புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
91 Posts - 61%
heezulia
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
1 Post - 1%
viyasan
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
19 Posts - 3%
prajai
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_m10பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி..!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 5:56 pm

பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி


மண்டல புருடர் வரலாறு

இவர் தொண்டை நாட்டின்கண் உள்ள பெருமண்டூர் எனப்படும் வீரபுரத்தில் பிறந்தவர். வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் என இவரே கூறியது காண்க. வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவர் சமயம் ஆருகதம், அஃது இந்நூல் முகத்து, சொல்வகை யெழுத்தெண்ணெல்லாந் தொல்லைநா ளெல்லையாக, நால்வகையாக்கும் பிண்டிநான்முகன் - எனக் கூறியதனாலும் விளங்கும். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தவர். பல வடசொற்களுள் தமிழ் கூறியுள்ளார். இப்போது அச்சாகியுள்ள நிகண்டுகள் பலவற்றுள்ளும் இதுவே விருத்தயாப்பில் இருத்தலின் யாவரும் படித்தற்கு எளியதாக உள்ளது.



இருமை
இப்பிறப்பு, வருபிறப்பு (இம்மை, மறுமை)
இருவினை
நல்வினை, தீவினை
இருவகைத் தோற்றம்
சரம், அசரம் (அசைதல், அசையாமை)சரம் - இயங்கியற்பொருளென்றும், அசரம் - நிலையியற் பொருளென்றும் தமிழில் வரும்
இருசுடர்
சந்திரன், சூரியன் (இரண்டொளி)
இருமரபு
தாய்மரபு, தந்தை மரபு
இருவகைக் கந்தம்
நற்கந்தம், துர்க்கந்தம்
இருவகையறம்
இல்லறம், துறவறம்
இருவகைப்பொருள்
கல்விப் பொருள், செல்வப்பொருள் - பொருள் பொய்ப் பொருள் முதலாகப் பலவகைப்படினும், பெரும்பான்மை கருதி இரண்டென்றார்.
இருவகைக்கூத்து
தேசிகம், மார்க்கம் - தேசிகம் என்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகம் என்பர் அடியார்க்கு நல்லார். மார்க்கம் என்பது வடுகு
முப்பழம்
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்
மூவகைப்பாவபுண்ணிய வழக்கம்
செய்தல், செய்வித்தல், உடன்படல்
மும்மை
உம்மை, இம்மை, மறுமை (சென்ற பிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு)
முப்பொறி
வாக்கு, காயம், மனம்
முக்காலம்
இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்
முத்தொழில்
படைத்தல், காத்தல், அழித்தல்
மூவிடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை (முறையே யான், நீ, அவன்) முன்னிலை முன்நிற்றலையுடையவன், படர்க்கை பேசும் விஷயம் செல்லுதலையுடைய இடம், படர்தல் - செல்லல்
மூவுலகம்
பூமி, அந்தரம், சுவர்க்கம்
முக்குற்றம்
காமம், வெகுளி, மயக்கம் காமம் - ஆசை, அஃதாவது பொருண்மேற் செல்லும் பற்றுள்ளம். வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காதபோது உண்டாவது, மயக்கம் - கோபத்தின் காரியமாகவுள்ளது. வெகுளி - வெகுள் - பகுதி, இ - விகுதி ( இம்மூன்று சொற்களுள் வெகுளி ஒன்றே தமிழ்ச்சொல் )
முச்சுடர்
சோமன், சூரியன், அக்கினி




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 6:08 pm

மூவகை மொழி
பழித்தல், புகழ்தல், மெய்கூறல்
மூவகை வேதத்தீ
காருகபத்தியம், தக்ஷிணாக்கினி, ஆகவநீயம் - காருகபத்தியம் இல்லறத்தானுக்கு உரிய யாகாக்கினி, தக்ஷிணாக்கினி முன்கூறிய காருகபத்தியத்துக்கு இடப்புறத்திலுள்ளது, ஆகவநீயம் யாகத்துக்கு உரியது
மூவகையுயிர்த்தீ
உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி. உதராக்கினி உதரம் - வயிறு, ஜாடராக்கினி.
முக்குணம்
சாத்துவிகம், இராசதம், தாமதம், (ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல், இவை சாத்துவிகச் செயல்கள்)
இராசதச் செயல்
தானம், தவம், மெய்ம்மை, தருமம்பேணல், ஞானம், கல்வி, கேள்வி
தாமதச்செயல்
பேருண்டி, ஒடுங்கல், சோம்பு, மூரி, காமம், நீதி, கேடு, நித்திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சகம், மூரி - அருள் - தொடர்பில்லாதார் இடத்தும் தோன்றும் உள்ளவுருக்கம்
மூவகைத் தானம்
உத்தமதானம், மத்திமதானம், அதமதானம்
உத்தமதானம்
தருமவழியாற் சம்பாதித்த பொருளை மனம் இந்திரியவழி செல்லாது தடுத்து நோற்குந் தவமுடையாரிருக்குமிடம் சென்று பெற்றுக் கொள்க எனக் குறையிரந்து பணிந்து கொடுத்தல்
மத்திமதானம்
அங்கக்குறைவுடையோர்க்கும், பெண்களுக்கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் (பிரதிபலன் கருதாது) கொடுத்தல்
அதமதானம்
அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் பலன் கருதிக் கொடுத்தல், கண்ணோட்டம் - தாக்ஷண்ணியம், கண் + ஓட்டம் = கண்ணிணது ஓட்டம், கைம்மாறு - கையினின்று மாறுதலையுடையது, பிரதியுபகாரம்




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 6:10 pm

திரிகடுகம்
சுக்கு, திப்பிலி, மிளகு
திரிபலை
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
திரிபுரம்
பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில்
சூரியனுக்குரிய மூவகை வீதி
மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி முறையே ( உத்தராயநம், பூர்வாயநம், தக்ஷணாயநம் என்பார் வட நூலார்) சூரியன் வைகாசி ஆனி ஆடி ஆவணி மாதங்களில் மேடத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான், சித்திரை புரட்டாசி ஐப்பசி பங்குனிகளில் ரிஷபத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். கார்த்திகை மார்கழி தைகளில் மிதுனத்தின் வழியே போந்து சஞ்சரிப்பான். ஆதலால் அந்த மாதங்கள் மேட, இடப, மிதுன வீதிகளெனப்படும்
நால்வகை நிலம்
முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், ( முல்லை காடுங்காடு சேர்ந்த இடமும், உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் அஃதாவது நிமித்தமும் அதன் கற்பு. குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும், உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும், நெய்தல் - கடலுங் கடல்சார்ந்த இடமும், உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும், மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும், உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்)




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 6:13 pm

நாற்கதி
தேவ, மனுட, விலங்கு, நரக பிறப்புகள்
நாலவகையங்கம்
கஜம், ரதம், துரகம், பதாதிகள் ( கஜம் -யானைப்படை, ரதம் - தேர்ப்படை, துரகம் - குதிரைப்படை, பதாதி - காலாட்படை)
நால்வகையிழிசொல்
குறளை, பொய், கடுஞ்சொல், பயனில்சொல்
நால்வகைவேதம்
இருக்கு, யசுர், சாமம், அதர்வம்
நால்வகைப் பொருள்
அறம், பொருள், இன்பம், வீடு. அறம் - திருக்குறள் முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும். பொருள் - அறநெறியால் பொருளீட்டுதல், இன்பம் - அறத்தின் வழி தன் மனைவியோடு அனுபவித்தல், வீடு - மோக்ஷம் - இம்மூன்றனையும் அறவே விடுதல். இதனைக் குறிக்கும் வெண்பா, ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளெஞ்ஞான்றுங் காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு (ஒளவையார்).
நால்வகைக் கேள்வி
மேற்படி நான்கினையு முணர்த்தும் புருஷார்த்த நூல்களைக் கேட்டல்
நால்வகையரண்
காடு, மலை, நீர், மதில்




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 6:15 pm

ஆடவர்க்குரிய நால்வகைக் குணம்
அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். நிறை பகுதி, ஓர்ப்பு - ஆராய்தல், கடைப்பிடி துணிந்த ஒருண்மையினை விடாது பற்றுதல்
பெண்களுக்குரிய நால்வகைக் குணம்
நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு
நால்வகைப் புண்ணியத் தோற்றம்
தவம், ஒழுக்கம், கொடை, கல்வி இவற்றை உடையராய்ப்பிறத்தலே புண்ணியர். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, பயிர்ப்பு - அருவருப்பு, புண்ணிம் - பரிசுத்தம்
நால்வகைப் பொன்
சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம். சாம்பூந்தப் பொன் எல்லாவற்றிலுஞ் சிறந்தது. ஆசிரியர் நக்கீரனார் - நாவலொடு பெயரிய பொலம்புனைய விரிழை - என்பர்.
நால்வகைப்பூ
கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, அல்லது நிலப்பூ
நால்வகை உணவு
உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன
நால்வகையூறுபாடு
எறிதல், குத்தல், வெட்டல், எய்தல்




[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 6:24 pm

நால்வகையுபாயம்
சாமம், பேதம், தானம், தண்டம் ( சாமம் - சமாதானம், பேதம் - பிரித்துக் கோடல், தானம் - பொருள்தரல், தண்டம் - போரிடுதல் )
நால்வகையுயிர்த்தோற்றம்
கருப்பையிற் தோன்றுவது, முட்டையிற் றோன்றுவது, வித்து வேர் முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவது, வேர்வையிற் தோன்றுவது
நால்வகைப்புலவர்
கவி, கமகன், வாதி, வாக்கி
கவியாவான் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன்.
கமகனாவான் - அரும்பொருட்களைச் செம்பொருணடையினவாகக் காட்டி விவகரிப்போன்
வாதியாவான் - ஏதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டி வாதித்துப் பிறன்கொள்கையை மறுப்பவன்
வாக்கியவான் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருளையும் யாரும் விரும்பிக் கேட்குமாறு குற்றமறக் கூறுவோன்.
ஆசுகவி
சபையிலே ஒருவனாற் கொடுக்கப்பட்ட பொருள், பாட்டு, அடி முதலியன அமையும்படி விரைந்து பாடவல்லவன்
மதுரகவி
பொருட்சிறப்பும் சொற்சிறப்பும் தொடையும் தொடைவகைகளும் நெருங்கி உருவக முதலிய அலங்காரங்களும் ஓசையுந் தோன்றும்படி பாடவல்லோன்.
சித்திரகவி
மாலைமாற்று, சுழிகுளம், ஏகபாதம், சக்கரவகை, ஏழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத்தில்லாப் பாட்டு, ஒரு பொருட்பாட்டு. சித்திரகவி முற்காலத்தில் மந்திரோச்சாரணநிமித்தம் சக்கரங்களில் எழுத்துகளை அமைத்துப் பாடப்பெற்று வந்தது. பிற்காலத்தில் யாவரும் எதனையுஞ் சித்திரமாகப் பாடத் தொடங்கினர். அது பொருந்தாது எனத் தொல்காப்பிய வுரையில் நச்சினார்க்கினரியர் கண்டித்தனர்.
சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், ஓரெழுத்துப்பாட்டு, ஓரினப்பாட்டு, காதைகரப்பு, கரந்துறைபாட்டு, கோமூத்திரி, கூட சதுர்த்தம்,
சருப்பதோபத்திரம் என்பவைகளும், எழுத்தும் எழுத்தின் வர்க்கமும் உதாரணமும் நோக்கிப்பாடும்படி வடநூலுள்ளே வைத்த மிறைக்கவிகளும், பிறவும் பாடவல்லோன் சித்திரகவியாம்.
வித்தாரகவி
மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர்தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல், இசை, சாடகம் என்பனவற்றை விரித்துப் பாடவல்லோன்
வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை
பைசாசம், ஆவீடம், மண்டலம், பிரத்தியாலீடம் - பைசாசமாவது - ஒரு காலை ஊன்றி ஒருகாலை முடக்கி நிற்றல், ஆலீடமாவது - வலக்காலை வளைத்து இடக்காலை முன்வைத்து நிற்றல், மண்டலமாவது - இருகாலையும் மண்டலித்து நிற்றல், பிரத்தியாலீடமாவது - வலக்காலை முன்வைத்து இடக்காலை மண்டலித்து நிற்றல்




[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Dec 24, 2009 7:49 pm

மிகவும் அருமையானதோர் தொகுப்பு, நன்றி தமிழன்!



[You must be registered and logged in to see this image.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 7:55 pm

இது இன்னும் உள்ளது நேரயின்மையாள் தொகுக்கவில்லை..! உடன் தொடரும்..



[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 10:12 pm

திரு தமிழன் அவர்களுக்கு
வணக்கம்
நல்லதொரு திரட்டு. உளமார்ந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 10:24 pm


ஐவகையகிற்கூட்டு

சந்தனம், கருப்பூரம், எரிகாசு, (காசுக்கட்டி) தேன், ஏலம்
அரசனைம்பெருங்குழு

மந்திரி, புரோகிதன், தூதன், ஒற்றன், (மாறுவேடங்கொண்டாராய்வோன்) சேனாபதி
அவனைம்பொருஞ்சுற்றம்

படைத்தொழிலாளர், நிமித்தம்பார்ப்பவர், ஆயுள்வேதியர், நட்பாளர், அந்தணர், ஆயுள்வேதியர்- வைத்தியர், அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர், அஃதாவது துறவிகள் இவ்வாறன்றி அந்தத்தை அணவுவோர் அஃதாவது வேதாந்தத்தை நோக்குவார் என்று கூறினர் நச்சினார்க்கினியர்
ஐவகைக் குரவர்

அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்
ஐம்பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
பஞ்சாங்கம்

திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம்
பஞ்சபாதகம்

கொலை, களவு, பொய், கள்ளுண்ணல், குருநிந்தை
பஞ்சசயனம்

மயிற்றூவி, இலவின் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, அன்னத்தூவி,
கூந்தலினைம்பால்

முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள்
ஐவகைத்துரக கதி

மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி (மயூரம்-மயில்)
ஐவகையுணவு

கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்




[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக