புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வில்லா, வில்லங்கமா? Poll_c10வில்லா, வில்லங்கமா? Poll_m10வில்லா, வில்லங்கமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லா, வில்லங்கமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:29 am

வில்லா, வில்லங்கமா? 22

பாரத ஞானபூமியின் இரு பெரும் அடையாளங்களாக
நமது இரண்டு இதிகாசங்களான ராமாயணத்தையும்
மகாபாரதத்தையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம்.

தனி மனித ஒழுக்கம் தொடங்கி, வாழ்வியலின் இறுதி
லட்சியம்வரை அலசப்பட்டு, நல்லனஅல்லன பிரித்துப்
பின் பகுத்துக் காட்டப்பட்டு, அதற்குப் பிறகு வாழ்க்கைப்
பாதையின் திசையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும்
மகோன்னதமான அறநூல்கள் அவை.

இந்த இரண்டு பெரிய இதிகாசங்களின் ஆதார ஸ்ருதியாக
விளங்குவன, ராமாயண ‘சிவதனுசு’ என்ற வில்லும்
மகாபாரத ‘காண்டீபம்’ என்ற வில்லும்.

எனினும் ராமாயண ராமபிரானை வில்வீரனாக
முன்னிலைப்படுத்தி அவன் வாழ்வு அமைக்கப்படவில்லை.
ராமனது அவதார நோக்கம் ‘வில்’லிலிருந்து பு
றப்படவில்லை. ‘வில்’லைச் சுற்றியும் அமையவில்லை.

ஆனால், மிதிலை மன்னனின் ராஜசபையில் சிவதனுசை
எடுத்து, வளைத்து, நாணேற்றும் முயற்சியில் முறித்ததால்,
சீதாபிராட்டியின் வளைக்கரம் பற்றினான், பின்னர்
மனையாளுடன் காடேறினான்.

ராவணனால் சீதை கடத்தப்பட்டாள். பின் தேடல் வேட்டை.
கவர்ந்து சென்ற ராவணனிடமிருந்து சீதையை மீட்க
இலங்கையுடன் போர்.

இடையில் வாலி வதம். அனுமனின் தோழமை,
விபீஷணனுடன் நட்பு... என வாழ்க்கைப் பாதை நீள்கிறது.
யோசித்துப் பார்த்தால், சிவதனுசுவிலிருந்துதான் எல்லாமே
ஆரம்பமாவதுபோல் ஒரு பிரமை நம்முன் எழும்.

மகாபாரதத்தில் ‘வில்’ ஏற்கும் பங்கு சற்று அதிகம்.
ஓரளவு முக்கியமானதும் கூட. வில் வித்தை பயிற்சிக்
கூடத்திலிருந்தே, மகாபாரதத்தில் ‘வில்’ நம்
கவனத்தைக் கவருகிறது. அந்தக்கால போர் முறையில்
‘வில்’ மட்டுமே முறையான, சரியான போர்க் கருவி எ
ன்ற தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிறது மகாபாரதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:30 am

வில்லா, வில்லங்கமா? Samayam-tamil

அபாரமான திறமை கொண்ட நல்லாசிரியர் துரோணர்.
அற்புதமான வில் விற்பன்னர்களை உருவாக்கக்கூடிய
ஆளுமை கொண்ட ஆசிரியப் பெருமகன்.

ஆனால், சத்திரியர்களுக்கு மட்டுமே ஆசானாக இருப்பது
என்று பிடிவாதம் கொண்ட இந்த அந்தணர், அர்ஜுனன்
விஷயத்தில் அதீத அக்கறையும் ஈடுபாடும் காட்டியவர்.

கௌரவர்களின் வாரிசுகளில் ஒருவரான துரியோதனனை
மாணவனாக அனுமதித்த போதிலும் அவன் விஷயத்தில்
அவருடைய நேர்மை, திறமை, ஆளுமை என்பதெல்லாம்
சரிநிகர் சமானமாக இருந்ததாகச் சொல்ல முடியாது.

துரோணரிடம் வில் வித்தை பயில ஆர்வமுற்று அணுகிய
வேடர் குல இளைஞன் ஏகலைவனை மாணவனாக ஏற்க
மறுத்துவிட்டார். அவருடைய சிலை ஒன்றை நிர்மாணித்து,
அதையே குருநாதராக நினைத்து வணங்கி, சுயமுயற்சியில்
சிறந்த வில் வீரனாக உருவெடுத்தான் ஏகலைவன்.

ஒருநாள் வில் பயிற்சிக்கூடத்திற்கு வெளியே நாய் ஒன்று
குறைத்து அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சத்தம் பெரிய அவஸ்தையாக இருந்தது
மாணவர்களுக்கு. சிறிய இடைவெளிக்குப் பின் சத்தம்
நின்று விட்டது.

வெளியே வந்து எட்டிப் பார்த்தார் துரோணாச்சாரியார்.
நாய் நின்று கொண்டிருந்தது. நாயின் வாய் ஒரு
அம்பினால் தைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஏகலைவனும்
நின்று கொண்டிருந்தான். நாயின் வாயை தைக்கக்கூடிய
வகையில் வில்லில் நாணேற்றி அம்பு ஏய்தவன் ஏகலைவன்
என்பதை அறிந்து, வெளிப்படையாகச் சொல்ல இயலாத
காரணத்தினால், ஏகலைவனின் வில்லாற்றலை முடக்கி
தடுத்து, கெடுத்தும் விடுகிறார், துரோணாச்சாரியார்.

ஏகலைவனிடம் திறமையான அம்பு எய்யும் ஆற்றலுக்கு
ஆசான் யார் என துரோணர் கேட்டபோது, அவருடைய
சிலையைக் காட்டினான் ஏகலைவன்.

துரோணாச்சாரியாருக்கு குழப்பம். ஒன்றும் புரியவில்லை.
குருஸ்தானம் தந்துவிட்டானல்லவா ஏகலைவன்!
தட்சணையாகக் கேட்டார் கட்டைவிரலை. தந்து விட்டான்
சீடனான ஏகலைவன்.

பொறாமையில் வெந்த அர்ஜுனனும் துரியோதனனும்
நிம்மதியாகச் சுவாசிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பின்னர்
இந்த ‘வில்’ என்பது பல பிரச்னைகளுக்குச் சாமரம் வீசிக்
கொண்டேயிருக்கும் வகையில் மகாபாரதத்தின் கதைப்
போக்கு நம்மை இட்டுச் செல்லும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:31 am

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர். சத்திரியர்களின் பரம விரோதி.
இவரிடம் வில்வித்தை பயில வந்தான் கர்ணன். சத்திரியன்
என்ற வர்ண முத்திரை கிடைக்கப் பெறாத
துர்ப்பாக்கியவான் கர்ணன். இதன் காரணமாகவே,
துரோணரால் மாணவ அங்கீகாரம் பெறாமல்
நிராகரிக்கப்பட்ட நிலையில், படகோட்டியின் மகன் என்ற
உண்மைச் சாதிச் சான்றிதழுடன் பரசுராமரின் வில்வித்தை
பயிற்சிக் கூட்டத்தில் சேர்ந்தான்.

குருநாதர் பரசுராமருக்குச் சேவை செய்தபோது, கருவண்டு
ஒன்று கர்ணனின் தொடையைத் தோண்டிற்று, ரத்தம்
கசிந்தது. வலியை அவன் மனதிற்குள் பொறுத்துக்
கொண்டான். ஆனால், ரத்தக் கசிவைப் பார்த்துவிட்ட
பரசுராமர் வலியைப் பொறுத்துக் கொள்ளும் சிறப்பான
சகிப்புத்தன்மை சத்திரியர்களுக்கு மட்டுமே உரியது
என்பதை அறிந்தவர்.

எனவே, கர்ணன் ஒரு சத்திரியன்தான், தன்னிடம்
உண்மையை மறைத்து வித்தை கற்றுக் கொண்டு விட்டான்
என்று கடிந்து கொண்டதுடன், சபித்தும் அனுப்பிவிட்டார்
கர்ணனை.

இந்த‘வில்’லின் பங்கு குருக்ஷேத்திரப் போரில்
கணிசமான அளவு கூடுகிறது.

ஆசாரியார்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் எதிராகப்
போரிட மாட்டேன் என்று சொல்லி ‘வில்’லைக் கீழே
வைத்துவிடுகிறான் அர்ஜுனன்.
-
வில்லா, வில்லங்கமா? 8-decision-1532082230

சூழ்ச்சியால், தந்திரத்தால் கிருஷ்ணர் அநேக கௌரவ
வீரர்களை வில்லைத் தரையில் வைக்க வைத்து,
நிராயுதபாணியாக்கி, பின் வீழ்ச்சியடைய வைத்தார்.

‘வில்’லுடன் பீமனின் கதையும் மகாபாரதப் போரில்
ஆயுதமாகக் கையாளப்பட்டது. ‘கதை’ வித்தை கற்றுக்
கொடுக்கும் ஆசானாக இருந்தவர் பலராமன்,

கிருஷ்ணரின் சகோதரர். இவர் துரோணர் மாதிரியோ,
பரசுராமர் மாதிரியோ ‘வில்’லங்கமான
ஆச்சாரியாரல்ல.

‘வில்’ வித்தை ஒலிம்பிக்வரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்ற உண்மை இதிகாச
சம்பவங்களையும் உண்மையாக்குகிறது.
-
--------------------------------------
ஜனகன்
;நன்றி- ஆன்மிகம் - குங்குமம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 08, 2020 8:26 am

Code:

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர்.



இது பிழை என்று நினைக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 11:43 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு
உயர்ந்தவர் பரசுராமர்.
இது பிழை என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1319569

ஆம்......ஆன்மீக பதிவுப்  பிழை. நேற்றைய பதிவில் அய்யாசாமி ராம் துரோணரின் பிறப்பை பற்றி கூறி இருப்பார் https://eegarai.darkbb.com/t160303-topic#1319554

பரசுராமரின்  சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 08, 2020 1:43 pm

"துரோணரின் தந்தை பரசுராமர்"

நேற்றைய பதிவில்...
முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா
என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர்.

என்றிருக்கிறதே! எது சரி?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 4:09 pm

சக்தி18 wrote:
"துரோணரின் தந்தை பரசுராமர்"

நேற்றைய பதிவில்...
முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா
என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர்.

என்றிருக்கிறதே! எது சரி?
மேற்கோள் செய்த பதிவு: 1319576

துரோணரின் தந்தை பரசுராமர் என்று நான் பதிவிட்டது தவறு.
நல்ல வேளை மானநஷ்ட வழக்கு போடுவதற்கு முன் தவறை நீக்கிவிட்டேன்,
நன்றி சக்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக