ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

5 posters

Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by சபீர் Sat Jan 09, 2010 1:02 am

மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

அலுவலகத்தின் உள்ளமர்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலகம் சாத்துவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தன. அப்போது அரக்கப் பரக்க வந்த அந்த இரு மண்ணின் மைந்தர்களுடன் பின் தொடரும் ஆடு போல வந்தார் அவர். தமிழர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

மண்ணின் மைந்தர் தான் முதலில் வாய் திறந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வ அலைக்கும் ஸலாம்”

(தொடரும் உரையாடலை நாம் தமிழில் பார்ப்போம்)

“நாளை மதறாஸுக்கு ஏதும் விமானம் உள்ளதா?” என்றார் வந்தவர். பொறுப்பாளர் (கஃபீல்) போலத் தெரிந்தார்.

கணினியில் சோதித்த என் சக ஊழியர் மோகன் “இன்று இரவுக்கே உள்ளது” என்றார்.

உடனே அந்த தமிழர் பக்கம் (அவர் தான் பயணி போலும்) திரும்பிய அந்த ஆள் “இன்று இரவு இருக்கிறதாம் – போகிறாயா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

அவருக்கு பதிலளிக்காத அந்த தமிழர் மோகனிடம் தமிழிலேயே “நாளைக்கு இருக்கான்னு பாருங்களேன்” என்றார். ஏதோ ஒரு சோகம் போல காணப்பட்டார்.

“இல்லீங்க! நாளைக்கு சவூதியா கிடையாது, கல்ஃப் ஏர் தான் – அது உங்களுக்குப் பரவாய்ல்லியா”

“கல்ஃப் ஏர் சுத்திக்கிட்டுப்போவாங்க! – அப்படீன்னா நாளை மறுநாள் சவூதியா இருக்குமா பாருங்களேன்?”

“நாளை மறுநாளெல்லாம் கிடையாது – இதை விட்டா அடுத்து வெள்ளிகெளம தான்”

இதற்கிடையில் சவூதிக்காரர் குறுக்கிட்டு “எஷ் ஃபீ?” ( என்ன சேதி?) என்று கேட்க, மோகன் அவருக்கு விளக்கினார். அவர் உடனே “போகணும்னு முடிவு பண்ணி விட்டாய். இன்று இரவே போவதற்கென்ன?” என்று தன் ஊழியரைப் பார்த்துக் கேட்டார்.

அவர் அதற்கு ஏதோ சொல்ல வாய் திறக்குமுன் அங்கு தேனீர் கொண்டு வந்த ரஷீத் அவரை சற்று உற்றுப் பார்த்துவிட்டு
“நீங்க ஜாஃபர் இல்லே? ‘சஜினி’ ல கூட இருந்தீங்களே?”

“ஆமா ரஷீத் பாய், என்ன மறந்துட்டீங்களா? நாந்தான் இங்கு அழைச்சிட்டு வந்தேன்”

“சஜினிலருந்து முடிச்சிட்டு போயிட்டீங்கன்னு சொன்னாங்க, எப்படி இருக்கீங்க?”

“ம் இருக்கேன். நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க?”

“நமகென்னங்க, அதுபோகட்டும், புது விசாவுல எப்ப வந்தீங்க?, என்ன வேலை?, எங்கே வேலை?”

“வந்து இருபது நாள் தாங்க ஆகுது, இங்க தான் எக்ஸிட் 10ல”

“வந்து இருபது நாள்ல ஊருக்குப் போறேன்றீங்க, ஏதும் எமர்ஜென்ஸியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, எனக்குப் பிடிக்கலைங்க – முடிச்சுட்டுப் போறேன்”

அதற்குள் என் பக்கம் ரஷீத் திரும்பி ‘ஜாஃபர்’ பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். ரஷீதும் நானும் பேசிக்கொண்டிருந்த போது ராஜு (இன்னொரு ஊழியர்) அவரருகில் அமர்ந்துக்கொண்டு “ஏதாச்சும் வேலையில கஷ்டமிருக்கா?” – சக தமிழனுக்கு உதவும் துடிப்பு கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் போல.

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்றவர் மென்று விழுங்கி
“ஹவுஸ் டிரைவர் வேலை தான். வேலை ஒண்ணும் கஷ்டமில்லீங்க, ஆனால், ரெஸ்ட் இல்லீங்க” என்றார்.

அவர் சொன்ன தோரணையிலும் தொனியிலும் அவர் சொல்வது உண்மை இல்லை என்று விளங்கி விட – இப்போது ராஜு அவரை நோக்கி “நீங்க நம்மாளுங்கறதால கேட்கிறோங்க, ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க இவங்கிட்ட பேசிப்பார்க்கலாம்”

ரஷீத் தொடர்ந்தார் “ஜாஃபர், புது விசாவுக்கு எத்தனி செலவு பண்ணி வந்திருப்பீங்க, அந்த செலவையாவது எடுக்க வேண்டாமா? – சொல்லுங்க உங்க கஷ்டத்தை – முடிஞ்சா ‘ரிலீஸா’வது கேட்டு பேசிப்பார்ப்போம்”
ரிலீஸ் என்கிற ஆங்கில வார்த்தையை காதில் வாங்கிய அந்த ஆள் வேகமாக கடங்காரனை கண்டவன் போல திரும்பி “என்ன பேசுகிறீர்கள்?” என்று ரஷீதைப் பார்த்துக் கேட்க ரஷீத் அதற்கு “வந்து இருபது நாளில் ஊருக்குப் போகிறாரே, ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்”

அந்த ஆள் முழுதுமாக ரஷீத் பக்கமாகத் திரும்பி தன் தலையில் இருந்த குறுவட்டை எடுத்து சரி செய்தப் படி, “நீயாவது கேட்டுச் சொல்லு – நான் எவ்வளவோ கேட்டும் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறான்”
ராஜு குறுக்கிட்டு “ரெஸ்ட்டே இல்லை என்று சொல்கிறார்”

“தய்யிப், அதை என்னிடம் சொல்லலாமில்லையா..” என்று கூறியவர் தன் ஊழியரை நோக்கித் திரும்ப அவர் அவசரம் அவசரமாக கைகளை ஆட்டி ரஷீதை நோக்கி “அவங்கிட்ட ஏதும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க” என்கிறார்.

அவருக்காக உதவ முன்வந்த ரஷீதுக்கும் ராஜுவுக்கும் அதிர்ச்சி. ‘என்ன இந்த ஆள் இப்படிச் சொல்கிறார்’ என்பது போல.

சன்னமான குரலில் அவரே தொடர்ந்து, ‘நான் ஊருக்குப் போனாப் போதுங்க’ என்று சொல்ல அதற்கு மேல் அவருக்காக பேச ஏதுமில்லாத ஏமாற்றத்தில் “சரி, உங்க இஷ்டம், கிளம்புங்க” என்று சொல்லி விடுகிறார். அதன் பின் ஒருவழியாக அன்றைய இரவு விமானத்துக்கே டிக்கட் வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விட்டாலும் நமது அலுவலர்களுக்கிடையில் தூவானம் போல தொடர்கிறது அந்தப் பேச்சு.

“ஆளு முன்ன மாதிரி இல்ல. ஏதொ ஒடஞ்சிப்போயிதெரியறார்” – இது ரஷீத்.

“ஆமாங்க, ஏ…அதோ இருக்கு” – ராஜு தன் பாணியில்
“ஒண்ணு இவர்கிட்டயோ இல்ல அவங்கிட்டயோ ஏதோ விஷயம் இருக்கு” என்கிறார் சைஃபுல்லா – காசாளர்.

“நான் நினைக்கிறேன்….. என்று பலவிதமாக அனைவரும் அதையே அசைப்போட்டப்படி பேசிக்கொண்டிருக்க கடைசியாக மோகனே,

“உண்ம என்னன்னு தெரியாமல் ஆளாளுக்கு பேசிகிட்டிருக்கிறோம் – சரி, சரி, ராஜு சாத்துங்க போலாம்”

புதிய விசாவில் வந்து இருபதே நாட்களில் போக வேண்டுமென்றால்….? என்ன காரணமிருக்கும் – எனக்கும் யோசிக்க யோசிக்க ஒன்றும் சரியாக புலப்படவில்லை அல்லது நிறைய தவறாகப் புலப்பட்டது.

வெளியே வந்து என் வாகனத்தை திறக்குமுன் மகள் வாங்கிவரச் சொல்லியிருந்த ஸ்ட்ராபெர்ரி நினைவுக்கு வர, அருகிலிருக்கும் தமீமி மார்க்கெட்க்கு சென்றேன். அங்கு எனக்கு காத்திருந்த ஆச்சர்யம் போல அவர். அதே ஜாஃபர். சாக்லேட்டுகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னங்க, இன்னும் ஏர்போர்ட் கிளம்பலையா?” என்றேன்.

“தோ, டிரைவர் வண்டியோட வாசல்ல இருக்கிறார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்றார். முகத்தில் சற்று மலர்ச்சி தென்பட்டது. தூக்கத்திலிருந்து விழித்து முகம் கழுவி வந்தவரைப் போல.
ஒரு குழந்தை போல சாக்லேட்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கேட்டேன்: “எத்தன குழந்தைங்க உங்களுக்கு”

மந்தகாசமாய்ப் புன்னகைத்துச் சொன்னார்: “கல்யாணம் ஆகியே ரெண்டு மாசந்தாங்க ஆகுது”.

-பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்
fakhrudeen.ha@gmail.com
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty Re: ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by சிவா Sun Jul 25, 2010 6:16 pm

சிறந்த சிறுகதையை எழுதிய பஃக்ருத்தீனுக்கும் இங்கு வெளியிட்ட சபீருக்கும் நன்றி!


ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty Re: ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by balakarthik Sun Jul 25, 2010 6:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty Re: ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by பிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 6:27 pm

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196



ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty Re: ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by கலைவேந்தன் Sun Jul 25, 2010 6:33 pm

சிவா wrote:சிறந்த சிறுகதையை எழுதிய பஃக்ருத்தீனுக்கும் இங்கு வெளியிட்ட சபீருக்கும் நன்றி!

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196 ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை) Empty Re: ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum