புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
40 Posts - 63%
heezulia
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
2 Posts - 3%
viyasan
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
232 Posts - 42%
heezulia
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
21 Posts - 4%
prajai
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_m10சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 7:57 am

சாலையோரத்து புளியமரங்கள் – சிறுகதை Kungumam_08
-
வெளியே சிலீர் என்ற காற்று. கிருத்திகாவின் தலைமுடி பஸ் செல்லும் எதிர்த் திசையில் லேசாக நர்த்தனமாட, அவற்றை இடதுகை விரல்களால் அமுக்கி அணைத்தாள். கருமையான வானமும் அதில் ஆங்காங்கே மின்னிக¢கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் கண் சிமிட்டலும் அவளைக் கிறங்க அடித்தன.

கிருத்திகா எப்போதும் பஸ்ஸின் முன்புறம் & அதாவது டிரைவர் ஸீட்டின் பின்னால்தான் & உட்காருவாள். சிறுவயது முதலே இருந்த இந்த ஆசை இன்னும் விடவில்லை. பஸ் பயணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி மார்கழி இரவில் இருட்டைக் கிழித்துக்கொண்டு கருநாகம் போல வளைந்து வளைந்து வரும் தார் ரோட்டை விழுங்கும் பஸ் சக்கரங்களின் ஓசை… விருட் விருட்டென வேகமாக பஸ்ஸை நோக்கி வந்து சரேலென விலகும் மரங்கள்… அந்த புளிய மரங்கள்.

ஆ… புளிய மரங்கள்! சாலையோரத்தில் பூதாகாரமாக நின்று கொண்டிருக்கும் புளிய மரங்கள்! வரிக்குதிரையைப் போல கறுப்புப்பட்டையையும் வெண்பட்டையையும் மேனியில் தாங்கிக்கொண்டு காலம் காலமாக கம்பீரமாக நிற்கும் புளிய மரங்கள்… என்ன கம்பீரம்! என்ன அழகு!

பஸ்ஸில் போகும்போதெல்லாம் அந்த புளிய மரங்களை ரசிக்கத் தவறுவதில்லை அவள்! பகல் வேளைகளில் அந்த மரங்களின் நிழலில் யாராவது படுத்திருப்பார்கள். சிலர் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள். சிலர் பீடி பிடித்தபடி குத்துக்காலிட்டுக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் அந்த மரத்தடியில் யாரும் படுப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை, ‘பேய் இருக்கும் புளிய மரத்தில்’ என்ற கூற்றுக்கு பயப்பட்டவர்களாகக்கூட இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும், அவளுக்கு அந்த புளிய மரங்கள் நண்பர்களாகிப் போனார்கள். பஸ்ஸில் போகும்போது நலம் விசாரிப்பாள், டாட்டா சொல்வாள் & மனதுக்குள்தான்! அப்படியும் சில வேளை சிரிப்பு வெளிப்பட்டு விடும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மா பார்வதி அவள் இடுப்பை இடித்து, ‘‘என்னடி, தனக்குத்தானே சிரிச்சுக்கறது’’ என்றதும் திடுக்கிட்டு, ‘‘ஒண்ணுமில்லைம்மா’’ என்பாள்!

காலம்தான் எவ்வளவு சீக்கிரம் ஓடுகிறது.

கிருத்திகா இப்போது சின்னப்பெண் இல்லை. ஸ்கூலில் அழகான பெண்ணும் அறிவாளியான பெண்ணும் அவள்தான். பாடத்தில், விளையாட்டில், போட்டிகளில் அவள்தான் முதல் மாணவி! படிப்பு முடிந்து, ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே…’ பாடலைப் பாடிவிட்டு ஒவ்வொருவரும் கைகுலுக்கி, கண்ணீர் தளும்ப விடைபெற்றபோது வகுப்பாசிரியை சொன்னார்…

‘‘நீ பெரிய ஆளா வரணும் கிருத்திகா!’’

அவளுக்குப் பெருமையாக இருந்தது. நிச்சயம் நல்ல வேலையில் அமர்ந்து பெற்றோருக்குப் புகழ் சேர்க்கப் போகிறோம், பணம் சேர்க்கப் போகிறோம் என்று நினைத்தாள். ஆனால் நினைப்பது எல்லாம் அவ்வளவு ஈஸியாக நடந்து விடுவதில்லையே!

கிருத்திகா படிப்பை முடித்தபோது அழகின் உச்சத்தில் இருந்தாள். பெற்றவளே வயிற்றில் நெருப்பைக்? கட்டிக்கொண்டுதான் அவளை வெளியே அனுப்பினாள். கிருத்திகா வர இரண்டு வினாடி தாமதமானாலும், ‘கடவுளே, ஈஸ்வரா, பிள்ளையாரப்பா’ என்று வேண்டுதல்களும் சூறைத் தேங்காய்களும் உடைத்து விடப்படும்.

வேலை கிடைத்தது. ‘ஆஹா’ என்று மகிழ்ந்தாள் கிருத்திகா.

அலுவலகத்தில் எல்லோரும் அவளைப் பார்த்தார்கள்! ‘இப்படியா வியப்பார்கள்’ என்று நினைத்தாள் கிருத்திகா. அவளது அழகு அத்தனை பேரையும் வசியம் செய்தது & வயது வித்தியாசமில்லாமல்! முதலில் கிருத்திகாவுக்கு பெருமையாகக்கூட இருந்தது. போகப் போக அது வெறுப்பாக, கோபமாக, எரிச்சலாக மாறியது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 7:58 am

வேலையே செய்ய முடியவில்லை. அக்கவுன்டன்ட் ஒருநாள் விபரீதமாக நடக்க முயற்சிக்க, டிபன் பாக்ஸைக்கூட எடுக்காமல் ஓடி வந்துவிட்டாள்.

பின்னர் பல கம்பெனிகளில் ஏறி இறங்க… இறங்க… அவளுக்கு அலுப்புத் தட்டிற்று.

எங்கு போனாலும் அவளைத்தான் பார்க்கிறார்கள். அவள் வேலைத் திறமையைப் பார்ப்பதில்லை. இரட்டை அர்த்தப் பேச்சுகளும் அனாவசிய கண்சிமிட்டல்களும், ‘டைப் ஒர்க் இருக்கு’ என்று அனாவசியமான பொய் சொல்லி லேட்டாக இருக்க வைத்து கிட்டே வந்து அசடு வழியும் மேனேஜர்களும்…

அழகான பெண்ணுக்கு இத்தனை பிரச்னைகளா?அவள் நிறைய வேலைகளை உதறினாள். இல்லை… உதற வைத்தார்கள்!

இது இப்படி இருக்க… மற்றொரு புயல் வீசியது. ஆம்… நேர்மையான அவள் தந்தை திடீரென்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

சபேசன் கண்டிப்புக்காரர். மென்மையான மனமும் கொண்டவர். ‘இவரை எப்படிக் கவிழ்க்கலாம்’ என்று ஒரு கோஷ்டி இயங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தருணமும் வந்தது. அவர் மீது அனாவசிய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு & அவருக்கு சஸ்பென்ஷன்! நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டி இருப்பவர் தண்டிக்கப்படுவார்தானே?

அந்தச் சிறிய குடும்பக் கப்பலின் மாலுமியின் கை, விதியால் முறித்து வீசி எறியப்பட்டது! தவித்தார் சபேசன். நெகுநெகு என வளர்ந்து, அழகுச் சிலையாக நிற்கும் ஒரே மகள். அவள் எதிர்காலம்? இருக்கிற சேமிப்பு போதுமா?

நினைக்கும்போதே கண்கள் கலங்கின!

‘‘இப்ப என்ன பண்றது?’’ என்று கவலையாகக் கேட்டாள் பார்வதி.

‘‘இருக்கிற சேவிங்ஸ் கரையறதுக்குள்ளே மகளைக் கரையேற்றணும்’’ என்றார் சபேசன்.

தங்களுக்கு இக்கட்டு வரும்போது, எந்த பெற்றோரும் எடுக்கும் முதல் தீர்மானம் இதுதானே! ‘நாம கஷ்டப்பட்டாவது நம் குழந்தைகளைக் கரையேற்ற வேண்டும்’ என்ற தீர்மானம்தானே அது! சபேசன் காரியங்களில் இறங்கினார். ஜாதகப் பரிவர்த்தனைகளும், பெண் பார்க்க வருபவர்களை வரவேற்கும் படலங்களும் தொடங்கின.

இறங்கினால்தான் தெரிகிறது ஆழம். தனக்கு வந்தால்தான் தெரிகிறது தலைவலி!

‘பெண் லட்சணமா இருக்கா. கொத்திக்கொண்டு போயிட மாட்டானா?’ என்று ஒவ்வொருவரும் பேசியதை வைத்து எவ்வளவு ஈஸியாக எடை போட்டுவிட்டார்! வருகிறவர்கள் வந்தார்கள்; பார்த்தார்கள்; டிபன் சாப்பிட்டார்கள். நமஸ்கரிக்கச் சொன்னார்கள். புடவையை லேசாகத் தூக்கி, ‘கொலுசு நல்லா இருக்கே’ என்று சொல்லுவது மாதிரி ‘யானைக் காலோ’ என்று பார்த்தார்கள். ‘பேர் என்னம்மா’ என்று தெரிந்த விஷயத்தையே மிகமிக மெல்லக் கேட்டு, ‘காது மந்தமா’ என்று டெஸ்ட் பண்ணினார்கள். பாடச்சொல்லிப் பார்த்தார்கள்… ‘திக்குவாயா’ என்று.

கிருத்திகாவுக்கு அலுத்துப் போயிற்று. அலுவலகத்தில் அருகிலிருந்த டெஸ்பாட்ச் ராமசாமியின் பார்வைக்கும், மேனேஜரின் கண்சிமிட்டலுக்கும் பயந்து வேலையே வேண்டாம் என்று வந்தவளுக்கு, இப்போது நடப்பதை நினைத்து அழுகையே வந்தது. ஒரு பெரிய பட்டாளம் புடை சூழ, அவர்கள் ஆசியுடனேயே தன்னை சைட் அடிக்க வருகிறான் ஒருத்தன். அதற்கு சொஜ்ஜி, பஜ்ஜி உபசரிப்பு வேறு.

எல்லாம் முடிந்த பிறகு ‘சீர் செனத்தி’ பேச்சு. அங்குதான் எல்லாம் போச்சு. அவர்கள் கேட்பதற்கும் இவர்கள் வைத்திருக்கும் அளவுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத நிலை. எப்படித் தகையும்? அலுத்துவிட்டார் சபேசன்.

‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தபோதுதான் சேகர் நினைவுக்கு வந்தான்.

சேகர் அவருக்கு ரொம்பத் தெரிந்தவன். அவர் வேலை பார்த்த கம்பெனிக்கு அடுத்த கம்பெனி. பஸ் ஸ்டாப்பில் நெருக்கமாகி, ‘‘மாமா’’ என்று கூப்பிடும்வரை வளர்ந்தது. ஒருநாள் சொன்னான்… ‘‘மாமா, உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஒரு பைசா செலவு வேண்டாம். ஸிம்பிளா கோயில்ல வைத்து…’’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 7:58 am

இடைமறித்த சபேசன், ‘‘இதப்பாரு சேகர். இப்ப அவளுக்கு வேண்டியது வேலை. நானும் சம்பாதிச்சிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் பணம் சேரட்டும்… பிறகு யோசிக்கலாம்…’’ என்றார். இப்போதும் அவன் அதே நினைப்போடுதானே இருப்பான்! கிளம்பினார் அவனைப் பார்க்க!

சேகர் அவரை வரவேற்றான் பரபரப்பாக. சபேசன் தயக்கத்தில் இருந்தார். ஒரு காலத்தில் அவன் ‘கிருத்திகாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொன்னபோது மறுத்துவிட்ட நாம், இப்போது வலியக் கேட்பது நியாயமாக இருக்குமா?

‘‘என்னவோ மாமா… கேட்கவே கஷ்டமாயிருக்கு. வேலையை விட்டு போகச் சொல்லிட்டாங்களாமே? ம்…’’ என்று பெரிதாக அங்கலாய்த்தான். அதில் ஒரு செயற்கைத்தனம் இருப்பதாகப்பட்டது சபேசனுக்கு. குத்திக் காட்டுகிறானோ?

‘‘அப்புறம்… கிருத்திகா எப்படி இருக்கா? அவளுக்கு இப்பவாவது தெரியுதா… வேலைக்குப் போகாம இருக்கிறது தப்புன்னு..?’’

சுருக்கென நிமிர்ந்தார் சபேசன். சேகர் குரலில் இருந்த இளக்காரமும், கண்களில் இருந்த அந்த அலட்சியமும்… தான் வந்த விஷயம் தெரிந்துவிட்டதா?

‘‘இப்ப அவளுக்கு மாப்பிள்ளை தேடறதா கேள்விப்பட்டேன்..?’’

‘‘ம்… நீ கூட அவளைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினே..!’’

பேச்சு திசைக்கு வந்துவிட்டதால் அவருக்குத் தெம்பு வந்தது. வார்த்தையில் பிசிறில்லை.

‘‘என்ன சொல்றது… எனக்கு கிருத்திகாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டம்தான். ஆனா, நான் இப்ப ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன். அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. பணம் கொடுத்தா பத்திரம் ரிஜிஸ்தர் பண்ணிறலாம்… அதுக்குப் பிறகு கல்யாணம் வச்சுக்கலாமே..?’’

‘‘எவ்வளவு..?’’

‘‘ரொம்ப இல்லை… ஒரு லட்சம்!’’

அதிர்ந்தார் சபேசன். ‘‘என்ன… ஒரு லட்சமா?’’

‘‘என்ன மாமா அப்படி மலைச்சிட்டீங்க! ஒரு வீடு வாங்கப் போறேன். ஒரு லட்சம் என்கிறது பாதிதான்…’’

‘‘அப்ப..?’’

‘‘மாமா… நடைமுறை வாழ்க்கைக்கு உண்டான வழிய நான் பார்க்கிறேன். உங்களுக்கு ஒரு லட்சம் ஒரு பிரச்னை இல்லேன்னா கிருத்திகாவுக்கு நான்தான் மாப்பிள்ளை…’’

கூசிப் போனார் சபேசன். இப்படி நேரடியான பேரத் தாக்குதலுக்கு ஒருநாளும் ஆளாகியதில்லை அவர். துண்டால் முகத்தைத் துடைத்தபடி எழுந்தார்.

கூடத்தில் பேசிக்கொண்டிருக்கும் அப்பாவையும் அம்மாவையும் கிச்சனில் இருந்து கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. ஏன் இத்தனை பிரச்னைகள்… இத்தனை இன்னல்கள்… சே! பறவைகளும் விலங்குகளும் செடிகளும் கொடிகளும் உயிருடன் இருக்கின்றன. ஆனால், இந்த மாதிரி இல்லையே?

அந்த புளிய மரங்களின் நினைவு அவளுக்கு வந்தது! அவற்றுக்கு ஏதாவது கவலை இருக்குமா?

அம்மாவிடம் அப்பா கிசுகிசுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் காதில் விழுந்துவிட்டது. கோயிலிலிருந்து இன்னும் மகள் திரும்பியிருக்க மாட்டாள் என்ற நினைப்பில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘‘என்ன பண்றது பார்வதி. இதவிட நல்ல இடம் அமையப் போறதில்ல… மனுஷர் ஒரு பைசா வேண்டாம்னு சொல்லிட்டார்… இத நழுவ விட்டா நாம கிருத்திகா கல்யாணத்த மறந்துட வேண்டியதுதான்!’’

அம்மா ஏன் பதில் சொல்லாமல் விசும்புகிறாள்?

‘‘நீ எதுக்கு கலங்கறே பார்வதி… தங்க ஊஞ்சல்ல ஆடப்போறா உன் பொண்ணு…’’

அம்மாவின் கேவல் தொடர்கிறது.

‘‘இப்படி நீ மூக்க சிந்தறதுல அர்த்தம் இல்லே… ஆள் எப்படி இருக்கார் தெரியுமா? கறுகறுன்னு தலைமுடி… பல்லு ஒண்ணுகூட விழல… அவரைப் பார்த்தா அறுபது வயசுன்னு யாராலும் நம்ப முடியாது…’’

‘மடேர்’ என்று உச்சந்தலையில் அடி விழுந்த மாதிரி இருந்தது கிருத்திகாவுக்கு. கால்களுக்கடியில் தரை நழுவியது.

‘‘மசமசன்னு நிற்காதே பார்வதி… நாளைக்கு நாம கிளம்பறோம். அவங்களும் மலையடி சத்திரத்துக்கு வர்றாங்க… சிம்பிளா கல்யாணம்…’’

புளியமரமே… உன்னிடம் வந்து நான் தூக்கில் தொங்கிவிடட்டுமா?

கிருத்திகா தொப்பென கட்டிலில் விழுகிறாள்.

பஸ் கிளம்பிற்று.

வழக்கம்போல கிருத்திகா ஜன்னலோரம் டிரைவர் சீட்டுக்குப் பின்னால். நாளை காலை திருமணம். அழுது அழுது கண்களும் கன்னங்களும் வீங்கி இருந்தன.

‘இல்லாமை’ என்ற நோய் தாக்கினால் மனிதர்கள் எப்படிக் கொடூரமாகி விடுகிறார்கள்! ஆம்பளைக்கு அறுபது வயதெல்லாம் வயதா என்று சொல்லி தன் சொந்தப் பெண்ணை, தன்னைவிட வயதில் மூத்தவனுக்கு… சே… கொடூரம்!

திடீரென்று ஒரு கூட்டம் பஸ்ஸை சூழ்ந்து கொள்கிறது.

‘‘என்னப்பா விஷயம்?’’ என்கிறார் டிரைவர்.

‘‘பஸ் போகாதுங்க…’’

‘‘எதுக்குப்பா?’’

‘‘மறியல் போராட்டம் நடக்குதுல்ல… மரத்தை வெட்டிப் போட்டுட்டாங்க…’’

‘‘அடக்கடவுளே…’’ என்று பலர் அறினார்கள் & சபேசன், பார்வதி உள்பட.

‘‘நாளைக்கு முகூர்த்தம் இருக்கு…’’ & சபேசன் குரல் தழுதழுத்தது.

விலுக்கென எழுந்தாள் கிருத்திகா.

‘‘என்னது… மரத்தை வெட்டிட்டாங்களா? எந்த மரத்தை?’’

‘‘அதான்மா… அந்த புளிய மரங்களை அப்படியே வெட்டி ரோட்டை அடைச்சிட்டாங்க… கிளியராகறதுக்கு நாளை மதியத்துக்கு மேல கூட ஆகும்..’’’

அதைக் கேட்ட மறுகணம், கிருத்திகா பெருத்த சத்தத்துடன் தன் மடியில் முகத்தைப் புதைத்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்தவரை, அந்தப் புளிய மரங்கள் அவளது வாழ்வைப் பாதுகாக்கவே தங்கள் உயிரைத் தியாகம் செய்து விழுந்து கிடப்பதாகத் தோன்றியது.

(குங்குமம் 1989 ஜனவரி 27&பிப்ரவரி 2 இதழில் வெளியான நட்சத்திரக்கதை)
நடிகர் பிரபு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக