Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
Page 1 of 1
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ்
பாதிப்பு, தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியாவில், ஒரு நாளின் எண்ணிக்கை
10,000-த்தை நெருங்கிவிட்டது.
இன்னும் ஓரிரு தினங்களில் இது 15,000-த்தை நெருங்கும்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து
வருவதை மனதில் வைத்து, கொரோனாவின் உச்சநிலை
(Peak) எப்போது ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்து
வருகின்றனர்.
ஒரு தரப்பினர் ஜூலை மாதம் முதல் வாரம் என்றும்,
மற்றொரு தரப்பினர் அக்டோபர் மாதம் என்றும் கூறி
வருகின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா,
``இந்தியாவில் பெரும்பானவர்களுக்குப் பரவியிருப்பது
A2a என்ற வகை கொரோனா வைரஸ் என்பதால்தான்,
அதன் தாக்கம் இந்த அளவுக்காவது குறைவாக உள்ளது.
நாம் திட்டமிடுவதற்கும், நோயைக் கையாள்வதற்குமான
உத்திகளைக் கண்டறிவதற்கும் சில நாள்கள் கிடைத்தன.
வேறு வகை வைரஸ் என்றால், அதன் தீவிரத்தைக்
கணித்திருக்கவே முடியாது.
தற்போது, இந்தியாவில் அதிகரிக்கும் எண்ணிக்கையைப்
பார்க்கும்போது, ஜூலை மாத தொடக்கத்தில் உச்சநிலை
ஏற்படும்.
அதற்குப் பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து,
இரண்டாவது அலை (Second Wave) அக்டோபர்
மாதத்தில் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை
சென்னை மட்டுமே பிரச்னையாக இருக்கிறது.
பிற இடங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு
விகிதமும் குறைவாகவே காணப்படுகிறது. சென்னையில்
நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்
மூலம்தான் தமிழகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.
![ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! Vikatan%2F2020-06%2F7bae7b7a-c75b-4a3d-932f-1b98b125a9ff%2FVirologist_jayashree_Sharma](https://images.assettype.com/vikatan%2F2020-06%2F7bae7b7a-c75b-4a3d-932f-1b98b125a9ff%2FVirologist_jayashree_Sharma.jpeg?w=1200&auto=format%2Ccompress)
Virologist Dr.Jayashree Sharma
சீனாவில், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளைக் காட்டிலும்
தனிமைப்படுத்தும் மையங்களே அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டன.
ஒரு வீட்டில், ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால்,
அவரை உடனே அங்கிருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்குக்
கொண்டுபோய்விடுவார்கள்.
அவர் எந்த இடத்திலிருக்கிறார் என்பதுகூட உறவினர்களுக்குத்
தெரியாது. அந்த மையத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு,
தொற்று நீங்கியதும் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
Re: ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இதே
விஷயத்தைத்தான் பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தல்
மையங்களை அதிகரிக்க வேண்டும்.
சென்னை போன்ற மக்கள் நெருக்கடி அதிகமிருக்கும்
பகுதியில் தொற்றுள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது
சரியான பலனைத் தராது.
கேரள மாநிலத்தில்... மக்கள் நெருக்கடி குறைவாக இருக்கிறது,
வீடுகளும் பெரும்பாலும் இடைவெளிவிட்டு அமைந்திருக்கும்
என்பதால், அங்கு வீட்டில் தனிமைப்படுத்துதலில் நோய்
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தப் பகுதிக்கு எந்த
உத்தியைக் கையாள வேண்டும் என்பதைக் கண்டறிந்து
செயல்படுத்த வேண்டும்.
மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடங்களில், வீட்டில்
தனிமைப்படுத்துதலை அனுமதிக்கக்கூடாது. மக்கள்
நெருக்கடி குறைவாக இருக்கும் பகுதிகள், இடைவெளி
விட்டு தனித்தனி வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில்
வீட்டில் தனிமைப்படுத்தலை அனுமதிக்கலாம்.
சென்னையை மட்டும் கவனம் செலுத்தி நோயைக்
கட்டுப்படுத்தும் செயல்களைத் தீவிரப்படுத்தினால்,
உச்சநிலையை எளிதாகக் கடந்துவிட முடியும்.
பொதுவாக எந்தவோர் உலகளாவிய பெருந்தொற்றிலும்
கொள்ளைநோயிலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
சுற்றுச்சூழலே அதன் தீவிரத்தைக் குறைக்கும்.
குறிப்பிட்ட வைரஸ் பெருகுவதற்கான சாதகமான சூழல்
மறைந்துவிடும். இதற்கு முன்பாக ஏற்பட்ட ஸ்பானிஷ்
ஃப்ளூவிலும் அப்படித்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.
கொரோனா விஷயத்தில் சுற்றுச்சூழல் அதன் ஆதரவை
எப்போது நிறுத்திக்கொள்ளும் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
Re: ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
![ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! Vikatan%2F2020-06%2F77c510f1-1793-40e5-8947-912a43f662af%2Fdr_suresh_kumar_](https://images.assettype.com/vikatan%2F2020-06%2F77c510f1-1793-40e5-8947-912a43f662af%2Fdr_suresh_kumar_.jpg?w=1200&auto=format%2Ccompress)
-
தமிழகம் சந்திக்கப்போகும் உச்சநிலையைக் கையாள்வது
எப்படி என்று விளக்குகிறார், தொற்றுநோய் மருத்துவர்
சுரேஷ் குமார்.
``ஊரடங்கைத் தளர்த்திய நாடுகள் அனைத்தும் கொரோனா
நோய் கட்டுக்குள் வந்ததும்தான் அந்த செயலைச் செய்தன.
ஆனால், இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டிருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தி
இருக்கிறோம்.
அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும்.
இந்தியாவில், ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல்
வாரத்தில் உச்சநிலையை அடையும்.
அதன்பிறகு சற்று தளர்வு ஏற்பட்டால்தான் இரண்டாம் அலை
ஏற்படுமா என்று கூற முடியும்.
கொரோனா நோயாளிகளில் 85 சதவிகிதம் பேர் மிதமான
பாதிப்பு அல்லது அறிகுறிகளற்றவர்கள்தான். இவர்களை
எல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.
தீவிர பாதிப்புள்ளவர்கள், வென்டிலேட்டர் உதவி தேவைப்
படுபவர்கள், முழு நேரமும் மருத்துவக் கண்காணிப்பில்
இருக்கவேண்டிய நிலையிலிருப்பவர்களை மட்டுமே
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் மிதமான பாதிப்புள்ளவர்களையும்
மருத்துவமனையில் அனுமதித்திருப்பதால், மருத்துவமனை
படுக்கைகள் நிரம்பிவிட்டன.
கூடுதல் நோயாளிகள் வரும்போது அவர்களை அனுமதிக்க
இடமில்லாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன.
தேவையில்லாமல் அதிக மனிதவளமும் வீணாகிறது.
மிதமான பாதிப்புள்ளவர்களை வீட்டுக் கண்காணிப்பில்
வைத்து, தீவிர பாதிப்புள்ளவர்களை மட்டும்
மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளித்தால்,
உச்சநிலையின்போது எளிதாக நோயாளிகளைக்
கையாளலாம்" என்று தெரிவித்தார்.
---------------------------
ஜெனி ஃப்ரீடா
நன்றி- விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!
» கொரோனாவின் அருமை!
» கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்'
» இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரான்ஸ் - 91 பேர் பலி
» விளக்கொளி, விளக்கும் வழி
» கொரோனாவின் அருமை!
» கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்'
» இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரான்ஸ் - 91 பேர் பலி
» விளக்கொளி, விளக்கும் வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|