புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2020 4:47 pm


மஹாபாரதத்தில் மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன்,
பகவான் கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட மூன்று கேள்விகள் என்ன?
அதற்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள் யாவை?


மஹாபாரதம்

இந்தியாவின் அசைக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று
மஹாபாரதம். பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு இடையே
நடந்த இந்த மாபெரும் போரின் இறுதியில், அதர்மம்
அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநிறுத்தப்பட்டது.

அதற்கு இருதரப்பினரும் எண்ணிலடங்கா உயிர்களைப் பலி
கொடுத்தனர். மஹாபாரதத்தில்உள்ள கதாப்பாத்திரங்கள்
ஒவ்வொன்றும், நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகிறது.

துரியோதனனின் அரியணை மோகம்


மஹாபாரதப் போருக்கு பலர் காரணமாக இருந்தாலும்,
அதில் முக்கியமான காரணம் துரியோதனன் தான்.
துரியோதனனின் அகம்பாவமும், அரியணை மீது அவன்
கொண்டிருந்த மோகமுமே, பாரதப் போர் என்னும் பேரழிவிற்குக்
காரணமாய் அமைந்தது.

மஹாபாரதத்தில் பலரும் அறியாத ஒரு செய்தி ஒன்று உள்ளது.
அது என்னவெனில், மரணப்படுக்கையில் இருந்த துரியோதனனுக்கும்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்தான் அது,
அதனைப் பற்றி இங்கே காண்போம்.

குருஷேத்திரப் போரின் இறுதிநாள்

மஹாபாரதப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த
சமயம், பாண்டவர்களின் தரப்பில் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தது,
கௌரவர் தரப்பிலும் அனைத்து மாவீரர்களும் இறந்திருக்க, இறுதியில்
சல்லியனைத் சேனாதிபதியாகக் கொண்டு, கௌரவப்படை போரைத்
தொடங்கியது.

மாவீரர்கள் யாரும் இல்லாததால், பாண்டவர்களின் கை தொடக்கத்தில்
இருந்தே மேலோங்கியது.

துரியோதனனின் வஜ்ர தேகம்


காந்தாரி, தன் ஒரு புதல்வனாவது உயிரோடு இருக்க வேண்டுமென
நினைத்து, தன் தவ பலத்தால், துரியோதனனின் தேகத்தை வஜ்ரமாக
மாற்றினார். உடல் வஜ்ரமாகிய ஆணவத்தில், துரியோதனன் போரில்
பாண்டவர்களை வதைக்கச் சென்றான்.

அதேசமயம், போரில் சல்லியன், தர்மனால் வதைக்கப்பட்டார்.
இறுதியில் கௌரவ சேனையில் மிஞ்சியிருந்தவர்கள் துரியோதனனும்,
அசுவத்தாமனும் தான்.

பீமன் - துரியோதனன் கதாயுத்தம்
-
 மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள் Main-qimg-b3b471c3c206655fbc6f4e9b34eae3b3
-
துரியோதனன் உடல் வஜ்ரமாக மாறியதால், அவன் மீது நடத்திய எந்த
தாக்குதலும் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அர்ஜுனனின்
அம்புகளால் கூடத் துரியோதனனைத் தடுக்க இயலவில்லை.

இறுதியில் பீமனும், துரியோதனனும், கதாயுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால், பீமனின் யானைப்பலம் கூட, துரியோதனின் வஜ்ரதேகத்தை
எதுவும் செய்ய இயலவில்லை. கிட்டத்தட்ட துரியோதனன் பீமனை
வதைக்கத் துணிய, அவனைத் திசை திருப்ப சகுனியின்
மீது பாண்டவர்களின் பார்வை திரும்பியது. தான் எடுத்த சபதத்தின்
படி சகாதேவன், சகுனியை வதைத்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2020 4:49 pm


துரியோதனனின் வீழ்ச்சி


சகுனியின் மறைவால் நிலைகுலைந்த துரியோதனன், பீமனை வதைக்க,
மீண்டும் போர்க்களத்திற்குச் சென்றான். உடல் முழுவதும் வஜ்ரமாகி
இருந்தாலும், இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி வஜ்ரமாக மாறவில்லை.
அதற்குக் காரணம் கிருஷ்ணரின் லீலைதான்.

மேலும் பீமன், துரியோதனனை தொடை பிளந்து கொள்வேன் என்று
எடுத்த சபதத்தால், யுத்த நெறியை மீறி, துரியோதனின் தொடையை
கதாயுதத்தால் தாக்கினான். இதை சற்றும் எதிர்பாராத துரியோதனன்
மண்ணில் வீழ்ந்தான். அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து
கொண்டிருந்தது.

மரணப்படுக்கையில் துரியோதனன்


தொடை பிளக்கப் பட்டு, குருதி வழிந்தோட, தன் உயிர் பிரிவதை,
தன் கண்ணாலேயே பார்த்துக்கொண்டு, மரணப்படுக்கையில் நரக
வேதனையில் கிடந்தான் துரியோதணன். ஆனால், உயிர் அவனை
விட்டுப் பிரியவில்லை.

காரணம், துரியோதனன் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள்
தான். அவனால் பேச இயலாத சூழ்நிலையில், தன் மூன்று விரல்களை,
மேல்நோக்கி உயர்த்தினான். துரியோதனன் உயிரைப் பிரிய
விடாமல் வைத்திருந்த அந்தக் கேள்விகளை கிருஷ்ணர் அறிந்தார்.

மரணப்படுக்கையில் இருந்த துரியோதனின் உயிரைப் பிரியவிடாமல்
தடுத்த (பகவான் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்ட) அந்த மூன்று
கேள்விகள் எவை ?

(1) போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தைச் சுற்றி
ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால், என்ன செய்திருப்பாய் ?

(2) துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பிறகு, அசுவத்தாமனை
சேனாதிபதியாக்கி இருந்தால், என்ன செய்திருப்பாய் ?

(3) விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால். என்ன செய்திருப்பாய் ?
-
 மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள் Main-qimg-04572a6d1cdf96281eeb68b1db10b7d6
கிருஷ்ணரின் கருணை

துரியோதனனின் சஞ்சலத்தை, பகவான் கிருஷ்ணர் அறிந்தார்.
அனைத்தும் அறிந்த கிருஷ்ணருக்கு, துரியோதனனின் குழப்பத்தை
அறிவது சிரமமா என்ன ?

எவ்வளவு தான் துரியோதனன் கெட்டவனாய் இருந்தாலும், அவன்
படும் துயரத்தை, கிருஷ்ணரால் பார்த்துக்கொண்டு இருக்க
முடியவில்லை. எனவே அவனின் கேள்விகளுக்கு பதில் அளிக்க
முன்வந்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2020 4:49 pm



கிருஷ்ணரின் பதில்கள்


துரியோதனன் அருகில் வந்த கிருஷ்ணர், அவனைக் கருணையுடன்
பார்த்து, அவனின் கைகளை ஆதரவாய்ப் பற்றி, "துரியோதனா,
உனது கேள்விகளுக்கான பதில்கள் இதுதான்" என்று கூறி பேசத்
தொடங்கினார்:

(1) ஒரு வேளை நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை எழுப்ப
முயன்றிருந்தால், நான் நகுலனை அஸ்தினாபுரத்திற்கு
அனுப்பியிருப்பேன். நகுலனின் திறமை - பாண்டவர்களில் ஒருவரான
நகுலனைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.

நகுலன் அளவிற்கு, குதிரை ஓட்ட எவராலும் இயலாது. மழை பெய்யும்
போது ஒரு துளி விழுந்து, அடுத்த துளி விழுவதற்குள், நனையாமல்
நகரும் அளவிற்கு வேகமாய்க் குதிரையை ஓட்டும் திறமை பெற்றவன்
நகுலன்.

ஒரு வேளை துரியோதனன், அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை
எழுப்ப முயற்சி செய்திருந்தால், நகுலனை அஸ்தினாபுரம் நோக்கி
அனுப்பி, அந்தக் கோட்டையைத் தகர்த்திருப்பேன் என்று கிருஷ்ணர்
கூறினார்.

(2) அசுவத்தாமனை ஒரு வேளை படை சேனாதிபதியாக
நியமிக்கப்பட்டிருந்தால், நான் தர்மரைக் கோபப்பட வைத்திருப்பேன்
என்று கிருஷ்ணர் கூறினார்.

ஏனெனில், தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய
மாவீரனையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

(3) ஒரு வேளை விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால்,
நான் (கிருஷ்ணன்) ஆயுதம் ஏந்திப் போர் புரியத் தொடங்கியிருப்பேன்
என்றார் கிருஷ்ணர்.

துரியோதனன் மரணம்

மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன், தன் மனதிலிருந்த
கேள்விகளுக்கு, கிருஷ்ணர் கூறிய பதில்களால் நிம்மதியுற்றான்.
தன் மனசஞ்சலங்கள் நீங்கிய மகிழ்ச்சியில், தன் உயிர் நீத்து,
வீரசொர்க்கம் நோக்கிச் சென்றான்.
-
-------------------------------------
தகவல்: tamil.boldsky.com
படித்து ரசித்த தளம் - கோரா-பதில்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2020 5:55 pm

பகிர்விற்கு நன்றி.

தமிழ் கோரா ரசிக்கும்படியாக இருக்கிறதுக்கு.

ஆங்கில கோரா --சில பேருக்கு ரசிக்கும்படியாக உள்ளது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
RAJESH KANNAN R
RAJESH KANNAN R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 21/10/2018

PostRAJESH KANNAN R Thu Jun 11, 2020 9:32 pm

அருமை. மஹாபாரதம் 18 நாள் போர் பற்றிய எளிமையான இந்த பதிவு போன்ற புத்தகம் இருந்தால் பகிரவும் ஐயா. நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 12, 2020 10:40 am

தற்போது மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கிறது .
அருமையான விளக்கம் .
நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 11:33 am

miga arumai annaa............indru kaalai il irundhu ennal thamizhil adikka mudiyavillaiye.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக