ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு சில மணி :

Go down

உறவுகளுக்கு சில மணி : Empty உறவுகளுக்கு சில மணி :

Post by ayyasamy ram Wed Jun 03, 2020 4:43 pm

உறவுகள் தான் மனிதனின் பலமே. துயரங்களில் ஆறுதல்
அளிக்க, இன்ப துன்பங்களில் உரிமையோடு பங்கேற்க
உறவுகள் வேண்டும். உறவுகளுக்காக சில
மணித்துளிகளை ஒதுக்க முயற்சி எடுங்கள்.

உலகையே மனிதன் உரிதாக்கி கொண்டாலும்,
உறவுகள் இல்லையேல் பயனேதும் இல்லை.
உறவுகளை நேசிப்போம்,
உறவுகளால் வாழ்வுதனை வாசிப்போம்.

அடுத்தவர்களுடைய துாற்றுதலுக்கு நாம் காரணமாக
இருக்க கூடாது என்பதில் என்ன தான் கவனமாக
இருந்தாலும், சில நேரங்களில், சில மனிதர்களின்
செயல்பாடுகள் நமக்கு எதிர் மறையாக அமைந்து
விடுகிறது.
நாளை செல்லும் பாதையை இன்றே யார் அறிவார்.

”இன்பமும், துன்பமும், இயற்கையின் நியதி.
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி” என்று கவியரசர்
கண்ணதாசன் கூறுவார். துன்பங்கள் வரட்டும், வந்து
போகட்டும். அப்போதுதான் உலகம் தெரியும், உறவுகள்
புரியும்.

எல்லோருக்கும் நல்லவர்கள், தங்களை இழந்து
விடுவார்கள் என்பதுதான் உண்மை. நல்லவர்களாக
இருப்பது தான் எத்தனை பெரிய கடினம். ஏதோ ஒரு
தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக,
நாம் யாருக்கோவேண்டாதவர்களா ஆக்கப்படுகிறோம்.

அல்லது, நமக்கு அவர்கள் வேண்டாதவர்களாகி
போகிறார்கள்.நாம் யாரையும் குறை கூறக் கூடாது.
காரணம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பழைய
உறவுகளை தக்க வைப்பதும், புதிய உறவுகளை துளிர்க்க
வைப்பதும் அவசியமானது.

உறவுகளை, உறவினர்களை சுமையாக கருதாதவரை,
நாம் மகிழ்ச்சி கடலில் நீந்த முடியும்.

குறைகளை அடுக்காதீர்கள் : நம் கண்வழியே பார்க்கும்
போது, ஆனந்தமாக தெரியும் அடுத்தவர் வாழ்க்கை,
அவர்கள் கண்வழியே சுமையாக தெரிகிறது. தாழ்ந்த
உயிரையும் தன்னைப்போல் நேசிக்க கற்று கொள்ளுங்கள்.

ஒருவரைவிமர்சிக்கும்போது, சகட்டு மேனிக்கு குறைகளை
மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களின் நல்ல பண்பை
பாராட்டுங்கள். அதுதான் நாகரிகம்.

கால சக்கரம் :

‘குளம் வற்றி விட்டதே என்று கொக்கு கவலைப்பட கூடாது,
இதோ மழை வருகிறது என்று நதி குதிக்க கூடாது,
அதோ கோடை காலம் வருகிறது’ என்று கண்ணதாசன்
கூறியதை யாரும் மறுக்க முடியாது. நெருக்கமான குடும்ப
உறவுகள், மனிதர்களை நெறி பிறழாமல் வாழ வைக்கிறது.

சில உறவுகள் அறுந்த பின் அவைகளை புதுப்பிப்பது
என்பது நடக்காத காரியம். பற்பசையிலிருந்து, பிதுக்கி
எடுத்த பசையை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது
தான் அறுந்த உறவை மீண்டும் புதுப்பிப்பது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறவுகளுக்கு சில மணி : Empty Re: உறவுகளுக்கு சில மணி :

Post by ayyasamy ram Wed Jun 03, 2020 4:44 pm


பெண்ணின் அழகு :


மிகவும் பொறுமை மிகுந்த பெண்ணின் கோபத்தில்
ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்று போகும்.

ஒரு பெண் எவ்வளவு மகிழ்ச்சியாகஇருந்தாலும், துன்ப
சூழலில் இருந்தாலும், இன்ப, துன்ப உணர்ச்சிகளை
வெளியே காட்டக்கூடாது.

அதுதான் பெண்ணிற்கு அழகு.வீட்டிற்கு தேவை நல்ல
மனைவி, நல்ல மருமகள் என்று சான்றோர்கள் எவ்வளவு
போதித்தாலும், தன் வீட்டுக்கு ஒரு மருமகளை தேர்வு
செய்யும்போது, வரவு எவ்வளவு இருக்கும் என்று
சிந்திக்க கூடாது.

குலமகள் வாழும் இனிய குடும்பம், கோயிலுக்கு
இணையாகும் என்பார்கள். பெண் தேடும்போது,
பணமும் பத்தாக இருக்க வேண்டும், பிள்ளையும்
முத்தாக இருக்க வேண்டும்,என்று நினைக்க கூடாது.

ஏதோ ஒன்று தான் அமையும் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும் இதுதான் வாழ்க்கை காட்டும்
அனுபவம்.

சொர்க்கம் :


சந்தோஷமும், நிம்மதியும் பணத்தாலும், கார், வீடு
போன்ற வசதிகளாலும் கிடைப்பதில்லை. தனது
மனைவியிடமே நல்லுறவை வளர்த்து கொள்ள
ஒருவரால் முடியவில்லை என்றால், அவர் வேறு
யாரிடமும் நட்பையும், உறவையும் வளர்த்து கொள்ள
முடியாது.

வெளியே போன சுவாசம், உள்ளே வராமல் நின்று
விட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு
நிலையற்றது. ஆகவே கண்மூடி, மேனியை மண்
மூடும் முன்னரே, வாழ்க்கையை அணுக வேண்டும்.

பிறப்பை நரகமாக்கி இறப்பில் சொர்க்கம் தேடாமல்
வாழும் வாழ்க்கையிலேயே சொர்க்கத்தை நாம் தேட
வேண்டும்.
-
---------------------------
-மகா.பாலசுப்பிரமணியன்,
எழுத்தாளர், காரைக்குடி.
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum