ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Go down

இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Empty இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Post by ayyasamy ram Tue May 26, 2020 7:16 am


கர்நாடக இசைக்கலைஞர்;கள் திருவையாறு சென்று
தியாகராஜரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது போன்று
முகாலய சக்கரவர்த்தி அக்பரின் அரசவைக் கலைஞராகத்
திகழ்ந்த தான்சேனின் சமாதியில் இந்துஸ்தானி சங்கீத
வித்வான்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய
தான்சேன் விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச்
செய்தார் என்றும் மேக ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்
அம்ருதவர்ஷனி ராகத்தில் அம்பிகை மீது கீர்த்தனை பாடி மழையை
வரவழைத்தார்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் வரண்டு போய்
இருந்த குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்களின்
துயர் துடைத்த தீக்ஷிதரை தனது ராஜசபைக்கு வரவழைத்த
பாண்டியன் அவரைக் கௌரவப்படுத்தியதுடன் நிகழ்ந்த அற்புதத்தை
செப்பேடு ஒன்றிலும் எழுதச் செய்தான்.

இலங்கேஸ்வரனாகிய இராவணனன் பெரிய சிவபக்தன். இருந்த
போதிலும் ஆணவம் காரணமாக சிவபெருமானும் பார்வதி தேவியும்
எழுந்தருளிய கைலாயத்தை ஒரு தடவை பெயர்த்தெடுக்க
முனைந்தான்.

பார்வதி தேவி பதற்றமுற்றாள். அதனால் சிவபெருமான் தனது கட்டை
விரலினால் இலேசாக அழுத்தினார். இராவணன் மலைக்கடியில்
அகப்பட்டுக் கொண்டான்.

தாங்க முடியாத வேதனையினால் திக்கு முக்காடிய அவன் தனது
தலைகளில் ஒன்றையும் கையொன்றையும் பிய்த்தெடுத்து தன்
நரம்புகளையே பாவித்து வீணையாக்கினானன்.

அதனை மீட்டி சாமகானம் பாடி தனது பிழையை மன்னித்து
அருளும்படி வேண்டினான். சிவனின் அருளையும் பெற்றான்.

இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய இசைப்பாடல்
காம்போதி ராகத்தில் அமைந்தது.
காம்போதி பாடிட துன்பம் போகும் என்பது சொல்வழக்கு.

இரக்கம் வீரம் எழுச்சி என பல்வேறு உணர்வுகளையும்
பிரதிபலிக்கக் கூடியது காம்போதி ராகம்.
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Empty Re: இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Post by ayyasamy ram Tue May 26, 2020 7:17 am



அமெரி;க்காவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றி;ல் தங்கியிருந்த
ஒருவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவாக
இருந்தார். உயிர் இருந்ததே தவிர உணர்ச்சி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவ
நிபுணர்கள் பெரிதும் முயன்ற போதிலும் பலன் எதுவும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் மனோதத்துவ நிபுணர் ஒலிவர் சாக்சின் உதவி
கோரப்பட்டது. மிகவும் இனிமையான பாடல் ஒன்றை நோயாளி
கேட்பதற்கு சாக்சின் ஏற்பாடு செய்தார்.

என்ன அதிசயம். மாதக்கணக்காகப் பேசாதிருந்த நோயாளி தான்
கேட்ட பாடல் தொடர்பாக விவரிக்க ஆரம்பி;த்தார். ஒரே ஒரு
இசைப்பாடல் அவரைக் குணப்படுத்தி விட்டது.

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசைக்கு மகத்தான சக்தி
இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம்
உற்சாகமின்மை போன்றவற்றை இன்னிசை போக்கி விடுகிறது.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடலைப் பாடியவர்
கனம் கிருஷ்ணய்யர். அதற்கு மெட்டமைத்து ரதிபதிப்ரியா
ராகத்தில் பாடி பிரபல்யப்படுத்தியவர் இசை முரசு
எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

இசைக் கச்சேரியின் போது ரதிபதிப்பிரியா பாடலை பாடினால்
சபையோரின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு
பாடுபவரை மாத்திரமல்லாது கேட்பவர்களையும் பரவசத்தில்
ஆழ்த்தக் கூடியது இந்த ராகம்.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடல் முதன் முதலில்
இசைத் தட்டில் வெளியான சமயம் ஏழிசை மன்னர்
எம்.கே.தியாகராஜா பாகவதர் நடித்த சிவகவி படம் வெளியாக
இருந்தது. அந்தப் படத்தில்
“மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்” என்ற பாடலை
பாகவதர் ரதிபதிப்ரியா ராகத்தில்தான் பாடி இருந்தார்.

பாகவதர் பாடிய பாடல் வெளியானால் தனது பாடலின் செல்வாக்கு
குறைந்து விடும் என்று எண்ணிய தேசியர் காலம் தாழ்த்தியே
மனம் கனிந்தே பாடலை இசைத்தட்டில் வெளியிடும்படி
பாகவதரைக் கேட்டுக் கொண்டார். அவரும் விட்டுக் கொடுத்தார்.

ரதிபதிப்ரியா ராகம் மன அமைதியை ஏற்படுத்தும்.
உற்சாகத்தைத் தரும். வறுமையைப் போக்கக் கூடிய ஆற்றல்
கொண்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ராகத்தின் ஸ்வரங்களுக்கு மனதில் இருந்து தீய
எண்ணங்களையும் கசப்பான உணர்வுகழளயும் அகற்றக் கூடிய
ஆற்றல் இருப்பதுமல்லாமல் பாடப்படும் இடத்திலேயும்
சாநித்தியம் நிலவச் செய்யும்.

எல்லோரும் தினம் இந்த ராகத்தில் அமைந்த பாடலில்
ஒன்றையாவது கேட்டால் வாழ்க்கை சிறக்கும்.
-
--------------------
நன்றி- முகநூல் - ஹந்து ஒலி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum