Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
» கொரோனா அப்டேட் - மே 29
Page 1 of 1
» கொரோனா அப்டேட் - மே 29
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது
-
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக
அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் அங்கு 85 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உ
யிரிழந்துள்ளனர். இதனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பலி
எண்ணிக்கை 1,982 ஆக உயரந்துள்ளது.
மேலும் 698 பேர் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா
பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,616 ஆக
அதிகரித்துள்ளதாக அம்மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.
--
தினத்தந்தி
-
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக
அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் அங்கு 85 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உ
யிரிழந்துள்ளனர். இதனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பலி
எண்ணிக்கை 1,982 ஆக உயரந்துள்ளது.
மேலும் 698 பேர் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா
பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,616 ஆக
அதிகரித்துள்ளதாக அம்மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.
--
தினத்தந்தி
Re: » கொரோனா அப்டேட் - மே 29
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் - டிரம்ப் வருத்தம்
-
வாஷிங்டன்,
உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி
உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா
வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி,
ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான
மைல்கல்லை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் எனப் பதிவிட்டுள்ளார்.
-
தினத்தந்தி
-
வாஷிங்டன்,
உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி
உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா
வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி,
ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான
மைல்கல்லை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் எனப் பதிவிட்டுள்ளார்.
-
தினத்தந்தி
Re: » கொரோனா அப்டேட் - மே 29
தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், போக்குவரத்துக்கு தடை - கர்நாடக அரசு
-
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும்
வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி
வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய்
கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.
தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர்
மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக
உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
அதிகரித்தபடியே உள்ளது.
நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர்
அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே மே 12 முதல் 15 ரெயில்கள் (எதிர் தடத்தில் 15 ரெயில்கள்) இயக்கப்பட்டன.
இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து
சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து
மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
மராட்டியம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரெயில்கள் மற்றும் வாகனங்களுக்குத்
தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை
எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில்
புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மராட்டியத்தில்
இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும்
பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும்.
நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே
அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி
எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.
-
தினத்தந்தி
-
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும்
வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி
வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய்
கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.
தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர்
மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக
உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
அதிகரித்தபடியே உள்ளது.
நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர்
அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே மே 12 முதல் 15 ரெயில்கள் (எதிர் தடத்தில் 15 ரெயில்கள்) இயக்கப்பட்டன.
இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து
சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து
மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
மராட்டியம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரெயில்கள் மற்றும் வாகனங்களுக்குத்
தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை
எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில்
புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மராட்டியத்தில்
இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும்
பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும்.
நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே
அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி
எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.
-
தினத்தந்தி
Re: » கொரோனா அப்டேட் - மே 29
சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2,324 பேருக்கு பாதிப்பு
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக
அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக
அதிகரித்துள்ளது.
6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில்
எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி
வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,324 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,646 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,393 பேருக்கும்,
அண்ணாநகரில் 1,089 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 1,322 பேரும், தேனாம்பேட்டையில் 1,412 பேரும்,
திருவொற்றியூரில் 377 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 794 பேருக்கும், பெருங்குடியில் 217 பேருக்கும்,
அடையாறில் 178 பேருக்கும், அம்பத்தூரில் 516 பேருக்கும் கொரோனா
தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் 178 பேருக்கும், மாதவரத்தில் 280 பேருக்கும்,
சோழிங்கநல்லூரில் 219 பேருக்கும், மணலியில் 175 பேருக்கும் தொற்று
உறுதியாகியுள்ளது.
மாலைமலர்
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக
அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக
அதிகரித்துள்ளது.
6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில்
எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி
வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,324 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,646 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,393 பேருக்கும்,
அண்ணாநகரில் 1,089 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 1,322 பேரும், தேனாம்பேட்டையில் 1,412 பேரும்,
திருவொற்றியூரில் 377 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 794 பேருக்கும், பெருங்குடியில் 217 பேருக்கும்,
அடையாறில் 178 பேருக்கும், அம்பத்தூரில் 516 பேருக்கும் கொரோனா
தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் 178 பேருக்கும், மாதவரத்தில் 280 பேருக்கும்,
சோழிங்கநல்லூரில் 219 பேருக்கும், மணலியில் 175 பேருக்கும் தொற்று
உறுதியாகியுள்ளது.
மாலைமலர்
Similar topics
» கொரோனா அப்டேட் - மே 24
» கொரோனா அப்டேட் - மே 6--2020
» கொரோனா அப்டேட் - மே 26-2020
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
» கொரோனா அப்டேட் - மே 6--2020
» கொரோனா அப்டேட் - மே 26-2020
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|