ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Go down

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964 Empty இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Post by ayyasamy ram Wed May 27, 2020 3:21 pm

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964 201604191100091827_india-first-prime-minister-Nehru-memorial-day__SECVPF

ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில்
1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான
மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த
குழந்தையாக பிறந்தார்.

சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம்
மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால்
நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற
வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள
ஹார்ரோவிற்கு அனுப்பினார்.


ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும்
விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ்
பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி
சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து
கொண்டார்.

ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ
சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப்
படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு
இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய
விரைவில் இந்தியா திரும்பினார்.


1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை
மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில்
இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர்
ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி
என்றழைக்கப்பட்டார்.

கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார்.
ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசி
வரை தனியாகவே வாழ்ந்தார்.


Last edited by ayyasamy ram on Wed May 27, 2020 3:26 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964 Empty Re: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Post by ayyasamy ram Wed May 27, 2020 3:24 pm


1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன்
சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன்
வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை
கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை
ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது.

இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம்
ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக
காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில்
பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு
சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு
விடுவிக்கப்பட்டார்.

அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர்
வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள்
(1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய
நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக
அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில்
அவருடைய நற்பெயரை வளர்த்தது.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில்
1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார்.
ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின்
வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.

நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து
முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.
ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை
ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க
அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது.
சில சமயங்களில் இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று
குறிப்பிடுவதுண்டு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964 Empty Re: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Post by ayyasamy ram Wed May 27, 2020 3:25 pm



இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும்,
இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள்.
தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் சென்றார்.
ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன
நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார்.
1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில்
அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.

சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க
நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை,
நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.

1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும்,
மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.

அவர் 1964 மே மாதம் இதே நாளில் அதிகாலை இறைவனடி
சேர்ந்தார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை
நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

டெல்லித் தெருக்களில் இருந்தும், மயானத்தில் இருந்தும்
ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964 Empty Re: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
»  இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று!
» இந்தியாவின் 9-வது பிரதமர் நரசிம்ம ராவ் பிறந்த தினம்: ஜூன் 28- 1921
» இந்தியாவின் முதல் சுதந்திர தினம்
» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum