புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_lcap அகந்தை மரம்! -சிறுவர் கதை I_voting_bar அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
 அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_lcap அகந்தை மரம்! -சிறுவர் கதை I_voting_bar அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
 அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_lcap அகந்தை மரம்! -சிறுவர் கதை I_voting_bar அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
 அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_lcap அகந்தை மரம்! -சிறுவர் கதை I_voting_bar அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
 அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_lcap அகந்தை மரம்! -சிறுவர் கதை I_voting_bar அகந்தை மரம்! -சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை மரம்! -சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2020 9:34 pm





திருவட்டாறு நந்தவனத்தில் அழகிய மாமரம் பூத்து
குலுங்கியது; எல்லா பருவ காலத்திலும் மாங்காய்கள்
குலுங்கின; வண்ணமயமாக கனிந்து மணம் வீசின.

இதனால் இறுமாப்பு அடைந்து, அகந்தையின் உச்சிக்கு
சென்றது மாமரம்; சார்ந்து வாழும் உயிரினங்களை
எல்லாம் அலட்சியம் செய்தது.

பழங்களை சாப்பிட அனுமதிக்காமல், பறவைகளை
விரட்டி அடித்தது; அணில்களை அதட்டி மிரட்டியது.

நிழலில் ஒதுங்கி இளைப்பாற வந்தோரை நிந்தித்து
துரத்தியது. கனிந்த பழங்கள் எல்லாம், அதன் கர்வத்தால்
அழுகி நாசமாயின.

அந்த பகுதியில் அருவிக்கரை வனதேவதை, அழகிய
வானம்பாடி ஒன்றை வளர்த்து வந்தது. அது, மெல்லிய
குரலால் பாடி, சிறகடித்து காட்டை வலம் வந்து
கொண்டிருந்தது.

கனிகளால் குலுங்கிய மாமரத்தை ஒருநாள் கண்டது;
மகிழ்வுடன் அதில் அமர்ந்து, பழத்தை கொத்தி சுவைக்கத்
துவங்கியது.

ஆத்திரம் அடைந்த மாமரம், ‘ஹூம்… உனக்கு எவ்வளவு
அகங்காரம்; அனுமதியின்றி என் கிளையில் அமர்ந்ததும்
அல்லாமல், பழத்தை வேறு புசிக்கிறாயே… வெட்கமாக
இல்லையா…’ என, கோபத்துடன் கேட்டது.

பதில் சொல்ல முயன்ற வானம்பாடியை, கிளைகளால்
பயங்கரமாக தாக்கியது.

காயம் அடைந்து, அழுதபடியே பறந்தது வானம்பாடி. இதை
அறிந்த வனதேவதை, சினம் கொண்டது. மாமரத்துக்கு பாடம்
புகட்ட சபதம் எடுத்தது. தக்க நேரத்துக்காக காத்திருந்தது.

கார்காலத்தில் சிறகை அசைத்தபடி வந்தது வனதேவதை.
அதை அலட்சியமாக பார்த்தது மாமரம். திடீர் என மின்னல்
வெட்டியது; பயங்கர இடி சத்தம் கேட்டது. மின்னல் கீறி,
தீப்பொறியாக பாய்ந்தது. தீப்பிடித்து எரியத் துவங்கியது
மாமரம். அதன் இலைகளும், கிளைகளும் கருகின.

அலறி துடித்தது மாமரம்; ஒரு பகுதி எரிந்த நிலையில், மேகம்
திரண்டு மழையாக பொழிந்தது; வெம்மையாக வாட்டிய தீயை
அணைத்தது வனதேவதை.

எரிந்தும், எரியாத நிலையில் பரிதாபமாக காட்சியளித்தது
மாமரம். அதன் பசுமையும், அழகும் காணாமல் போய்விட்டன.
மிகவும் சோகத்தில் தத்தளித்தது.

கோபம் தணிந்து, திரும்பியது வனதேவதை.

அதன் பின், மாமரத்தின் அருகே யாரும் செல்வது இல்லை;
அதன் நிழலைத் தேடி மனிதர்களோ, மற்ற உயிரினங்களோ
வரவில்லை; பழங்கள் இல்லாததால் பறவைகள் வரவில்லை.
அகந்தையால் அழிவு வந்ததே என புலம்பி, உறவற்றதை
எண்ணி துடித்தது.

ஒரு நாள் மாலை –

ஒரு சிறுமி அழுதபடியே, மாமரம் பக்கம் சென்றாள்; அவள்
கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்தியபடி, ‘அன்பே… உன்
துயரம் தீர உதவுகிறேன்…’ என்று, விவரத்தை கேட்டது
மாமரம்.

பரிவான வார்த்தையால் நம்பிக்கை பெற்ற சிறுமி, ‘காட்டில்
விறகு சேகரிக்க அனுப்பினார் என் அம்மா; ரொம்ப நேரமாக
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை; வெறும் கையுடன்
போனால் அடி வாங்க வேண்டுமே…’ என்றாள்.

‘பயப்படாதே… என் கிளைகளை ஒடித்து எடுத்துக்கொள்;
யாருக்கும், என் பழங்களைக் கொடுத்து உதவியதில்லை…
உனக்காவது, இந்த கிளைகள் உதவட்டுமே…’ என்றது மாமரம்.

கிளைகளை ஒடித்த சிறுமி, சற்று நேரத்தில் மறைந்தாள்;
வண்ண ஒளியுடன் வனதேவதை அங்கு தோன்றி, ‘அகந்தையை
அகற்றி, நற்பண்புகளை வளர்த்துள்ள மாமரமே… இதோ, உன்
பழைய உருவத்தை கொடுக்கிறேன்… நீ பசுமையாக தழைத்து,
குளிர் நிழலை பொழி; பூத்து குலுங்கி, காய், கனிகளை வழங்கி
எல்லாருக்கும் உதவு…’ என்றது.

அதன்படி, தழைத்து ஓங்கியது மாமரம்; வழிப்போக்கர்கள்
பசுமையான நிழலில் ஒதுங்கி ஓய்வெடுத்தனர். பறவைகள்,
பழங்களை ருசித்து மகிழ்ந்து பாடின. உயிரினங்களுக்கு பயன்
மிக்கதாக மாறியது மாமரம்.

செல்லங்களே… அறியாமை என்ற இருளில் தள்ளி விடும்
அகந்தை; கர்வம் இன்றி வாழ்ந்தால் நன்மைகள் தேடி வரும்
என்பதை, இந்த கதை மூலம் உணருங்கள்.
-
--------------------
அருவிக்கரை அபிநந்தன்
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக