ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 9:39 am

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா
-



சென்னை:

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா
பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967
ஆக இருந்தது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர்
குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை 94 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்
தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த
எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு
பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 9:43 am

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா
வைரஸ் பரவியுள்ளது.


வைரஸ் உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 17 பேர்
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

மேலும், 21 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா
வந்தவர்கள். எஞ்சிய 4 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள்
ஆவர்.

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக
அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்
216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக
அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 9:47 am

லாக்டவுன் இல்லை எனில் பாதிப்பு 29 லட்சம், உயிரிழப்பு 78 ஆயிரமாக இருந்திருக்கும்: மத்திய அரசு

லாக்டவுன் நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுத்ததால்
29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட இருந்ததை தடுக்க முடிந்தது
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில்
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச்
மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எ
ண்ணிக்கை 500-ல் இருந்து 600 வரைதான் இருந்தது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 20-ந்தேதியில்
இருந்து மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் இருந்து
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை
தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியில்லாததால்தான் கொரோனா
வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம்
உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால்தான் 78 லட்சம் பேர்
பாதிக்கப்பட வேண்டியிருந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:-


* 80 சதவீதம் மரணம் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்
மற்றும் டெல்லி மாநிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது.

* லாக்டவுனால் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.

* 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது.

* கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட ப
குதிகளில்தான் அதிகமாக உள்ளன.

* புள்ளி விவரம் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் ஆய்வு
ஆகியவை லாக் டவுன் காரணமாக 20 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்தும்,
54 ஆயிரம் பேர் பலியாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளன.

* இந்தியாவின் பொது சுகாதார பவுண்டேசன் 78 ஆயிரம் உயிர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

* இரண்டு ஆய்வு அமைப்புகள் 23 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து
பாதுகாக்கப்பட்டதாகவும், 68 ஆயிரம் பேர் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும்
தெரிவித்துள்ளன.

லாக் டவுன்


* லாக்டவுன் தொடங்கும்போது கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள் 3.4 ஆக இருந்தது.
தற்போது அது 13.3 நாட்களாக உயர்ந்துள்ளது.

* போஸ்டன் கல்சன்டிங் குரூப் ஆய்வின்படி 2.1 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த நான்கு நாட்களாக தினற்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை
செய்யப்படுகிறது- ஐசிஎம்ஆர்

* இன்று மதியம் ஒரு மணி வரை 27,55,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

* உயிரிழப்பின் சதவீதம் 3.13-ல் இருந்து 3.02 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 10:09 am

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு
-
நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு
1 லட்சத்தை தாண்டியது.


இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்
5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்,
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
1,12,359- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
45300- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்
மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய்
பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக
743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து
13,191 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.
குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்
எண்ணிக்கை 12537- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா
பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,088- ஆக உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum