Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல் எழுதிய தலையங்கம்
Page 1 of 1
கமல் எழுதிய தலையங்கம்
தன்னுடைய ரசிகர்களுக்காக 'மய்யம் ' என்னும்
இதழை நடத்தி வந்த போது ,1990-ல் ரசிகர்களுக்கு
கமல் தீட்டிய ஒரு தலையங்கம் இதோ...
--
வெளிநாடு சென்று புளங்காகிதத்துடன் வீடு திரும்பும் வேளையில் ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை நடக்கும் பயணத்தில் பாதையிலிருக்கும் குழிகளில் கார் விழுந்து எழும் பொழுது நமது நாட்டை நிந்தனை செய்யும் பழக்கம் யதார்தமாக எல்லோருக்கும் வருவதுண்டு
முதல் குழியில் விழுந்ததும்-
"பாருய்யா ...இது தான் நம்ம நாடு.ஜெர்மனியைப் பார்...ஐந்து கார்கள் ஒரே திசையில் அழகாய் போகக் கூடிய அகலமான பாதைகளை அங்கே ஹிட்லர் காலத்திலேயே அமைத்து விட்டார்கள் .இன்னும் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம்.
அமெரிக்காவில் நினைத்த இடத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது தெரியுமா? இங்கே பார் தெருவுக்கு தெரு சுவரொட்டி .அதை பசுமாடு இழுத்து தின்னுகிறது.
அந்த ஊரில் மாடையெல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள் .இங்கே மனிதர்களுக்கே ரோட்டை கடக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிப்பர் .இந்த விமர்சனம் நானும் செய்து கொண்டிருந்தேன் போன வருடம் வரை.
இந்த வருடம் அமெரிக்கா சென்று ,அவர்களுடம் நெருங்கிப் பழகவும் ,அவர்களின் சில சினிமாத் தொழில் நுட்பத்தைச் சற்றே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த பொழுது -நான் என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . நான் என்ன செய்து விட்டேன் நாடு மேம்பட ? குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?
கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான்
குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது
வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று
நான் யோசிக்க மறந்தது ஏன்?
எனது நறகலும் கலந்து வரும் மணம்தானே அந்த கூவத்தில் மணம் என்பதை யோசித்துப் பார்த்தேன். அரசியல்வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ்ட்சர்லாந்தில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் செய்யலாம் .
ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவுல் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் எங்கோ என்னுடைய பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்துப் பார்க்கையில்..இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்ப் பேச்சு அடங்கி விடுகிறது.
சற்றே குற்றவுணர்வு என்னைத் தாக்கி என் தொழிலில் நான் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது..
அப்படி விமர்சித்துப் பார்த்த பொழுது 'செய்ததெல்லாம் போதாது' என்னும் சபையடக்கமான சொல்லை விட அதிகமான சில விஷயங்கள் புரிகிறது .வலிக்கிறது.
"என்னுடைய தொழிலில் நான் என்ன செய்து விட்டேன்?"
" 'அப்பு' செய்தீர்களே ..'நாயகன்' செய்தீர்களே.. " 'மூன்றாம் பிறை' செய்யவில்லையா ?
இரண்டு முறை ஜனாதிபதி பரிசு வாங்கவில்லையா ? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ,எனது ரசிகர்களும் என்னுடைய சோர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நினைப்பவர்களும் சொல்லுவார்கள்.
ஆனால் யோசித்துப்பார்த்தால் - இந்தியா..இந்தியாவின் முதுகைத் தட்டிக்கொள்வது போதாது.கமல்ஹாசன் ,கமல்ஹாசனின் முதுகைத் தட்டிக் கொள்வது போதாது.
நாம் உலகத்துடம் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும் .எனது சினிமா உலகத்திற்கு புரிய வேண்டும். எனது குரல் உலகத்துக்கு கேட்க வேண்டும்.
அப்படி செய்ய முடியுமாயின் -அமெரிக்காவை விட அழகாக..
ஜெர்மனியை விட அகலமான பாதைகளை நாம் செய்ய முடியும்.
இதற்கு நாமென்ன செய்ய வேண்டும்?
"நீங்கள் சினிமா நடிகர். காரில் வசதியாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் .நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் .நானென்ன செய்ய முடியும் ?" என்று ஒரு ரிக் ஷா தொழிலாளி கேட்பானாயின் - செய்ய முடியும்.
கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.
உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.
நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.
"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .
இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை நான் உணர்கிறேன். நான் உபதேசம் செய்வது உனக்கல்ல -எனக்கே!
இதை நான் பேசிப்பார்த்துக் கொள்வதன் மூலம் -இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு தெளிவாய்ப் புரிகிறது .அவ்வளவே!
இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட எனக்கு நானே எழுதிக் கொண்ட கடிதம்.
பொங்கல் வாழ்த்துக்களுடன்..அன்பன் ..கமல்ஹாசன்.
-
நன்றி- ஜோ (கடற்புரத்தான்)
இதழை நடத்தி வந்த போது ,1990-ல் ரசிகர்களுக்கு
கமல் தீட்டிய ஒரு தலையங்கம் இதோ...
--
வெளிநாடு சென்று புளங்காகிதத்துடன் வீடு திரும்பும் வேளையில் ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை நடக்கும் பயணத்தில் பாதையிலிருக்கும் குழிகளில் கார் விழுந்து எழும் பொழுது நமது நாட்டை நிந்தனை செய்யும் பழக்கம் யதார்தமாக எல்லோருக்கும் வருவதுண்டு
முதல் குழியில் விழுந்ததும்-
"பாருய்யா ...இது தான் நம்ம நாடு.ஜெர்மனியைப் பார்...ஐந்து கார்கள் ஒரே திசையில் அழகாய் போகக் கூடிய அகலமான பாதைகளை அங்கே ஹிட்லர் காலத்திலேயே அமைத்து விட்டார்கள் .இன்னும் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம்.
அமெரிக்காவில் நினைத்த இடத்தில் சுவரொட்டிகளை ஒட்ட முடியாது தெரியுமா? இங்கே பார் தெருவுக்கு தெரு சுவரொட்டி .அதை பசுமாடு இழுத்து தின்னுகிறது.
அந்த ஊரில் மாடையெல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள் .இங்கே மனிதர்களுக்கே ரோட்டை கடக்க தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிப்பர் .இந்த விமர்சனம் நானும் செய்து கொண்டிருந்தேன் போன வருடம் வரை.
இந்த வருடம் அமெரிக்கா சென்று ,அவர்களுடம் நெருங்கிப் பழகவும் ,அவர்களின் சில சினிமாத் தொழில் நுட்பத்தைச் சற்றே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த பொழுது -நான் என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . நான் என்ன செய்து விட்டேன் நாடு மேம்பட ? குண்டும் குழியுமாக இருப்பதில் என் பங்கு என்ன இருக்கிறது?
கூவத்தின் நாற்றம் என் மூக்கைத் துளைப்பதை மட்டும் தான்
குறையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் எனது
வீட்டுச் சாக்கடை கலப்பதும் அந்த கூவத்தில்தானே என்று
நான் யோசிக்க மறந்தது ஏன்?
எனது நறகலும் கலந்து வரும் மணம்தானே அந்த கூவத்தில் மணம் என்பதை யோசித்துப் பார்த்தேன். அரசியல்வாதி அள்ளிக் கொண்டு போன பணத்தை சுவிஸ்ட்சர்லாந்தில் வைத்திருக்கிறான் என்று கோபமாய் கூக்குரல் செய்யும் எதிர்கட்சித் தலைவர்களுடன் நானும் சேர்ந்து கூக்குரல் செய்யலாம் .
ஆனால் அந்த பணத்தில் என்னுடைய ஒரு பைசாவுல் இருக்கிறது. அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் எங்கோ என்னுடைய பைசாவும் கலந்திருக்கிறதே என்று நான் யோசித்துப் பார்க்கையில்..இத்தனை வீழ்ச்சியின் காரணத்தில் எனக்கும் ஒரு கணிசமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து வாய்ப் பேச்சு அடங்கி விடுகிறது.
சற்றே குற்றவுணர்வு என்னைத் தாக்கி என் தொழிலில் நான் என்ன செய்தேன் என்று என்னையே நான் விமர்சித்துப் பார்த்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு என்னை ஆளாக்குகிறது..
அப்படி விமர்சித்துப் பார்த்த பொழுது 'செய்ததெல்லாம் போதாது' என்னும் சபையடக்கமான சொல்லை விட அதிகமான சில விஷயங்கள் புரிகிறது .வலிக்கிறது.
"என்னுடைய தொழிலில் நான் என்ன செய்து விட்டேன்?"
" 'அப்பு' செய்தீர்களே ..'நாயகன்' செய்தீர்களே.. " 'மூன்றாம் பிறை' செய்யவில்லையா ?
இரண்டு முறை ஜனாதிபதி பரிசு வாங்கவில்லையா ? என்றெல்லாம் என்னுடைய நண்பர்களும் ,எனது ரசிகர்களும் என்னுடைய சோர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நினைப்பவர்களும் சொல்லுவார்கள்.
ஆனால் யோசித்துப்பார்த்தால் - இந்தியா..இந்தியாவின் முதுகைத் தட்டிக்கொள்வது போதாது.கமல்ஹாசன் ,கமல்ஹாசனின் முதுகைத் தட்டிக் கொள்வது போதாது.
நாம் உலகத்துடம் தொடர்பு கொள்ளும் நாடாக வேண்டும் .எனது சினிமா உலகத்திற்கு புரிய வேண்டும். எனது குரல் உலகத்துக்கு கேட்க வேண்டும்.
அப்படி செய்ய முடியுமாயின் -அமெரிக்காவை விட அழகாக..
ஜெர்மனியை விட அகலமான பாதைகளை நாம் செய்ய முடியும்.
இதற்கு நாமென்ன செய்ய வேண்டும்?
"நீங்கள் சினிமா நடிகர். காரில் வசதியாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் .நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் .நானென்ன செய்ய முடியும் ?" என்று ஒரு ரிக் ஷா தொழிலாளி கேட்பானாயின் - செய்ய முடியும்.
கமல்ஹாசன் தனது தொழிலை உலக ரீதியில் பரப்ப முடியுமென்றால் ,ரிக் ஷாகாரரும் தன்னுடைய ரிக் ஷா தொழிலை உலக ரீதியாக்க முடியும்.
உலகத்து டூர்ஸ்டு மேப்பில் அழகான ரிக் ஷாக்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சொல்ல வைக்க முடியும்.
நாணயமான ரிக் ஷாக்காரர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வைக்க முடியும்.
"வேர்க்கடலை விற்கிறேன் .நானென்ன செய்ய முடியும் ?" என்று கேட்டால் .."முதலில் வேர்க்கடலைத் தோலை அள்ளி குப்பையில் போடு .உன் நாட்டை நீ அழகாக்கி விட்டாய் .
இந்த அளவில் ஒவ்வொருவரும் செய்ய முடியும் என்பதை நான் உணர்கிறேன். நான் உபதேசம் செய்வது உனக்கல்ல -எனக்கே!
இதை நான் பேசிப்பார்த்துக் கொள்வதன் மூலம் -இதை நான் எழுதிப் பார்த்துக் கொள்வதின் மூலம் உண்மைகள் எனக்கு தெளிவாய்ப் புரிகிறது .அவ்வளவே!
இதை நான் உனக்கு எழுதினேன் என்பதை விட எனக்கு நானே எழுதிக் கொண்ட கடிதம்.
பொங்கல் வாழ்த்துக்களுடன்..அன்பன் ..கமல்ஹாசன்.
-
நன்றி- ஜோ (கடற்புரத்தான்)
Similar topics
» கமல் எழுதிய கவிதை
» தலையங்கம்: சாத்தானின் கூப்பாடு
» தினமணி தலையங்கம் -மகுடமல்ல, முள்கிரீடம்!
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
» தலையங்கம்: சாத்தானின் கூப்பாடு
» தினமணி தலையங்கம் -மகுடமல்ல, முள்கிரீடம்!
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|