Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
2 posters
Page 1 of 1
லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
![லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் 202006170238044480_China-in-the-Ladakh-region-Sudden-attack-Including-those_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Jun/202006170238044480_China-in-the-Ladakh-region-Sudden-attack-Including-those_SECVPF.gif)
பதிவு: ஜூன் 17, 2020 05:45 AM
புதுடெல்லி,
இந்தியாவுடன் எல்லைகளை பகிரும் முக்கியமான நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன், இந்தியா எப்போதும் நட்பு பாராட்டவே விரும்புகிறது. ஆனால் இந்த நாடுகள் ஒருபோதும் இந்தியாவை நண்பனாக கருதியது இல்லை.
வடமேற்கு எல்லையை பகிரும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் தொடுத்து வெற்றி பெற முடியாததால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அன்றாடம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. அது சர்வதேச அளவில் அம்பலப்பட்டு அடிக்கடி மூக்குடைபட்டு போகிறது.
மறுபுறம் வடகிழக்கு எல்லையை பகிரும் சீனாவோ இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து தனது எல்லையை விரிவுபடுத்த கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு தக்க தருணத்தை தேடிக்கொண்டு இருக்கிறது.
இதனால் அருணாசல பிரதேசம், லடாக், சிக்கிம் என இருநாட்டு எல்லைப்பகுதிகளில் இந்திய-சீன வீரர்கள் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. எல்லைப்பகுதி எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
டோக்லாம் பிரச்சினை
கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு சீன ராணுவம் சட்ட விரோதமாக மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாட்டு படைகளும் மோதல், கைகலப்பில் ஈடுபட்டன.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. டோக்லாம் பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்த பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வந்ததுடன், இரு நாடுகளும் தங்கள் படைகளையும் அங்கிருந்து விலக்கிக்கொண்டன.
லடாக்கில் ஊடுருவல்
இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமுக நிலைக்கு திரும்பிய நிலையில், சீன ராணுவம் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த முறை அவர்களது கவனம் லடாக்கில் இருந்தது. லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர்.
கடந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் சூழல் உருவானது.
படைகள் குவிப்பு
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா-சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகள் குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
ஒருபுறம் படைகள் குவிக்கப்பட்டாலும், மறுபுறம் இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இதை அறிவித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கல்வான் பள்ளத்தாக்குக்கு வடக்கில் இருந்து இந்தியா படைகளை விலக்கி வருவதாக தெரிவித்தார்.
கற்கள், கம்பிகளால் தாக்கினர்
இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள் இந்திய படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.
கற்களாலும், கம்பிகளாலும் தாக்கிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. நேற்று காலைவரை பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 40) என்பது குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை உயர்வு
ஆனால் இந்த மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் பலியாகி விட்டதாக இரவில் தெரியவந்தது. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் நடந்த இந்த இருதரப்பு மோதலில் பலத்த காயமடைந்த மேலும் 17 வீரர்கள் பலியாகி விட்டனர்.
இந்த மோதலில் சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் நடந்திருப்பதும், அங்கு நிலைமை மோசமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை
லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டு, பதற்றம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல், அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. எனவே அங்கு மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் கலந்து கொண்டார். லடாக் எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பிரதமரிடம் விளக்கம்
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது லடாக்கில் நேற்று முன்தினம் நடந்த மோதல் மற்றும் அங்கு தற்போது நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். மேலும் எல்லையில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் இந்தியா தரப்பில் உயிர்ப்பலிகள் நிகழ்வது வாடிக்கையாகி வந்த நிலையில், சீனாவின் அத்துமீறலாலும் இந்திய வீரர்கள் பலியாகி இருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Re: லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
அதிர்ச்சியாகவுள்ளது
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 வீரர்கள் வீரமரணம்
» இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி
» இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|