Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
Page 1 of 1
ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
-
இந்தியாவில் டிடிஹெச் பிரபலமானபோது, 'விஸ்வரூபம்'
படத்தை டைரக்ட் டு ஹோம் என்கிற கான்செப்ட்டில் ரிலீஸ்
செய்யப்போவதாக கமல் அறிவித்து, அது பெரும்
பஞ்சாயத்தாகி, கடைசியில் தியேட்டர் ரிலீஸே பஞ்சாயத்தில்
முடிந்தது.
இப்போது ஓ.டி.டி ரிலீஸ் சர்ச்சையை 'பொன்மகள் வந்தாள்'
தொடங்கிவைத்திருக்கிறது. கமல்ஹாசனைப்போல, சூர்யாவும்
ஜோதிகாவும் பெரும் சிக்கலை சந்திக்கப்போவதில்லை.
ஏனென்றால், நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கான காலம் தமிழ்
சினிமாவில் கனிந்துவிட்டது. அதனால் படம் விரைவில்
அமேஸானில் ரிலீஸாகிவிடும் என்றே தெரிகிறது.
ஆனால், ஒரு படத்தை எங்கே, எதில் பார்க்க வேண்டும் என்பதை
தமிழ் சினிமா ரசிகன் முடிவெடுத்து கிட்டத்தட்ட இரண்டு
டிகேடுகள் கடந்துவிட்டன. விசிடி-யில் ஆரம்பித்து தமிழ் ராக்கர்ஸ்
வரைப் பல விஷயங்களைப் பார்த்துவிட்டான் ரசிகன்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை கேளிக்கை என்றால் அது
சினிமா மட்டும்தான். இதுதான் நம் பாரம்பர்யம். குலவழக்கம்.
சினிமாவை ஒட்டித்தான் பல்வேறு தரப்பட்ட கேளிக்கைகள்.
டி.வி, மெல்லிசைக் கச்சேரி, யூ-டியூப் சேனல்கள், பத்திரிகைகள்,
விருது நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோக்கள் எல்லாம் சினிமா மூலம்
உண்டாகும் வெவ்வேறு கேளிக்கைகள்.
கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத்
தாண்டி, ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும்
இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே
ஸ்பெஷல்தான்.
Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 8:14 am; edited 1 time in total
Re: ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
சினிமா, கேளிக்கை என்பதைத் தாண்டி இரண்டு விஷயங்களில்
முக்கியப் பங்காற்றுகிறது. நம் மக்கள் வெளியே சொல்வது
என்றால் பெரும்பாலும் சினிமாவாகத்தான் இருக்கும்.
குடும்பத்தோடு, நண்பர்களோடு, காதலியோடு வெளியே
செல்ல வேண்டும் என்றால், சுலபமான தேர்வாக சினிமா
தியேட்டர்கள்தான் இருக்கின்றன. தியேட்டருக்குச் சென்று
படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம்.
பிரமாண்டமான திரையரங்கில் நிறைய மக்களோடு அமர்ந்து
பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல்,
விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி ஒரு
கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு
படம் பார்ப்பது என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான்.
இன்னொன்று, சினிமா மட்டுமே ஸ்டார்களை உருவாக்கும்.
இங்கே ஸ்டார் என்பது ஹீரோ மட்டும் அல்ல. ஹீரோயின்,
இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் என
அனைத்து விதமான ஸ்டார்களும் இங்கே சினிமாவில்தான்
உருவாவார்கள்.
இங்கே உருவான ஸ்டார்களின் பிம்பங்களைத்தான்
ஓ.டி.டி-யில் விற்க முடியும்.
ஓ.டி.டி-யில் விற்கப்பட்ட படங்களை நாங்கள் வாங்க
மாட்டோம் என்று சொல்வதற்கு சினிமா திரைப்படத்
தயாரிப்பாளர்களுக்கு உரிமை இருக்கிறது. அதே நேரத்தில்,
ஓ.டி.டி-யில் விற்ற படத்தில் நடித்த நடிகரின் படங்களையோ,
அந்த தயாரிப்பு நிறுவனத்தின் படத்தையோ இனி வாங்க
மாட்டோம் என்று தியேட்டர்கள் சங்கம் சொல்வது
தேவையற்றது.
இப்போது சர்ச்சைக்குள்ளான ஜோதிகாவின்
'பொன் மகள் வந்தாள்' திரைப்படத்தை நல்ல விலைக்கு
அந்த நிறுவனம் வாங்கி இருக்கலாம். ஆனால், அந்தப் படம்
தியேட்டரில் ரிலீஸ் ஆனால், அதற்குக் கிடைக்கும் மதிப்பு
அல்லது அந்தப் படத்தின் ரீச் ஓ.டி.டி மூலம் கிடைக்காது.
ஓ.டி.டி நிறுவனங்கள், தங்களை பிரபலப் படுத்திக்கொள்ள
ஆரம்ப கட்டத்தில் இதைப்போல அதிக விலை கொடுத்து
வாங்கும். ஆனால், இந்தப் 'பொன்மகள் வந்தாள்' படம்
ஓ.டி.டி-யில் வெளியானால், பெரிதாக எந்த
அதிர்வலையையும் ஏற்படுத்துமா எனத் தெரியாது.
இந்தப் படத்தின் லாப நஷ்டக் கணக்கைப் பார்த்து, அடுத்த
முறை ஓ.டி.டி நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் படங்களை
விலைபேசலாம்.
Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 8:14 am; edited 1 time in total
Re: ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
இதுவே விஜய், அஜித் போன்ற முன்னணி கமர்ஷியல்
நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியானால்
வேண்டுமானால் பெரிய அதிர்வலையைக் கிளப்ப முடியும்.
ஓ.டி.டி-யில் பார்ப்பதற்கு என்று சில வகைப் படங்கள் உள்ளன.
அவை தனி. அந்த மாதிரி படங்களை தியேட்டருக்காக
தயாரிக்கவே முடியாது. அதேபோல வீட்டில் அமர்ந்துகொண்டு
ஓ.டி.டி பிளாட்ஃபார்மில்தான் சினிமா படங்களையும் பார்ப்போம்
என்கிற ரசிகர்களும் இங்கே இருக்கிறார்கள்.
இவர்கள், ஓ.டி.டி-யில் படம் வெளியாகவில்லை என்றால்
பெரும்பாலும் சினிமா தியேட்டர்களுக்குப் போய் படம்
பார்க்க மாட்டார்கள்.
வரும் காலங்களில் ஓ.டி.டி-க்கு என்றே படம் எடுக்கும்
தயாரிப்புக் கம்பெனிகள் அதிகம் ஆகலாம். ஓ.டி.டி நடிகர்கள்,
நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள்
உருவாகலாம். ஆனாலும் இவர்களின் கடைசி டார்கெட்
தியேட்டர் ரிலீஸ் சினிமாவாகவே இருக்கும்.
அதேபோல திடீரென்று மணிரத்னம் ஓ.டி.டி-க்கு ஒரு படம்
இயக்கலாம். இதில் இவர்களைப் போன்றவர்களின் டார்கெட்
அதீத பணமாக இருக்கும். சினிமா மூலம் இத்தனை காலம்
உருவாக்கிய பிரபலத்தைப் பணமாக்க முயற்சி செய்வார்கள்.
அனுராக் காஷ்யப் போன்றவர்கள் செய்வது அதைத்தான்.
ஆனால், இவர்களும் தொடர்ந்து ஓ.டி.டி-யிலேயே இயங்கிக்
கொண்டிருந்தால் மதிப்பு போய்விடும்.
மீண்டும் தியேட்டர் ரிலீஸ் சினிமாவுக்குத் திரும்பி, தன்னை
நிரூபித்து விட்டுத்தான் மீண்டும் ஓ.டி.டி-க்குத் திரும்ப
வேண்டியிருக்கும்.
'லஸ்ட் ஸ்டோரிஸ்' பார்த்திருப்போம். சினிமாவில்
காட்டப்படாத கதை என்பதால், அதை ஆஹா ஓஹோ என்று
புகழ்ந்தார்கள். ஆனால், ஓ.டி.டி-யில் வெளியான
'லஸ்ட் ஸ்டோரிஸ்' சினிமாவின் தரத்தின் அருகேகூட வரத்
தகுதியில்லாதது.
அனுராக் காஷ்யப் இயக்கிய 'தேவ் டி' படத்தைப் பாருங்கள்.
அவர் இயக்கிய ஓ.டி.டி ஆக்கங்களைப் பாருங்கள். வித்தியாசம்
தெரியும்.
இன்னொன்று, இதுவரை ஓ.டி.டி-யில் பெரும் வரவேற்பைப்
பெற்றவை தொடர்கள்தான். வெப் சீரிஸ் என்கிறார்கள்.
சினிமா போல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி
நேரம் வரை ஓடக்கூடிய சிங்கிள்ஸ் எதுவும் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தவில்லை.
பழங்காலத்தில் தொடர்கதைகளைப் படிக்க ஒரு பெரும் கூட்டம்
இருந்தது. அதைப்போன்ற ஒரு மனநிலைதான் இப்போது
விஷுவலில் ஏற்பட்டிருக்கிறது. நாவல் என்றைக்கும் நாவல்தான்.
சினிமா என்றைக்கும் சினிமாதான்.
அதேப்போல இந்திய ஓ.டி.டி ஃபார்மேட்டில் கடும் கற்பனை
வறட்சி நிலவுகிறது. செக்ஸ் மட்டும்தான் இதில் ஹிட் ஆகும்
என்று நினைத்துக்கொண்டு, கெட்ட வார்த்தைகளை மட்டும்
அள்ளித்தூவி, சில படுக்கையறைக் காட்சிகளை வைத்து
ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இவைகளில் உயிரும் இல்லை. எந்த புது முயற்சியும் இல்லை.
இதை விட்டால், சில உண்மைக் கதைகளை எடுக்கிறேன்
என, 'குற்றம் நடந்தது என்ன?' என்கிற லெவலுக்கு எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 8:15 am; edited 1 time in total
Re: ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
முதலில், ஓ.டி.டி ஆடியன்ஸுக்கான ரசனையை மேம்படுத்த
வேண்டும். அதில் டிரெண்ட் செட் செய்ய வேண்டும்.
ஆனால், அதற்கு தமிழில் ஆளுமைகளோ, முன்னோடிகளோ
ஓ.டி.டி-க்கு இல்லை. இப்போதைக்கு ஓ.டி.டி, சினிமாவை
நம்பித்தான் இந்தியாவில் காலம் தள்ள வேண்டும். எ
திர்காலத்தில் இந்த ஓ.டி.டி நிறுவனங்களே இந்தியாவில்
தியேட்டரிக்கள் ரைட்ஸை வாங்கும் நிலைக்குக்கூட வரலாம்.
பெரிய பட்ஜெட் படங்களையும் அவர்களே நேரடியாகவும்
தயாரிப்பார்கள்.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தியேட்டர் ரிலீஸ் சினிமா மூலம் மட்டுமே பெரும்
பான்மையான ஸ்டார்கள் உருவாவார்கள். டி.வி, வி.சி.டி,
ஹோம் தியேட்டர், டோரன்ட், ஓ.டி.டி, தமிழ் ராக்கர்ஸ் என
எதனாலும் சினிமாவை அழிக்க முடியவில்லை. இனியும்
அது முடியாது.
இவைகள் எல்லாம் வந்த பின்புதான், சினிமா தன்னை
இன்னும் மேம்படுத்திக்கொண்டுள்ளது. சினிமாவின்
முக்கிய எதிரிகள் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றிக்
கொண்டு செல்லும் சில முன்னணி நடிகர்களும், காப்பி
அடித்து, கதையைத் திருடி, வெட்டிச் செலவழித்து
படமெடுக்கும் இயக்குநர்களும்தான்.
மால்கள் வந்ததும் சினிமா புத்துயிர்பெற்றது என்பது
உண்மைதான். நல்ல திரையனுபவத்தை மால்கள் வழங்கின.
ஆனால், இப்போது தான் வைத்ததுதான் சட்டம் என்று
தனிக்காட்டு ரௌடி போல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன
மால்களில் உள்ள திரையரங்குகள். ஒரு ஜம்போ சைஸ்
பாப் கார்ன் 540 ரூபாய் வரை விற்கிறார்கள். அதன்
அடக்க விலை 30 ரூபாயாக இருந்தால் பெரிய விஷயம்.
அதில் ஊற்றப்படும் சிறிதளவு வெண்ணெயையும்
சேர்த்துத்தான் சொல்கிறேன். இதைப்போல கேன்டீனில்
விற்கப்படும் அனைத்து உணவு வகைகளிலும் கொள்ளை
அடிக்கிறார்கள்.
பார்க்கிங் கட்டணமும் அநியாயம். வெளிநாடுகளைவிட
இங்கே அதிகம் வாங்குகிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி காமெடி என்னவென்றால்,
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒரு
டிக்கெட்டுக்கு 30 ரூபாய் தனிக் கட்டணம்.
ஒரே டிரான்ஸாக்ஷனில் 4 டிக்கெட்டுகள் முன்பதிவு
செய்தாலும் 120 ரூபாய் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.
உங்கள் நிறுவனத்தில் சேவைகளை நுகர்வதற்கு உங்கள்
ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தினால், நான் ஏன்
ஐயா கட்டணம் செலுத்த வேண்டும்?
Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 8:16 am; edited 1 time in total
Re: ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!
சினிமா தியேட்டர் இல்லை என்றால் அந்த மாலுக்கு கூட்டமே
வராது. அண்ணா சாலையில் இருக்கும் ஸ்பென்சர், ரமீ மால்
இதற்கு சிறந்த உதாரணம். சினிமாவைப் பயன்படுத்தி வளரும்
மால்கள், இதைப்போல சினிமாவுக்கு எதிரான செயல்களைச்
செய்யும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் இதையெல்லாம்
தடுக்க வேண்டும்.
* 5 ரூபாய்க்கு மேல் ஆன்லைன் சார்ஜஸ் கட்டணம் வசூலிக்கக்
கூடாது.
* பார்க்கிங் கட்டணம் 3 மணி நேரத்துக்கு 50 ரூபாய் என்ற
அளவில் நிர்ணயிக்க வேண்டும்.
* கேன்டீன் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும்.
இவையெல்லாம் நடந்தாலே, தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக
வரும் கூட்டம் இன்னும் கூடும். அதேசமயம், இனி தியேட்டர்
என்பது பிரீமியமாக இருக்கப்போகிறது. வருடத்துக்கு குறைந்த
அளவிலான படங்களே ரிலீஸ் ஆகும் என்பதால், நம்முடைய
பட்ஜெட்டும் அதற்குள் அடங்கிவிடும்.
ஓ.டி.டி, தியேட்டர் என இரண்டிலுமே சினிமாவைக்
கொண்டாடுவோம்.
-
---------------------
-அராத்து
நன்றி- விகடன்
Similar topics
» தேவகோட்டையில் ருசிகரம்: அசல் படம் இன்று ரிலீஸ் தியேட்டர் முன் கிடாய் வெட்டி பூஜை
» படம் பார்க்க ஆளில்லை... தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!
» விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை
» 180 ரூபாய் கொடுத்து உங்கள் யாரு படம் பார்க்க சொன்னது? சந்திரசேகர் கேள்வி
» மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி?
» படம் பார்க்க ஆளில்லை... தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!
» விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை
» 180 ரூபாய் கொடுத்து உங்கள் யாரு படம் பார்க்க சொன்னது? சந்திரசேகர் கேள்வி
» மதுரையில் படம் பார்க்க வந்தவர் கொலையாளியானது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|