ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:50 am

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2020-04%2F6f976a91-5b54-4527-a27c-8085073fbfdf%2F35_h.jpg?rect=5%2C0%2C988%2C556&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
மகாபெரியவா

அவரிடம் ஆணவத்தோடு வந்தவர்கள் அங்குசம் தீண்டிய
யானையைப் போல அடங்கிப் போயினர். தேவையோடு
வந்தவர்கள் அவை தீர்ந்துபோய்ப் போயினர்.

சுவாமிநாதன், சுவாமிமலையில் அருளும் சுப்பிரமண்யனின்
திருநாமம். சுவாமிமலையின் சிறப்பு என்னவென்றால்
அங்கே சுவாமிநாதன் குருவாக அருள்புரிகிறான்.

அதுவும் தகப்பன்சாமியாக. இந்த லோககுருவாக
தட்சிணாமூர்த்தியாக அவதாரம் செய்தவர் சிவபெருமான்.
அவருக்கே குருவாக சுவாமிநாதன் அமர்ந்திருக்கும் தலம்.

சுவாமிநாதன் என்ற பெயர் மட்டுமே எல்லோரையும் அந்நிலைக்கு
உயர்த்திவிடாது. ஆனால், பகவான் அனுக்கிரக மூர்த்தியாக
அவதரிக்கும்போது சுவாமிநாதனாகவே அவதரிப்பார் என்று
பக்தர்கள் நம்பும்படித் தோன்றி இந்த தேசத்தை, பக்தர்களை
வழிநடத்திய மகான் மகாபெரியவா.
-
`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2019-05%2Ff8a18ac5-0a16-4b61-ab13-5f7382e7ca91%2F146172_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:51 am

87 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்த அந்த மகான்
எளிமை பூண்டு துறவுக்கு அழகு சேர்த்தவர்.
லட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மாற்றியவர்.
இவருடனான பக்தர்களின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை.
அவற்றை அவர்கள் சொல்லும் நேரத்தில் கண்களில் நீரின்றி
அதைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவர்கள்
திண்டாடுவதைக் கண்டிருக்கலாம்.

இதற்கெல்லாம் காரணம் அவர் மடாதிபதியாக வழிநடத்தியவர்
என்பதால் அல்ல மகேஸ்வரனாக அருள்புரிந்து மக்களை வாழ
வைத்தவர் என்பதால்தான்.

அவரிடம் ஆணவத்தோடு வந்தவர்கள் அங்குசம் தீண்டிய
யானையைப் போல அடங்கிப் போயினர். தேவையோடு
வந்தவர்கள் அவை தீர்ந்துபோய்ப் போயினர். நோய் அவர் தரும்
தீர்த்தத்தில் கரைந்து ஓடும். பாக்கியங்கள் அவர் பார்வை
பட்டதுமே பக்தர்களைப் பற்றும்.
இப்படிக் குறையொன்றுமில்லாத கோவிந்தனாக வாழ்ந்தவர்
மகாபெரியவா.

மகா பெரியவா தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு ஆசி மட்டும்
வழங்கிப் பசியோடு அனுப்புபவர் அல்ல. பஞ்ச காலத்தில்
நிரந்தரமாக அன்னதானக் கொடியேற்றி மடத்தில் எப்போதும்
உணவு வழங்க ஏற்பாடு செய்தார். மடத்துக்கு வந்தவர்கள்
ஒருபோதும் பசியோடு போவதில்லை.
-
`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2019-06%2F68e0e60f-f78e-425c-9f85-84c89518b38b%2F151173_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:52 am

கொளுத்தும் வெயிலில் வளையல் விற்றுவந்தார்
ஒரு வியாபாரி. வெயிலுக்குப் பயந்து எல்லோரும்
வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வளையல் விற்காமலே
தெருத்தெருவாய் வளையவந்தார். பகலவன் சூடு மட்டுமல்ல
பசியும் சுட ஆரம்பித்துவிட்டது.

எம்பெருமானே, என்ன சோதனை என்று மனதுக்குள்
வேண்டிக்கொண்டே மடம் இருக்கும் தெருவுக்குள்
நுழைந்தார். சந்நிதிக்குள் வந்த ஜீவனை தெய்வம்
பார்க்காமலா விட்டுவிடும்… `வளையல் வளையல்’
என்னும் குரல் கேட்டு நிமிர்ந்தார் மகாபெரியவா.

அந்த வியாபாரியை அழைத்துவருமாறு உத்தரவிட்டார்.
அவன் தலைபாரத்தை இறக்கிவைக்கச் சொன்னார்.
பகவான் பாதத்தில் பாரத்தை இறக்கிவைத்துவிட்டால்
அப்புறம் கவலை என்ன?

அவனிடம் விசாரிப்பவர்போல சில நிமிடம் ஏதேதோ பேசினார்.
பின்பு அங்கு வந்திருந்த கொஞ்சம் வசதியான பக்தரை அழைத்தார்.

“இன்னைக்கு இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை நாம்தான்
ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
மடத்துக்கு வர சுமங்கலிகள், குழந்தைகளுக்கு இந்த வளையலைக்
கொடுத்தா புண்ணியம்” என்று சொல்ல அந்த பக்தர் பணம்
கொடுத்து வளையல்களை வாங்கிக்கொண்டார்.

ஆனால், வெறும் பணத்தோடு அனுப்பிவிடவில்லை, அவருக்கு
வயிறார உணவிட்டு சாப்பிட வைத்து அனுப்பினார்.
-
`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2019-05%2Fabf7c5ce-1a39-407e-8d99-4cf2d167f066%2F150339_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:55 am

வெளிநாட்டிலிருந்து பெரியவாவின் பரம பக்தர் ஒருவர்
இந்தியாவுக்கு வரப் புறப்பட்டார். இந்தியாவில் முதல்
வேலையாக பெரியவா தரிசனம் என மனதில் நினைத்துக்
கொண்டார்.

அந்த நினைப்பு மாறிவிடாதிருப்பதற்காக விமானம் புறப்பட்ட
கணத்திலிருந்து உபவாசம் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
ஒன்றரைநாள் பயணம். சென்னை வந்திறங்கியதும்
காஞ்சிபுரத்துக்கு கார் பிடித்துப் புறப்பட்டார்.

அந்த நேரம் பெரியவா மடத்து சமையல்காரரை அழைத்து சில
உணவுகளின் பெயர்களைச் சொல்லி உடனே சமைக்கச்
சொன்னார். நிச்சயம் அவை பெரியவா உண்ணும் உணவல்ல.
ஆனாலும் மறுபேச்சு பேசமுடியுமா… அவர் சமைத்து முடிக்கவும்
அந்த பக்தர் மடத்தில் நுழையவும் சரியாக இருந்தது. பெரியவாளை
தரிசனம் செய்ய அவர் ஓடிவந்தார்.

“எதுவும் இப்போ பேச வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு” என்று
சொல்லி அங்கிருந்த ஊழியரை வழிகாட்டச் சொன்னார். பக்தர்
கண்களில் கண்ணீர். உபவாசம் என்று உள்ளூர நினைத்தது இங்கு
உயர்ந்த சந்நிதியில் கேட்டிருக்கிறதே என்று மெய்சிலிர்த்தபடி
வீழ்ந்து வணங்கி உண்ணச் சென்றார்.

பெரியவாளை பக்தர்கள் நினைத்துக்கொள்ளும் கணத்தில்
அவர் நம்மை நினைத்துக்கொள்கிறார் என்பதை இதுபோன்று
பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.
-
`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2020-06%2F7f82729f-eace-4ca7-8162-0c3fe83630a4%2F22.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:56 am

அப்போது பெரியவா, புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார்.
அதை அந்தப் புலவர் தெரிந்துகொண்டு அவரை சந்திக்கத்
தன் காரில் சென்றார். அவருக்கு பெரியவா மேல் பக்தி
எல்லாம் இல்லை. மரியாதைதான். பயணம் நீண்டு ஊர்
போய்ச் சேர இரவாகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை.

பசியோடு ஊரின் எல்லைவரை வந்தவர், அங்கே தங்கியிருந்து
காலையில் பெரியவாளைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தார்.
அப்போது அவரை ஒருவர் வந்து அழைத்து,
“நீங்க பெரியவாளைப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க, உங்களை
உடனே வரச்சொன்னார்” என்றார்.

நடுநிசி. இப்போதுகூட நம்மை வரவேற்கிறாரே அந்த மாமனிதர்
என்று எண்ணிக்கொண்டு முகாமுக்குப் போனார்.

“முதல்ல போய் சாப்டுட்டுவா” என்று அனுப்பினார். அந்த இரவில்
சமையல்காரரை அழைத்து அரிசி உப்புமாவும் பிட்லையும்
செய்யச் சொல்லும்போதே அவருக்குப் புரிந்துபோனது யாரோ
விருந்தினர் வருகிறார் என்று.

சுடச்சுட உணவுப் பசிக்கு தேவாமிர்தம்போல் இருந்தது.
தன் பசியை உணர்ந்து உணவிட்டது தாயுக்குப் பின் பெரியவாதான்
என்று அவர் எண்ணிக்கொண்டபோது அவர் மரியாதை பக்தியாக
மாறியது.

உயிர்களைப் பிடித்திருக்கும் பிணி பசி. பசிப்பிணி தீர்க்கவே
மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்றாள். பசி தீர்க்கவே
வள்ளலார் அணையா அடுப்பை ஏற்றினார். மானுடத்தை
உயர்த்திப் பிடித்த மகான்கள் எல்லோரும் பசி போக்குவதையே
முதல் தர்மமாகக் கொண்டனர்.

மகாபெரியவா இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று
கருதினார். அப்போது அவருக்கு திருமூலரின் வாக்கு நினைவுக்கு
வந்தது.

`யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர் கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 11:58 am

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Vikatan%2F2019-05%2Fade8e55f-4d48-453c-b98d-26ea5e63894e%2F72230_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

திருமூலர்

யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர் கைப்பிடி என்னும் வரி
அவர் மனதைக் கவர்ந்தது. பிடி அரிசித் திட்டத்தைத் தொடங்கினார்.
வீட்டில் சமைக்க உலை வைக்கும்போது ஒருபிடி அரிசியையும்
நயா பைசாவையும் தானத்துக்கு என்று எடுத்துவைத்து விட வேண்டும்.

ஒரு உலை போடும்போது ஒருபிடி என்பது சிறுதுளிதான்.
ஆனால், சிறுதுளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளம் உண்டாகிறது.

மாதம் முழுவதும் சேர்த்த அரிசியை மொத்தமாகச் சேர்த்து சமூக
சேவகர்கள் அன்னமாக்கி அதை அந்த ஊர் இறைவனுக்கு நிவேதனம்
செய்து அதை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

இதுவே பெரியவாளின் கட்டளை. இந்தத் திட்டம் பெரியவா இருக்கும்
வரை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு பசிப்பிணி போக்கியது.

இப்படி சாதி மத பேதமின்றி மனிதத்துவத்தைத் தன் வாழ்வியலாகக்
கொண்டு வாழ்ந்த மகான் மகாபெரியவா.
-
-------------------
-சைலபதி
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்! Empty Re: `யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ – திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum