Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.
3 posters
Page 1 of 1
தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.
ஐ.நா.:
சிங்கள ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும்,
கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது
போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே என்று ஐ.நா.
தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்தது. ஹிட்லர் காலத்தை
விட மிக மோசமான கொடூரமான இந்த இனப்படுகொலை அனைவரின் உள்ளங்களையும்
பதறடித்தது.
இந்த நிலையி்ல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, அதன்
உண்மைத்தன்மை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த பிலிப்
ஆல்ஸ்டன் விசாரணை நடத்தி வந்தார். பிலிப் ஆல்ஸ்டன், ஐ.நா. மனித உரிமைக்
கவுன்சிலின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், தண்டனைகள் குறித்த
விசாரணையாளராக உள்ளார். தற்போது தனது விசாரணையை முடித்துள்ள ஆல்ஸ்ட்ன்
அறிக்கையை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளார். அதை ஐ.நா. இன்று வெளியிடுகிறது.
தனது விசாரணை அறிக்கை குறித்து ஆல்ஸ்டன் கூறுகையில்,
தமிழர்களை
இலங்கை வீரர்கள் சுட்டுக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே,
நம்பகமானதே. உடனடியாக இதுகுறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட
வேண்டும். இனியும் இதில் காலதாமதம் இருக்கக் கூடாது.
யார் இந்த
விசாரணையை நடத்துவது என்பது குறித்து நான் கூற முடியாது. ஆனால் நிச்சயம்
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் ஆல்ஸ்டன்.
ஈழப்போரின்
இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை
செய்யப்பட்டனர். கொத்து வெடிகுண்டுகளை வீசியும், புல்டோசர்களை ஏற்றியும்
தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஐ.நா.வின் கணிப்புப் படி கடைசிக் கட்டத்தில் 7000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும்
போரின்போது இலங்கை ராணுவம் செய்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள்
குறித்தும் செய்திகள் வந்தன. ஆனால் ஐ.நா. உள்பட எந்த உலக அமைப்பும்
இதுகுறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை.
மேலும், சரணடைய வெள்ளைக்
கொடிகளுடன் வந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன்,
புலித்தேவன் உள்ளிட்டோரை மண்டியிட வைத்து இரக்கமின்றி கொன்று குவித்ததாக
செய்திகள் வந்தன. இதற்கு உத்தரவிட்டவர் ராஜபக்சேவின் தம்பியான
கோத்தபயாதான் என்றும் ராணுவத் தளபதியாக இருந்தவரும், இப்போது அதிபர்
பதவிக்காக போட்டியிடுபவருமான பொன்சேகா கூறியதால் மேலும் பரபரப்பு
ஏற்பட்டது.
இந்த சமயத்தில்தான் கடந்த ஆண்டு சானல் 4 டிவியில்
தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாகக் கொல்லும் காட்சிகள் அடங்கிய
வீடியோ வெளியாகியது. இது இலங்கை ராணுவத்தின் கொடூரச் செயல்களின் ஒரு
துளியாக கருதப்படுகிறது.
தனது விசாரணை குறித்து ஆல்ஸ்டன் மேலும்
கூறுகையில், 3 தடயவியல் நிபுணர்களின் உழைப்பின் மூலம் கொடூரக் கொலைகள்
அடங்கிய வீடியோ உண்மையானதே என்பதை கண்டறிந்துள்ளோம்.
இந்த வீடியோ
பொய்யானது, திரிக்கப்பட்டது, புனையப்பட்டது என்று இலங்கைத் தரப்பில்
கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்ன அனைத்துமே உண்மை இல்லை என்பதை எங்களது
விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
இந்த வீடியோ
கடந்த 2009, ஜனவரி மாதம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா மூலம்
இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளும், அதில் இடம்
பெறும் துப்பாக்கிகளும் உண்மையானவையே. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 3
தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்துள்ளனர்.
இந்த வீடியோவில் மிக நெருக்கத்தில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் உண்மையானதே. அதில் எந்த திரிபும் இல்லை.
இருப்பினும்
வீடியோவில் உள்ள சில காட்சிகள் குறித்து புரியவில்லை. ஆனால் இதை வைத்து
இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள
காட்சிகள் அனைத்தும் உண்மையானவையே என்றார்.
ஐ.நா. செய்தித்
தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி இதுகுறித்துக் கூறுகையில், நிச்சயம்
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன்.
சுயேச்சையான,
சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகளை நாம் கண்டறிய
முடியும். மனித உரிமை மீறல்கள், சர்வதே சட்டத்தை மீறிய செயல்களில்
ஈடுபட்டவர்களை கண்டறிந்து நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
தற்போது இந்த வீடியோ உண்மை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியது அவசியம் என்றார்.
ஆனால்
கடந்த ஆண்டு மே மாதமே ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, போரின் கடைசிக்
கட்டத்தின்போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு
மற்றும் ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது இலங்கை அரசு
பாய்ந்தது. இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே பேசிக் கொண்டிருந்தது.
மனித
உரிமைக் கவுன்சிலில் இருந்த பல நாடுகளும் கூட இலங்கைக்கு சாதகமாகவே
செயல்பட்டன. யாரும் நவி பிள்ளையின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. சபையும் கூட இதை பெரிதுபடுத்தாமல்
அப்படியே அமுக்கி விட்டது.
இந்த நிலையில் தற்போது சேனல் 4 டிவி
வெளியிட்ட வீடியோ உண்மையானதே என்று தெரிய வந்துள்ளதால் இலங்கைக்கு பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐ.நா. சபையும் போர்க்குற்ற
விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
ஆனால் பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
சிங்கள ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும்,
கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது
போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே என்று ஐ.நா.
தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்தது. ஹிட்லர் காலத்தை
விட மிக மோசமான கொடூரமான இந்த இனப்படுகொலை அனைவரின் உள்ளங்களையும்
பதறடித்தது.
இந்த நிலையி்ல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, அதன்
உண்மைத்தன்மை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த பிலிப்
ஆல்ஸ்டன் விசாரணை நடத்தி வந்தார். பிலிப் ஆல்ஸ்டன், ஐ.நா. மனித உரிமைக்
கவுன்சிலின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், தண்டனைகள் குறித்த
விசாரணையாளராக உள்ளார். தற்போது தனது விசாரணையை முடித்துள்ள ஆல்ஸ்ட்ன்
அறிக்கையை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளார். அதை ஐ.நா. இன்று வெளியிடுகிறது.
தனது விசாரணை அறிக்கை குறித்து ஆல்ஸ்டன் கூறுகையில்,
தமிழர்களை
இலங்கை வீரர்கள் சுட்டுக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே,
நம்பகமானதே. உடனடியாக இதுகுறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட
வேண்டும். இனியும் இதில் காலதாமதம் இருக்கக் கூடாது.
யார் இந்த
விசாரணையை நடத்துவது என்பது குறித்து நான் கூற முடியாது. ஆனால் நிச்சயம்
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் ஆல்ஸ்டன்.
ஈழப்போரின்
இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை
செய்யப்பட்டனர். கொத்து வெடிகுண்டுகளை வீசியும், புல்டோசர்களை ஏற்றியும்
தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஐ.நா.வின் கணிப்புப் படி கடைசிக் கட்டத்தில் 7000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும்
போரின்போது இலங்கை ராணுவம் செய்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள்
குறித்தும் செய்திகள் வந்தன. ஆனால் ஐ.நா. உள்பட எந்த உலக அமைப்பும்
இதுகுறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை.
மேலும், சரணடைய வெள்ளைக்
கொடிகளுடன் வந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன்,
புலித்தேவன் உள்ளிட்டோரை மண்டியிட வைத்து இரக்கமின்றி கொன்று குவித்ததாக
செய்திகள் வந்தன. இதற்கு உத்தரவிட்டவர் ராஜபக்சேவின் தம்பியான
கோத்தபயாதான் என்றும் ராணுவத் தளபதியாக இருந்தவரும், இப்போது அதிபர்
பதவிக்காக போட்டியிடுபவருமான பொன்சேகா கூறியதால் மேலும் பரபரப்பு
ஏற்பட்டது.
இந்த சமயத்தில்தான் கடந்த ஆண்டு சானல் 4 டிவியில்
தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாகக் கொல்லும் காட்சிகள் அடங்கிய
வீடியோ வெளியாகியது. இது இலங்கை ராணுவத்தின் கொடூரச் செயல்களின் ஒரு
துளியாக கருதப்படுகிறது.
தனது விசாரணை குறித்து ஆல்ஸ்டன் மேலும்
கூறுகையில், 3 தடயவியல் நிபுணர்களின் உழைப்பின் மூலம் கொடூரக் கொலைகள்
அடங்கிய வீடியோ உண்மையானதே என்பதை கண்டறிந்துள்ளோம்.
இந்த வீடியோ
பொய்யானது, திரிக்கப்பட்டது, புனையப்பட்டது என்று இலங்கைத் தரப்பில்
கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்ன அனைத்துமே உண்மை இல்லை என்பதை எங்களது
விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
இந்த வீடியோ
கடந்த 2009, ஜனவரி மாதம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா மூலம்
இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளும், அதில் இடம்
பெறும் துப்பாக்கிகளும் உண்மையானவையே. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 3
தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்துள்ளனர்.
இந்த வீடியோவில் மிக நெருக்கத்தில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் உண்மையானதே. அதில் எந்த திரிபும் இல்லை.
இருப்பினும்
வீடியோவில் உள்ள சில காட்சிகள் குறித்து புரியவில்லை. ஆனால் இதை வைத்து
இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள
காட்சிகள் அனைத்தும் உண்மையானவையே என்றார்.
ஐ.நா. செய்தித்
தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி இதுகுறித்துக் கூறுகையில், நிச்சயம்
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன்.
சுயேச்சையான,
சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகளை நாம் கண்டறிய
முடியும். மனித உரிமை மீறல்கள், சர்வதே சட்டத்தை மீறிய செயல்களில்
ஈடுபட்டவர்களை கண்டறிந்து நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
தற்போது இந்த வீடியோ உண்மை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியது அவசியம் என்றார்.
ஆனால்
கடந்த ஆண்டு மே மாதமே ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, போரின் கடைசிக்
கட்டத்தின்போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு
மற்றும் ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது இலங்கை அரசு
பாய்ந்தது. இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே பேசிக் கொண்டிருந்தது.
மனித
உரிமைக் கவுன்சிலில் இருந்த பல நாடுகளும் கூட இலங்கைக்கு சாதகமாகவே
செயல்பட்டன. யாரும் நவி பிள்ளையின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. சபையும் கூட இதை பெரிதுபடுத்தாமல்
அப்படியே அமுக்கி விட்டது.
இந்த நிலையில் தற்போது சேனல் 4 டிவி
வெளியிட்ட வீடியோ உண்மையானதே என்று தெரிய வந்துள்ளதால் இலங்கைக்கு பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐ.நா. சபையும் போர்க்குற்ற
விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
ஆனால் பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.
ஐ.நா. சபை இப்போ உணர்ந்து என்னா புன்னியம் இவர்களை காபாற்ற முடியவில்லையே...?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.
தண்டாயுதபாணி wrote:
ஆனால் பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
நிட்சயம் இவன் செய்ய மாட்டான்! இவன் இந்தியாவின் கைகூலி!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» ஜப்பானியார்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள்..!
» சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!
» ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ்
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» குழந்தைக்காக தாலாட்டு பாடும் நாய்(கடைசி வீடியோ)- சூப்பர் வீடியோ -
» சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!
» ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ்
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» குழந்தைக்காக தாலாட்டு பாடும் நாய்(கடைசி வீடியோ)- சூப்பர் வீடியோ -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|