ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Page 1 of 2 1, 2  Next

Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:53 pm

சினிமா பாடல் வரிகள்- பட்டியல்:-
------------------------
மாலை சூடும் வேளை
-
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது…
-
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
-
அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
-
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
-
சொல்லாமலே யார் பார்த்தது
-
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
-
புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
-
என்ன நான் செய்வேன் உன்னோடு சேர
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:56 pm

மாலை சூடும் வேளை
-
 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Rajini169
-
படம் : நான் மகான் அல்ல
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் :
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்


———————————

ஆ..ஆ.ஆ..ஆ..ஆஆஆஆ

எஸ்.பி.பாலு:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.ஜானகி:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

எஸ்.பி.பாலு:

கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

எஸ்.ஜானகி:

நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்

எஸ்.பி.பாலு:
நீண்ட நேரம் தோன்றுமோ

எஸ்.ஜானகி:

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

எஸ்.பி.பாலு:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க

எஸ்.ஜானகி:
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

எஸ்.பி.பாலு:
ஆடை கொண்டு மூடுமோ

எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.பி.பாலு:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

எஸ்.பி.பாலு: எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:56 pm

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது…
-

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து


—————————

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும்
வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ…வானும் மண்ணும்
நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

………. நிலா காய்கிறது ………

அதோ போகின்றது ஆசை மேகம்
மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைத் தேடுங்கள்

————————————–

………. நிலா காய்கிறது ………
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:57 pm

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
-
படம் : புதுக்கவிதை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்


————————————-

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின்
நிறம் பார்க்குமோ

நீ கொண்டு வா காதல் வரம்
பூ தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் அணை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை

———————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:58 pm

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
-

திரைப்படம்: தேசிங்கு ராஜா
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்
இசை: டி.இமான்
பாடல் வரிகள்- யுகபாரதி

——————————–

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்கத் தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ ஓ இரவலும் கேட்கவா ஓ ஓ
ஹே ஹே…ஹே ஹே…

ஹே…அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்கத் தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ ஓ இரவலும் கேட்கவா ஓ ஓ
ஹே ஹே…ஹே ஹே…

என்னை நான் பெண்ணாக எப்பொழுதுமே உணரல
உன்னாலே பெண்ணானேன் எப்படி எனத் தெரியல
விலகி இருந்திடக் கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்தபின் மூடினால் தவறுதான் இதிலே
ஏனடா இது ஏனடா…கள்வனே பதில் கூறடா
ஹே ஹே…ஹே ஹே…

ஹே…அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா

சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குது
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குது
அணிந்த உடைகளும் நாணமும் விலகிப் போகிறதே
எதற்கு இடைவெளி என்றுதான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே…தேகமே அதில் மூழ்குதே

ஹே ஹே…ம்ஹ்ம்…

ஹே…அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்கத் தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ ஓ இரவலும் கேட்கவா ஓ ஓ
ஹே ஹே…ஹே ஹே…ஹே ஹே…ஹே…ஹே

————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:58 pm

நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
-
படம் : பக்த பிரகலாதா
குரல் : பி.சுசீலா
இசை: கேவி மகாதேவன்
வரி: கண்ணதாசன்


நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….
பரமன் அருள் தரும் சாதனம்…
(நாராயண மந்திரம்)

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 1:59 pm

சொல்லாமலே யார் பார்த்தது
-
படம் : பூவே உனக்காக
பாடல் : சொல்லாமலே
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : சுஜாதா, ஜெயசந்திரன்

---

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே நீ முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா

அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா

இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்….

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது

என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது

அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து

வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து

உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம் காதலா…

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே யார் பார்த்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 2:00 pm

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
-

திரைப்படம்: காசி
இசை: இளையராஜா
பாடகர்: ஹரிஹரன்

——————–

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்

உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு

(என் மன வானில் சிறகை விரிக்கும்)

இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ

மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே தட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்

(என் மன வானில் சிறகை விரிக்கும்)

பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும்… நாளும்
பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம்.. நெஞ்சம்

மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே
வாழ்க்கை எனும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி

(என் மன வானில் சிறகை விரிக்கும்)

—————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 2:01 pm

புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
-

திரைப்படம்: காசி
இசை: இளையராஜா
பாடகர்: ஹரிஹரன்


————————

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே.

பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார்
இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார்

தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி
(புண்ணியம் தேடி காசிக்கு போவார்)

நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்றெண்ணி கொண்டேன்
இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித்தந்தேன்

ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீ தானே
(புண்ணியம் தேடி காசிக்கு போவார்)

எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்
என்ன செய்து இந்த கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்

எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்களில்லை பார்வை உண்டு கண்டு கொண்டேன்
ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையை கேட்டேன்
(புண்ணியம் தேடி காசிக்கு போவார்)

——————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 2:02 pm

என்ன நான் செய்வேன் உன்னோடு சேர
-
படம்- மேயாத மான்
பாடகர்கள் :
பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர்
இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்
——————————


ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன்
உன் கூடா மாற
உன் கூடா மாற

ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : …………………………………

பெண் : ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்..

ஆண் : பால் வெளியே கடல் ஆக்கவா
வளர் பிறையே படகு ஆக்கவா
நிலவொளியே வலை ஆக்கவா
உன் நிழலை சிறை ஆக்கவா

ஆண் : என்ன நான் செய்வேன்
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்
என் தாகம் தீர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன் கூட ஆட
என்ன நான் செய்வேன்
உன் கூட பாட
உன் கூட வாழ
உன் கூட வாழ

ஆண் : என்ன நா செய்வேன்
உன்னோட சேர
என்ன நா செய்வேன்
உன்னோட சேர

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா பாடல வரிகள் - ரசித்தவை Empty Re: சினிமா பாடல வரிகள் - ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum