புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_m10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_m10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_m10ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 8:09 am

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Vikatan%2F2020-05%2F5150851a-9db2-4763-8a2f-0df5d44a892f%2FOTT_apps_digital_gold_fever_1
-
இந்தியாவில் டிடிஹெச் பிரபலமானபோது, 'விஸ்வரூபம்'
படத்தை டைரக்ட் டு ஹோம் என்கிற கான்செப்ட்டில் ரிலீஸ்
செய்யப்போவதாக கமல் அறிவித்து, அது பெரும்
பஞ்சாயத்தாகி, கடைசியில் தியேட்டர் ரிலீஸே பஞ்சாயத்தில்
முடிந்தது.

இப்போது ஓ.டி.டி ரிலீஸ் சர்ச்சையை 'பொன்மகள் வந்தாள்'
தொடங்கிவைத்திருக்கிறது. கமல்ஹாசனைப்போல, சூர்யாவும்
ஜோதிகாவும் பெரும் சிக்கலை சந்திக்கப்போவதில்லை.
ஏனென்றால், நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கான காலம் தமிழ்
சினிமாவில் கனிந்துவிட்டது. அதனால் படம் விரைவில்
அமேஸானில் ரிலீஸாகிவிடும் என்றே தெரிகிறது.

ஆனால், ஒரு படத்தை எங்கே, எதில் பார்க்க வேண்டும் என்பதை
தமிழ் சினிமா ரசிகன் முடிவெடுத்து கிட்டத்தட்ட இரண்டு
டிகேடுகள் கடந்துவிட்டன. விசிடி-யில் ஆரம்பித்து தமிழ் ராக்கர்ஸ்
வரைப் பல விஷயங்களைப் பார்த்துவிட்டான் ரசிகன்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கேளிக்கை என்றால் அது
சினிமா மட்டும்தான். இதுதான் நம் பாரம்பர்யம். குலவழக்கம்.
சினிமாவை ஒட்டித்தான் பல்வேறு தரப்பட்ட கேளிக்கைகள்.
டி.வி, மெல்லிசைக் கச்சேரி, யூ-டியூப் சேனல்கள், பத்திரிகைகள்,
விருது நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோக்கள் எல்லாம் சினிமா மூலம்
உண்டாகும் வெவ்வேறு கேளிக்கைகள்.

கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத்
தாண்டி, ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும்
இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே
ஸ்பெஷல்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 8:09 am

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Vikatan%2F2020-05%2Fb5a29a54-dfb1-449f-b0cc-877a6460a297%2F280480

சினிமா, கேளிக்கை என்பதைத் தாண்டி இரண்டு விஷயங்களில்
முக்கியப் பங்காற்றுகிறது. நம் மக்கள் வெளியே சொல்வது
என்றால் பெரும்பாலும் சினிமாவாகத்தான் இருக்கும்.

குடும்பத்தோடு, நண்பர்களோடு, காதலியோடு வெளியே
செல்ல வேண்டும் என்றால், சுலபமான தேர்வாக சினிமா
தியேட்டர்கள்தான் இருக்கின்றன. தியேட்டருக்குச் சென்று
படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம்.

பிரமாண்டமான திரையரங்கில் நிறைய மக்களோடு அமர்ந்து
பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல்,
விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி ஒரு
கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு
படம் பார்ப்பது என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான்.

இன்னொன்று, சினிமா மட்டுமே ஸ்டார்களை உருவாக்கும்.
இங்கே ஸ்டார் என்பது ஹீரோ மட்டும் அல்ல. ஹீரோயின்,
இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் என
அனைத்து விதமான ஸ்டார்களும் இங்கே சினிமாவில்தான்
உருவாவார்கள்.

இங்கே உருவான ஸ்டார்களின் பிம்பங்களைத்தான்
ஓ.டி.டி-யில் விற்க முடியும்.

ஓ.டி.டி-யில் விற்கப்பட்ட படங்களை நாங்கள் வாங்க
மாட்டோம் என்று சொல்வதற்கு சினிமா திரைப்படத்
தயாரிப்பாளர்களுக்கு உரிமை இருக்கிறது. அதே நேரத்தில்,
ஓ.டி.டி-யில் விற்ற படத்தில் நடித்த நடிகரின் படங்களையோ,
அந்த தயாரிப்பு நிறுவனத்தின் படத்தையோ இனி வாங்க
மாட்டோம் என்று தியேட்டர்கள் சங்கம் சொல்வது
தேவையற்றது.

இப்போது சர்ச்சைக்குள்ளான ஜோதிகாவின்
'பொன் மகள் வந்தாள்' திரைப்படத்தை நல்ல விலைக்கு
அந்த நிறுவனம் வாங்கி இருக்கலாம். ஆனால், அந்தப் படம்
தியேட்டரில் ரிலீஸ் ஆனால், அதற்குக் கிடைக்கும் மதிப்பு
அல்லது அந்தப் படத்தின் ரீச் ஓ.டி.டி மூலம் கிடைக்காது.

ஓ.டி.டி நிறுவனங்கள், தங்களை பிரபலப் படுத்திக்கொள்ள
ஆரம்ப கட்டத்தில் இதைப்போல அதிக விலை கொடுத்து
வாங்கும். ஆனால், இந்தப் 'பொன்மகள் வந்தாள்' படம்
ஓ.டி.டி-யில் வெளியானால், பெரிதாக எந்த
அதிர்வலையையும் ஏற்படுத்துமா எனத் தெரியாது.

இந்தப் படத்தின் லாப நஷ்டக் கணக்கைப் பார்த்து, அடுத்த
முறை ஓ.டி.டி நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் படங்களை
விலைபேசலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 8:09 am

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Vikatan%2F2020-04%2F7dcdeb1c-433d-4164-986d-6cf0fa2dd03c%2Fvikatan_2020_03_8662650d_dbef_46ce_bf3c_5007a77e3fdd________________________________________1

இதுவே விஜய், அஜித் போன்ற முன்னணி கமர்ஷியல்
நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியானால்
வேண்டுமானால் பெரிய அதிர்வலையைக் கிளப்ப முடியும்.
ஓ.டி.டி-யில் பார்ப்பதற்கு என்று சில வகைப் படங்கள் உள்ளன.
அவை தனி. அந்த மாதிரி படங்களை தியேட்டருக்காக
தயாரிக்கவே முடியாது. அதேபோல வீட்டில் அமர்ந்துகொண்டு
ஓ.டி.டி பிளாட்ஃபார்மில்தான் சினிமா படங்களையும் பார்ப்போம்
என்கிற ரசிகர்களும் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள், ஓ.டி.டி-யில் படம் வெளியாகவில்லை என்றால்
பெரும்பாலும் சினிமா தியேட்டர்களுக்குப் போய் படம்
பார்க்க மாட்டார்கள்.

வரும் காலங்களில் ஓ.டி.டி-க்கு என்றே படம் எடுக்கும்
தயாரிப்புக் கம்பெனிகள் அதிகம் ஆகலாம். ஓ.டி.டி நடிகர்கள்,
நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள்
உருவாகலாம். ஆனாலும் இவர்களின் கடைசி டார்கெட்
தியேட்டர் ரிலீஸ் சினிமாவாகவே இருக்கும்.

அதேபோல திடீரென்று மணிரத்னம் ஓ.டி.டி-க்கு ஒரு படம்
இயக்கலாம். இதில் இவர்களைப் போன்றவர்களின் டார்கெட்
அதீத பணமாக இருக்கும். சினிமா மூலம் இத்தனை காலம்
உருவாக்கிய பிரபலத்தைப் பணமாக்க முயற்சி செய்வார்கள்.

அனுராக் காஷ்யப் போன்றவர்கள் செய்வது அதைத்தான்.
ஆனால், இவர்களும் தொடர்ந்து ஓ.டி.டி-யிலேயே இயங்கிக்
கொண்டிருந்தால் மதிப்பு போய்விடும்.

மீண்டும் தியேட்டர் ரிலீஸ் சினிமாவுக்குத் திரும்பி, தன்னை
நிரூபித்து விட்டுத்தான் மீண்டும் ஓ.டி.டி-க்குத் திரும்ப
வேண்டியிருக்கும்.

'லஸ்ட் ஸ்டோரிஸ்' பார்த்திருப்போம். சினிமாவில்
காட்டப்படாத கதை என்பதால், அதை ஆஹா ஓஹோ என்று
புகழ்ந்தார்கள். ஆனால், ஓ.டி.டி-யில் வெளியான
'லஸ்ட் ஸ்டோரிஸ்' சினிமாவின் தரத்தின் அருகேகூட வரத்
தகுதியில்லாதது.

அனுராக் காஷ்யப் இயக்கிய 'தேவ் டி' படத்தைப் பாருங்கள்.
அவர் இயக்கிய ஓ.டி.டி ஆக்கங்களைப் பாருங்கள். வித்தியாசம்
தெரியும்.

இன்னொன்று, இதுவரை ஓ.டி.டி-யில் பெரும் வரவேற்பைப்
பெற்றவை தொடர்கள்தான். வெப் சீரிஸ் என்கிறார்கள்.
சினிமா போல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி
நேரம் வரை ஓடக்கூடிய சிங்கிள்ஸ் எதுவும் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தவில்லை.

பழங்காலத்தில் தொடர்கதைகளைப் படிக்க ஒரு பெரும் கூட்டம்
இருந்தது. அதைப்போன்ற ஒரு மனநிலைதான் இப்போது
விஷுவலில் ஏற்பட்டிருக்கிறது. நாவல் என்றைக்கும் நாவல்தான்.
சினிமா என்றைக்கும் சினிமாதான்.

அதேப்போல இந்திய ஓ.டி.டி ஃபார்மேட்டில் கடும் கற்பனை
வறட்சி நிலவுகிறது. செக்ஸ் மட்டும்தான் இதில் ஹிட் ஆகும்
என்று நினைத்துக்கொண்டு, கெட்ட வார்த்தைகளை மட்டும்
அள்ளித்தூவி, சில படுக்கையறைக் காட்சிகளை வைத்து
ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இவைகளில் உயிரும் இல்லை. எந்த புது முயற்சியும் இல்லை.
இதை விட்டால், சில உண்மைக் கதைகளை எடுக்கிறேன்
என, 'குற்றம் நடந்தது என்ன?' என்கிற லெவலுக்கு எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 8:10 am

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Vikatan%2F2020-05%2F2c3b7ede-e311-404e-8ef3-c8a759c296d3%2Fjv4

முதலில், ஓ.டி.டி ஆடியன்ஸுக்கான ரசனையை மேம்படுத்த
வேண்டும். அதில் டிரெண்ட் செட் செய்ய வேண்டும்.
ஆனால், அதற்கு தமிழில் ஆளுமைகளோ, முன்னோடிகளோ
ஓ.டி.டி-க்கு இல்லை. இப்போதைக்கு ஓ.டி.டி, சினிமாவை
நம்பித்தான் இந்தியாவில் காலம் தள்ள வேண்டும். எ

திர்காலத்தில் இந்த ஓ.டி.டி நிறுவனங்களே இந்தியாவில்
தியேட்டரிக்கள் ரைட்ஸை வாங்கும் நிலைக்குக்கூட வரலாம்.
பெரிய பட்ஜெட் படங்களையும் அவர்களே நேரடியாகவும்
தயாரிப்பார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தியேட்டர் ரிலீஸ் சினிமா மூலம் மட்டுமே பெரும்
பான்மையான ஸ்டார்கள் உருவாவார்கள். டி.வி, வி.சி.டி,
ஹோம் தியேட்டர், டோரன்ட், ஓ.டி.டி, தமிழ் ராக்கர்ஸ் என
எதனாலும் சினிமாவை அழிக்க முடியவில்லை. இனியும்
அது முடியாது.

இவைகள் எல்லாம் வந்த பின்புதான், சினிமா தன்னை
இன்னும் மேம்படுத்திக்கொண்டுள்ளது. சினிமாவின்
முக்கிய எதிரிகள் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றிக்
கொண்டு செல்லும் சில முன்னணி நடிகர்களும், காப்பி
அடித்து, கதையைத் திருடி, வெட்டிச் செலவழித்து
படமெடுக்கும் இயக்குநர்களும்தான்.

மால்கள் வந்ததும் சினிமா புத்துயிர்பெற்றது என்பது
உண்மைதான். நல்ல திரையனுபவத்தை மால்கள் வழங்கின.
ஆனால், இப்போது தான் வைத்ததுதான் சட்டம் என்று
தனிக்காட்டு ரௌடி போல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன

மால்களில் உள்ள திரையரங்குகள். ஒரு ஜம்போ சைஸ்
பாப் கார்ன் 540 ரூபாய் வரை விற்கிறார்கள். அதன்
அடக்க விலை 30 ரூபாயாக இருந்தால் பெரிய விஷயம்.

அதில் ஊற்றப்படும் சிறிதளவு வெண்ணெயையும்
சேர்த்துத்தான் சொல்கிறேன். இதைப்போல கேன்டீனில்
விற்கப்படும் அனைத்து உணவு வகைகளிலும் கொள்ளை
அடிக்கிறார்கள்.

பார்க்கிங் கட்டணமும் அநியாயம். வெளிநாடுகளைவிட
இங்கே அதிகம் வாங்குகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி காமெடி என்னவென்றால்,
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒரு
டிக்கெட்டுக்கு 30 ரூபாய் தனிக் கட்டணம்.
ஒரே டிரான்ஸாக்‌ஷனில் 4 டிக்கெட்டுகள் முன்பதிவு
செய்தாலும் 120 ரூபாய் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.

உங்கள் நிறுவனத்தில் சேவைகளை நுகர்வதற்கு உங்கள்
ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தினால், நான் ஏன்
ஐயா கட்டணம் செலுத்த வேண்டும்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 8:13 am

ஓ.டி.டி, தியேட்டர்... ஒரு ரசிகன் எங்கே படம் பார்க்க விரும்புகிறான்... ஏன்?! Vikatan%2F2020-05%2Fc412e5fb-0377-4f6b-a8b0-680ed29f1ea5%2F683850_lust_stories

சினிமா தியேட்டர் இல்லை என்றால் அந்த மாலுக்கு கூட்டமே
வராது. அண்ணா சாலையில் இருக்கும் ஸ்பென்சர், ரமீ மால்
இதற்கு சிறந்த உதாரணம். சினிமாவைப் பயன்படுத்தி வளரும்
மால்கள், இதைப்போல சினிமாவுக்கு எதிரான செயல்களைச்
செய்யும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் இதையெல்லாம்
தடுக்க வேண்டும்.

* 5 ரூபாய்க்கு மேல் ஆன்லைன் சார்ஜஸ் கட்டணம் வசூலிக்கக்
கூடாது.

* பார்க்கிங் கட்டணம் 3 மணி நேரத்துக்கு 50 ரூபாய் என்ற
அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

* கேன்டீன் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும்.

இவையெல்லாம் நடந்தாலே, தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக
வரும் கூட்டம் இன்னும் கூடும். அதேசமயம், இனி தியேட்டர்
என்பது பிரீமியமாக இருக்கப்போகிறது. வருடத்துக்கு குறைந்த
அளவிலான படங்களே ரிலீஸ் ஆகும் என்பதால், நம்முடைய
பட்ஜெட்டும் அதற்குள் அடங்கிவிடும்.

ஓ.டி.டி, தியேட்டர் என இரண்டிலுமே சினிமாவைக்
கொண்டாடுவோம்.
-
---------------------
-அராத்து
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக