ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன”

Go down

கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன” Empty கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன”

Post by சிவா Thu Jan 07, 2010 11:28 pm

கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன” Church1

கிழக்கு மலேசியாவில் உள்ள தேவாலயங்கள் விரிவடைந்து வரும் “அல்லாஹ்” சர்ச்சை மீது வருத்தமடைந்துள்ளன. நாளை பள்ளிவாசல்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மக்கள் ஒன்று கூடுவதை அரசாங்கம் தடுக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அந்தப் பிரச்னையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்பதற்காக சில தேவாலயங்கள் கருத்துக் கூற மறுத்து விட்டன. ஆனால் அந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான கிழக்கு மலேசிய அமைச்சர்கள் தவறியிருப்பது பற்றி பல தேவாலயங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

முஸ்லிம் அல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது சதி செய்வதற்கு ஒப்பாகும் என்றும் அவை கருதுகின்றன.

“அந்த விவகாரம் கத்தோலிக்க தேவாலயத்தை மட்டும் பாதிக்கவில்லை. காரணம் கிழக்கு மலேசியாவில் தேசிய மொழியைப் பயன்படுத்தும் எல்லா தேவாலயங்களும் “அல்லாஹ்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றன”, என்று கூச்சிங்கில் உள்ள சரவாக் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் திருத்தந்தை ரிச்சர்ட் சிம் கூறினார்.

அந்த சொல் மீது எந்த சமயத்திற்கும் ஏகபோக ஆதிக்கம் கூடாது என்றும் “அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை அது மீறுகிறது”, என்றும் கூறிய அவர் எல்லா கிறிஸ்துவர்களும் அது குறித்துக் கவலைப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

கூச்சிங்கில் ஆங்கில, சீன மொழிகளில் மத போதனைகளின் போது அந்த வார்த்தையை தாம் பயன்படுத்துவது இல்லை என்றாலும் கிராமப் புறங்களில் பணியாற்றும் போது அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாக சிம் கூறினார். காரணம் கிராம மக்களில் பெரும்பாலோர் பாஹாசா மலேசியாவைப் பேசுகின்றனர். அவர்களுக்கு “அல்லாஹ்” என்னும் சொல் சௌகரியமாக இருக்கிறது.

அந்த விவகாரம் புதிதல்ல என்று கூறிய சிம் கிழக்கு மலேசியாவில் மிகப் பெரிய தேவாலயமான சிடாங் இஞ்சில் போர்னியோ (எஸ்ஐபி) தனது நடவடிக்கைகளில் நெடுங்காலமாக அந்த சொல்லைப் பயன்படுத்தி வருவதை சுட்டிக் காடினார்.

ஆனால் தொடர்பு கொள்ளப்பட்ட போது அந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்பதற்காக எஸ்ஐபி கருத்துரைக்க மறுத்து விட்டது. சரவாக் ஆங்கிலிகன் தேவாலயமும் கருத்துக் கூறுவதற்கு மறுத்து விட்டது.

முஸ்லிம் அல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது தமது தேவாலயத்தைச் சேர்ந்த இபான் டயாக் மக்களுக்கு “நியாயமற்றதாக” இருக்கும் என்று எதிர்விளைவுகளுக்கு அஞ்சி பெயர் குறிப்பிட விரும்பாத சரவாக் தேவாலய அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த பிரச்னை தனது இபான் உறுப்பினர்களை பெரிதும் பாதித்து விட்டதாக கிறிஸ்துவ சமயத்தின் இன்னொரு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். ஏனெனில் கடந்த ஒராண்டுக்கு மேல் அவர்கள் பைபிள் இல்லாமல் வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

“அந்த இபான் பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. ஆகவே அவர்கள் தற்போது இந்தோனிசிய பைபிளைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஆங்கில மொழி பேசுகின்றவராக இருந்து உங்களிடம் யாராவது ஒருவர் சீன மொழியில் பேசினால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது மிகவும் இயற்கைக்கு மாறானதாக இருக்கும்”, என்றும் அவர் சொன்னார்.

சக மனிதர்களுக்கு மரியாதை இல்லை

கிழக்கு மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு அந்த விஷயம் மீது “ஏமாற்றம் அடைந்துள்ளதாக” அந்த அதிகாரி குறிப்பிட்டார். காரணம் அது “நியாயமற்றது, சக மனிதர்களுக்கு அரசாங்கம் மரியாதை காட்டவில்லை என்பதை அது காட்டுகிறது” என்றார் அவர்.

கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவுக்கும் இடையில் உள்ள பிளவை அந்த விவகாரம் எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார். அந்த விஷயத்தை கிழக்கு மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் பிரச்னையாக்கியதே கிடையாது.

பிரச்னை தங்களது நடவடிக்கைகளைப் பாதித்த போதிலும் அதன் அனலை நாங்கள் உணரவில்லை என்று சபாவில் உள்ள ஒரு பாதிரியார் கூறினார்.

“சபாவில் உள்ள தேவாலயங்களும் அல்லது எனக்குத் தெரிந்து கோத்தாகினாபாலுவில் உள்ள தேவாலயங்கள் தங்களது மத போதனைகளிலும் பைபிளிலும் இன்னும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன. எங்களுக்கு பிரச்னை ஏதும் இல்லை.”

எல்லாம் இங்கு வழக்கம் போல் தான் இருப்பதாக கோத்தா கினாபாலுவில் இயங்கும் இனானாம் கினோசான் பாப்டிஸ் கிறிஸ்டியன் சங்கத்தின் பாதிரியார் ஜேம்ஸ் கமாட் கூறினார்.

தடைக்கு அவர் எதிரானவரா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ” அது குழப்பத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் நாம் அனைவரும் ஒரே கடவுளைத்தான் நம்புகிறோம்”, என்றார்.

பாஹாசா மலேசியாவைப் பெரும்பாலும் பயன்படுத்தும் தேவாலயங்களுக்கு எல்லா போதனைகளையும் பைபிள்களையும் பாடல்களையும் மாற்றுவது சிரமமாக இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.


கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன” Empty Re: கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன”

Post by சிவா Thu Jan 07, 2010 11:28 pm

முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல

அந்தத் தடை விதிக்கப்பட்டால் கடவுளைக் குறிப்பதர்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைத் தவிர வேறு பல சொற்களும் இருப்பதாகவும் கமாட் கூறினார். ‘பாப்பா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது உண்மையில் விரும்பத்தக்கது என்றார் அவர்.

ஆனால் சரவாக்கில் உள்ள அவரது சகாக்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ‘அல்லாஹ்’ என்ற சொல் ‘துஹான்’ என்ற சொல்லிலிருந்து மாறுபட்டது என்று அவர்கள் கூறினர். அவை வெவ்வேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

“அல்லாஹ்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘துஹான்’ என்ற சொல் அமைய முடியாது. காரணம் ‘துஹான்’ என்பது “பிரபு(லார்ட்)என்பதின் மொழி பெயர்ப்பாகும். அதே வேளையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பு ‘கடவுள்’ என்பதாகும்.

எது எப்படி இருந்தாலும் இபான்கள் ‘அல்லாஹ்’ என்று கூறும் போது உச்சக் கடவுளைக் குறிக்கின்றனர். முஸ்லிம்களின் இறைவனை அல்ல,” என்று அந்த தேவாலய அதிகாரி சொன்னார்.

இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு கொஞ்சம் கூட இடமில்லை என்று மேலும் கூறிய அவர் முஸ்லிம்கள்,” முட்டாள்கள் அல்ல. எங்களுடைய நம்பிக்கைக்கும் அவர்களுடைய நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர முடியும்,” என்றார்.

1970களில் மலாய்க்காரர்கள் மிஷன் பள்ளிகளில் பயின்றுள்ளனர். பைபிள்களையும் படித்துள்ளனர். அவர்கள் யாரும் குழப்பம் அடையவில்லை,” என்றும் அவர் சொன்னார்.

முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியும் என்பதற்காக கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த விரும்புவதாக சில தரப்புக்கள் கூறுவதை அவர் நிராகரித்தார்.

“நாங்கள் முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முயலவில்லை. நாங்கள் அதனை செய்தால் கைது செய்யப்படுவோம். அந்த நிலைமைக்கு எங்களை ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும் ? என்றார் அவர்.

கிறிஸ்துவ சமயத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முஸ்லிம்கள் அணுகும் போது தேவாலயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்த அதிகாரி தொடர்ந்து தெரிவித்தார்.

“முஸ்லிம்கள் எங்களை அணுகினால் தங்களது சொந்த ஆய்வை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கூறி விடுவோம். ஏனெனில் அவர்கள் திரும்ப வந்து, ” இந்தத் தேவாலயம் எங்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது” என்று கூறலாம், ஆகவே நாங்கள் உண்மையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனை ஒப்புக் கொண்ட கமாட் தேவாலய உறுப்பினர்கள் சமய சடங்குகளின் போது மட்டுமே ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நாங்கள் அந்த சொல்லை பொது மக்களிடையே பயன்படுத்துவது இல்லை. ஆகவே சமூகம் அதனை மதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.


கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன
» மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» எல்லாம் "அழகிரி' மயம் போஸ்டரால் சர்ச்சை : தி.மு.க.,வினர் மீது புகார்
» இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; உ.பி.,யில் சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum