ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை

Go down

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Empty கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை

Post by ayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am



சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில்,
அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

அதிலும், மாநகராட்சி தரப்பில், போதிய ஒத்துழைப்பு இல்லை
என்றும், தன்னிச்சையான செயல்பாடுகளால், நோயின் பிடியில்
சிக்கி சென்னை தவிக்கிறது என்றும், மண்டல பணி குழுவினர்
பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் ஆரம்ப கட்டத்தில், கொரோனா பாதிப்பின் தீவிரம்,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அதிகமாக இருந்தது.

இதற்கு, மக்கள் அடர்த்தி, முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்த மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், நோய் பாதிப்பு
உள்ளது. நோய் பரவல், மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் தடுக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்களுக்கு மாநகராட்சி உறுதி
அளித்தது.

அதற்கு மாறாக, நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை
மாநகராட்சியின், அனைத்து மண்டலங்களிலும், கொரோனா
தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில்,
ஆறு மாவட்டங்களில் மட்டுமே, ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு
எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில்,
மண்டல வாரியாக, பாதிப்பு ஆயிரத்தை கடந்து, நாலாயிரம்,
ஐந்தாயிரம் என, எகிறுகிறது.

சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஐந்து மண்டலங்களில்,
நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்தாயிரத்தை
கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 6,951; தண்டையார்பே்டடையில்,
5,717; அண்ணா நகரில், 5,260; தேனாம் பேட்டையில், 5,516;
கோடம்பாக்கத்தில், 5,216 பேர், கொரோனா நோயால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.

மற்ற மண்டலங்களிலும், அதிக அளவு தொற்று பரவல்
கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லுார், மணலி
மண்டலங்கள், ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளன.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று அதிகரித்து
வருவதையே, இது காட்டுகிறது

.இதற்கு, மாநகராட்சியின் ஒத்துழையாமையே காரணம் என்ற,
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக திட்டமிடல் இல்லாமல்,
தன்னிச்சையான செயல்பாடுகள் தான், நோய் பரவலுக்கு காரணம்
என்ற, புகார் வாசிக்கப்படுகிறது.

நோய் தடுப்பு பணியில், சுகாதாரத் துறையும், மாநகராட்சியும்
தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு துறைகளுக்கும்
இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், தொற்று தடுப்பில்
வெற்றி பெற முடியும். ஆனால், மூன்று மாதமாகவே, சுகாதாரத்
துறையுடன் இணைந்து செயல்படாமல், மாநகராட்சி தனி ரூட்டில்
செல்கிறது.

இப்படி செயல்படுவது ஏன், எதற்கு என்பதும் புதிராக இருக்கிறது.
மூத்த அதிகாரிகள் சொல்வதை கேட்டு, முறையாக செயல்பட்டிருந்தால்,
சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள், இந்நேரம் பாராட்டப்பட்டு
இருக்கும். நோய் பரவலை தடுக்க, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,
அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கும், மாநகராட்சிக்கும் இடையே அறவே ஒருங்கிணைப்பு இல்லை.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மற்ற அலுவலர்களுடன் இணைந்து
செயல்படாமல், தன் உத்தரவை மட்டும் செயல்படுத்தும்படி கூறுவதாக,
அவர்கள் சொல்கின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை Empty Re: கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை

Post by ayyasamy ram Sat Jun 27, 2020 7:54 am


தொற்று உறுதியானவர் வீட்டில் உள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட
வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில்
பல இடங்களில், தொற்று பாதித்தவர் வீட்டினர், தனிமைப் படுத்தப்படாமல்
உள்ளனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது, தன்னார்வ களப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப்
பணியாளர்கள் தான், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர். மாநகராட்சியில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகள்,
வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களை முடுக்கி விட வேண்டிய,
கமிஷனரும் மவுனம் சாதிக்கிறார்.

மேலும், கொரோனா தடுப்பில், தமிழக சுகாதாரத் துறையின்
அறிவுறுத்தல்களை, மாநகராட்சி பொருட்படுத்துவதில்லை. கொரோனா
தடுப்பு பணிகள் எனக்கூறி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.

நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது;
அதுவும் தரமற்றதாக உள்ளது.அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில்
தெளிக்கப்படும், கிருமி நாசினி மருந்து, வீரியமிக்கதாக இருக்கிறது.
பல மணி நேரம் தாக்கு பிடிக்கிறது. மற்ற பகுதிகளில் தெளிக்கப்படும்
கிருமி நாசினியில், அதன் வாடை கூட வருவதில்லை. அந்தளவுக்கு
தரமற்றதாக உள்ளது.

மருத்துவமனைகள் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை
தங்க வைக்க, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு தங்க வைக்கப்படுவோருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக,
தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு, அரசு
கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. அது முறையாக
செலவழிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:

சென்னையில் தற்போதைய
சூழலில், கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால், தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு, சுகாதாரத்
துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, முழு வீச்சில்
பணியாற்ற வேண்டும்.பொது மக்களும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல்,
தேவையில்லாமல், வெளியே வருவதை தவிர்த்தல் போன்றவற்றை, கட்டாயம்
பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்?

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செயல்பாடுகள் சரியில்லை என,
அரசு நியமித்த, மண்டல குழு அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் புகார்
தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி கமிஷனர் மாற்றப்படலாம் என்ற,
தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கமிஷனரை நியமிக்கும்போது, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து
செயல்படும் வகையில், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்துள்ள அதிகாரியை,
நியமிக்க வேண்டும் என்றும், அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி,
தற்போது, வீட்டுவசதித் துறை செயலராக உள்ள, ராஜேஷ் லக்கானி, புதிய கமிஷனராக
நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக,
சிறப்பாக பணியாற்றியவர்.
- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum