்யப்ப செட்டியார். தயாரிப்பாளர், டைரக்ட்டர், சமூக தொண்டர். AVM ப்ரொடக் ஷன் தயாரிப்பு நிறுவனத்தை வடபழனியில ஆரம்பிச்சு நடத்தினார். தமிழ் சினிமாவின் முன்னோடி. தென்னிந்திய சினிமாவின் மும்மூர்த்திகள்ல ஒருத்தர். அடுத்த ரெண்டு பேர் SS வாசன் & LV ப்ரசாத். மெய்யப்பரின் அப்பா AV & Sonsனு டிபாட்மென்ட் ஸ்டோர் வச்சு கிராமபோன் ரெக்காட் வித்தார். இதுல நல்ல லாபம் கெடச்சத மெய்யப்பர் பாத்தார். அதனால தன் நண்பன்கூட சென்னைக்கு வந்து 1932ல சரஸ்வதி ஸ்டோர்ஸ்னு கட வச்சு கிராமபோன் ரெக்காடுகளை வித்ததோடு மட்டுமில்லாம புராண கதை ரெக்காடுகளை தயாரிக்கவும் செஞ்சார். 

பேசும் படங்கள் வர ஆரம்பிச்ச பிறகு, சரஸ்வதி சவுண்டு ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பிச்சார். இதன் மூலம் தயாரிச்ச 2 படங்கள் புஸ்வானமா போச்சு. அதனால ஒரு சினிமா தியேட்டர் சொந்தாக்காரர்கூட சேந்து பிரகதி பிக்ச்சர்ஸ்னு நிறுவனத்தை ஆரம்பிச்சார். அந்த சமயத்தில பல வட இந்திய டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள்கூட கனெக் ஷன் வச்சிருந்தார்.  இதன் மூலமா 1937ல ஓர் மராத்திய படத்தை நந்தகுமார்னு பேர் வச்சு தமிழ்ல தயாரிச்சார். பின்னணி பாட்டு முறையை கொண்டு வந்த முதல் படம். 1951ல இருந்து ஹிந்தி படங்களை  தயாரிக்க ஆரம்பிச்சார். 

1940ல சொந்தமா பிரகதி ஸ்டூடியோஸ் ஆரம்பிச்சார் மெய்யப்பர். இதன் மூலம் 1941ல எடுத்த சபாபதி போன்ற காமெடி படங்கள் அட்டகாசமா ஓடுச்சு. 1943ல ஹரிச்சந்திரா கன்னட படத்தை தயாரிச்சு, அதே படத்த 1944ல அதே பேர்ல தமிழ்ல தயாரிச்சார். இந்த படம் இந்தியாவிலேயே ஒரு  மொழீல இருந்து இன்னொரு மொழிக்கு டப் செய்யப்பட்ட முதல் படம். AVMமின் டைரக் ஷன்ல  ஜெயலலிதா நடிச்சது ஒரே ஒரு தெலுங்கு படம். AVM ப்ரொடக் ஷன்ல MGR நடிச்ச ஒரே படம் அன்பே வா 1966. 

தொடர்ந்து  ஏவிஎம் படங்கள் வெற்றியால, 1945ல AVM ப்ரொடக் ஷன்ஸ் புது நிறுவனத்தை  சென்னை சாந்தோம்ல ஆரம்பிச்சார்.  கோடம்பாக்கத்தில இதை ஆரம்பிக்கலாம்னுதான்  நெனைச்சார். அங்க மின்வசதி சரியாயில்லாததால சாந்தோம்ல ஆரம்பிச்சார். இது தயாரிச்ச முதல் படம் நாம் இருவர் 1947. 1951ல ஹிந்தி படங்களுக்கு போனார். 1949ல தயாரிச்ச வாழ்க்கை படத்த 1951ல ஹிந்தியில் தயாரிச்சார். வைஜயந்திமாலாவின் முதல் படம். தமிழ் சினிமால 50 வருஷமா மூணு தலைமுறையினரால  ஓஹோன்னு நடத்தப்பட்ட ஒரே  தயாரிப்பு நிறுவனம் AVM நிறுவனம்தான். மெய்யப்பரின் உடம்பு சரியில்லாம போனதால, பட தயாரிப்பு, டைரக் ஷன் கொறஞ்சுது. அப்புறமா சமூக தொண்டு, வியாபாரங்களை கவனிக்க ஆரம்பிச்சார். 

சினிமாவை தவிர AVM அறக்கட்டளை அமைப்பை ஆரம்பிச்சு நல்லதை நிறைய செஞ்சார் மெய்யப்பர். முதியோர் இல்லம், சமுதாய நல கூடங்கள் கட்டவும் இந்த அமைப்பு நிலம் கொடுத்துச்சு. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமானது AVM ராஜேஸ்வரி கல்யாண மண்டபம். இங்க மெய்யப்பரின் ஒவ்வொரு பிறந்த நாள் ஜூலை 28ஆம்  தேதீல  கம்பராமாயண ஆராய்ச்சி சொற்பொழிவு, AVM அறக்கட்டளை நினைவு சொற்பொழிவு என்கிற பேர்ல நடக்கும். சென்னைல பல இடங்கள்ல ஸ்கூல் ஆரம்பிச்சு ஏழை மாணவர்கள் படிச்சாங்க. இதே மாதிரி ஜனங்களுக்கு நெறைய நல்லது செஞ்சார் மெய்யப்பர். 

தமிழ் சினிமால முதல் பின்னணி பாடகரை இன்ட்ரோ செஞ்சது, முதல் மொழி மாற்ற படத்தை தயாரிச்சவர்னு இவருக்கு பெருமை இருக்கு. தமிழ் நாட்டின் முதல்வர்கள் கூட சினிமால இருந்து  வேல செஞ்ச பெருமையும் இருக்கு. 2006ல மெய்யப்பரின் பேர்ல இந்திய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு அவரை பெருமைப்படுத்துச்சு. 

நாம் இருவர் 1947 [டைரக் ஷன் & தயாரிப்பு] - அறிஞர் அண்ணா கதை பராசக்தி 1952 [AVM ஸ்டூடியோல தயாரிக்கப்பட்டுச்சு] - கலைஞர் கருணாநிதி திரைக்கதை & வசனம் அன்பே வா 1966 [தயாரிப்பு] - புரட்சி தலைவர் MGR நடிச்சார். மேஜர் சந்திரகாந்த் 1966 [தயாரிப்பு] - கலைச்செல்வி ஜெயலலிதா நடிச்சார். 

சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் இது எல்லாத்தையும் நடத்தி சாதனை செஞ்சவர்.

இவரை பற்றிய தகவல்கள் இன்னும் நிறைய இருக்கு. 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருது - ராமு 1966 - சிறந்த படம் 
 

வாழ்க்கை - டைரக் ஷன் - மெய்யப்பர்
  எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே 

வாழ்க்கை  1949 \ R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம்     

அன்பே வா - தயாரிப்பு - மெய்யப்பர்
நான் பார்த்ததில் அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

அன்பே வா 1966  / MS விஸ்வநாதன் / வாலி  

குழந்தையும் தெய்வமும் - தயாரிப்பு - மெய்யப்பர்
என்ன வேகம் நில்லு பாமா என்ன கோபம் சொல்லலாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா

குழந்தையும் தெய்வமும்  1965 / MS விஸ்வநாதன் \ வாலி  


பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Tue Aug 15, 2023 7:40 pm

15.08.2023

14.08.2023   - நா முத்துக்குமார் நினைவு நாள்    [1975 - 2016] 

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 HKrI1Xw

பாடலாசிரியர் & கவிஞர். ஜூலை 12ஆம் தேதி இவர் பிறந்த நாளன்னிக்கி இவரை  பற்றிய  கட்டுரையும், 5 பாட்டும் அனுப்பியிருக்கேன். இப்போ இவர் எழுதிய ரெண்டு பாட்டு மட்டும் அனுப்புறேன்.    

ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கயில் வேதன  தாங்கலயே ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லிய

ஊட்டி  1999 / தேவா \ முத்துக்குமார்   

தாவணியே என்ன மயக்குறியே ராப்பகலா வந்து உலுக்குரியே மனுசுல கரகம்  ஆடுவதேன்டி வாரி அணைச்சா வழுக்குறியே 

வானத்தைப்போல    2000 / SA ராஜ்குமார் / நா முத்துக்குமார்
 

பேபி \ மகிழ்ச்சி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sun Aug 27, 2023 11:40 pm

27.08.2023

26.08.2023   SS வாசன் அவர்கள் நினைவு நாள்      [1904 - 1969] 

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 7YY4nKP                         , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 GAQpukc
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 5gv0lQF

சுப்பிரமணியன் சீனிவாசன். தயாரிப்பாளர், டைரக்ட்டர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், தொழிலதிபர் & விளம்பரதாரர். உழைப்பு, நுண்ணறிவு, எளிமை, விடாமுயற்சி,  நுணுக்கமாக ப்ளான் போடுதல் இதிலெல்லாம் சிறந்தவர். பட்டப்படிப்பை பாதியில நிறுத்திட்டு விளம்பர வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டார். சின்ன வயசிலேயே எழுதுறதுல ஆர்வம் இருந்துச்சு. சென்னைக்கு வந்ததும் வாழ வகை தேடியதுக்கு நம்பியது அந்த எழுத்தும் ஒண்ணு. 

1927 டிசம்பர்ல ஆனந்த விகடன் இதழை நடித்திட்டு இருந்தவர், அதன் வெளியீட்டை நிறுத்திட்டார். 1928ல வாசன் அதை விலைக்கு வாங்கினார். ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பிச்சார். இன்னிக்கி வரைக்கும் அது வெற்றிகரமா வந்துட்டு இருக்கு. மக்கள் விரும்பி படிக்கிறாங்க. *தமிழ் வார இதழ்களில் நம்பர் 1*. ஜெமினி தயாரிப்பு நிறுவனம் இவருக்கு  சொந்தமானது. 1940ல வாங்கினார். 

ரெட்டைக்குழல் ஊதும் குட்டி பையன்களின் ஜெமினி சின்னம், முகம் நிறையச் சிரிச்சுக்கிட்டு உச்சிக் குடுமி வச்சுக்கிட்டு இருக்கிற விகடன் சின்னம் இந்தியால மட்டுமிலாம, உலகத்தில  வாழ்ற தமிழர்களின் நடூலயும் ப்ரபலமாக்கி வச்ச புகழ்பெற்ற தொழில் மேதை எஸ். எஸ். வாசன். 

இவர் எழுதிய கதைதான் 1936ல சதிலீலாவதி படமாக ரிலீஸ் ஆச்சு. சினிமால வாசனின் முதல் பிரவேசம். இவர் படங்கள்ல ப்ரம்ம்ம்மாண்டம், புதுமையான நுட்பங்கள் கொண்டு வந்ததால  அவருக்கு நல்ல பேர். 1948ல இவர் தயாரிச்சு, டைரக்ட்டின சந்திரலேகா படத்தில ட்ரம் டான்ஸின் ப்ரம்மாண்டத்தை மறக்க முடியுமா? 1943ல இருந்து 1948வரை 5 வருஷமா தயாரிக்கப்பட்ட படமாச்சே. சினிமாவை பற்றி விமர்சனம் எழுதும் ராண்டார்கை அவரை அமெரிக்க சினிமா டைரக்டர் ஒருத்தருக்கு சமமானவர்னு சொன்னார். 2004ல இவர் பேர்ல ஸ்டாம்ப் இந்திய அரசாங்கம் வெளியிட்டுச்சு. 

வாசன் அவர்களை பற்றி இவங்கல்லாம் இப்டி சொல்லியிருக்காங்க :

பெரியார் : பத்திரிகைலயும் சரி, பொது வாழ்க்கைலயும் சரி, அவரை பற்றி ஒரு குற்றமும் சொல்ல முடியாதபடி பெரிய மனுஷனா வாழ்ந்தார். ரொம்ப பெரிய மனுஷன். 

கொத்தமங்கலம் சுப்பு : வேலேன்னு வந்துட்டா சொந்தம், சுகத்தைல்லாம் சுத்தமா மறந்துருவார். பல ராத்திரி ஷூட்டிங்க்ல வெறும் ரொட்டி மட்டும் தின்னுட்டு ஷூட்டிங் எடுத்தார். அதுலயும் சந்திரலேகா படம் எடுத்தபோது அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்ல. 

ஏ வி மெய்யப்பன் : 1945ல நா ரிலீஸ் செஞ்ச வள்ளி படத்த ரொம்ப கஷ்டங்களுக்கிடையே  எடுத்தேன். தியேட்டர்ல போய் பாத்து என்னை பாராட்டினார். அதுல நாம்பட்ட கஷ்டங்களை சொன்னேன். "மெய்யப்பன், நாம எப்படிப்பட்ட படம், எந்த சூழ்நிலையில எடுக்கிறோம்ங்கிறது முக்கியம் இல்ல. ஜனங்களுக்கு அதுல அக்கற இல்ல. நாம என்ன கொடுக்கிறோம்னுதான்  ஜனங்க பாப்பாங்க"னு வாசன் சொன்னார். எனக்கு வாசன் காட்டிய வழி. என்னோட நாம் இருவர் படத்த பாத்துட்டு ப்ரமித்து போனதாக எனக்கு லெட்டர்ல  சொன்னார். நல்லது எங்க இருந்தாலும் தானா முன் வந்து பாராட்டுற உயர்ந்த குணம் அவருக்கு. 

பழம்பெரும் ப்ரபல ஹிந்தி நடிகர் திலீப்குமார் : வாசன் தயாரிச்சு, டைரக்ட்டின 'இன்ஸானியத்' படத்தில நடிச்சேன். அப்போ ஒரு சந்தர்ப்பத்துல "என் கருத்துடன் நீங்க ஒத்துப்போறீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கூ"னு சொன்னார். அன்னிக்கி ஆரம்பிச்ச எங்க கருத்து ஒற்றுமை விலகவே இல்ல. தொழிலுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர மாதிரி பட தயாரிப்பாளரை நா இதுவரை பாத்ததே இல்ல. 

வாலி : வாசன் கை பட்டாலே தவிடு தங்கமாகும். தவளை சிங்கமாகும். அவர்தான் வெற்றிகரமா தமிழ் ஏடு நடத்தினார். வெள்ளை மொழியை ஓரளவு நாடு கடத்தினார். இந்த விகடன் எனும் வார ஏடு வாசன் வளர்த்தெடுத்த வளர்ப்பு சன் . வளர்ப்பு சன் என்றாலே வளர்ச்சிக்குக் கேட்பானேன்... ஜே ஜேதான் !
எந்தப் புதுமையை எவர் சொன்னாலும் எஸ் எஸ் என்று ஏற்பவர் எஸ்.எஸ்.வாசன். அவர்தான் தமிழ் சினிமாவின் தந்தை. அவரால்தான் அகலமானது தமிழ் சினிமாவின் சந்தை. பெரிய நடிகர்களுக்கே பெருமையான விஷயம் வாசன் படத்தில் வேடம் தாங்கல். எத்துணையோ எழுத்தாளர்களுக்கு வாசன்தானே வேடந்தாங்கல் ! அந்த முக்காக் கைச் சொக்கா மனிதர் முகஸ்துதிக்குச் சொக்கா மனிதர். சின்ன சிந்தனைகளில் சிக்கா மனிதர். வாய்மையைப் பேச வாய் திக்கா மனிதர். மொத்தத்தில் ஒரு பக்கா மனிதர் !

இன்னும் பலர் பலவிதமாவாசன் அவர்களை  ஓஹோஹோனு புகழ்ந்து தள்ளினாங்க. இன்னும் இவரை பற்றிய விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு. 

விருதுகள்
பத்மபூஷண் 1969

நன்றி  : விக்கி, vikatan, valar,


நாட்டிய குதிர நாட்டிய குதிர நாலாயிரம் பொன் வாங்குங்க

சந்திரலேகா    1948  [தயாரிப்பு & டைரக் ஷன்]   

எத்தனை கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன்

வஞ்சிக்கோட்டை வாலிபன்    1958  [தயாரிப்பு & டைரக் ஷன்]  

ஆசை கொண்ட நெஞ்சிரெண்டு பேசுகின்றபோது ஆடாத சிலைகளும் ஆடாதோ 

இரும்புத்திரை    1960     [தயாரிப்பு & டைரக் ஷன்]
 
 
பேபி  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Sun Aug 27, 2023 11:49 pm

27.08.2023

பாட்டு போடும்போது ப்ரபல பாட்டைத்தான் போடணுமா இல்ல, எந்த பாட்டையும் போடலாமா. நா இப்டி பாட்டை தேடும்போது எனக்கு தெரியாத நெறைய பாட்டு பாக்குறேன். அதை எல்லாரும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்  கேக்குறேன். 

பேபி  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Wed Aug 30, 2023 12:53 pm

30.08.2023 

29.08.2023     
MK ராதா அவர்கள் நினைவு நாள்      [1910 - 1985] 


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 T1pWsn9

தமிழ் நாடகம் & சினிமா நடிகர். ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர். அந்த காலத்தின் சூப்பர் ஸ்டார். 1949ல அபூர்வ சகோதரர்கள்ல ரெட்டை ரோல்ல நடிச்சு ப்ரபலமானார். இதுல ஒரு விஷயம் இருக்கு. இந்த படத்தில விஜயன், விக்ரம்னு ரெண்டு வேஷத்தில நடிச்சார்ல. இதுல விஜயன் கேரக்ட்டர் பேரை தன் சின்ன பையனுக்கு வச்சுட்டார். 

அப்பா நடத்தி வந்த நாடக குழூல MGR கூட நடிச்சார் ராதா. 7 வயசிலேயே ராதா மேடைல நடிக்க ஆரம்பிச்சுட்டார். அப்பா நடிக்க கத்துகுடுத்தார். 

நடிச்ச முதல் படம்  ஹீரோவா 1936ல சதிலீலாவதி. இந்த படத்தின் ஹீரோயின் ஞானாம்பாளை  ராதா கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 1948ல சந்திரலேகா தமிழ்,  ஹிந்தி படங்கள்ல ராதாதான் ஹீரோ. நாலஞ்சு படங்கள்ல சிவாஜியின் அப்பாவா நடிச்சார். 1945ல நடிச்ச கண்ணம்மா என் காதலி படத்தில ராதாவுக்கு ஜோடி யார் தெரீமோ? பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி சுந்தரிபாய். ஆச்சரியமாயிருக்குல்ல? 

1951ல சம்சாரம் படம் வசூலை அள்ளி கொடுத்துச்சு. இந்த படத்தில "அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே"னு கொத்தமங்கலம் சுப்புவின் ஒரு பாட்டு. பிச்சக்காரங்களுக்கு இந்த பாட்டு வரப்ரசாதமா போச்சு. இந்த பாட்டு பாடியே பிச்சை எடுத்து அவங்களுக்கும் நல்ல வசூல். ராதா மேல MGRக்கு தனி மரியாதை உண்டு. ராதா நடிச்ச அபூர்வ சகோதரர்கள் படத்தைதான் MGR 1971ல நீரும் நெருப்பும் படத்தை எடுத்து ரெட்டை வேஷத்தில நடிக்கவும் செஞ்சார். 

ராதா வீட்டுக்கு சிவாஜி, MGR, நம்பியார் போல பெரிய பெரிய நடிகர்கள் போனாங்க. ராதாவின் பிள்ளைங்க அவங்கள சித்தப்பா, மாமான்னு கூப்பிட்ற அளவுக்கு குடும்ப நட்போடு ராதா பழகினார். அந்த காலத்து இந்த நடிகர்கள்லாம் உடல் நலத்தில கண்ணும் கருத்துமா இருந்தாங்க. ராதா காலேல எந்திருச்சு கடற்கரையிலே குதிரை சவ்வாரி செஞ்சார். அதுக்கப்புறம் ஒரு அணி நேரம் வாள்சண்டை ப்ராக்டீஸ் செஞ்சார். அதனாலதான் முதல் முதலா ரெண்டு வாள் வச்சு படங்கள்ல சண்டை போட்டு நடிக்க முடிஞ்சுது. நெல் மூட்டை தூக்கி நடிக்கணும்னா, பஞ்சை நெரப்பிரலாம்னு டைரக்ட்டர் சொன்னா, இல்ல இல்ல பஞ்சு மூட்டைல்லாம் வேணாம், நெல் மூட்டையை தூக்கினாத்தான் ஸீன் தத்ரூபமா இருக்கும்னு சொல்லி, அப்டியே நடிச்சார். 

ஒரு தடவ மேஜர் சுந்தரராஜன் குழுவோடு வெளிநாட்டுக்கு கலை நிகழ்ச்சி நடத்த ராதாவின் மகன் விஜயன் போனார். அப்போ அவர் ராதாவுக்கு நவாப் ராதான்னு பேர் எப்டி வந்துச்சுனு கேட்டார். அதுக்கு விஜயன் சொன்னார். நாடகங்கள்ல நடிச்சபோது, ஒரு தடவை ராதா நவாப் ரோல்ல நடிச்சார். நாடக கடேசில, உயரமான சிம்மாசனத்தில இருந்து படீல உருண்டு விழுற ஸீன். தயங்காம விழுந்து நடிச்சார். அதுவும் ஓவ்வொரு நாளும் வேற வேற மாதிரி விழுந்து நடிச்சார். அதனால அவருக்கு நவாப் ராதான்னு பட்டபேர் சேந்துக்கிச்சு. 

இதய நோய் காரணமாக ஆஸ்பத்திரியில இருந்த MK ராதாவை MR ராதா பாக்க போனார். அப்போ "அடப்பாவி, எல்லா கெட்ட பழக்கமுள்ள நா நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ இப்டி வந்து படுத்திட்டியே"னு நடிகவேள் சொன்னார்.  

விருதுகள்
கலைமாமணி 1973
2004ல ராதா உருவம் போட்ட சிறப்பு கவர் அவர் நினைவாக இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுச்சு. 
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 TJcfOA3

சென்னை தேனாம்பேட்டை பக்கத்துல உள்ள ஒரு பகுதிக்கு MK ராதா நகர்னு தமிழ்நாடு அரசு பேர் வச்சுது. 

நன்றி  : விக்கி, hindutamil, thamizhstars, rprajanayahem


இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா பொருள் இருந்தால் வந்து கூடும் 

பாசவலை    1956   


பேபி  சிரி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by heezulia Mon Sep 04, 2023 9:47 pm

04.09.2023  

03.09.2023         ப நீலகண்டன் அவர்கள் நினைவு நாள்
   [1916 - 1992]  


, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 LPJqfOQ                           , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 W0JjF5B

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 BlfANvC

டைரக்ட்டர், கதை, வசனம் எழுத்தாளர். MGR இன் ஆஸ்த்தான டைரக்ட்டர். தமிழ், கன்னடம், சிங்கள படங்களை டைரக்ட்டினார். ஒரு கதைக்கு என்னென்ன தேவை, ஜனங்களுக்கு எந்தெந்த விஷயங்கள் பிடிக்கும்னு MGR கால்குலேட் செஞ்சாரோ, அதெல்லாம்தான் படத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்துச்சு. அதுக்கு பேர் 'MGR ஃபார்முலா'னு கொண்டாடினாங்க. இந்த ஃபார்முலாவையும், MGRயும் மனசுல வச்சு நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் நீலகண்டன்.

காலேஜ் படிப்பு  முடிச்ச பிறகு ஜீவமணி என்ற பத்திரிகையில பத்திரிகையாளராக வேல  செஞ்சார். எழுதுறதுல, படிக்கிறதுல ஆர்வம் இருந்துச்சு.  நாடகங்கள் எழுதி, டைரக்ட்டினார். இவரோட முள்ளில் ரோஜா நாடகத்தை TKS சகோதரர்களால் அரங்கேற்றப்பட்டுச்சு. அதுக்கப்புறம் நீலகண்டனுக்கு நாடகங்கள் சான்ஸ் வர ஆரம்பிச்சுது.  

மெய்யப்ப செட்டியார் அவரோட தியாக உள்ளம் நாடகத்தை பாத்து, புடிச்சு போச்சு. நீலகண்டன்கிட்ட, "இந்த கதை எனக்கு புடிச்சிருக்கு. படமா எடுக்க ஆசப்படறேன். அதுக்கேத்த மாதிரி எழுதி கொடுங்க"னு சொன்னார். அவரும் நாடகத்தை சினிமா கதையா மாத்தி, வசனமும்  எழுதி கொடுத்தார். அதான் 1947ல  வந்த நாம் இருவர் படம். அதுக்கப்புறம் AVM நிறுவனத்துல  கதை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல நீலகண்டன் முக்கியமானவராயிட்டார். சினிமாவை பற்றி கொஞ்சம் கொஞ்சமா படிச்சு தெரிஞ்சிக்கிட்டார். டைரக்ட்டின முதல் படம் 1951ல ஓர் இரவு.

1957ல சக்கரவர்த்தி திருமகள் படத்தை MGRஐ  வச்சு எடுக்கும்போது ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க. நீலகண்டனின் திறமையை MGRஉம், MGRஇன் தேவையை நீலகண்டனும் தெரிஞ்சுக்கிட்டாங்க. நெருங்கிய நண்பர்களானாங்க. "இவர் MGRரோட ஆள்"னு மத்தவங்க சொல்ற அளவுக்கு நெருக்கமானங்க. இவரோட படங்கள்ல நடிச்சு MGRக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்து கெடச்சுது. MGRஐ மக்கள் திலகமாக்கியவர், கமர்ஷியல் ஹீரோவாக்கினவர் நீலகண்டன். MGR நீலகண்டனை கில்லாடின்னு புகழ்ந்தார். தமிழ்ல MGRஐ வச்சு அதிகமா படங்களை எடுத்தவர். சிவாஜிக்கு ஒரு பீம்சிங்னா, MGRக்கு நீலகண்டன். ஆனா நீலகண்டன் MGRகிட்ட எந்த ஒரு உதவியும் கேட்டு வாங்கினதில்ல. உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களை MGR டைரக்ட்டியிருந்தாலும், நீலகண்டன் அவருக்கு உறுதுணையா இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததுக்கு அந்த படங்களின் டைட்டில்ல MGR உளம் நிறைந்த நன்றி சொல்லியிருந்தார்.

சிவாஜியை வச்சு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி [திரைக்கதை, வசனம்], முதல் தேதி [திரைக்கதை, வசனம்], அம்பிகாபதி [வசனம்] படங்களை டைரக்ட்டினார். கலைஞரின் கதை, வசனத்தில் பூம்புகார், பூமாலை போன்ற படங்களை டைரக்ட்டி பேர் வாங்கினார்.

சினிமா அனுபவங்கள், சினிமாவுக்கான இலக்கணங்கள், இங்கிலிஷ் படங்களின் கட்டமைப்புகள் எல்லாத்தையும் ஆராய்ஞ்சு பல புத்தகங்கள் எழுதினார்.

நன்றி  விக்கி, hindutamil, m.dinamalar, tamil.hindustantimes

அய்யா சாமி ஆவோஜி சாமி அய்யா வாயா ராயா யூ கம்மையா

ஓர் இரவு   [டைரக் ஷன்]  1951  

எல்லாரும் கேளுங்க நீங்க எல்லாரும் கேளுங்க ஒரு நல்ல விளையாட்டு சொல்ல போகிறேன்

முதல் தேதி   [திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்]     1955    

இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய

அம்பிகாபதி        1957

இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்

ஒரு தாய் மக்கள்  [டைரக் ஷன் ]      1971


பேபி   அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 2 Empty Re: , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum