ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

Go down

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981 Empty தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

Post by ayyasamy ram Sun May 24, 2020 3:55 pm

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981 202005240757335855_Tamil_News_Si-Ba-Adithan-Memorial-Day-May-24-1981_SECVPF
-'
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத்
தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ்
கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்.

இவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம்
காயாமொழியில் பிறந்தார். சி.பா.ஆதித்தனாரின் தந்தை
அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர்.

சி.பா ஆதித்தனார் என்றால் இன்றும் தமிழ்நாட்டு
வழக்கறிஞர்களிடையே, ஒரு தனி மரியாதை உண்டு.
சி.பா. ஆதித்தனாரின் தாயார் கனகம் அம்மையார், கணவருக்கும்
மகனுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களின் சமூகத்
தொண்டுகளுக்கும் ஊக்கமூட்டும் குடும்பத் தலைவியாக இருந்து
வந்தார்.

வசதிமிக்க குடும்பம் என்பதால் தங்கள் சொத்துகளை மேலும்
பெருக்கிக்கொண்டே சி.பா. ஆதித்தனார் சென்றிருக்க முடியும்.
ஆனால், தமிழர்களுக்கு நற்பெயர் ஏற்பட வேண்டும் என்பதுதான்
அவரின் குறிக்கோளாக இருந்தது.

மற்ற பணக்காரப் பிள்ளைகளைப் போல இல்லாமல் படிப்பு
நேரம் போக, இதர நேரங்களில் பகுதி நேர வேலைகளைச் செய்து,
அதில் கிடைத்த வருமானத்தில் பல ஏழைகள் நல முறை வாழவும்
அவர்தம் பிள்ளைகள் படிப்பைத் தொடரவும் சி.பா. ஆதித்தனார்
உதவிக்கரம் நீட்டினார்.

பிரிட்டனில் இருந்தபோது பெருஞ்சேவை ஆற்றி வந்த
சி.பா. ஆதித்தனாரைச் சிங்கப்பூர் தொழில் மன்னர் உ. ராமசாமி
நாடாருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அதனால், அவரின் மகள்
கோவிந்தம்மாளை திருமணம் செய்துகொடுத்து, தம் மருமகனாக்கி
கொண்டார்.

1933-ம் ஆண்டு சிங்கப்பூரில் சி.பா. ஆதித்தனார், கோவிந்தம்மாள்
திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

சிங்கப்பூரில் வழக்குரைஞராக பணியாற்றியபோதே, தமிழ்மக்களின்
பொது நலத்திலும் அதிக அக்கறை கொண்டிருந்தார் சி.பா. ஆதித்தனார்.
வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சி, சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும்
வாட்டிற்று.

தமிழ் வளர்ச்சி குறித்தும், மொழி வளர்ச்சியில் தமிழர் காட்ட வேண்டிய
ஈடுபாடு பற்றியும் தம்முடைய வாழ்நாளெல்லாம் திட்டம் வகுத்துக்
கொண்டிருந்த தமிழன்பர் சி.பா. ஆதித்தனார். உயர்தமிழ் படித்தவர்கள்
சாதாரண மக்கள், மொழியில் முடியாத அளவுக்குத், தமிழ்மொழியின்
நடையைக் கடினப்படுத்தியதை அவர் விரும்பவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ச்சி கண்டது. இது
சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது.
சிங்கப்பூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியதாலும் தமிழர்
முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சி.பா. ஆதித்தனார், ஜப்பானியக்
காலக்கொடுமைகளைத் தாளாமல் ஆதித்தனார், குடும்பத்துடன்
தமிழகம் வந்தடைந்தார்.
--------


Last edited by ayyasamy ram on Sun May 24, 2020 4:01 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981 Empty Re: தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

Post by ayyasamy ram Sun May 24, 2020 3:57 pm

மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதும், தமிழர் மேம்பாட்டுக்குப்
பாடுபடுவதும் தம்முடைய வாழ்க்கையில் தாம் ஆற்ற வேண்டிய
தொடர்பணிகளாக இருக்க வேண்டுமெனத் தமிழகம் வந்ததும்
முடிவெடுத்த சி.பா. ஆதித்தனார், மதுரை முரசு, தமிழன்,
தந்தி- பின்னர்- தினத்தந்தி ஆகிய ஏடுகளை எளிய தமிழில்
வெளியிட்டார்.

மாணவர்களுக்கென ‘வெற்றி நிச்சயம்’ என்னும் இயக்கத்தைத்
தொடங்கி, அவர்களிடையே கல்வி நாட்டத்தை ஏற்படுத்தினார்.

சாதியால் பிரிந்து கிடந்த 'தமிழர் சமுதாயம்' மொழியால் ஒன்றுபட
வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார். அந்தக் குறிக்கோளில்
''நாம் தமிழர்" இயக்கத்தைச் சி.பா. தொடங்கி வைத்தார். 1967ஆம்
ஆண்டு, தமிழகச் சட்ட மன்ற நாயகனாக அவரை முன்மொழிந்தார்.

அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
பொதுப்பணி அமைச்சராக அப்போதிருந்த மு. கருணாநிதி,
வழிமொழிந்தார்.

சபாநாயகராகப் பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார், பதவிக்கு வந்த
உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருமொழியில் பேசலாம்
என்னும் விதியில் சில மாற்றங்களைச் செய்தார்.

இரு மொழியில் மன்றத்தில் பேசலாம் என்னும் விதி இருந்தால்,
பெரும்பாலானோர் ஆங்கிலத்திலேயே பேசியது அவருக்குப்
பிடிக்கவில்லை. தமிழ் அறவே தெரியாதவர் மட்டுமே ஆங்கிலத்தில்
பேசலாம் என அவர் விதி வகுத்தார்.

'தமிழ் இதழியல்' துறை வளர்ச்சிக்கு ‘இதழாளர் கையேடு’ அவர்
உருவாக்கிய மிகச்சிறந்த வழிகாட்டி என்று செய்தியாளர்கள் இன்றும்
கூறுவர். ‘எளிய தமிழ்’ என்பது கொச்சை நீக்கப்பட்ட மொழி
நடையே என அவர் உறுதியாக நம்பினார்.

மிகப் பெரிய வாக்கியங்களை எழுதாமல், சிறு சிறு தொடர்களால்
அவற்றை அமைக்க வேண்டுமென அவர் கூறுவார்.

மாதம் ஒரு நாவல் திட்டத்தை ‘ராணிமுத்து’ என்னும் பெயரில்
வெளியிட்டபோதுகூட எளிய மொழிக்கே அவர் முக்கியத்துவம் தந்தார்.
வாராந்திர ராணியும் அவர் தொடங்கிய ஏடுதான். தம்முடைய
எழுபத்தாறாவது வயதில், தமிழர் தந்தை ஆதித்தனார் மறைந்தாலும்
‘நல்ல தமிழர்‘ என்பது எளிய மொழியில் எல்லாருக்கும் ஏற்ற
வகையில் இருக்க வேண்டுமென கூறிச் சென்றிருப்பதை நாம்
நினைவில் நிறுத்த வேண்டும்.
-
---------------------
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum