ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Go down

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Empty ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Post by ayyasamy ram Thu Jun 04, 2020 11:42 am

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2F34ae00b3-50cd-4948-b4cd-1822a337cb7e%2Fvikatan_2F2019_05_2F9992b2bc_0731_415f_af5f_ccdeaa5af1cf_2F270862
-


ஸ்ரீஅன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள்
தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள்
நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.

இந்தியா ஒரு ஞானபூமி. இங்கு ஞானிகள் உருவாவது
போல உலகெங்கிலும் உள்ள ஞானிகளையும் இந்த
ஞானபூமி காந்தம்போலக் கவர்ந்திழுக்கும்.

இந்தியாவின் ஞானப் புதையல்களான வேதங்கள்,
இதிகாசங்கள், கீதை போன்றவை தொடர்ந்து மேலை
நாட்டவரின் ஞானத் தேடலுக்கு உதவுவனவாகவும்
அவர்களை இந்தியாவை நோக்கி இழுப்பவையாகவும்
இருந்தன.

அப்படி இந்தத் தேசத்தின் ஆன்மிக ஞானத்தால்
கவர்ந்திழுக்கப்பட்டவர் ஶ்ரீ அன்னை.
--
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2Fd096b274-2895-4ea1-8e5b-1b8c2e7fbccc%2F131731_thumb


Last edited by ayyasamy ram on Thu Jun 04, 2020 11:55 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Empty Re: ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Post by ayyasamy ram Thu Jun 04, 2020 11:43 am


1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா.
இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.
தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது
முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார்.

ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும்
ஞானத்தையும் பெருக்கிக்கொண்ட மிரா, முதன்
முதலாகப் பகவத் கீதையின் பிரெஞ்சு மொழி
பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

அந்த நூல் அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தான் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின்
தேடலுக்கான பதில் பாரத தேசத்தில் உள்ளது என்று
எண்ணத்தொடங்கினார்.

எனவே, இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அன்னை பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவர் கனவில்
தாடி வைத்த யோகி ஒருவர் தோன்றுவார். மிரா கண்
விழித்ததும் அந்த ஞானியின் முகத்தை வரைந்து
வைத்தார்.

அவர் பாரத தேசம் வரும் நாளும் வந்தது. பாரத
தேசத்தின் ஆன்மிகக் கல்வியை மிக விரைவிலேயே
அன்னை கற்றுத் தேர்ந்தார்.

குறிப்பாக, யோகக் கலைகளில் அவரின் ஆர்வமும்
பயிற்சியும் அபரிமிதமாக இருந்தது. அன்னை
புதுவையை அடைந்தபோது அங்கு ஒரு ஞானியைக்
கண்டார்.

அவர்தான் கனவில் கண்ட மகான் என்பதை அறிந்து
கொண்டார். அவர் பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதை
அறிந்துகொண்ட மிரா அவரின் திருவடிகளிலேயே
தங்கிவிட முடிவு செய்தார். அந்த மகான் ஶ்ரீ அரவிந்தர்.
-
------------
-
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Vikatan%2F2019-11%2F9cff9a32-b753-4b76-91d9-4b112843d760%2Fvikatan_2F2019_05_2F5493e9ce_a724_451c_b2d7_8199a6f7e28b_2F134044_thumb


Last edited by ayyasamy ram on Thu Jun 04, 2020 11:54 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Empty Re: ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Post by ayyasamy ram Thu Jun 04, 2020 11:43 am


மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர்
அவரை அன்னை என்று அழைக்கத் தொடங்கினர்.
அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே
அவரை அழைக்கத் தொடங்கினர்.

அன்னையின் தரிசனம் மாத்திரமே தங்களின் குறைகளைப்
போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை
நிகழ்த்தியது. அன்னை, தன் பக்தர்களுக்குச் சொல்லிய
ரகசியம் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்யும்
எந்தப் பிரார்த்தனையும் வீணாகாது என்பதுதான்.

தினமும் பக்தர்கள் வந்து அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பித்து
ஆசி பெற்றுச் செல்லத் தொடங்கினர்.

அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர்.
மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்
என்பார். மனிதமனமும் மலர்போல தூய்மையாய் மலர
வேண்டியது என்பார்.

மலர்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் மனதில் இறைவனின்
கருணையைப் பெறலாம் என்று உபதேசித்தார். மலர்கள்,
தூய்மையானவை என்றும், அதன் அழகு மனிதர்களுக்குப்
புத்துணர்ச்சி அளிப்பவை என்று அவற்றைப் புகழ்வார்.

தன் ஆசிரமத்தில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கி
அதில் பல மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.
-
எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார்.
குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்க குறைகள் விலகும்
என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்க சோதனைகள்
நீங்கும் என்றும்,

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச்
சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள்
இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக்
கொண்டு செய்கிறார்கள்.


"மனித வாழ்வின் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது
பிரார்த்தனைகளே. எல்லா பிரார்த்தனைகளும்
பலிக்குமென்றாலும், இறைவன் நோக்கத்துக்கெதிரான எந்த
பிரார்த்தனையும் எப்போதுமே பலிக்காது.

கவனமான பார்வையை நமது லட்சியத்தின் மீது வைக்க
வேண்டும். அந்தப் பார்வைதான் லட்சியத்தைத் தெளிவோடு
அடைவதற்குத் துணை செய்யும்.

இதை இச்சா சக்தி பயிற்சியின் வழியாக எளிதாக்கலாம்.
ஞானம் பெறலாம்" என்பது ஸ்ரீஅன்னையின் பரம தீர்க்கமான
உபதேசம்.


Last edited by ayyasamy ram on Thu Jun 04, 2020 11:52 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Empty Re: ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Post by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am


ஸ்ரீஅரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த ஆசிரமத்தில்
ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். சாதி, சமயம், மொழி,
இனம் என எந்த வேறுபாடுகளும் இன்றி மக்கள்
வாழ்வதற்கான அடிப்படை கருத்துகளோடு செயல்படும்
வகையில் 'ஆரோவில்' எனும் தன்னாட்சி நகரம் ஒன்றை
உருவாக்கினார்.

இன்றும் அந்தக் கிராமம் குளோபல் வில்லேஜ் என்று
போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து
தங்கத் தொடங்கினர். அன்னையின் புகழ் பரவத்
தொடங்கியது.

அன்னை, 1973-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று உலக வாழ்வை
நீத்தார். அன்னை, ஸ்தூல உடல் மறைந்துவிட்ட பின்னும்
சூட்சும உடலால் அவரின் அடியவர்களுக்கு அருள
ஆரம்பித்தார்.

அன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின்
துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். அன்னையின்
படத்துக்கும் சமாதிக்கும் பக்தர்கள் மலர் அலங்காரங்கள்
செய்து வழிபடத் தொடங்கினர்.

பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன
என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
-
அன்னையைத் தொழுது மலர்போல மலரும் மனம்
வேண்டுவோம்.
-
-மு.முத்துக்குமரன்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!) Empty Re: ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
» பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum