புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_lcapவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_voting_barவிரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா...


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 2:08 pm

விரதம்,
கடவுளின் அருள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால்
இன்னொரு பக்கம், உடலுக்கு உணவு தர மறுக்கும் இந்த விரதம், உடல் நலத்துக்கு
ஏற்றதா, இல்லையா என்பது பற்றிய கேள்விகளும் பல! இங்கு அது தொடர்பான
ஆழமானதொரு விளக்கமளிக்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம்!

"ஒரு
நல்ல டிரைவர், தன் காரிடமே சண்டை போடக் கூடாது. அதேபோல புத்திசாலியான ஒரு
மனிதன் தன் உடம்போடு சண்டை போடக்கூடாது. விரதம் என்பது சிலரைப்
பொறுத்தவரையில் உடம்பை ஒழுங்குபடுத்துவது. ஆனால், அது நடைமுறையில் பலரின்
முறைப்படி உடம்புடன் சண்டைப் போடுவதாகத்தான் உள்ளது.


பொதுவாக,
'நீங்கள் பட்டினி கிடந்தால்தான் அருள் தருவேன்' என்று எந்தக் கடவுளும்
சொல்லவில்லை. சாதாரணமாகவே ஒரு குழந்தை பட்டினி கிடப்பதை அதன் தாய் விரும்ப
மாட்டாள். அப்படியிருக்க, உலகத்துக்கெல்லாம் தாயாக இருக்கிற கடவுள்,
நீங்கள் கொலை பட்டினி கிடக்க வேண்டும் என்று விரும்புவாரா என்ன?!

சொல்லப்போனால்,
மனிதனுடைய ஒருவகையான பிடிவாதமான எண்ணம்தான் இந்த விரதம். அதாவது, சில
விஷயத்தை அடைய முடியாத குழந்தைகள் சாப்பிட மறுத்து சண்டித்தனம்
செய்வார்கள். சாப்பிடாமல் சண்டை போட்டால் அம்மா அதை தந்துவிடுவார்கள் என்ற
எண்ணம் அவர்களுக்கு. அதேபோல சில பேர் கடவுளிடம் சண்டை போட, விரதத்தை
கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


கடவுள் என்ன கொடுக்கவில்லையோ
அதில் ஒரு நியாயம் இருக்கும். அவர் என்ன தந்தாரோ, அதிலும் ஒரு நியாயம்
இருக்கும். அதை விட்டு, கடவுள் எனக்கு தராததை நான் விரதம் இருந்து வாங்கி
விடுவேன் என்று எண்ணு வது தவறு.

'அப்போ முன்னோர் சொல்லி
வச்சிருக்க விரதங்களையெல்லாம் தவறுனு சொல்றீங் களா..?' என்று சிலர்
பதறுவார்கள். அப்படியில்லை. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தால் யாராக
இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள். அதேபோல, நம் உடம்பில் இயங்கிக்கொண்டே
இருக்கும் அஜீரண மண்டலமும் தளராமல் இருக்க, அதற்கு ஓய்வு தேவை என்ற
அடிப்படையில்தான் இந்த விரத அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

முழுக்கவே
உண்ணாமல் இருப்பது, பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்வது, திரவ உணவை மட்டும்
சாப்பிடுவது என விரத்தில் பல முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு
நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. கந்த சஷ்டியின் ஆறு நாள் விரதத்தில்,
முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என ஆறு நாள் வரை
வளரும். இந்த மிளகு, உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு! பிரதோஷ கால
விரதத்துக்குக் காரணம், பிரதோஷ நேரமான அந்த அந்தி-சந்தி நேரத்தில்தான்
நோய்க்கிருமிகள் உண்டாகும். அந்தச் சமயத்தில் உடம்பில் உணவு இருப்பது
நல்லதற்கல்ல என்பதற்காக!

அதேபோல, 'முருக பக்தராக இருந்தால் மாதம்
ஒரு முறை கிருத்திகைக்கு விரதம் இருந்து உன் உடம்பை சுத்தப்படுத்திக்
கொள், வைணவராக இருந்தால் மாதம் ஒருமுறை ஏகாதாசி அன்று விரதம் இருந்து
கொள்' என்று முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். ஆனால், நாமோ இப்போது எல்லா
விரதங்களையும் இருந்து, எல்லா இறைவனையும் அடைய முயற்சித்தால், உடல்நலம்
பாதிக்கப்படும்தானே?!

'உபவாசம்' என்பதுதான் விரதத்துக்குரிய
சொல். உபவாசம் என்பதற்கு முழுமையான அர்த்தம் இறைவனோடு நெருங்கி வசிப்பது.
அதாவது, இறைவன் மீது முழு பக்தியோடு இருக்கும்போது எந்த உணவும்
தேவைப்படாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆக, உணவு தேவைப்படாத நிலைதான்
விரதமே தவிர, 'நான் சாப்பிடவில்லை' என்ற எண்ணத்துடன் பட்டினி கிடப்பது
விரதமல்ல.

அப்படி வலுக்கட்டாயமாக 'நான் விரதம் இருக்கிறேன்' என்ற
எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், 'தான் மட்டும் பட்டினி கிடக்க
வேண்டியிருக்கே, மற்றவர்களெல்லாம் சாப்பிடுகிறார்களே' என்று நினைப்பும்,
தொடர்ந்து கோபமும்தான் வரும். இதனால் இரிட்டேஷன் ஏற்படும். விரதம்
இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் சர்க்கரை அளவு மாறும்.
சிலருக்கு அசிடிட்டி ஏற்படும்.

எனவே, விரதம் இருப்பதற்கு முன்
அதற்கு உங்கள் உடலும் மனமும் தகுதியாக இருக்கிறதா என்பதை அறியுங்கள்.
இருப்பின், ஆரோக்கியமான விரதமிருங்கள்!

என் தனிப்பட்ட கருத்து
என்னவென்றால், விரதம் என்பது மென்மையாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையாக
இருக்கக்கூடாது. பிறரை துன்புறுத்துவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம்
தன்னை துன்புறுத்திக் கொள்வதும். உடலுக்கு எதிரான இந்த விஷயம்
கடவுளுக்கும் எதிரானது.

பொதுவாக சித்தர்களும் புத்தர்களும்
விரதத்தை விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. பக்தர்கள்தான் அதை
பிடிவாதமாக கையாளுகிறார்கள். கடும் விரதத்தை எந்த கடவுளும் ஏற்றுக்
கொள்வதுமில்லை!''


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக