புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_lcap“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_voting_bar“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_lcap“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_voting_bar“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_lcap“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_voting_bar“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 12:06 pm

“நீங்கள் புத்தரை சந்தித்தால், அவரைக் கொல்லுங்கள்.”

இந்த புகழ்பெற்ற மேற்கோள் ஜென் வரலாற்றின் மிக முக்கியமான
லின்ஜி யிக்சுவான் சொன்ன தனித்துவமான ஜென் உரையாடல்
அல்லது சுருக்கமான நிகழ்வு. (ஜென் வழியில் இதை
koan -கோன்ஸ் என்று சொல்லலாம்.)

கோன்ஸ் என்பது, பகுத்தறிவு பதில்களை மறுக்கும் ஜென்
ஆசிரியர்களின் ரகசிய மற்றும் முரண்பாடான கேள்விகள்.
(நமது சித்தர் பாடல்கள் போல ).

லின்ஜி புத்தத்தின் அடிப்படை சாரம் பற்றி பேசும்போது சொல்வது
” புத்தர் என்பது மனதின் தூய்மை என்பதாகும். அதன் பிரகாசம்
முழு தர்ம மண்டலத்திலும் பரவுகிறது.”

ஜென் மொழியில், “நீங்கள் புத்தரைச் சந்திக்கும்போது, ​​அவரைக்
கொல்லுங்கள்” என்பது,

உங்கள் மனதில் புத்தரை உணராமல் , புறத்தே ஒரு புத்தரை கண்டால்
அந்த மாயையான புத்தரை கொல்லுங்கள். ஏனெனில், உங்களிடமிருந்து
தனித்து பிரிக்க புத்தர் ஒரு உருவம் அல்ல. அது உணர்வு.

எங்கோ படித்த அல்லது கேட்டது போல இருக்கிறதா?

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?“
-
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Main-qimg-eb392f07ff19b28aab8a38b3f8c3c672

-சண்முக சுந்தரம்,
நன்றி-கோரா – பதில்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri May 22, 2020 3:08 pm

புத்தரைக் கொன்ற மடாலயத்தினர்…..வாழ வைத்த முதியவர்.

அந்த வயது முதிர்ந்தவர் வரும்போதே அவருடைய கையில் இருந்த ஊன்றுகோல்கூட குளிரில் நடுநடுங்கியது. பற்கள் கஞ்சிரா வாசித்தன. குளிரோடு வந்த அந்த முதியவருக்கு... அந்த புத்த மடாலயத்தில் அன்றிரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தங்குவதற்கு மட்டும்தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர... போர்த்திக்கொண்டு படுத்துறங்க அங்கே எந்த வசதியும் துளியும் இல்லை.
அங்கு தங்கியிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அந்தக் குளிர் பழக்கப்பட்டுப்போயிருந்தது. அவர்கள் நிம்மதியாக குறட்டை வாசித்தனர்.

ஆனால் அந்த முதியவரை குளிர் படுக்கவிடாமல் வாட்டியெடுத்தது.
என்ன செய்வது என்று புரிபடாத அந்த இரவுப் பொழுதில்... அந்த புத்த மடலாயத்தில் ஒரு மேடையில் இருந்த மரத்தால் ஆன புத்தர் சிலையை எடுத்து வந்து கொளுத்தி அதில் குளிர் காய ஆரம்பித்தார் அந்த முதியவர்.
ஏதோ மரம் எரியும் வாசனையை அறிந்த புத்த மடாலயத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.

தங்குவதற்கு இடம்கொடுத்த இடத்தில் புத்தரின் சிலையை எரியவிட்டு குளிர்காயும் அந்த முதியவரை... கடுமையாகத் திட்டினர்.

''இனி, ஒரு நாழிகைக்கூட இங்கு நீ தங்கக் கூடாது... இதோ இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்று கோபத்துடன் முதியவரை திட்டி, அந்த நள்ளிரவில் மடாலயத்தில் இருந்து வெளியேற்றினர்.
நடுங்கும் குளிரில் நடக்கவே முடியாமல் ஊர்ந்தபடி அங்கிருந்து வெளியேறினார் முதியவர்.
மறுநாள் விடியற்காலை. மண், மரம், செடி, கொடி எங்கும் பனியின் ஈரக் கையொப்பம்.
நள்ளிரவில் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்த முதியவர் என்ன ஆனார் என்று மடாலயத்துக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தனர்.

அந்த முதியவர் மடாலயத்துக்கு வெளியே... சாலையில் இருந்த ஒரு எல்லைக்கல்லின் மீது பால்நிற தும்பைப் பூக்களைத் தூவி, ''புத்தம்... சரணம்.... கச்சாமி....புத்தம்... சரணம்.... கச்சாமி....'' என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

மடாலயத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த முதியவரை நெருங்கி, ''நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அந்த எல்லைக் கல் என்ன புத்தரா? பூக்கள் போட்டு அந்த எல்லைக் கல்லை போய் வணங்குகிறீர்களே!'' என்று கேட்டார்.

அதற்கு அந்த முதியவர் சொன்னார்:
''நான் குளிர் காய எரித்தது சாதாரண மரத்தைதான் என்று நம்புகிறேன். நீங்கள்தான் அதனைப் புத்தர் என்று சொன்னீர்கள். எனவே, ஒரு மரம் புத்தராகும்போது; ஒரு எல்லைக் கல் ஏன் புத்தர் ஆகக் கூடாது? எனக்குள் இருந்த புத்தரைக் காப்பாற்றத்தான் நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தேன். ஒரு மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்திவிட்டீர்கள்!'' என்றார்.


(இணையம்)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 3:45 pm

புத்தரைக் கொன்ற மடாலயத்தினர்…..வாழ வைத்த முதியவர்.
-
“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? 103459460 “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? 3838410834
[“எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன? Roseandwater


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக